ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143376 topics in this forum
-
இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் போன்ற நேரடியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களைக் கூட அரசாங்கம் முனைப்புடன் மேற்கொள்ளத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Tung-Laï Margue இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க முனைப்புக்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீயை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 190 views
-
-
நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர் குழப்பங்களை ஏற்படுத்துகிறார் : தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர் மதவாதத்தை நாட்டில் ஏற்படுத்திக் குழப்பங்களை ஏற்படுத்துகிறார் எனக் குற்றஞ்சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரச சார்பற்ற நிறுவனங்களும் இதற்கு துணைபோகின்றன என்றும் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்; நாட்டில் அரசியல் ஸ்திரமில்லா நிலைமையை ஏற்படுத்தி சிங்கள – முஸ்லிம் மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் தேவை நோர்வே உட்பட பல மேலைத்தேய நாடுகளுக்கு தேவையாக…
-
- 0 replies
- 177 views
-
-
தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் பிரதேசத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த விகாரை சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்படாமல் கட்டட வேலைகள் நடைபெற்றதனை அடுத்து பிரதேச செயலரினால் கட்டட வேலைகளை உடன் நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள 300க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாவற்குழியி…
-
- 0 replies
- 317 views
-
-
மங்களவின் பதவி மாற்றம் நல்லிணக்கம் மீதான அடி இலங்கையில் புதிய அரசமைப்பை உருவாக்குவது மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டில் இருந்து தற்போதைய கூட்டு அரசு விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கிறது என்று உலக நெருக்கடிகள் குழு அண்மையில் அறிக்கை விட்டிருந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து மங்கள சமரவீர மாற்றப்பட்டிருக்கிறார். அமைதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் இருந்து அரசு விலகிக் செலல்வதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மாற்றம் இருக்கக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இனப்பிரச்சினைக்கு கூட்டாட்சித் தத்துவத்…
-
- 0 replies
- 414 views
-
-
அறிமுகமில்லாதவர் அருகில் அமர்ந்து ஆஸி. பயணித்த ஜனாதிபதி : அமைச்சர் பதிவேற்றிய புகைப்படத்துக்கு மாறுப்பட்ட கருத்துக்கள் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் எடுக்கப்பட்டு அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பதிவில், “நான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் வர்த்தக விமானத்தில் இந்த புகைப்படத்தை எடுத்தேன். இலங்கை நாட்டின் ஜனாதிபதி இதற்கு முன்னர் அறியாத பயணிக்கு அடுத்தபடியாக, வியாபார வகுப்பில் அமர்ந்துள்ளார். நான் உண்மையாக நல்ல விடயத்தை உணர்ந்தேன். நான் பிரதமருடன் பலம…
-
- 7 replies
- 612 views
-
-
மோசடிக் களமாக மாறியுள்ளதா வடக்கு மாகாண சபை? வடக்கு மாகாண அமைச்சர்கள் சிலர் மீதான மோசடி விசாரணை அறிக்கை முதல மைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வது முதலமைச்சரின் பொறுப்பாகும். நீண்ட போர் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் இன்னமும் தமது இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற அவர்கள், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காகப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் வடக்கு மாகா…
-
- 0 replies
- 461 views
-
-
ஜோசப் எம்.பி கொலை: மற்றுமொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர், கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கந்தையைச் சேர்ந்த வினோத் என்றழைக்கப்படும் மதுசங்க (30) என்பவரே, குற்றப் புலனாய்வு பிரிவினரால், இன்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்,இன்றையதினமே அவரை ஆஜர்படுத்திய போது, ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையிலும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 …
-
- 0 replies
- 328 views
-
-
உடல் முழுதும் கிரீஸ் பூசிக்கொண்டு பத்தரமுல்லையில் நிர்வாணமாக நடமாடிய நபர் கைது அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு சில தினங்களே கடந்துள்ள நிலையில், கிரீஸ் மனிதன் தொடர்பான செய்தியொன்று பதிவானது. உடல் முழுதும் கிரீஸினைப் பூசிக்கொண்டு நிர்வாணமாக நடமாடும் குறித்த நபரை மக்கள் கிரீஸ் மனிதன் என அழைக்கின்றனர். இந்நபர் நிர்வாணமாக பத்தரமுல்லையில் பல வீடுகளை சுற்றிவரும் காட்சி வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது. CCTV காட்சிகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடுகளில் பொருட்களைத் திருடியுள்ள இவர், பெண்களை துஷ்பிரயோகம் செய்ய பல தடவை முயற்ச…
-
- 0 replies
- 389 views
-
-
சக்தி டிவி செய்திகள் 24th May 2017, 8PM
-
- 0 replies
- 242 views
-
-
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்..! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய த்தினூடாக பயணம் செய்யும் பயணி ஒருவர் கைப் பையில் கொண்டுவரக்கூடிய திரவங்கள், ஸ்பிரே வகைகள், ஜெல் போன்ற பொருட்களின் அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் குறித்த விதிகளுக்கு அமைவாக அணைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு அதி…
-
- 0 replies
- 391 views
-
-
காரைத்தீவில் பதற்றம் : சகோதரிகளை கடத்திய சிங்கள சாரதி : கைது செய்ய முயன்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் இரு சகோதரிகளை கடத்தியதாகக் கூறப்படும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சந்தேகநபரை மீட்கவந்த பொலிஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காரைதீவில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் சிறிதுநேரம் பதற்றமும் நிலவியது. இச்சம்பவம் இன்று சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில் இடம்பெற்றது. சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பியலால் தலைமையிலான குழுவினர் பலத்த பிரயத்தனத்திற்கு மத்தியில் கடத்தலுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சந்தேக நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு ஜீப்பில் ஏற…
-
- 1 reply
- 255 views
-
-
62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..! (எம்.சி.நஜிமுதீன்) நல்லாட்சி அரசாங்கம் ஊவவெல்லசவிலுள்ள அறுபத்து இரண்டயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பை சீனி தொழில் துறைக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளது. அத்திட்டத்திற்கான அடிக்கல்லை எதிர்வரும் ஐந்தாம் திகதி நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் அத்திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். அல்லாதுபோனால் அதற்கெதிராக பரந்துபட்ட போராட்டங்களை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் உதயஷாந்த தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உ…
-
- 0 replies
- 390 views
-
-
மினிசூறாவளியில் சிக்கிய வவுனியா : வாகனங்கள் பல சேதம் போக்குவரத்தும் பாதிப்பு வவுனியாவில் இன்று மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினிசூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்தமையால் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் அமைந்திருந்த பொலிசார் விடுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது. வவுனியா நகரில் இன்று மதியம் முதல் 3 மணிநேரம் மழையுடன் கூடிய மினிசூறாவளி வீசியதால், நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல்வேறு கட்டங்களும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன. வவுனியா பொலிஸ் நிலையத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், பொலிஸ் நிலையத்தில் இருந்த விடுதி கட்டிடம் ஒன்றின் பகுதியும் இ…
-
- 1 reply
- 389 views
-
-
உதவியளிக்கும் "பெரியண்ணனாக' இந்தியா விளங்க வேண்டுமென சிங்களவர்களும் தமிழ் மக்களும் விரும்புகின்றனர் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் பெரிய அயலவரான இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் அயலவர்களுக்கு உதவ வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மே 17 இல் டபிள்யூ.ஐ.ஓ.என். செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டி வருமாறு: கேள்வி: இந்தியப் பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி சிறிசேன அளித்த இராப் போசன விருந்துபசாரத்தின் போது நீங்கள் அவரை சந்தித்திருந்தீர்கள். மோடி தொடர்பான தங்களின் எண்ணப்பாடு என்ன என்பது பற்றி கூற முடியுமா? பதில்: வாழ்த்துகளை பரிமாறிக் கொ…
-
- 9 replies
- 574 views
-
-
ஊழல் விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கமாக்குங்கள் வடக்கு முதலமைச்சரிடம் அமைச்சர் டெனீஸ்வரனும் கோரிக்கை வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மக்கள் அறியும் வகையில் பகிரங்கப்படுத்தவேண்டும் என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் முன்வைக்கப் பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு விசாரணை நடத்தியது. தற்போது அந்த விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பில் சபையில் பகிரங்கமாக விவாதிக்க…
-
- 2 replies
- 512 views
-
-
இந்திரா காந்தியும், எம்.ஜீ.ஆரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் –கே.பி. இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் இந்திரா காந்தியும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ராமசந்திரனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுமாறு இந்திய உளவுப் பிரிவான றோவிற்கு இந்திரா காந்தி பணித்திருந்தார் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜீ.ஆர் நிதி உதவிகளை வழங்கியிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தியை…
-
- 3 replies
- 592 views
-
-
புங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விஷேட ட்ரயலட்பார் நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம் பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இதன்படி குறித்த வழக்கினை யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட ட்ரயலட்பார் முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்படி குறித்த வழக்கினை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நீதிபதிகளாக குறித்த…
-
- 5 replies
- 645 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் விபசார நிலையம் பொலிசாரால் முற்றுகை ; 4 பெண்கள் கைது கிளிநொச்சி நகருக்கு அருகிலுள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபசார நிலையமொன்று பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது. இந்த முற்றுகையின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . குறித்த விபசார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்கவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் றோசான்ய ராஜபக்ஷவின் பணிப்பின் பெயரில் கிளிநொச்சி உதவ…
-
- 14 replies
- 1.3k views
-
-
சிறுபான்மையை மிரட்டும் சுவரொட்டிகள் பதுளையில் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையிலான சுவரொட்டிகள் நேற்றுக் காலை பதுளை மாநகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. சிங்களவர்களின் பொறுமையைச் சோதிக்காதே (சிங்களயாகே இவசீம பரீக்சா நொகரனு) என்ற வாக்கியங்கள் எழுதப்பட்ட இரு சுவரொட்டி களே இவ்வாறு ஒட்டப்பட்டிருந்தன. பதுளை முத்தி யங்கனை ரஜமஹா விகாரையின் பின்னால் செல்லும் பிரதான பாதை மதிலிலேயே இந்தச் சுவரொட்டி கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடு அங்குள்ள சிறுபான்மை மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறப்பட்டது. http://uthayandaily.com/story/3961.html
-
- 0 replies
- 404 views
-
-
வெள்ளை துணியால் வாயை கட்டி பொதுபல சேனா ஆர்ப்பாட்டம் : ஞானசார கைது செய்யப்பட்டால் என்ன நடக்குமென தெரியாது என எச்சரிக்கை : தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் முறைப்பாடு இனவாதம் பேசுவதாக ஞானசார தேரருக்கு எதிராக மாத்திரம் சட்டநடவடிக்கை எடுக்காமல் வடக்கு மற்றும் கிழக்கில் இனவாதம் பேசும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் எதிராக சட்டநவடடிக்கை எடுக்க கோரியும், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் நாட்டில் என்ன நடக்கும் என்பது தெரியாது என எச்சரிக்கை விடுத்து பொதுபலசேனா அமைப்பினர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக வெள்ளைத் துணியால் வாயைக் கட்டியவாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வடக்கு மற்றும…
-
- 1 reply
- 306 views
-
-
சிறுபான்மையினர் மீதான இனவாதச் செயற்பாடுகளுக்கு சபையில் நேற்றுக் கண்டனம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் இனவாதச் செயற்பாடுகளுக்கு முதன்மை எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக் குக் கூட்டணி ஆகியன நேற்று நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் வெளியிட்டன. அத்துடன் இனவாதத்தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சிகள் வலியுறுத்தின. சிறுபான்மையினருக்கு எதிராக தலைதூக்கியுள்ள அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐக…
-
- 1 reply
- 408 views
-
-
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் உச்சம் தமிழ், முஸ்லிம் கடைகள் இரத்தினபுரியில் தீக்கிரை சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்கள், அவர்களுக்குச் சொந்தமான வணக்கத் தலங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தைப் பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு வர்த்தக நிறுவனங்கள் நேற்று அதிகாலை தீயில் எரிந்து சாம்பராகி யுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிரான 11 தாக்குதல் சம்பவங்கள் கடந்த 10 தினங்களுக்குள் பதிவாகியுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தின் …
-
- 2 replies
- 581 views
-
-
தீர்வைப் பெற முடியாத த.தே.கூ; சுமந்திரனின் செயலுக்கு கஜேந்திரகுமார் கண்டனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாத கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அண்மையில் யாழ். வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று சொந்தம் கொண்டாடியிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 860 views
-
-
பள்ளிவாசல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொறுப்புக் கூறும் வகையில் நடவடிக்கை அமைச்சரவையில் மனோ கணேசன், ரிஷாத், ரவூப் ஹக்கீமும் கடும் அதிருப்தி (எம்.எப்.எம்.பஸீர்) முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்களது வர்த்தக நிலையங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களும் தீ வைப்புச் சம்பவங்களும் இடம்பெற்று வரும் நிலையில் அவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட திட்டத்தை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தங்களின் ப…
-
- 0 replies
- 152 views
-
-
இனவாதத்தை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ரணில் வேண்டுகோள்: பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் எதிரொலி? இனவாதத்தை தூண்டும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மைய தினங்களில் நாட்டின் சில பகுதிகளில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ள பின்னணியில் பிரதமர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க சிலர் மீண்டும் நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மீண்டும் எமது நாட்டில் யுத்தமொன்று ஏற்பட இடமளிக்க முடியாதென்…
-
- 0 replies
- 154 views
-