ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
எந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்தாலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகள் அமைக்க இடமளிக்கப் போவதில்லை – முதலமைச்சர் எந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்த போதிலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகளை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ நசீர் அஹமடதெரிவித்துள்ளார், கிழக்கில் ஏற்கனவே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் எம் இளைய சமூகத்தினரின் எதிர்காலம் கண்முன்னே சீரழிக்கப்படும் போது அதை கைகட்டி வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதற்கு தாம் ஒரு போதும் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை போதையற்ற மாகாணமாக்குவதை இலக்காக் கொண்டு இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் நா…
-
- 0 replies
- 179 views
-
-
வெள்ளைநிற பாடசாலை சீருடைக்கு பிரியாவிடை பாடசாலை மாணவர்களுக்கான வெள்ளை நிறச் சீருடைக்கு பதிலாக, வர்ணத்திலான சீருடையொன்றை அறிமுகப்படுத்த, கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்குள்ள விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதற்காக, நான்கு அல்லது ஐந்து நிறங்களை அறிமுகப்படுத்தி, அதில் விரும்பிய நிறத்தை, தனது பாடசாலை மாணவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான அனுமதியினை, பாடசாலைகளுக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், வெள்ளைநிறச் சீருடையை அணியும் பாடசாலைகள், இலங்கையில் மாத்திரமே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். வெள்ளை நிறச்…
-
- 0 replies
- 484 views
-
-
ஜெனீவாவில் காட்டி கொடுப்பு 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா யோசனையை முழுமையாகச் செயற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் உறுதிமொழி வழங்கியமை பெரும் காட்டிக்கொடுப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்த யோசனையை ஏற்றுக் கொள்வதற்கு இயல்பாகவே உள்ள இனத்துரோக எண்ணமே காரணம் என்றும் வேறு காரணங்கள் எதுவும் நல்லாட்சியாளர்களுக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (30) ஊடகங்களுக்கு அனுப்பியிருந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற…
-
- 0 replies
- 256 views
-
-
அச்சுவேலி முக்கொலை; குற்றத்தை ஏற்றார் சந்தேகநபர் வைத்துவிட்டார்களோ என்ற சந்தேகத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மனைவியின் உறவினர் களைத் தானே வெட்டிக் கொன்றார் என்பதை நேற்று நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டார் அச்சுவேலி முக்கொலை வழக்கின் சந்தேகநபரான தனஞ்செயன். இந்த வழக்கின் விசாரணை நேற்றும் தொடர்ந்தது. கொலைக்குற்றஞ்சாட்டப்பட்ட தனஞ்செயன் நீதிபதி முன்பாக நடந்த சம்பவத்தை விளக்கினார். அவரது சட்டத்தரணி அவரது சாட்சியத்தை நெறிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் அதை மீறி நடந்தது என்ன என்று தனஞ்செயன் மடமடவென்று நீதிபதிக்குக் கதை சொல்ல ஆரம்…
-
- 4 replies
- 810 views
-
-
யாழ்.வரலாற்றில் முதன்முறையாக முக்கொலை வழக்கில் எதிரிக்கு முத்தூக்கு! யாழ்.குடாநாட்டை அதிர வைத்த அச்சுவேலி முக்கொலைச் சம்பவ வழக்கின் எதிரிக்கு முத்தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அதே சம்பவத்தில் மேற்கொண்ட இரு கொலை முயற்சி குற்றத்துக்கு 14 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் தண்டமும் இரண்டு இலட்சம் ரூபாய் நஷ்டஈடும் செலுத்துமாறு நேற்றையதினம் தீர்ப்பளித்துள்ளார். யாழ்ப்பாண வரலாற்றிலேயே மேல்நீதிமன்ற வழக்கில் அதிகூடிய தண்டனை பிறப்பிக்கப்பட்ட வழக்கு இது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். அச்சுவேலி முக்கொலை வழக்கின் விசாரணைகள் முடிவுற்று நேற்றைய தினம் தீர்ப்புக்க…
-
- 0 replies
- 279 views
-
-
கப்பலில் பயணித்த வெளிநாட்டவர் திடீர் சுகயீனம் ; துரித நடவடிக்கையெடுத்த கடற்படை Share இலங்கைக்கருகில் பயணித்த வர்த்தகக் கப்பலிலிருந்த வெளிநாட்டருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து துரிதகதியில் செயற்பட்ட இலங்கை கடற்படையினர் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான அலொநிஷன் என்ற கப்பல், கட்டார் நாட்டிலிருந்து தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அறிந்த இலங்கை கடற்படையினனர், கடற்படைக்குச் சொந்தமான அதிவேக விசைப்படகின் உதவியுடன் சுகயீனமடைந்த வெளிநாட்டவரை மீட்டு அம்பியுலன்ஸின் உதவியுடன் வைத்திய…
-
- 0 replies
- 230 views
-
-
ஐ.நாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்குவதற்கு கூட்டமைப்பு ஆதரவு அளித்தது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் முல்லைத்தீவில்!! ஐநா சபையில் இந்த வருடம் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்தது தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தும் முகமாக தெளிவு படுத்தல் கூட்டம் இன்று(30) முல்லைத்தீவில் இரண்டு இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் வருகையுடன் இடம்பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ.சுமந்திரன் அவர்…
-
- 0 replies
- 236 views
-
-
பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் வாதாடுவேன் : எம்.ஏ சுமந்திரன் பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் அவர்கள் தரப்பு சட்டத்தரணியாக வாதாடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை. இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் வாழ முடியாது. தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி இன்று ஒன்பதாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நில…
-
- 0 replies
- 261 views
-
-
ஆட்சி மாற்றத்துக்கு உதவினாராம் அஜித் டோவல் மீது பாய்கிறார் கோத்தா கொழும்பில் நேற்றுமுன்தினம் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எழுதிய நூல் மிகச் சிறந்தது. அதில் கூறப்பட்டுள்ளது போன்று, காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசும் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக இருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர்-அஜித் டோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப் பட்ட பின்னர் சீனா விவகாரம் முன்னரங் குக்குக் கொண்டுவரப்பட்டது. சீனா…
-
- 0 replies
- 295 views
-
-
தமிழ் மக்களின் போராட்டம் கோத்தாவின் இதயத்தை சுடுகிறது தன் நெஞ்சறிவது பொய்யற்க; பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச்சுடும் என்றார் திருவள்ளுவர். உலகிற்கு அறம் உரைத்த திருவள்ளுவரின் இக்குறள்பா கூறும் பொருள் உணர்ந்தால் இவ்வுலகில் எவரும் தம் மனச் சாட்சிக்கு விரோதமாக செயற்படமாட்டார். அதேவேளை இந்த உலகில் யார் எத்தீங் கிழைத்தாலும் அவர்கள் தங்கள் வாழ்வில் துன்பத்தை அனுபவித்து உழறுவர் என்பது மறுக்க முடியாத உண்மை. இவற்றை நாம் அனுபவரீதியாகப் பார்க்க முடியும். போரின்போது ஆங்காங்கே குற்றங்கள் நடந்தன என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். அவர் கூறியது சிலவேளை அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் அதைக…
-
- 1 reply
- 413 views
-
-
இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்க சவேந்திர சில்வாவை அழைக்கவேண்டும் என வேண்டுகோள்.! இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இந்த ஆட்கொணர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்ற…
-
- 0 replies
- 280 views
-
-
புலிகளுக்கு எதிரான போரின் போது வேவு பார்த்தது இந்திய விமானம் – ஒப்புக்கொள்கிறது இந்தியா விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார். அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படையின் ராஜாளி தளத்தில் இருந்தே இந்த விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. ஐஎன்எஸ் ராஜாளி தளத்தின் வெள்ளி விழா மற்றும் இந்திய கடற்படையினால் 29 ஆண்டுகளாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்ட ரியூ 142 எம் விமானத்தை, சேவையில் இருந்து விலக்கும் நிகழ்வு நேற்று அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜா…
-
- 1 reply
- 375 views
-
-
சந்தியா ஏக்னலிகொடாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விருது இலங்கையில் 2010ம் ஆண்டில் காணாமல் போன கார்ட்டூனிஸ்ட் , பிரகீத் ஏக்னலிகொட விவகாரத்தில், நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் அவரது மனைவி சந்தியா ஏக்னலிகொடவுக்கு, அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் ``2017ம் ஆண்டுக்கான, துணிச்சலுடன் செயல்படும் சர்வதேச மகளிர் விருது`` வழங்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைEMBASSY OF THE UNITED STATES OF AMERICA இலங்கையில் 2010ம் ஆண்டில் காணாமல் போன கார்ட்டூனிஸ்ட் , பிரகீத் ஏக்னலிகொட விவகாரத்தில், நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் அவரது மனைவி சந்தியா ஏக்னலிகொடவுக்கு, அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் ``2017ம் ஆண்டுக்கான, துணிச்சலுடன் செயல்படும் சர்வதேச மகளிர்…
-
- 1 reply
- 421 views
-
-
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விடுதிகள்..! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விடுதிகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விடுதிகளை அமைத்து பராமரிப்பதற்காக 40 வருடங்கள் குத்தகைக்கு வழங்கல் தொடர்பில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளமையால் விமான நிலைய எல்லைக்குள் இரண்டு விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பிரேரணை தொடர்பாக …
-
- 1 reply
- 332 views
-
-
ரவிராஜ் கொலை: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியைப் பெறுமாறு உத்தரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்படை உறுப்பினர்கள் மூவரது வசிப்பிடங்களைக் கண்டறிவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டது. குறித்த கடற்படை உறுப்பினர்கள் மூவரும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு, மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். ரவிராஜ் படுகொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட…
-
- 3 replies
- 678 views
-
-
வைத்தியசாலையில் சி.வி.கே -எஸ்.நிதர்ஸன் வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், திடீர் சுகயீனம் காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலையில், நேற்றுப் புதன்கிழமை (29) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, இன்றைய (30) வடமாகாண சபையின் அமர்வுகள், பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் தலமையில் இடம்பெற்று வருகின்றன. காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருந்த அமர்வுகள், 2 மணித்தியாலங்கள் தாமதமாக 11 மணிக்கு ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/194027/வ-த-த-யச-ல-ய-ல-ச-வ-க-#sthash.4LnSj1Ys.dpuf
-
- 0 replies
- 311 views
-
-
பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் தேவை – கர்தினால் மெல்கம் பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் கொண்டு வரப்படுவதனை விரும்புகின்றேன் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயார் இல்லத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பலவந்தமான அடிப்படையில் மதமாற்றம் செய்யப்படுவதனை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதனை நான் வரவேற்கின்றேன். இந்த நிலைப்பாடு எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் எனவும் கூறியுள்ளார். கத்தோலிக்க பேராயர் சபையின் நிலைப்பாடு எனது நிலைப்பாட்டுக்கு முரணானதாக இருக்கலாம். சிங்கள மற்றும் கத்தோலிக்க மக்கள் நீண்ட காலமாக நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனு…
-
- 0 replies
- 224 views
-
-
இலங்கையை வென்றுவிடமுடியும் என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு ஒரு நப்பாசை இருக்கிறது அதனோடு ஒட்டியோடி வெற்றி பெறவேண்டும் என்கிறார் சுமந்திரன் எம்.பி அதை விடுத்து அவர்களை அடித்து விரட்டுகின்ற அடிமுட்டாள்தனமான காரியங்களில் தமிழர்கள் ஈடுபடக் கூடாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: காணாமற்போனோர் விவகாரம் முடிவுக…
-
- 0 replies
- 161 views
-
-
தீர்மானங்களால் என்ன முன்னேற்றம்? ஐ.நா கண்காணிக்க வேண்டும் - விக்கி ஐ.நா மனிதவுரிமை பேரவை யில் 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்ப டுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தீர் மானங்களை நிறைவேற்றுவதில் என்ன முன்னேற்றம் உள்ளது என ஒவ்வொரு மாதமும் ஐக்கிய நாடுகள் சபை கண்காணிக்க வேண்டும் என ஐ.நாவிடம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடத்தில் என்ன முன்னேற்றம் என்பது தொடர்பில் ஐ.நா கண்காணிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். வவு னியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஆகிய ம…
-
- 0 replies
- 207 views
-
-
பெண் புலி உறுப்பினருக்கும் இராணுவ கோப்ரலுக்கும் பிணை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பெண் புலி உறுப்பினர், இராணுவ கோப்ரல் உள்ளிட்ட நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெல்லவாயவுக்கு மார்ச் மாதம் 13ஆம் திகதியன்று விஜயம் செய்திருந்தபோது இந்த நால்வரும், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மார்ச் 28ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சந்தேகநபர்கள் நால்வரும், அன்றையதினம் வெல்லவாய நீதவான் நீத…
-
- 0 replies
- 215 views
-
-
'உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் விமல்' விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு, மாகாநாயக்க தேரர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, மேலும் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/194021/-உண-ண-வ-ரதத-த-க-க-வ-ட-ட-ர-வ-மல-#sthash.vmneElIt.dpuf விமலின் உண்ணாவிரதம் பெரும் தல…
-
- 0 replies
- 177 views
-
-
வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் திருவுருவச்சிலை திறப்புவிழா! வன்னி பெருநிலப்பரப்பில் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை திறப்புவிழா நாளை மாலை 3 மணியளவில் மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு சமாதி அமைந்துள்ள பிரதேசமான ஒட்டுசுட்டான் கற்சிலைமடு சிலையடி பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் நிதியொதுக்கீட்டில் பண்டாரவன்னியன் அறங்காவற்கழகத்தால் குறித்த திருவுருவசிலையானது அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராசா பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்த விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்ற…
-
- 1 reply
- 834 views
-
-
12 பேரின் உயிரைக் காவுகொண்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் : உதவி புரிந்தவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை! புறக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 2008 ஆம் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, விடுதலை புலிகள் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் நபரொருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரனசிங்க இன்று பிறப்பித்துள்ளார். கனகசபை தேவதாசன் என்ற நபருக்கே இவ்வாறு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் பேஸ்போல் அணி வீரர்கள் 8 ப…
-
- 2 replies
- 428 views
-
-
எந்தவொரு இராணுவ வீரரையும் சந்தேக நபராக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் மனித உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் எந்தவொரு இராணுவ வீரரையும் சந்தேக நபராக ஆக்குவதற்கு நான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். குருணாகலையில் நேற்று (29) நடைபெற்ற பாடசாலை கட்டடத் திறப்புவிழாவொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: “தாய்நாட்டுக்காகப் போரிட்ட வீரர்களைக் காப்பது ஒரு அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும். ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் நான் எனது கடமையைச் செவ…
-
- 0 replies
- 164 views
-
-
போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்த சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, சிறிலங்காவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் யு.ஆர்.டி .சில்வா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முதல் முறையாக வெளிநாட்டு நீதிபதிகளை போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடுத்தும் பரிந்துரை முன்லைக்கப்பட்ட போதே, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்காவுக்கு அழைத்து வருவதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை. இது தொடர்பான சட்டத்தரணிகள் சங…
-
- 0 replies
- 193 views
-