ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 8PM (10/06/2017)
-
- 0 replies
- 305 views
-
-
வடக்கிலிருந்து தெற்கிற்கு மனிதாபிமான ரயில் பயணம்; காங்கேசன்துறையில் ஆரம்பம் வடக்கிலிருந்து தெற்கிற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள ‘மனிதாபிமான ரயில் பயணம்’ இன்று காலை காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் ஆரம்பமானது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்த ரயில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தை இன்று வந்தடைந்ததுடன், நாளைய தினம் மாத்தறை வரை பயணிக்கவுள்ளது. பொருளுதவியுடன் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் இணைப்பு வலையமைப்பின் 300 உறுப்பினர்களும் இந்த ரயிலில் பயணிக்கின்றனர். அவர்கள் நாளை மாத்தறை – பிட்டபெத்தர டட்லி சேனாநாயக்க கல்லூரியில் சிரமதானப் பண…
-
- 0 replies
- 246 views
-
-
கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வடக்கு மாகாணத்துக்கான கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார். http://uthayandaily.com/story/5923.html
-
- 1 reply
- 346 views
-
-
ஆசிரியத்துவத்தை மதிக்காதவர்கள் – உள்ளே வரவா? வெளியே போகவா? அராலியூர் குமாரசாமி:- வெயில் கொடுமையில் யூஸ் வாங்கிக் குடித்துவிட்டு வெறும் போத்தலை வீதிக்கு அருகில் எறிந்துவிட்டு வந்தான் எனது நண்பன் சசி. நானோ ‘அங்கே இந்த இடத்தில் குப்பை போடக் கூடாது என்று போட் எழுதிப் போட்டிருக்குது உனது கண் எங்கே பிடரிக்கேயே இருக்குது’ என்று கேட்டேன். அதற்கு அவனோ ‘யாழ்.நகரில எல்லா இடமும் தான் குப்பை போடக் கூடாது என்று போட் போட்டிருக்கிறார்கள். பிறகு நாங்கள் எங்க குப்பை போடுறது அதனாலை தான் குப்பை போடக் கூடாது என்று எழுதிப் போட்டிருக்கிற இடத்திலேயே வெறும் போத்தலை எறிந்து விட்டேன்’ என்று இடக்கு மிடக்காய் பதில் சொன்னான். இவனோட என்னத்தைக் கதைக்கிறதென்று வ…
-
- 0 replies
- 435 views
-
-
யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது யாழ்ப்பாணம் தொண்டமனாறு கடற்பரப்பில் வைத்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இக் கடத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கடற்பரப்பிலும் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் வழமையான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது தொண்டமனாறு கடற்கரையை அண்டிய பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் நடமாடுவதை அவதானித்திருந்தனர். இதனையடுத்து குறித்த இருவரிடமும் கடற்படையினர் விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போதே இருவரிடமும் இரு…
-
- 1 reply
- 275 views
-
-
தலையிடமாட்டோம் : முதலமைச்சர் விக்கினேஸ்வரனே முடிவெடுக்கவேண்டும் என்கிறார் சம்பந்தன் (நமது நிருபர்) வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை விவகாரத்தில் நாம் தலையிடப்போவதில்லை. அந்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனே முடிவு எடுக்கவேண்டும் இதுவே எமது நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலை வரும் எதிர்க் கட்சித்தலை வருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடமாகாணசபை விவகாரத்தில் நாம் தலையீடு செய்வதில்லை. அந்த சபை சுதந்திரமாக இயங்குவதற்கு நாம் அனுமதித்துள்ளோம். எனவே இந்த விசாரணை அறிக்கை விவகாரத்திலும் நாம் தலையிட…
-
- 1 reply
- 352 views
-
-
வடக்கு மாகாண மருத்துவ மனைகளில் மருத்துவர்களின் பரம்பல் சொல்வதென்ன தமிழர்களின் பூர்வீக பிரதேசôங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களது மருத்துவ மனைகளும் இன்று சிங்கள மயமாவதை அவதானிக்க முடிகிறது. இந்த வகையில் வடக்கின் 5 மாவட்டங்களது அரச மருத்துவ மனை களும் சிங்கள மருத்துவர்களது பரம்பலுக்குள்ளே அகப்படுகின்றன என்றால் அதற்கு நிச்சயமாக எமது தமிழ் மருத்துவர்கள் எமது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதிலிருந்து விலகி பிறந்த மண்ணை மறந்து தொழில் ரீதியில் வேற்று நாடுகளுக்குச் செல் வதே முக்கிய காரணமாக அமைகிறது. அந்த வகையில் தற்போதைய சிங்கள மொழி பேசும் மருத்துவர்கள் மற்றும் அத்துறைசார் ஏனைய தர ஊழியர்…
-
- 0 replies
- 448 views
-
-
படுகொலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களின் நினைவு தினம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களின் நினைவு கூரல் நிகழ்வு அவர்களின் உறவினர்கள் மற்றும் குருநகர் பிரதேச மக்களால் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டது. கடந்த 10.06.1986 ஆண்டு 31 கடற்தொழிலாளர்கள் மண்டைதீவு கடற்பரப்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/5893.html
-
- 0 replies
- 349 views
-
-
காணியை விடுவிக்குமாறு கோரி தளபதிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என்கிறார் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் புதுக்குடியிருப்புப் பிரதேச செய லகத்துக்கு முன்னால் இராணுவம் சுவீகரித்துள்ள காணியை விடுவிக்கக் கோரி இராணுவத் தளபதிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செய லாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரித்து முகாம் அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்துத் தெரிவிக்கையில், காணிகள் மீண்டும் எமக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த…
-
- 0 replies
- 119 views
-
-
இலங்கை சிங்கள நாடு என்பதை ஏற்காமல் மனோவால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது :பொதுபல சேனா Published by Priyatharshan on 2017-06-10 10:57:18 இலங்கை சிங்கள பெளத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள அமைச்சர் மனோ கணேசன் மறுக்கின்றார். எனவே அவரால் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாதென பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள கலகொட அத்தே ஞானசார தேரரின் ஸ்ரீ சத்தர்மாராஜித விஹாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதி…
-
- 0 replies
- 209 views
-
-
கடலூரில் அரிசிக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். சமூக வலைதளங்களில் அண்மைக் காலமாக பிளாஸ்டிக் அரிசி குறித்த தயாரிப்புக் காட்சிகள் பரவி வருகின்றன. இந்தக் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர்க்க முடியாத உணவுப்பொருளான அரிசியில் கலப்படம் என்பதால், கடைகளில் அரிசி வாங்குவதற்கே மக்கள் தயங்குகின்றனர். மேலும் அதே சமூக வலைதளங்களில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. இந்தச் சூழலில் கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லத்தம்பி, நந்தகும…
-
- 0 replies
- 458 views
-
-
வடமாகாண தேசியப் பட்டியல் ஆசனம் அடுத்ததாக எமக்கே – புளொட்! வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான சுழற்சி முறையிலான தேசிய பட்டியல் ஆசனம் அடுத்ததாக தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்புக்கே கிடைக்கவேண்டுமென அந்தஅமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாணத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனங்கள் இரண்டு கிடைத்தன. அவற்றுள் ஒன்று முஸ்லிம் இனத்தவர்களுக்கு என்ற ரீதியில் அஸ்மினுக்கு வழங்கப்பட்டது. மற்றைய ஆசனம் சுழற்சிமுறையில் வழங்கப்பட்டு வந்தது. இவ்விடயம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் இணைந்து எடுக்கப்பட்டது. அதற்கமைய, முதன்முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசு கட்சி உறுப்பினர் மேரி கமலா குணசீல…
-
- 0 replies
- 307 views
-
-
இடர்களின்போது மக்களைக் காக்க மாகாணங்களுக்கு அதிகாரம் அவசியம் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் ஊடாகவே இடர்கள் ஏற்படும்போது உரிய வகையில் பொறிமுறைகளை முன்னெடுக்க முடியும். இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தி மக்களுக்கு அரசு உரிய நிவாரணங் களை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை இடர் தொடர்பில் ஜே.வி.பியினால் நாடாளுமன்றில் …
-
- 0 replies
- 242 views
-
-
ஞானசார தேரர் விரைவில் கைதாவார்! – பொலிஸ் மா அதிபர் தவறிழைத்து எவராக இருந்தாலும் அவர்களது தகுதி தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வட மாகாண மக்களால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண இன்றைய தினம் கையளிக்கப்பட்டன. சுமார் 9 பாரவூர்திகளில் கொண்டுவரப்பட்ட பொருள்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பொலிஸ் மாஅதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது- சட்…
-
- 0 replies
- 236 views
-
-
பயங்கரவாதச் சட்டம் ஏன் முன்னாள் போராளிகள் மீது பாயவில்லை? கேள்வி எழுப்புகின்றது மகிந்த ஆதரவு அணி தெற்கில் சில குற்றச் செயல்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் முன்னாள் போராளிகள் மீது நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்? இவ்வாறு மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பிலுள்ள தேசிய வளப் பாதுகாப்பு நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு முன்னாள் தொழிலாளர் விவகார அமைச்சரும் ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு ஆதரவளிப்பவருமான காமினி லொக்குகே கருத்துத் தெரிவித்தார். அதன்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் தெரிவித்ததாவது- எந்தவித சாட்…
-
- 0 replies
- 219 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (09/06/2017)
-
- 0 replies
- 271 views
-
-
கடலில் மிதந்த ஹெரோயின் மீட்பு இலங்கை கடற்படையின் வட பிராந்தியத்திற்கான 41 வது பிரிவினர் மேற்கொண்ட கண்காணிப்பு கடற்பயணத்தின் போது காங்கேசன்துறை பகுதியில் வைத்து இன்று ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 5.6 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள் அடங்கிய பொதிகள் கடலில் மிதந்து வந்த போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் புகாதவண்ணம் நன்கு பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்த ஹெரோயின் போதைப் பொருட்கள், கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை காரணமாக கடத்தல்காரர்களால் கடலில் வீசியெறியப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த ஹெரோயின் பொதிகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு எடுத்துவரப்பட்டு, மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் கையள…
-
- 0 replies
- 179 views
-
-
பாடசாலை அதிபரின் அடியால் மாணவன் வைத்தியசாலையில் கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு அடித்தமையால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான். கடந்த 7ம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை அதிபர் அலுவலகத்திற்கு அழைத்து அடித்துள்ளார். இதனால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் இன்று வரை சிகிச்சை பெற்று வருகின்றான். குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரை எமது செய்தியாளர் வினவிய போது, இதற்கான பதிலை தான் வலயக் கல்விப் பணிப்பாளரிற்கு அறிவிப்பதாகவும் ஊடகங்களுக்கு தன்னால் பதில் சொல்ல முடியாது எனவு…
-
- 0 replies
- 279 views
-
-
“வட மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்“ வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பின்னர் அது தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார். இந்நிலையில் இங்க…
-
- 0 replies
- 272 views
-
-
ஓட்டமாவடியில் இஸ்லாமிய கலாச்சார நிலையம் பொதுமக்களால் உடைப்பு (ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) ஷியா பிரிவினருடைய கல்வி கலாச்சார நிலையமானது (Islamic Education Cultural Center) பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் கல்குடா , ஓட்டமாவடி மீராவோடை ஆலிம் வீதியில் நேற்று 08.06. 2017 இஷா தொழுகைக்கு பின்னர் இடம் பெற்றது. கல்குடா பிரதேசத்தில் அதிகரித்து வருகின்ற ஷியா பிரிவினரின் ஆதிக்கம் காரணமாகவும், குறித்த பிரதேசத்தில் இயங்கிவருகின்ற இஸ்லாமிய கல்வி கலாசார நிலையமானது இஸ்லாமிய அகீதாவிற்கு முரண்பாடான முறையில் கொள்கையினை பரப்பி வருகின்றமையும், இந்த ரமழான் மாதத்தில் தேவைக்கு அதிகமான ஒலி பெருக்கிகள் பாவிக்கப்படுவதும், இன்று வெள்ளிக்கிழமை 09.06.2017 குறித்த நிலையத்தில் ப…
-
- 3 replies
- 492 views
-
-
‘அந்தரங்கத்தை ஊரறியச் செய்வது சபைக்கே இழுக்காகும்’ உங்கள் அனைவரிலும் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில், அறிக்கையின் பிரதியை, சபைக்குக் கையளிக்கின்றேன். இந்த அறிக்கை, அந்தரங்கமானது. ஊரைக்கூட்டி, உங்கள் உரைகளை ஊரறிய ஊடகங்களுக்குக் கையளிப்பது, எமது வடக்கு மாகாணசபைக்கே இழுக்கை ஏற்படுத்தும்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். “குற்றமற்றவர்களே, மேரி மக்டெலின் மீது முதற்கல் எறிய முன்வாருங்கள் என்றார் இயேசு கிறிஸ்து நாதர். குற்றஞ்சாட்டுவதால் அரசியல் இலாபம் பெற விழைவோர், தமது நடவடிக்கைகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த முன்வர வேண்டும். நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகள் எம் ஒவ்வொருவரையும் உள்ளடக்…
-
- 7 replies
- 582 views
-
-
சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர் ‘சிறிலங்கா விற்பனைக்கு விடப்பட்டுள்ளதா?’ என மே 29 அன்று பி.பி.சி ஊடகம் கேள்வியெழுப்பியது. அதாவது ‘சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிலங்கா பெரும் நெருக்கடியைச் சந்திப்பதால் தனது நாட்டின் முக்கிய சொத்துக்களை சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதித்து வருகிறது’ என பி.பி.சி ஊடகம் தெரிவித்துள்ளது. 2007ல், சீனாவின் எக்சிம் வங்கி சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்திக்காக முதன் முதலில் தனது நிதியை முதலீடு செய்தது. இத்துறைமுகம் 1.3 பில்லியன் செலவில் பூர்த்தி செய்யப்பட்டது. இதேபோன்று 900 மெகாவாட் நுரைச்சோலை மின்னாலை நிர்மாணத்திற்காக சீனாவால் 1.…
-
- 3 replies
- 430 views
-
-
இலங்கை அரசு: நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை இலங்கையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை என அரசாங்க புள்ளி விபர திணைக்களம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாடசாலை மாணவர்கள் தொடர்பாக அந்த திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி கடந்த 2016 ம் ஆண்டு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டின் போது 5 முதல் 17 வயது வரை உள்ள பள்ளிக்கூடம் செல்லும் வயதில் உள்ள 4,52 661 மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் 51,249 சிறுவர்கள் ஒருநாள் கூ…
-
- 0 replies
- 395 views
-
-
வெளிநாட்டுப் பிரஜைகள் 5லட்சம் டொலர்களுடன் இலங்கையில் கணக்கு ஆரம்பிக்கலாம் வெளிநாட்டுப் பிரஜைகள் 5லட்சம் டொலர்களுடன் இலங்கையில் கணக்கு அரம்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் கணக்கு ஆரம்பிப்பதற்கான சட்டங்களில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விசேட வைப்புக் கணக்குகள் என்ற பெயரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளது. அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாக ஸ்ரெலிங் பவுண்ட்கள், சுவிஸ் பிராங்குகள், அவுஸ்திரேலிய டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், கனேடிய டொலர்கள், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்றனவும் இவ்வாறு வைப்புச் செய்ய முடியும் என்ற வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. …
-
- 0 replies
- 293 views
-
-
முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது பின்னணி, நோக்கம் குறித்து பொலிஸார் விசாரணை (எம்.எப்.எம்.பஸீர்) மஹரகம, நுகேகொடை பகுதிகளில் அண்மைய நாட்களில் பதிவான முஸ்லிம் கடைகள் தீக்கிரையான சம்பவங்கள் அனைத்தும் நாசகார செயல்கள் என உறுதியாகியுள்ளதுடன் அச்சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெஹிவளை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் சேவையாற்றி வரும் 33 வயதுடைய கசுன் குமார எனும் நுகேகொடை - கங்கொடவில பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. குறித்த சந்தேக நபர் தொடர்பில்…
-
- 0 replies
- 287 views
-