Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய ஒத்துழைப்பில் திருமலையில் துறைமுக நகர் திட்டம் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தில் துறைமுக நகர் திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. திருகோணமலை துறைமுக நகர அபிவிருத்தி தொடர்பாக சிங்கப்பூர் நிறுவனமான சுபர்ணா ஜுரோங் சாத்திய ஆய்வு முன்னெடுத்துள்ள நிலையில் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு அரசாங்கம் செல்லும் என துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் மூன்று முக்கிய துறைமுகங்களான கொழும்பு , திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். …

  2. இந்திய மீனவர்கள் விடுதலை இலங்கை சிறைகளில் இருந்த இந்திய மீனவர்கள் 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 30 பேரும், வவுனியா சிறையில் இருந்து 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரம், புதுக்கோட்டை சேர்ந்த மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/18557

  3. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தினால் அர­சாங்கம் கவிழ்ந்­து­ வி­டு­வது நிச்­சயம் எச்­ச­ரிக்­கின்­றது ஹெல உறு­மய (ஆர்.யசி) புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் பின்­ன­ணியில் அர­சாங்கம் செயற்­ப­ட­வில்லை. மாறாக கடந்த காலத்தில் புலி­ களை நியா­யப்­ப­டுத்­திய நபர்­களே செயற்­ப­டு­கின்­றனர். இந்த நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு புலி­களை பலப்­ப­டுத்தும் ஒன்­றா­கவே அமையும் என ஜாதிக ஹெல உறு­மய கட்சி தெரி­வித்­தது. கடந்த இரண்டு ஆண்­டு­களில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் திருப்­தி­க­ர­மாக அமை­ய­வில்லை. இந்­நி­லையில் புதிய அர­சியல் அமைப்பு தொடர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின் அது அர­சாங்­கத்­தையே வீழ்த்தும் எனவும் அக்­கட…

  4. மாகாண அதி­கா­ரங்கள் குறைக்­கப்­ப­ட­வேண்டும் புலி­களின் பிர­தி­நி­தி­யாக செயற்­ப­டு­கிறார் சி.வி.; ஹெல உறு­மய குற்­றச்­சாட்டு (ஆர்.யசி ) ஒன்­பது மாகாண சபை­க­ளையும் ஒன்­பது பாரா­ளு­மன்­றங்­க­ளாக மாற்றும் மோச­ மான பிரே­ரணை தொடர்பில் முத­ல மைச்­சர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப் பட்­டுள்­ளது. இந்த தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­த­ப்ப­டு­மாயின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தனித்து செல்ல பிர­தான கார­ணி­யாக அமையும் என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் ஊட­கப்­பேச்­சாளர் நிஷாந்த வர்­ண­சிங்க தெரி­வித்தார். வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ரனும் வட­மா­காண சபையும் புலி­களின் பிர­தி­நி­திகள் எனவும் அவர் அவர் சுட்டிக் காட்­டினார். ஜாதிக ஹெல உறு­மை­…

  5. சர்­வ­தேச பொறிக்குள் அரசு உலக நாடுகளுடன் முரண்­பட முடி­யா­து­ என்கிறார் சு­மந்­திரன் எம்.பி. (கே.குமணன்) இலங்­கையில் நடை­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள்,மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்­பான பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் தற்­போது இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச பொறிக்குள் சிக்­கி­யுள்­ளது என்று தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். ஐ.நா.மனித உரிமை பேர­வையில் கால அவ­காசம் வழங்­கப்­பட்­ட­மை­யா­னது அர­சி யல் சுய­லா­பங்­க­ளுக்­காக மக்கள் மத்­தியில் தவ­றாக பிர­சாரம் செய்­யப்­ப­டு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பின…

  6. எந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்தாலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகள் அமைக்க இடமளிக்கப் போவதில்லை – முதலமைச்சர் எந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்த போதிலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகளை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ நசீர் அஹமடதெரிவித்துள்ளார், கிழக்கில் ஏற்கனவே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் எம் இளைய சமூகத்தினரின் எதிர்காலம் கண்முன்னே சீரழிக்கப்படும் போது அதை கைகட்டி வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதற்கு தாம் ஒரு போதும் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை போதையற்ற மாகாணமாக்குவதை இலக்காக் கொண்டு இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் நா…

  7. வெள்ளைநிற பாடசாலை சீருடைக்கு பிரியாவிடை பாடசாலை மாணவர்களுக்கான வெள்ளை நிறச் சீருடைக்கு பதிலாக, வர்ணத்திலான சீருடையொன்றை அறிமுகப்படுத்த, கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்குள்ள விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதற்காக, நான்கு அல்லது ஐந்து நிறங்களை அறிமுகப்படுத்தி, அதில் விரும்பிய நிறத்தை, தனது பாடசாலை மாணவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான அனுமதியினை, பாடசாலைகளுக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், வெள்ளைநிறச் சீருடையை அணியும் பாடசாலைகள், இலங்கையில் மாத்திரமே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். வெள்ளை நிறச்…

  8. ஜெனீவாவில் காட்டி கொடுப்பு 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா யோசனையை முழுமையாகச் செயற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் உறுதிமொழி வழங்கியமை பெரும் காட்டிக்கொடுப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்த யோசனையை ஏற்றுக் கொள்வதற்கு இயல்பாகவே உள்ள இனத்துரோக எண்ணமே காரணம் என்றும் வேறு காரணங்கள் எதுவும் நல்லாட்சியாளர்களுக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (30) ஊடகங்களுக்கு அனுப்பியிருந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற…

  9. அச்­சு­வேலி முக்­கொலை; குற்­றத்தை ஏற்­றார் சந்­தே­க­ந­பர் வைத்­து­விட்­டார்­களோ என்ற சந்­தே­கத்­தில் ஏற்­பட்ட ஆத்­தி­ரத்­தில் கதவை உடைத்­துக்­கொண்டு உள்ளே சென்று மனை­வி­யின் உற­வி­னர் க­ளைத் தானே வெட்­டிக் கொன்­றார் என்­பதை நேற்று நீதி­மன்­றத்­தில் ஏற்­றுக்­கொண்­டார் அச்­சு­வேலி முக்­கொலை வழக்­கின் சந்­தே­க­ந­ப­ரான தனஞ்­செ­யன். இந்த வழக்­கின் விசா­ரணை நேற்­றும் தொடர்ந்­தது. கொலைக்­குற்­றஞ்­சாட்­டப்­பட்ட தனஞ்­செ­யன் நீதி­பதி முன்­பாக நடந்த சம்­ப­வத்தை விளக்­கி­னார். அவ­ரது சட்­டத்­த­ரணி அவ­ரது சாட்­சி­யத்தை நெறிப்­ப­டுத்­தி­னார். ஒரு கட்­டத்­தில் அதை மீறி நடந்­தது என்ன என்று தனஞ்­செ­யன் மட­ம­ட­வென்று நீதி­ப­திக்­குக் கதை சொல்ல ஆரம்…

    • 4 replies
    • 812 views
  10. யாழ்.வரலாற்றில் முதன்முறையாக முக்கொலை வழக்கில் எதிரிக்கு முத்தூக்கு! யாழ்.குடாநாட்டை அதிர வைத்த அச்சுவேலி முக்கொலைச் சம்பவ வழக்கின் எதிரிக்கு முத்தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அதே சம்பவத்தில் மேற்கொண்ட இரு கொலை முயற்சி குற்றத்துக்கு 14 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் தண்டமும் இரண்டு இலட்சம் ரூபாய் நஷ்டஈடும் செலுத்துமாறு நேற்றையதினம் தீர்ப்பளித்துள்ளார். யாழ்ப்பாண வரலாற்றிலேயே மேல்நீதிமன்ற வழக்கில் அதிகூடிய தண்டனை பிறப்பிக்கப்பட்ட வழக்கு இது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். அச்சுவேலி முக்கொலை வழக்கின் விசாரணைகள் முடிவுற்று நேற்றைய தினம் தீர்ப்புக்க…

    • 0 replies
    • 280 views
  11. கப்பலில் பயணித்த வெளிநாட்டவர் திடீர் சுகயீனம் ; துரித நடவடிக்கையெடுத்த கடற்படை Share இலங்கைக்கருகில் பயணித்த வர்த்தகக் கப்பலிலிருந்த வெளிநாட்டருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து துரிதகதியில் செயற்பட்ட இலங்கை கடற்படையினர் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான அலொநிஷன் என்ற கப்பல், கட்டார் நாட்டிலிருந்து தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அறிந்த இலங்கை கடற்படையினனர், கடற்படைக்குச் சொந்தமான அதிவேக விசைப்படகின் உதவியுடன் சுகயீனமடைந்த வெளிநாட்டவரை மீட்டு அம்பியுலன்ஸின் உதவியுடன் வைத்திய…

    • 0 replies
    • 231 views
  12. ஐ.நாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்குவதற்கு கூட்டமைப்பு ஆதரவு அளித்தது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் முல்லைத்தீவில்!! ஐநா சபையில் இந்த வருடம் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்தது தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தும் முகமாக தெளிவு படுத்தல் கூட்டம் இன்று(30) முல்லைத்தீவில் இரண்டு இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் வருகையுடன் இடம்பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ.சுமந்திரன் அவர்…

  13. பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் வாதாடுவேன் : எம்.ஏ சுமந்திரன் பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் அவர்கள் தரப்பு சட்டத்தரணியாக வாதாடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை. இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் வாழ முடியாது. தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி இன்று ஒன்பதாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நில…

  14. ஆட்சி மாற்றத்துக்கு உதவினாராம் அஜித் டோவல் மீது பாய்கிறார் கோத்தா கொழும்­பில் நேற்­று­முன்­தி­னம் வெளி­நாட்­டுச் செய்­தி­யா­ளர் சங்­கத்­தின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: முன்­னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் சிவ்­சங்­கர் மேனன் எழு­திய நூல் மிகச் சிறந்­தது. அதில் கூறப்­பட்­டுள்­ளது போன்று, காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான இந்­திய அர­சும் இலங்­கைக்கு மிக­வும் ஆத­ர­வாக இருந்­தது. ஆனால் பா.ஜ.க. ஆட்­சிக்கு வந்த பின்­னர்-­அ­ஜித் டோவல் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ராக நிய­மிக்கப் பட்ட பின்­னர் சீனா விவ­கா­ரம் முன்­ன­ரங் குக்­குக் கொண்டுவரப்­பட்­டது. சீனா­…

  15. தமிழ் மக்களின் போராட்டம் கோத்தாவின் இதயத்தை சுடுகிறது தன் நெஞ்சறிவது பொய்யற்க; பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச்சுடும் என்றார் திருவள்ளுவர். உலகிற்கு அறம் உரைத்த திருவள்ளுவரின் இக்குறள்பா கூறும் பொருள் உணர்ந்தால் இவ்வுலகில் எவரும் தம் மனச் சாட்சிக்கு விரோதமாக செயற்படமாட்டார். அதேவேளை இந்த உலகில் யார் எத்தீங் கிழைத்தாலும் அவர்கள் தங்கள் வாழ்வில் துன்பத்தை அனுபவித்து உழறுவர் என்பது மறுக்க முடியாத உண்மை. இவற்றை நாம் அனுபவரீதியாகப் பார்க்க முடியும். போரின்போது ஆங்காங்கே குற்றங்கள் நடந்தன என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச­ கூறியுள்ளார். அவர் கூறியது சிலவேளை அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் அதைக…

  16. இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்க சவேந்திர சில்வாவை அழைக்கவேண்டும் என வேண்டுகோள்.! இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இந்த ஆட்கொணர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்ற…

  17. புலிகளுக்கு எதிரான போரின் போது வேவு பார்த்தது இந்திய விமானம் – ஒப்புக்கொள்கிறது இந்தியா விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார். அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படையின் ராஜாளி தளத்தில் இருந்தே இந்த விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. ஐஎன்எஸ் ராஜாளி தளத்தின் வெள்ளி விழா மற்றும் இந்திய கடற்படையினால் 29 ஆண்டுகளாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்ட ரியூ 142 எம் விமானத்தை, சேவையில் இருந்து விலக்கும் நிகழ்வு நேற்று அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜா…

  18. சந்தியா ஏக்னலிகொடாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விருது இலங்கையில் 2010ம் ஆண்டில் காணாமல் போன கார்ட்டூனிஸ்ட் , பிரகீத் ஏக்னலிகொட விவகாரத்தில், நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் அவரது மனைவி சந்தியா ஏக்னலிகொடவுக்கு, அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் ``2017ம் ஆண்டுக்கான, துணிச்சலுடன் செயல்படும் சர்வதேச மகளிர் விருது`` வழங்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைEMBASSY OF THE UNITED STATES OF AMERICA இலங்கையில் 2010ம் ஆண்டில் காணாமல் போன கார்ட்டூனிஸ்ட் , பிரகீத் ஏக்னலிகொட விவகாரத்தில், நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் அவரது மனைவி சந்தியா ஏக்னலிகொடவுக்கு, அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் ``2017ம் ஆண்டுக்கான, துணிச்சலுடன் செயல்படும் சர்வதேச மகளிர்…

  19. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விடுதிகள்..! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விடுதிகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விடுதிகளை அமைத்து பராமரிப்பதற்காக 40 வருடங்கள் குத்தகைக்கு வழங்கல் தொடர்பில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளமையால் விமான நிலைய எல்லைக்குள் இரண்டு விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பிரேரணை தொடர்பாக …

    • 1 reply
    • 333 views
  20. ரவிராஜ் கொலை: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியைப் பெறுமாறு உத்தரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்படை உறுப்பினர்கள் மூவரது வசிப்பிடங்களைக் கண்டறிவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டது. குறித்த கடற்படை உறுப்பினர்கள் மூவரும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு, மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். ரவிராஜ் படுகொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட…

    • 3 replies
    • 680 views
  21. வைத்தியசாலையில் சி.வி.கே -எஸ்.நிதர்ஸன் வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், திடீர் சுகயீனம் காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலையில், நேற்றுப் புதன்கிழமை (29) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, இன்றைய (30) வடமாகாண சபையின் அமர்வுகள், பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் தலமையில் இடம்பெற்று வருகின்றன. காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருந்த அமர்வுகள், 2 மணித்தியாலங்கள் தாமதமாக 11 மணிக்கு ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/194027/வ-த-த-யச-ல-ய-ல-ச-வ-க-#sthash.4LnSj1Ys.dpuf

  22. பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் தேவை – கர்தினால் மெல்கம் பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் கொண்டு வரப்படுவதனை விரும்புகின்றேன் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயார் இல்லத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பலவந்தமான அடிப்படையில் மதமாற்றம் செய்யப்படுவதனை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதனை நான் வரவேற்கின்றேன். இந்த நிலைப்பாடு எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் எனவும் கூறியுள்ளார். கத்தோலிக்க பேராயர் சபையின் நிலைப்பாடு எனது நிலைப்பாட்டுக்கு முரணானதாக இருக்கலாம். சிங்கள மற்றும் கத்தோலிக்க மக்கள் நீண்ட காலமாக நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனு…

    • 0 replies
    • 225 views
  23. இலங்­கையை வென்­று­வி­ட­மு­டி­யும் என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு ஒரு நப்பாசை இருக்கிறது அதனோடு ஒட்டியோடி வெற்றி பெறவேண்டும் என்கிறார் சுமந்திரன் எம்.பி அதை­ வி­டுத்து அவர்­களை அடித்து விரட்­டு­கின்ற அடி­முட்­டாள்­த­ன­மான காரி­யங்­க­ளில் தமி­ழர்­கள் ஈடு­ப­டக் கூடாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். வட­ம­ராட்சி கிழக்கு கட்­டைக்­காட்­டுப் பிர­தே­சத்­தில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தார். அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது: காணா­மற்­போ­னோர் விவ­கா­ரம் முடி­வுக…

  24. தீர்மானங்களால் என்ன முன்னேற்றம்? ஐ.நா கண்காணிக்க வேண்டும் - விக்கி ஐ.நா மனிதவுரிமை பேரவை யில் 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்ப டுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தீர் மானங்களை நிறைவேற்றுவதில் என்ன முன்னேற்றம் உள்ளது என ஒவ்வொரு மாதமும் ஐக்கிய நாடுகள் சபை கண்காணிக்க வேண்டும் என ஐ.நாவிடம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடத்தில் என்ன முன்னேற்றம் என்பது தொடர்பில் ஐ.நா கண்காணிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். வவு னியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஆகிய ம…

    • 0 replies
    • 208 views
  25.  பெண் புலி உறுப்பினருக்கும் இராணுவ கோப்ரலுக்கும் பிணை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பெண் புலி உறுப்பினர், இராணுவ கோப்ரல் உள்ளிட்ட நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெல்லவாயவுக்கு மார்ச் மாதம் 13ஆம் திகதியன்று விஜயம் செய்திருந்தபோது இந்த நால்வரும், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மார்ச் 28ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சந்தேகநபர்கள் நால்வரும், அன்றையதினம் வெல்லவாய நீதவான் நீத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.