ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143360 topics in this forum
-
டெங்குவினால் சபையில் கடும் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) டெங்கு நோய் குறித்து சபையில் கூட்டு எதிரணி எழுப்பிய கேள்விக்கு பிரதமரோ, சுகாதார அமைச்சரோ பதிலளிப்பதற்கு முன்வராதமையினால் சபையில் ஆளும், எதிர்த்தரப்புகளுக்கிடையில் கடுமையான குழப்பமும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதன்காரணமாக சபை நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு இரு தடவைகள் ஒத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எம்.பி. எழுப்பிய கேள்வியை அடுத்தே சபை யில் சர்ச்சையான…
-
- 0 replies
- 228 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) பாணந்துறை நகரிலும் எலுவில பகுதியிலும் இரு பள்ளிவாசல்கள் மற்றும் இரு கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய கும்பலின் உறுப்பினர்கள் நால்வரை தேடி வரும் கொழு ம்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் பல்கலைக் கழக மாணவன் ஒருவரைக் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர் பில் கடந்தவாரம் பொது பல சேனா அமைப்புடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த தேரர் ஒருவர், கொழும்பு வாழைத் தோட்டம் பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட நாலவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது பல்கலைக் கழக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்திய…
-
- 0 replies
- 334 views
-
-
“அமைச்சரவைக் கூட்டத்துக்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டுவரவேண்டாம்” அமைச்சரவைக் கூட்டங்களில் இதற்கு பின்னர் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டுவரவேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஏற்பட்டுள்ள குப்பை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அத்…
-
- 0 replies
- 140 views
-
-
பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் இப்போது சுகமாக இருக்கிறார். அவர் நாளை 22 ஆம் திகதி உயர்நீதிமன்றில் ஆஜராகவுள்ளார். மேலும் உயர்நீதிமன்றில் தான் ஆஜராவதற்கு தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்று சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையினால் பாதுகாப்பு வழங்கப்பட்டாலே நீதிமன்றில் ஆஜராக முடியுமென்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று மதியம் ராஜகிரியிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் …
-
- 0 replies
- 372 views
-
-
கொஸ்கமவில் பாரிய தீ பரவல் : ஹார்ட்வெயார், கேஸ் வர்த்தக நிலையம் நாசம் (படங்கள் இணைப்பு) கொஸ்கம - கனம்பெல்ல சந்தியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று பதிவானது. கொழும்பு - அவிசாவளை ஹை லெவல் வீதியில் உள்ள கட்டட பொருட்களை விற்பனை செய்யும் ஹார்ட்வெயார் ஒன்றும் கேஸ் சிலிண்டர் விற்பனை நிலையம் ஒன்றுமே இவ்வாறு தீ அனர்த்தத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் பரவிய மேற்படி தீயினால் பிரதேசத்தில் பதற்றநிலை ஒன்று தோன்றியதுடன், கனம்பெல்ல சந்தி ஊடான போக்குவரத்தும் பொலிஸாரால் தடைசெய்யப்பட்டு மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்…
-
- 0 replies
- 313 views
-
-
முதலமைச்சருக்கெதிராக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆளுநருடன் கலந்துரையாடிய பின்னரே மீளப் பெறப்படுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் சமரச முயற்சிகளின் பின்னரான நிலைபாடுகள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுடன் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரி…
-
- 0 replies
- 353 views
-
-
புதிய ஆசனம் 90 ஆயிரம் ரூபாய் பெறுமதி வடமாகாண அவைத்தலைவரின் புதிய ஆசனத்தின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவைத்தலைவராக அவையில் கடந்த 14ஆம் திகதி அமர்வில், பண்டைய கால அரசர்களின் சிம்மாசனத்தை ஒத்த வடிவமைப்பை கொண்டப் பிரத்தியோக ஆசனத்தில் அமர்ந்திருந்தார். குறித்த ஆசனத்தின் பெறுமதி, 90 ஆயிரம் ரூபாய் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த மூன்று வருட காலத்தினுள், அவைத்தலைவர் தனது ஆசனத்தை மூன்றாவது தடவையாக மாற்றியுள்ளார். இதேவேளை, மாகாகண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சபை ஆரம்பிக்கப்பட…
-
- 3 replies
- 517 views
-
-
முதலமைச்சருக்காகவே நான் பதவி விலகினேன் விவசாய அமைச்சரைக் காப்பாற்றுவதற்கே மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பதவி விலகவேண்டும் என்று வடக்கு முதலமைச்சர் கூறி வருகின்றார் எனக் கருத்துக்கள் பரவின. இதனால் முதலமைச்சருக் குப் பங்கம் ஏற்படக்கூடாது என்ற அடிப் படையிலேயே நான் பதவியில் இருந்து விலகினேன். இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முதலமைச்சர் நியமித்த குழுவை அவர் நம்பினார். ஆனால் விசாரணைக் குழு எனது விடயத்தில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அது பக்கச்சார்பாக இயங்கியுள்ளது என்பது புலப்படுகின்றது. வடக்க…
-
- 5 replies
- 422 views
-
-
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இன்று மாலை பதவியில் இருந்து விலகும் கடிதத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளார். இன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த கல்வி அமைச்சர் குருகுலராசா, பதவி விலகல் கடிதத்தை நேரில் கையளித்தார். கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன், விசாரணைக்குழுவினால் குற்றம்சாட்டப்பட்ட கல்வி அமைச்சர் குருகுலராசாவையும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் தாமகவே முன்வந்து தமது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு கோரியிருந்தார். இதற்கமைய, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஏற்கனவே தமது பதவியை விட்டு விலகியிருந்தார். எனினும், கல்வி அமைச்சர் குருகுலரா…
-
- 4 replies
- 438 views
-
-
வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் உவராகிவருகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய கிராமங்கள் வேகமாக உவரடைந்து வருவதன் காரணமாக இதனைத் தடுப்பதற்கு அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என இரு கிராமங்களின் மக்களினாலும் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது. பூநகரியின் பல கிராமங்கள் உவரடைந்ததன் தொடர்ச்சியாக வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் கிராமங்கள் முழுமையாக உவரடையும் ஆபத்தினை எதிர் கொண்டுள்ளது. கடந்த ஏழாண்டுகளாக கிராம மட்டத்திலும் கரைச்சி பிரதேச செயலகத்திலும் மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் தமது கிராமங்களை உவர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுமாறு கிராமங்களின் மக்கள் நாடாளுமன்ற உறுப…
-
- 2 replies
- 337 views
-
-
முதல்வரின் அமைச்சு உட்பட 5 அமைச்சுகள் மீதும் சுயாதீன விசாரணை வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணி நம்பிக்கை முதலமைச்சரின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள் மீதும் அதன் கீழான திணைக்களங்களிலும் இடம்பெற்றதாகக் குறிப்பி டப்படும் அனைத்து ஊழல், மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்தும் முறையானதும், சட்டரீதியானதும், சுயாதீனமானது மான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பதாக, வடக்கு மாகாண சபையின் நீதிக்கான உறுப்பினர்கள் அணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அணியின் ஊடகப் பேச்சாளரும், மாகாண சபை உறுப்பினருமான கே.சயந்தன் வெளியிட்ட பத்தி…
-
- 3 replies
- 386 views
-
-
முடிவுக்கு வந்தது வடக்கு விவகாரம் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த வடக்கு மாகாணசபை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான பிரேரணையை மீளப் பெறுவதாக, இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கௌரவ. நீதியரசர். சீ .வி . விக்னேஸ்வரன் முதலமைச்சர்வடமாகாணம் அன்புக்குரியவிக்னேஸ், தங்களது 19.06.2017 திகதியிடப்பட்டகடிதத்திற்குநன்றி நீங்கள்கூறியுள்ளஅனைத்துவிடயங்களையும்கவனத்தில்கொண்டுள்ளேன் மேலும்மூன்றுநிபந்தனைகளின்அடிப்படியில்இந்தவிடயம்முடிவிற்குகொண்டுவரப்படவேண்டும்எனதெரிவித்துஸ்ரீலஸ்ரீசோமசுந்தரதேசிகஞானசம்பந்தபரமாச்சார்யசுவாமி…
-
- 8 replies
- 1k views
-
-
தெற்கில் மாத்திரமல்ல வடக்கில் இனவாதம் தலைதூக்கினாலும் அதனையும் எதிர்ப்போம் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு (எம்.சி.நஜிமுதீன்) தெற்கில் மாத்திரமல்ல வடக்கில் இனவாதம் தலைதூக்கினாலும் அதற்கெதிராக நாம் நடவடிக்கை எடுப்போம். அந்நிலைப்பாட்டில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. மேலும் சட்டத்திற்குப் புறம்பாக எவரும் செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை. இது தொடர்பில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு ஏற்பாடு செய்த “பெளத்த பக்தி கீதம்” இசைக்கும் நி…
-
- 0 replies
- 247 views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை சந்தித்தார் சி.வி.விக்னேஷ்வரன் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை இன்று மாலை சந்தித்தார். யாழ். நாவாந்துறை ஜூம்மா பள்ளிவாசலுக்கு இன்று மாலை சென்ற முதலமைச்சர், சமயப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். http://newsfirst.lk/tamil/2017/06/யாழ்ப்பாணத்திலுள்ள-முஸ்/
-
- 0 replies
- 367 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (20/06/2017)
-
- 0 replies
- 265 views
-
-
வடமாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவில்லை – ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது சென்றதாக தெரிவிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சர் தனது பதவியை செவ்வாய்க்கிழமை மதியம் வரை இராஜினாமா செய்வில்லை என தெரியவருகின்றது. அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை பதிலளிக்காது சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கட்சி கலந்துரையாடலை முடித்துக்கொண்டு வெளியே வந்த கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து விட்டீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை அதற்கு பதிலளிக…
-
- 6 replies
- 421 views
-
-
அவைத்தலைவரின் நிலை என்ன? - எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாகாண அவைத்தலைவர் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளது. கடந்த 14ஆம் திகதி, வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் சபையில் சமர்ப்பித்தார். இதன்போது, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி குற்றவாளிகள் எனவும் எனவே, அவர்கள் இருவரும் தாமாக முன்வந்து தமது பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் …
-
- 0 replies
- 637 views
-
-
ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்து செயற்பட எமிரேட்ஸ் பேச்சுவார்த்தை ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய கிழக்கு ஊடகங்கள் இன்று வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், இலங்கையிலுள்ள விமான நிறுவனம் அல்லது விமான நிலையத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கான எவ்வித திட்டமும் தமக்கு இல்லை என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. arabianbusiness.com என்ற இணையத்தளத்திற்கு அந்நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்தால் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் 70 மில்லியன் …
-
- 0 replies
- 293 views
-
-
அமைச்சர்கள் அனைவரையும் மீண்டும் விசாரிக்க வேண்டும் தமிழக முதல்வர்கள் இந்திய நடுவண் அரசுக்கும் அதன் தலைமை அமைச்சருக்கும் அடிக்கடி கடிதங்கள் எழுதிவிட்டு அதனை ஊடகங்களில் வெளியிட்ட நடப்பைப் பார்த்து ரசித்த ஈழத் தமிழ் வெகுமக்களுக்கு, இப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றங்களை கண்டு மகிழும் பேறு கிடைத்திருக்கிறது. இந்தக் கடிதங்களின் அடிப்படையில் நேற்றைய பகலில் (இதற்குப் பின்னரும் வேறு சில கடிதங்களுக்கு இன்னமும் இடமிருக்கிறது) முதலமைச்சர் பதவியில் சி.வி.விக்னேஸ்வரன்…
-
- 0 replies
- 409 views
-
-
ஊழல் அற்ற ஆட்சியே தமிழ் மக்களின் இன்றைய தேவை அமைச்சர்களின் ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சி முதலமைச்சர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டுவந்து ஊழல் விசாரணைகளை தடுக்க முயன்ற சமயோசிதமற்ற செயலானது, ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு கறை படிந்த நிகழ்வாகவும், அனைத்துத் தமிழர்களின் மனதிலும் எதிர்காலம் மற்றும் நல்லாட்சி பற்றிய ஒரு நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இடம் பெற்ற தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் முழுக் கடையடைப்பு என்பவை காரணமாக, தமிழர் வாழும் பகுதிகளில் பெருமளவு …
-
- 0 replies
- 330 views
-
-
யாழில் கொள்ளை குற்றசாட்டில் கணவன் மனைவி உட்பட நால்வர் கைது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கணவன் மனைவி உட்பட நால்வர் கோப்பாய் பொலிசாரினால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். இருபாலை பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரவு வீடு புகுந்த இருவர் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் மஞ்சுள காந்தோல தலைமையிலான எட்டு போலிஸ் உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளை முன்ன…
-
- 0 replies
- 330 views
-
-
பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர் ; ரில்வின் சில்வா பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். முன்னைய ஆட்சியில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தனர். இப்போதும் அதையே மேற்கொண்டு வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தேசிய ஒற்றுமையை வளர்ப…
-
- 0 replies
- 190 views
-
-
ஆவணங்கள் மாயம் என்று மக்கள்தான் சொன்னார்கள் வடக்கு மாகாண அமைச்சு அலுவலகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மக்கள்தான் எனக்குச் சொன்னார்கள். அதைத்தான் நான் உங்களுக்குக் கூறினேன். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கு மாகாணசபையில் கடந்த 14ஆம் திகதி நான் தீர்மானத்தை அறிவித்த அன்று இரவு அமைச்சு அலுவலகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மக்கள் எனக்குத் தெரிவித்தார்கள். தகவல் தந்த மக்களை யாரென்று கூறமாட்டேன். அவர்கள் இப்போதும் அது உ…
-
- 0 replies
- 285 views
-
-
''கோத்தபாயவே பொதுபல சேனாவை பலமான அமைப்பாக உருவாக்கினார் : ஞானசார தேரரை நாம் ஒளித்து வைக்கவில்லை'' பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நாம் ஒளித்து வைக்கவில்லை. ஞானசார தேரரை பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமயவை வீழ்த்த மஹிந்த ராஜபக் ஷ முயற்சி செய்கிறார் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ஷவே பொதுபல சேனாவை பலமான பெளத்த அமைப்பாக உருவாக்கினார். பொதுபல சேனாவினருக்கு நிதி உதவிகளையும் வாகனங்களை வழங்கி அவ்வமைப்பை பலப்படுத்தினார் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையி…
-
- 1 reply
- 393 views
-
-
வடக்கை தமிழர்கள் உரிமை கூற முடியாது : சம்பிக்க (ஆர்.யசி) வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல. சிங்கள, முஸ்லிம் மக்களும் வடக்கில் தைரியமாக வாழ முடியும் ஆகவே வடக்கை தமிழர்கள் உரிமை கூற முடியாது என ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சிங்கள பௌத்த இனவாதத்தை கட்டுப்படுத்த முன்னர் வடக்கில் தமிழர்களின் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜாதிக ஹெல உறுமைய அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/21035
-
- 2 replies
- 407 views
-