ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
மோடி கண்டிக்கு வருகைதருவார் : மல்வத்த மகாநாயக்க தேரருடனான சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின நிகழ்விற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யும் போது கண்டி நகருக்கும் வருகை தருவார் என இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்த போது தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் நேற்று கண்டிக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு தொடர்பில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். …
-
- 0 replies
- 112 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் நெருக்கடியில்.! (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சீனாவின் முக்கிய பிரதான இரு பாரிய திட்டங்களான துறைமுகர் நகர் மற்றும் அம்பந்தோட்டை துறைமுகம் மற்றும் சுதந்திர வர்த்தக வலய திட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் முக்கிய நகர்வுகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது. துறைமுக நகர் திட்டத்தின் ஒப்பந்தத்தில் காணப்பட்ட சர்ச்சைக்குறிய விடயங்கள் திருத்தப்பட்டு ஒப்பந்தம் இரு தரப்பினராலும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார். எனினும் சீனாவின் அம்பாந்தோட்டை திட்டங்களில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர…
-
- 0 replies
- 207 views
-
-
சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை ஐந்து இராணுவத்தினருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை - யாழ்ப்பாண நீதிவான் உத்தரவு யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி யில் இளைஞர்கள் இருவர் காணாமல் ஆக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் உள்ள 5 இராணுவத்தினருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாண நீதிவான் மன்று நேற்று உத்தரவிட்டது. சுருக்கமுறையற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் மன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டது. இந்த வழக்கு நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக அறிக்கை…
-
- 0 replies
- 524 views
-
-
அரச தலைவருக்கு வடக்கு முதல்வர் அவசர கடிதம் வடக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடமாகாணத்தில் எதுவுமே நடக்காதது போன்று, எந்தவித கரிசனையும் இல்லாமல் அரசு இருப்பதால், மக்களின் வேதனை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே, அது தொடர்பில் உறுதியான கருத்தை அரச தலைவர் வெளிப்படுத்த வேண்டும்” என, கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதமொன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார். இக் கடிதம் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் மக்கள் தொடர்ச்சியான ப…
-
- 0 replies
- 264 views
-
-
எனக்கு கீழ் கொலைக் கும்பல் இருந்தது என்பது நகைப்புக்குரியது கோத்தபாய கூறுகிறார் (பா.ருத்ரகுமார்) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு வருவது தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் சர்வதேச ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார், அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலுக்கு வருவதற்கு விருப்பமில்லாத போதும் நாட்டின் நலனுக்காகவும் மக்களுக்கு சேவையாற்றவும் அரசியல் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைய…
-
- 0 replies
- 413 views
-
-
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியே தீருவோம் பிக்குகள் தலைமையிலான நான்கு அமைப்புக்கள் சூளுரை (க.கமலநாதன்) நாட்டின் தற்போதைய அரசாங்கத்தினர் வளங்களை சீனாவிற்கும் இந்தியாவிற் கும் விற்பனை செய்கின்றனர், மறுபுறத்தில் வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் புலிகளும் தமிழ்ப் பிரிவினைவாத அமைப்புக்களும் மீண் டும் தலைதூக்கியுள்ளன. எனவே தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய அவசியம் தோன்றியுள்ளதை நாம் உணர்ந்துள்ளோம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள்15 பிக்குகள் சங்கங்களை திரட்டிக்கொண்டு தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்புவோம் என பொதுபல…
-
- 0 replies
- 241 views
-
-
இலங்கைக்கு இதுவே இறுதி கால அவகாசம் - இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதில் நம்பிக்கையீனம் அதிகரித்துச் செல்கின்றது. தற்போது வழங்கப்பட்ட கால அவகாசமே இலங்கைக்கு வழங்கப்படும் இறுதிக் கால அவகாசமாக இருக்கும். இவ்வாறு இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் ஹென்ஸ் வோக்கர் தெதர்கோன் யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுத் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை மாணவர்களை, பல்கலைக்கழகத்தில் தூதுவர் நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது சட்டத்துறை மாணவர்கள், ஜெனிவாத் தீர்மானம், நிலைமாறு கால நீதிப் பொறிமுறை, புதிய அரசமைப்பு உர…
-
- 1 reply
- 360 views
-
-
வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே – வடக்கு முதல்வர் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே என வட மாகாண முதலைமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இது பற்றி தெரிவித்துள்ளார். சிங்களாதீப ஜாதிக பெரமுன என்ற அரசியல் கட்சியின் தலைவராக செயற்பட்டு வரும் டொக்டர் சூரியா குணசேகரவினால் ஊடகம் ஒன்றின் ஊடாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். பௌத்த மத வரலாறு ஆரம்பிக்கப்பட முன்னதாகவே இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர் எனவும் அதற்கான வரலாற்று சான்றுகள் பல இருக்கின்றன. இந்திய துணைக் கண்டனத்தின்…
-
- 1 reply
- 349 views
-
-
183 கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டு - சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் யாழ். மேல் நீதிமன்றால் நிராகரிப்பு 183 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை உைடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவரின் பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்றும் நிராகரித்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாவனை குறைவடைந்து வரும் இந்தத் தருணத்தில் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் கட்டளையிட்டார். பர…
-
- 0 replies
- 257 views
-
-
பன்னாட்டை நிராகரித்து செயற்படமுடியாது அரசு தீர்மானத்தை அப்படியே நிறைவேற்றவேண்டும் - என்கிறார் பாக்கியசோதி கொழும்பு அரசின் தலைவர்கள் கூறுவதைப் போன்று பன்னாட்டுச் சமூகத்தை நிராகரித்துச் செயற்பட முடியாது. பொறுப்புக் கூறல் விடயத்தில் ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளதை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவை இலங்கைக்கு இருக்கின்றது. இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும், நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலருமான பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்றிருந்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத…
-
- 0 replies
- 224 views
-
-
விரைவில் வரும் பொருளாதார தடை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையானது தமது இராஜதந்திர வெற்றியென அரசாங்கம் மார்தட்டிக்கொள்கின்றது. இருப்பினும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையானது யுத்த குற்ற நீதிமன்றத்தினை உள்நாட்டில் நிறுவ வேண்டும் என்பதற்கான அழுத்தத்துக்காக மட்டுமேயேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஐக்கிய நாடுக…
-
- 0 replies
- 453 views
-
-
‘தண்ணீர்மட்டும் குடித்தால் விமலுக்கு பெரும் ஆபத்து’ கைதியான விமல் வீரவன்ச எம்.பி, தண்ணீரை மட்டுமே பருகினால் அவருடைய சிறுநீரகங்கள் மற்றும் குடல் ஆகியவை குணப்படுத்த முடியாத அளவுக்குப் பாதிப்படைந்து விடும் என்று, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் குத்தித்துள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், நேற்று (27) சென்று பார்வையிட்டனர். இதன்போதே வைத்தியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்ததாக ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு அவர் முயற்சித்தால், …
-
- 0 replies
- 224 views
-
-
நியூசிலாந்து செல்லும் வழியில் ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப் பிரசவித்தவருமான தாயொருவர் தெரிவித்தார். இத்தாய் ஆண் குழந்தையைப் பிரசவித்து ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இவரது குடும்பத்தை இந்தோனேசிய அதிகாரிகள் தடுப்பு முகாமிற்கு அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய குடிவரவு வாகனம் ஒன்றில் இக்குடும்பத்தினர் ஏற்றிச் செல்லப்படும் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 வயதான சிவரஞ்சினி பகீதரன் மற்றும் இவரது கணவரான 34 வயத…
-
- 0 replies
- 313 views
-
-
வடக்கில் மேலும் நான்காயிரம ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்:- வடக்கில் மேலும் நான்காயிரம ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். யாழ். மாவட்ட செயகத்தில் நேற்று இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இருபதாயிரம் ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவற்றில் இரண்டாயிரம் ஏக்கர் காணி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மேலும் நான்காயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்h. மேலும் எதிர்வ…
-
- 0 replies
- 160 views
-
-
போரில் ஆங்காங்கே குற்றங்கள் நிகழ்ந்தன – ஒப்புக்கொள்கிறார் கோத்தா போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்று கோல்பேஸ் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும், நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன். நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால், அரச…
-
- 0 replies
- 264 views
-
-
மாலிக்கு செல்லும் படையால் காங்கேசன்துறையில் மக்கள் பதட்டம்:- மாலியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றச் செல்லவுள்ள இராணுவத்தின் அணியொன்று காங்கேசன்துறையில் களப்பயிற்சி ஒத்திகையை திடீரென ஆரம்பித்ததால் மக்கள் பதட்டமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப்; பயிற்சி எதிர்வரும் 4ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நிறைவடையவுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கடற்கரையோர வீதியின் ஊடாக பருதித்துறை நகருக்குள் திடீரென இராணுவத்தின் தொடர் வாகன அணி பிரவேசித்தமையினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அடையாளம் பொறிக்கப்பட்ட 68 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடற்கரையோர வீதியின் ஊடாகச் சென்றதாகவும் மாலி…
-
- 0 replies
- 428 views
-
-
அரசியலில் விருப்பமில்லை; ஆனால் சந்தர்ப்பத்தை தவறவிடுவதில்லை அரசிலுக்கு வருவதற்கு விருப்பிமில்லை என்ற போதிலும் நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை தவறவிடுவதில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஒரு அரசியல்வாதியல்ல என்று கூறினார். தனக்கு அரசியல் தெரியாது என்பதுடன், அரசியல் நடவடிக்கைகளில் தான் க…
-
- 0 replies
- 216 views
-
-
வடமாகாண முதலமைச்சர் - சுவிஸ் குழுவினர் சந்திப்பு எஸ்.நிதர்ஸன் வடக்கில் மக்கள் தங்களுடைய உரிமையைக் கேட்டுப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்ற போதும் அந்தப் போராட்டங்கள் தொடர்பில், அரசாங்கம் போதிய கரிசனை காட்டவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சுவிஸ்நாட்டுத் தூதுவரிடம் எடுத்துக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்திருந்த இலங்கைக்கான சுவிஸ்நாட்டுத் தூதுக் குழவினர், வடக்கு மாகாண முதலமைச்சரை, அவரது அலுவலகத்தில் நேற்று (27) மாலை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே, முதலமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அங்கு …
-
- 0 replies
- 253 views
-
-
அரசாங்கத்தை எச்சரிப்பதற்கு ஐயாவுக்கு சங்கரி ஐடியா இரு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், எதிர்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என, இராஜினாமாக் கடிதத்தை எழுதிவைத்துகொண்டு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்குமாறு, எதிர்க்கட்சி தலைவரான இரா. சம்பந்தன் எம்.பிக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு (ஐயா) நேற்று (27) அவர், கடிதமொன்றையும் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்கள், தங்க…
-
- 0 replies
- 180 views
-
-
தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் இதன்பொது நீண்டநேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எதிரில் நடைபெற உள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற வகையில் ஒருபோதும் தேர்தலை பிற்போடுவதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=89741
-
- 0 replies
- 167 views
-
-
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பனிப்போர் : விரைவில் பாரியதொரு வெடிப்பு (எம்.ஆர்.எம்.வஸீம்) ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெறும் பனிப்போர் வெடித்தால் கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவாக இருந்து செயற்படுவோம், அரசாங்கத்துக்குள் இடம்பெற்றுவரும் கருத்துவேறுபாடுகளை பார்க்கும்போது விரைவில் பாரியதொரு வெடிப்பு ஏற்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/18352
-
- 0 replies
- 205 views
-
-
ஜனாதிபதி மைத்திரியை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டுள்ள மஹிந்த நல்லாட்சி அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் நிகழ்ச்சிநிரலை தொடர்ந்தும் முன்னெடுத்துச்சென்றால் நாட்டை மயானத்திற்கு கொண்டுசெல்லும் நிலை உருவாகலாம். எனவே நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவகாசம் கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ப…
-
- 0 replies
- 164 views
-
-
படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு ஜனாதிபதியின் கையிலேயே.! எம்.எம்.மின்ஹாஜ் வடக்கு ,கிழக்கு காணி விடுவிப்பு ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது. எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு பகுதிகளில் படையினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என காணி, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். பாதுகாப்பு படையினரின் கையிருப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலணியே பிரதான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கேப்பாபுலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 203 views
-
-
அரசியல் தீர்வைப் பெற வேண்டுமானால் சிறுபான்மைக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சிறுபான்மையினக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். சிறுபான்மையின கட்சிகளுக்கிடையில் அரசியல் தீர்வு தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுமானால் இறுதியில் அது அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமாகவே அமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டத்தின் சாத்தியத்தன்மை குறித்து கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவி…
-
- 0 replies
- 174 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 34ஆவது கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டதற்கான காரணங்கள், இது எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், 2 வருட கால நீடிப்பானது நம்பகத்தன்மையை குறைக்கும் ஒரு தீர்மானம் எனவும், காணாமல் போனோருடைய விவகாரம், முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலை, இந்த நல்லாட்சி அரசாங்கம் இவற்றிற்கு தீர்வு கொடுக்காதது ஏன்? போன்ற பல வினாக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்து கொண்டு பதிலளித்துள்ளார். Vattameasai | Gajendrakumar Ponnambalam http…
-
- 0 replies
- 408 views
-