ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
குருகுலராசா கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவிப்பு ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா தன்னிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எனினும், இந்தக் கடிதம் தொடர்பில் எவ்விதத் தகவல்களையும் வெளியிட முடியாது என மாவை சேனாதிராஜா நியூஸ்பெஸ்ட்டுக்குக் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. மாகாணக் கல்வி அமைச்சரால் அவருடைய கட்சிக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய தகவல்கள் தமக்கு தெரியாது எனவும் வட மாகாண முதலமைச்சர் குறிப…
-
- 1 reply
- 495 views
-
-
படம்.| சி.வெங்கடாசலபதி. மனித உரிமைகளின் மகத்துவத்தை போற்றிக் காப்பாற்றவும், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையாளர் கேட் கில்மோருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இக்கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக முன்னால் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள்…
-
- 1 reply
- 474 views
-
-
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிரமதானப் பணிகளில் இராணுவத்தினர் முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆலய பரிபாலன சபையினரால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை இராணுவத்தினரால் குறித்த ஆலயத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இனமத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இவ்வாலயத்திற்கு வந்து வழிபட்டுச் செல்வது வழமையாக காணப்படுவதோடு குறித்த பொங்கல் விழாவிற்கு வருடாந்தம் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/…
-
- 1 reply
- 348 views
-
-
நாட்டில் உள்ள சில அரசாங்க அதிபர்களின் இடமாற்றம் நடைபெறவுள்ள நிலையில். அதில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மாவட்டமான மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றமும் இடம்பெறவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 2015 ஆண்டு நடைபெற்ற வெள்ளநிவாரண ஊழல் சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை முறையான விசாரணை நடத்த கோரவேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊழல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு அரசாங்க…
-
- 1 reply
- 484 views
-
-
இராணுவ நடவடிக்கை காரணமாக 1991 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தீவகத்திலிருந்து மக்கள் வெளியேறியிருந்தனர். கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு, நயினா தீவு, எழுவைதீவு, அனலைதீவு தவிர்ந்த தீவகத்தின் ஏனைய இடங்களில் இருந்து ஒட்டு மொத்தமாக மக்கள் வெளியேறியதன் பின்னர், 1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிற்பாடு தீவகத்துக்குச் சென்று மக்கள் தங்கள் இடங்களைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். தீவகத்தில் மக்கள் மீளக் குடியிருப்பதற்கு தடை இருக்கவில்லையாயினும் ஏற்கெனவே அங்கிருந்த மக்கள் மீளவும் தீவக மண்ணில் குடியிருப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதற்குக் காரணம் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் தீவகம் இயல்பாகவே ஒரு பயங்கரமான சூழல் கொண்ட பிரதேசமாக மாறியிருந்தது. இடம்பெய…
-
- 0 replies
- 333 views
-
-
மஹிந்த, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் ஜப்பானில் இரகசிய பேச்சுவார்த்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் சில சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் இவ்வாறு மஹிந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட முன்னதாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களது ஆதரவினை மஹிந்த பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியை பல…
-
- 0 replies
- 158 views
-
-
நாடு திரும்பிய ரணிலுக்கு வரவேற்பு அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று இன்று மாலை நாடு திரும்பிய தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, கட்டுநாயக்கா பன்னாட்டு வானூர்த்தித் தளத்தில் வைத்து சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். http://uthayandaily.com/story/6023.html
-
- 1 reply
- 318 views
-
-
மகசின் படுகொலை, ரத்துபஸ்வல சம்பவங்களுக்கு கோத்தாவே காரணம்!! குற்றஞ்சாட்டுகின்றது இடதுசாரி நிலையம் மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஆகிய இரு சம்பவங்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாயவின் உத்தரவுக்கு அமையவே இடம்பெற்றது என்று இடதுசாரி நிலையம் குற்றம்சாட்டியுள்ளது. மக்கள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட இடதுசாரி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் தெரிவித்ததாவது- வசிம் தாஜுடீன் படுகொலை செய்யப்பட்டமை இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே …
-
- 0 replies
- 259 views
-
-
கிளிநொச்சியில் அதிகாலை 74 பவுண் கொள்ளை கிளிநொச்சிக் கல்லாறில் கணவன், மனைவி, பிள்ளைகளை கட்டி வைத்து விட்டு 74 பவுண் நகைகள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபா பணம் என்பன இன்று அதிகாலை 3மணிக்கு கொள்ளையிடப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட கொள்ளையர் குழுவே சுமார் அரைமணித்தியாலத்துக்கு மேலாக நின்று இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். http://uthayandaily.com/story/6033.html
-
- 0 replies
- 209 views
-
-
சிறுவர்கள் பிச்சை எடுத்தால் கைது சிறுவர்கள் பிச்சை எடுக்கும் நிலைமை அதிகரித்து வரும் நிலைமையை கருத்தில்கொண்டு, இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக, கைதுசெய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு தலைமையகம் மூலம் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை சிறுவர், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு அமர்த்தும் நபர்களையும் சிறுவர்களையும் கைதுசெய்ய 14 செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. இதில் 11 ஆண் சிறுவர்களும் 07 பெண் சிறுவர்களும் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு நீதிமன…
-
- 0 replies
- 737 views
-
-
விபத்தில் நோயாளர் காவு வண்டி சாரதி பலி -எம்.இஸட்.ஷாஜஹான், எஸ்.என்.நிபோஜன் நீர்கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இச்சம்பவம், இன்று (10) அதிகாலை 1.30 மணியளவில் நீர்கொழும்பு – சிலாபம் வீதியில் பால்தி சந்தியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி, கணேசபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய யோகரத்னம் ராஜேந்திரன் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி மீது எதிர் திசையி…
-
- 0 replies
- 583 views
-
-
நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம்: மனோ கணேசன் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, பிறகு செம்மொழி மாநாட்டை நடத்துவதால் மட்டும் தமிழ் மொழி வாழ்ந்து விடாது என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் மனோ கணேசன், தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டுமானால் தமிழர்கள் வாழ வேண்டும் என குறிப்பிட்டார். சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் சற்று அசந்துவிட்டால், அவர்களை ஆட்கொண்டு விடுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தாய் மொழி, கலாசாரம், இனம், பண்பாட…
-
- 0 replies
- 385 views
-
-
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனுமதிக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரிக்கை யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதற்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், நினைவு கூர்வதற்கும் வடக்கு மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென எழுத்து மூலம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த அருட்தந்தை எழில் ராஜேந்திரன் பல தடவைகள் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்…
-
- 1 reply
- 216 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (10/06/2017)
-
- 0 replies
- 304 views
-
-
வடக்கிலிருந்து தெற்கிற்கு மனிதாபிமான ரயில் பயணம்; காங்கேசன்துறையில் ஆரம்பம் வடக்கிலிருந்து தெற்கிற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள ‘மனிதாபிமான ரயில் பயணம்’ இன்று காலை காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் ஆரம்பமானது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்த ரயில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தை இன்று வந்தடைந்ததுடன், நாளைய தினம் மாத்தறை வரை பயணிக்கவுள்ளது. பொருளுதவியுடன் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் இணைப்பு வலையமைப்பின் 300 உறுப்பினர்களும் இந்த ரயிலில் பயணிக்கின்றனர். அவர்கள் நாளை மாத்தறை – பிட்டபெத்தர டட்லி சேனாநாயக்க கல்லூரியில் சிரமதானப் பண…
-
- 0 replies
- 244 views
-
-
கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வடக்கு மாகாணத்துக்கான கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார். http://uthayandaily.com/story/5923.html
-
- 1 reply
- 345 views
-
-
ஆசிரியத்துவத்தை மதிக்காதவர்கள் – உள்ளே வரவா? வெளியே போகவா? அராலியூர் குமாரசாமி:- வெயில் கொடுமையில் யூஸ் வாங்கிக் குடித்துவிட்டு வெறும் போத்தலை வீதிக்கு அருகில் எறிந்துவிட்டு வந்தான் எனது நண்பன் சசி. நானோ ‘அங்கே இந்த இடத்தில் குப்பை போடக் கூடாது என்று போட் எழுதிப் போட்டிருக்குது உனது கண் எங்கே பிடரிக்கேயே இருக்குது’ என்று கேட்டேன். அதற்கு அவனோ ‘யாழ்.நகரில எல்லா இடமும் தான் குப்பை போடக் கூடாது என்று போட் போட்டிருக்கிறார்கள். பிறகு நாங்கள் எங்க குப்பை போடுறது அதனாலை தான் குப்பை போடக் கூடாது என்று எழுதிப் போட்டிருக்கிற இடத்திலேயே வெறும் போத்தலை எறிந்து விட்டேன்’ என்று இடக்கு மிடக்காய் பதில் சொன்னான். இவனோட என்னத்தைக் கதைக்கிறதென்று வ…
-
- 0 replies
- 434 views
-
-
யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது யாழ்ப்பாணம் தொண்டமனாறு கடற்பரப்பில் வைத்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இக் கடத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கடற்பரப்பிலும் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் வழமையான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது தொண்டமனாறு கடற்கரையை அண்டிய பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் நடமாடுவதை அவதானித்திருந்தனர். இதனையடுத்து குறித்த இருவரிடமும் கடற்படையினர் விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போதே இருவரிடமும் இரு…
-
- 1 reply
- 274 views
-
-
தலையிடமாட்டோம் : முதலமைச்சர் விக்கினேஸ்வரனே முடிவெடுக்கவேண்டும் என்கிறார் சம்பந்தன் (நமது நிருபர்) வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை விவகாரத்தில் நாம் தலையிடப்போவதில்லை. அந்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனே முடிவு எடுக்கவேண்டும் இதுவே எமது நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலை வரும் எதிர்க் கட்சித்தலை வருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடமாகாணசபை விவகாரத்தில் நாம் தலையீடு செய்வதில்லை. அந்த சபை சுதந்திரமாக இயங்குவதற்கு நாம் அனுமதித்துள்ளோம். எனவே இந்த விசாரணை அறிக்கை விவகாரத்திலும் நாம் தலையிட…
-
- 1 reply
- 351 views
-
-
வடக்கு மாகாண மருத்துவ மனைகளில் மருத்துவர்களின் பரம்பல் சொல்வதென்ன தமிழர்களின் பூர்வீக பிரதேசôங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களது மருத்துவ மனைகளும் இன்று சிங்கள மயமாவதை அவதானிக்க முடிகிறது. இந்த வகையில் வடக்கின் 5 மாவட்டங்களது அரச மருத்துவ மனை களும் சிங்கள மருத்துவர்களது பரம்பலுக்குள்ளே அகப்படுகின்றன என்றால் அதற்கு நிச்சயமாக எமது தமிழ் மருத்துவர்கள் எமது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதிலிருந்து விலகி பிறந்த மண்ணை மறந்து தொழில் ரீதியில் வேற்று நாடுகளுக்குச் செல் வதே முக்கிய காரணமாக அமைகிறது. அந்த வகையில் தற்போதைய சிங்கள மொழி பேசும் மருத்துவர்கள் மற்றும் அத்துறைசார் ஏனைய தர ஊழியர்…
-
- 0 replies
- 447 views
-
-
படுகொலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களின் நினைவு தினம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களின் நினைவு கூரல் நிகழ்வு அவர்களின் உறவினர்கள் மற்றும் குருநகர் பிரதேச மக்களால் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டது. கடந்த 10.06.1986 ஆண்டு 31 கடற்தொழிலாளர்கள் மண்டைதீவு கடற்பரப்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/5893.html
-
- 0 replies
- 348 views
-
-
காணியை விடுவிக்குமாறு கோரி தளபதிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என்கிறார் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் புதுக்குடியிருப்புப் பிரதேச செய லகத்துக்கு முன்னால் இராணுவம் சுவீகரித்துள்ள காணியை விடுவிக்கக் கோரி இராணுவத் தளபதிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செய லாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரித்து முகாம் அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்துத் தெரிவிக்கையில், காணிகள் மீண்டும் எமக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த…
-
- 0 replies
- 118 views
-
-
இலங்கை சிங்கள நாடு என்பதை ஏற்காமல் மனோவால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது :பொதுபல சேனா Published by Priyatharshan on 2017-06-10 10:57:18 இலங்கை சிங்கள பெளத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள அமைச்சர் மனோ கணேசன் மறுக்கின்றார். எனவே அவரால் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாதென பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள கலகொட அத்தே ஞானசார தேரரின் ஸ்ரீ சத்தர்மாராஜித விஹாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதி…
-
- 0 replies
- 208 views
-
-
கடலூரில் அரிசிக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். சமூக வலைதளங்களில் அண்மைக் காலமாக பிளாஸ்டிக் அரிசி குறித்த தயாரிப்புக் காட்சிகள் பரவி வருகின்றன. இந்தக் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர்க்க முடியாத உணவுப்பொருளான அரிசியில் கலப்படம் என்பதால், கடைகளில் அரிசி வாங்குவதற்கே மக்கள் தயங்குகின்றனர். மேலும் அதே சமூக வலைதளங்களில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. இந்தச் சூழலில் கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லத்தம்பி, நந்தகும…
-
- 0 replies
- 457 views
-
-
வடமாகாண தேசியப் பட்டியல் ஆசனம் அடுத்ததாக எமக்கே – புளொட்! வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான சுழற்சி முறையிலான தேசிய பட்டியல் ஆசனம் அடுத்ததாக தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்புக்கே கிடைக்கவேண்டுமென அந்தஅமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாணத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனங்கள் இரண்டு கிடைத்தன. அவற்றுள் ஒன்று முஸ்லிம் இனத்தவர்களுக்கு என்ற ரீதியில் அஸ்மினுக்கு வழங்கப்பட்டது. மற்றைய ஆசனம் சுழற்சிமுறையில் வழங்கப்பட்டு வந்தது. இவ்விடயம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் இணைந்து எடுக்கப்பட்டது. அதற்கமைய, முதன்முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசு கட்சி உறுப்பினர் மேரி கமலா குணசீல…
-
- 0 replies
- 307 views
-