ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-21#page-32
-
- 1 reply
- 193 views
-
-
கூட்டமைப்பின் ஐக்கியமே இப்போது எமக்கு முக்கியம் தலைமையை விமர்சிப்பதற்கு செல்வம் எம்.பி. கண்டனம் இப்போதைய சூழலில் கூட்டமைப்பின் ஐக்கியமே முக்கியம். இதனைச் சிதைக்க முற்படக்கூடாது. கூட்டுக் குள் இருந்துகொண்டே, தலைமையை விமர்சிக் கும் செயற்பாடுகளைக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று முன்தினம் விமர்சனங்களை முன்…
-
- 0 replies
- 240 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது நம் தமிழ் மக்கள் கொண்ட பேரெழுச்சி மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை தேர்தலுக்காக நீங்கள் அழைத்து வந்திருக்கலாம்.ஆனால் அவரை முதலமைச்சராக்கியது நாங்கள். எனவே அவரை நீக்குகின்ற அதிகாரம் எதுவும் உங்களுக்கு கிடையாது. அவரை நீக்க நினைத்தால் நாங்கள் எப்படிப் பதிலளிப்போம் என்பதை பூரண ஹர்த்தால் மற்றும் ஆதரவுப் பேரணி மூலமாக மக்கள் தம் பேரெழுச்சியை வெளிப்படுத்தினர். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது தமிழ் மக்கள் கொண்ட பாசம் தமிழ் அரசியல்வாதிகளை மட்டுமன்றி தென்னிலங…
-
- 2 replies
- 366 views
-
-
வடக்கு முதல்வருக்கு நன்றி கூறிய பலசேனா வடக்கு மாகாண முதல்வருக்கும், மாகாண சபைக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளவேண்டும் எனப் பொதுபலசேனா தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் ஜபுரேவல சந்தரதன தேரர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் வடக்கு மாகாண சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு அமைச்சர்கள் இருவரை பணி நீக்கம் செய்ததோடு, இருவரை விடுமுறையில் வடக்கு முதல்வர் அனுப்பிவைத்தார். இங்கு எத்தகைய கருத்துவேறுபாடுகள் தோன்றினாலும் தமிழர்கள் என்ற ரீதியில் அவர்கள் அந்தப் …
-
- 0 replies
- 239 views
-
-
Jun 21, 2017by கி.தவசீலன் in செய்திகள் காணாமல் போனோருக்கான பணியகம் மிகவும் அவசியமானது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் நேற்று கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் போது, பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அமெரிக்கத் தூதுவர் சந்தித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர்களின் அன்புக்குரிய தாய்மார் பதிலைத் தேடுவதாகவும், அதற்கு காணாமல் போனோருக்கான பணியகம் மிகவும் அவசியமானது என்றும் அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிட்டுள்ளார். http://www.put…
-
- 0 replies
- 230 views
-
-
அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பிக்கவிற்கும் ரிசாட்டிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவிற்கும், ரிசாட் பதியூதீனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் சேர்க்கப்படும் கழிவுகளை புத்தளம் அருவக்காறு பிரதேசத்தில் கொட்டுவதற்கு அனுமதிக்குமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரியுள்ள நிலையில் இந்தக் கோரிக்கைக்கு அமைச்சர் ரிசாட் பதியூதீன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். புத்தளம் பிரதேசத்தில் சீமேந்து தொழிற்சாலை, மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிகளில் குப்பைகளை கொண்ட வேண்டாம் எனவும் ரிசாட் பதியூதீன் கடுமைய…
-
- 0 replies
- 139 views
-
-
"" நல்லாட்சியிலிருந்து முஸ்லிம்களை பிரிக்க சதி '' (எம்.சி.நஜிமுதீன்) கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் தற்போது நல்லாட்சி அரசாங்கத்துக்கும் முஸ்லிம் மக்களுக்கிடையிலும் பேதங்களை ஏற்படுத்தும் அரசியல் சதியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அது தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக நடந்து அச்சதி வலையில் சிக்கி விடக்கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புனித ரமழான் நோன்பின் இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம் மற்றும்…
-
- 0 replies
- 220 views
-
-
இனவாதத்தை பரப்பி நாட்டை அழிக்கும் முயற்சியில் அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை (ஆர்.யசி) தேசிய ஒற்றுமையை வளர்ப்பதாக கூறிக்கொண்டு இனவாதத்தை பரப்பி நாட்டை சீரழிக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இப்போது பரப்பப்படும் இனவாதத்தின் எல்லை மிகப்பெரிய இன அழிவில் முடியும் என மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்துள்ளது. பழைய திருடர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். இரு திருடர் கூட்டணிகளும் இணைந்தே நாட்டை கொள்ளியடித்து வருகின்றன எனவும் அக்கட்சி குற்றம் சுமத்தியது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவ…
-
- 0 replies
- 252 views
-
-
டெங்குவினால் சபையில் கடும் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) டெங்கு நோய் குறித்து சபையில் கூட்டு எதிரணி எழுப்பிய கேள்விக்கு பிரதமரோ, சுகாதார அமைச்சரோ பதிலளிப்பதற்கு முன்வராதமையினால் சபையில் ஆளும், எதிர்த்தரப்புகளுக்கிடையில் கடுமையான குழப்பமும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதன்காரணமாக சபை நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு இரு தடவைகள் ஒத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எம்.பி. எழுப்பிய கேள்வியை அடுத்தே சபை யில் சர்ச்சையான…
-
- 0 replies
- 229 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) பாணந்துறை நகரிலும் எலுவில பகுதியிலும் இரு பள்ளிவாசல்கள் மற்றும் இரு கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய கும்பலின் உறுப்பினர்கள் நால்வரை தேடி வரும் கொழு ம்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் பல்கலைக் கழக மாணவன் ஒருவரைக் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர் பில் கடந்தவாரம் பொது பல சேனா அமைப்புடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த தேரர் ஒருவர், கொழும்பு வாழைத் தோட்டம் பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட நாலவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது பல்கலைக் கழக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்திய…
-
- 0 replies
- 335 views
-
-
“அமைச்சரவைக் கூட்டத்துக்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டுவரவேண்டாம்” அமைச்சரவைக் கூட்டங்களில் இதற்கு பின்னர் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டுவரவேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஏற்பட்டுள்ள குப்பை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அத்…
-
- 0 replies
- 141 views
-
-
பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் இப்போது சுகமாக இருக்கிறார். அவர் நாளை 22 ஆம் திகதி உயர்நீதிமன்றில் ஆஜராகவுள்ளார். மேலும் உயர்நீதிமன்றில் தான் ஆஜராவதற்கு தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்று சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையினால் பாதுகாப்பு வழங்கப்பட்டாலே நீதிமன்றில் ஆஜராக முடியுமென்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று மதியம் ராஜகிரியிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் …
-
- 0 replies
- 372 views
-
-
கொஸ்கமவில் பாரிய தீ பரவல் : ஹார்ட்வெயார், கேஸ் வர்த்தக நிலையம் நாசம் (படங்கள் இணைப்பு) கொஸ்கம - கனம்பெல்ல சந்தியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று பதிவானது. கொழும்பு - அவிசாவளை ஹை லெவல் வீதியில் உள்ள கட்டட பொருட்களை விற்பனை செய்யும் ஹார்ட்வெயார் ஒன்றும் கேஸ் சிலிண்டர் விற்பனை நிலையம் ஒன்றுமே இவ்வாறு தீ அனர்த்தத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் பரவிய மேற்படி தீயினால் பிரதேசத்தில் பதற்றநிலை ஒன்று தோன்றியதுடன், கனம்பெல்ல சந்தி ஊடான போக்குவரத்தும் பொலிஸாரால் தடைசெய்யப்பட்டு மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்…
-
- 0 replies
- 313 views
-
-
முதலமைச்சருக்கெதிராக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆளுநருடன் கலந்துரையாடிய பின்னரே மீளப் பெறப்படுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் சமரச முயற்சிகளின் பின்னரான நிலைபாடுகள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுடன் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரி…
-
- 0 replies
- 353 views
-
-
புதிய ஆசனம் 90 ஆயிரம் ரூபாய் பெறுமதி வடமாகாண அவைத்தலைவரின் புதிய ஆசனத்தின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவைத்தலைவராக அவையில் கடந்த 14ஆம் திகதி அமர்வில், பண்டைய கால அரசர்களின் சிம்மாசனத்தை ஒத்த வடிவமைப்பை கொண்டப் பிரத்தியோக ஆசனத்தில் அமர்ந்திருந்தார். குறித்த ஆசனத்தின் பெறுமதி, 90 ஆயிரம் ரூபாய் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த மூன்று வருட காலத்தினுள், அவைத்தலைவர் தனது ஆசனத்தை மூன்றாவது தடவையாக மாற்றியுள்ளார். இதேவேளை, மாகாகண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சபை ஆரம்பிக்கப்பட…
-
- 3 replies
- 518 views
-
-
முதலமைச்சருக்காகவே நான் பதவி விலகினேன் விவசாய அமைச்சரைக் காப்பாற்றுவதற்கே மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பதவி விலகவேண்டும் என்று வடக்கு முதலமைச்சர் கூறி வருகின்றார் எனக் கருத்துக்கள் பரவின. இதனால் முதலமைச்சருக் குப் பங்கம் ஏற்படக்கூடாது என்ற அடிப் படையிலேயே நான் பதவியில் இருந்து விலகினேன். இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முதலமைச்சர் நியமித்த குழுவை அவர் நம்பினார். ஆனால் விசாரணைக் குழு எனது விடயத்தில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அது பக்கச்சார்பாக இயங்கியுள்ளது என்பது புலப்படுகின்றது. வடக்க…
-
- 5 replies
- 423 views
-
-
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இன்று மாலை பதவியில் இருந்து விலகும் கடிதத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளார். இன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த கல்வி அமைச்சர் குருகுலராசா, பதவி விலகல் கடிதத்தை நேரில் கையளித்தார். கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன், விசாரணைக்குழுவினால் குற்றம்சாட்டப்பட்ட கல்வி அமைச்சர் குருகுலராசாவையும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் தாமகவே முன்வந்து தமது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு கோரியிருந்தார். இதற்கமைய, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஏற்கனவே தமது பதவியை விட்டு விலகியிருந்தார். எனினும், கல்வி அமைச்சர் குருகுலரா…
-
- 4 replies
- 439 views
-
-
வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் உவராகிவருகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய கிராமங்கள் வேகமாக உவரடைந்து வருவதன் காரணமாக இதனைத் தடுப்பதற்கு அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என இரு கிராமங்களின் மக்களினாலும் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது. பூநகரியின் பல கிராமங்கள் உவரடைந்ததன் தொடர்ச்சியாக வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் கிராமங்கள் முழுமையாக உவரடையும் ஆபத்தினை எதிர் கொண்டுள்ளது. கடந்த ஏழாண்டுகளாக கிராம மட்டத்திலும் கரைச்சி பிரதேச செயலகத்திலும் மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் தமது கிராமங்களை உவர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுமாறு கிராமங்களின் மக்கள் நாடாளுமன்ற உறுப…
-
- 2 replies
- 337 views
-
-
முதல்வரின் அமைச்சு உட்பட 5 அமைச்சுகள் மீதும் சுயாதீன விசாரணை வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணி நம்பிக்கை முதலமைச்சரின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள் மீதும் அதன் கீழான திணைக்களங்களிலும் இடம்பெற்றதாகக் குறிப்பி டப்படும் அனைத்து ஊழல், மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்தும் முறையானதும், சட்டரீதியானதும், சுயாதீனமானது மான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பதாக, வடக்கு மாகாண சபையின் நீதிக்கான உறுப்பினர்கள் அணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அணியின் ஊடகப் பேச்சாளரும், மாகாண சபை உறுப்பினருமான கே.சயந்தன் வெளியிட்ட பத்தி…
-
- 3 replies
- 387 views
-
-
முடிவுக்கு வந்தது வடக்கு விவகாரம் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த வடக்கு மாகாணசபை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான பிரேரணையை மீளப் பெறுவதாக, இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கௌரவ. நீதியரசர். சீ .வி . விக்னேஸ்வரன் முதலமைச்சர்வடமாகாணம் அன்புக்குரியவிக்னேஸ், தங்களது 19.06.2017 திகதியிடப்பட்டகடிதத்திற்குநன்றி நீங்கள்கூறியுள்ளஅனைத்துவிடயங்களையும்கவனத்தில்கொண்டுள்ளேன் மேலும்மூன்றுநிபந்தனைகளின்அடிப்படியில்இந்தவிடயம்முடிவிற்குகொண்டுவரப்படவேண்டும்எனதெரிவித்துஸ்ரீலஸ்ரீசோமசுந்தரதேசிகஞானசம்பந்தபரமாச்சார்யசுவாமி…
-
- 8 replies
- 1k views
-
-
தெற்கில் மாத்திரமல்ல வடக்கில் இனவாதம் தலைதூக்கினாலும் அதனையும் எதிர்ப்போம் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு (எம்.சி.நஜிமுதீன்) தெற்கில் மாத்திரமல்ல வடக்கில் இனவாதம் தலைதூக்கினாலும் அதற்கெதிராக நாம் நடவடிக்கை எடுப்போம். அந்நிலைப்பாட்டில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. மேலும் சட்டத்திற்குப் புறம்பாக எவரும் செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை. இது தொடர்பில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு ஏற்பாடு செய்த “பெளத்த பக்தி கீதம்” இசைக்கும் நி…
-
- 0 replies
- 247 views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை சந்தித்தார் சி.வி.விக்னேஷ்வரன் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை இன்று மாலை சந்தித்தார். யாழ். நாவாந்துறை ஜூம்மா பள்ளிவாசலுக்கு இன்று மாலை சென்ற முதலமைச்சர், சமயப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். http://newsfirst.lk/tamil/2017/06/யாழ்ப்பாணத்திலுள்ள-முஸ்/
-
- 0 replies
- 368 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (20/06/2017)
-
- 0 replies
- 266 views
-
-
வடமாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவில்லை – ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது சென்றதாக தெரிவிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சர் தனது பதவியை செவ்வாய்க்கிழமை மதியம் வரை இராஜினாமா செய்வில்லை என தெரியவருகின்றது. அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை பதிலளிக்காது சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கட்சி கலந்துரையாடலை முடித்துக்கொண்டு வெளியே வந்த கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து விட்டீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை அதற்கு பதிலளிக…
-
- 6 replies
- 422 views
-
-
அவைத்தலைவரின் நிலை என்ன? - எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாகாண அவைத்தலைவர் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளது. கடந்த 14ஆம் திகதி, வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் சபையில் சமர்ப்பித்தார். இதன்போது, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி குற்றவாளிகள் எனவும் எனவே, அவர்கள் இருவரும் தாமாக முன்வந்து தமது பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் …
-
- 0 replies
- 638 views
-