ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் 3 பெண்கள் மீது வாள்வெட்டு - இணுவிலில் ஞாயிறன்று அதிகாலை சம்பவம் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியில் வீடு புகுந்து கொள்ளையிட முயற்சித்த கொள்ளையருக்கு பெறுமதியான பொருள்கள் எவையுமே கிடைக்கவில்லை. இதனால் வீட்டில் இருந்த 3 பெண்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுக் கொள்ளைக் கும்பல் தப்பித்தது என்று தெரிவிக்கப்பட்டது. இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியில் உள்ள ஆண் தாதிய உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 485 views
-
-
பிரச்சினைகளை தீர்க்க விட்டால் வடக்கு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - வேலையற்ற பட்டதாரிகள் தமது பிரச்சினைகளை கேட்டுத் தீர்ப்பதற்கு முடியாவிட்டால் வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பதவி விலக வேண்டுமென, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு இன்று சென்றிருந்த வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோர் பட்டதாரிகளை சந்திக்காமல் அங்கிருந்து திரும்பியுள்ளனர். இதனையடுத்தே, வேலையற்ற பட்டதாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 153 views
-
-
வடமாகாணசபைக்கு கிழக்கு முதலமைச்சர் நன்றி கிழக்கில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில் வடக்கிலிருந்து தேர்ச்சி பெற்ற இரண்டு புகைவிசுறும் குழுவினரை அனுப்பியமைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வட மாகண முதலமைச்சர் சி வி விக்ேனஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் பா,சத்தியலிங்கத்துக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளார், கிழக்கு மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள இடங்களுக்கு இந்தக்குழுவினர் பயணிக்கவுள்ளதுடன் அங்கு இவர்கள் புகைவிசுறும் நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளனர். அண்மையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் பா,சத்தியலிங்கத்துக்குமிடையில் இடையில் இடம்பெற்ற க…
-
- 0 replies
- 258 views
-
-
“சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை” (ஆர்.யசி) யுத்த குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் சர்வதேச தரப்பிடம் வாக்குறுதிகளை கொடுத்தாலும் ஜனாதிபதியின் நிலைப்பாடு உள்ளக விசாரணை பொறிமுறை என்பதே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. ஆட்சி மாற்றம் ஏற்படாது இருந்திருப்பின் இராணுவமும் ராஜபக் ஷக்களும் போர்க்குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குறிப்பிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே கட்சியின் உறுப்பினர்கள் இதனை தெரிவித்தனர். http://www.virak…
-
- 0 replies
- 256 views
-
-
இந்திய மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் கைது இலங்கை கடற்பரப்பில் வெவ்வேறு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 16 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அனலைதீவு கடற்பரப்பில் வைத்து 8 இந்திய மீனவர்களையும் மேலும் 8 இந்திய மீனவர்களை மன்னார் கடற்பரப்பில் வைத்தும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். http://www.virakesari.lk/article/18153
-
- 0 replies
- 157 views
-
-
கோத்தாவின் ஆணையில் கொழும்பில் 550 தமிழர்கள் கடத்தப்பட்டு கொலை விடயங்களை நான் அறிவேன் என்கிறார் அமைச்சர் மனோ (க.கமலநாதன்) பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறினாலும் கொழும்பில் தமிழர்களை வெள்ளை வேன்களில் கடத்தியவர்களுக்கு ஆணையிட்டவர் அவர் தான் என்பதை நான் அறிவேன். அதற்கமையவே கடந்த காலங்களில் கொழும்பில் 550 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்படார்கள் என தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு மற்றும் அரச கரும் மொழிகள் அமைச்சர் மனே கணேசன் தெரிவித்தார். புதிதாக செப்பனிடப்பட்டு புணர்நிர்மானம் செய்யப்பட்ட கொழும்பு கதி…
-
- 0 replies
- 196 views
-
-
மஹிந்தவுக்கு ஆதரவாக ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வளாகத்தில் நேற்றைய தினம் இலங்கை இராணுவத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கும் ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை தொடர்பான விவாதம் பேரவையில் நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில் பேரவைக்கு வெ ளியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்காக பஸ்களில் வரவழைக்கப்பட்டிருந்தனர். மேலும் இலங்கையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்க…
-
- 1 reply
- 205 views
-
-
பிரபாகரனிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கைக்கடிகாரத்தேய கட்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அருட்தந்தை இம்மானுவேல் நான் ஆரம்ப காலங்களில் எமது இனதுக்காக குரல் கொடுத்ததாகவும் தற்போது எதனையும் செய்வதில்லை என கூறுவது பிழையான விடயமாகும். சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முன்பாகவே தமிழர் பிரச்சினைரய சர்வதேசத்தில் பகிரங்கப்படுத்தினேன். என் மீது எந்த குற்றம் சுமத்தினாலும் நான் கடவுளுக்குள் பிரமாணிக்கமாக இருக்கின்றேன். பிரபாகரன் பிறப்பதற்கு முன்னரே எமது இனத்துக்கான போராட்டத்தை ஆரம்பித்தவன் நான். நான் இன்று கட்டிருக்கும் கடிகாரம் கூட பிரபாகரனால் வழங்கப்பட்டது என ஜெனிவாவில் அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அ…
-
- 0 replies
- 195 views
-
-
நம்பகத்தன்மைக்கு சர்வதேச நீதிபதிகள் மிகவும் அவசியம் மீண்டும் ஆணித்தரமாக வலியுறுத்தினார் செயிட் அல் ஹுசைன் (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) விசாரணைப் பொறிமுறையானது நம்பகத்தன்மையாய் அமைவதற்கு வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குரைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களும் நம்பகத்தன்மைக்காக சர்வதேச பங்களிப்பை வலியுறுத்தியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் நேற்று ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தெரிவித்தார். கடந்த கால மீறல்களை ஆராயும் விடயத்தில் நம்பகத்தன்மை மற்றும் பக்கசார்பின்மை தொடர்பில் காண…
-
- 0 replies
- 250 views
-
-
காணி விடுவிப்பு; காணாமல் போனோருக்கு தீர்வு; கால அட்டவணையின் தேவை இலங்கையை வலியுறுத்திய சர்வதேச நாடுகள் (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பிலான விவாதம் நடைபெற்ற, நிலையில் அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைத்து சர்வதேச நாடுகளினதும் பிரதிநிதிகளும் சர்வதேச பங்களிப்புடனான விசாரணை பொறிமுறையை வலியுறுத்தியதுடன் காணி விடுவிப்பு காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு, பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான கால அட்டவணை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் என்பவற்றை மிகவும் வலுவான முறையில் வலியுறுத்தினர். அத்துடன் கடந்த 18 மாதகாலத்தில் இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்ப…
-
- 0 replies
- 185 views
-
-
பொறுப்புகூறாமை இலங்கையில் தொடர்கின்றது : சர்வதேச மன்னிப்பு சபை (லியோ நிரோஷ தர்ஷன்) குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாது நீர்த்துப்போக செய்யும் நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. திருகோணமலை மாணவர் படுகொலை மற்றும் மூதுர் மனிதாபிமான தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை என்பவற்றை முக்கிய உதாரணங்களாக கருத முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 2006 ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அதே ஆண்டில் மூதூரில் 17 மனிதாபிமான தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் போன்றன தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யவோ தண்டிக்கப்படவோ இல்லை . ஐக்கிய நா…
-
- 0 replies
- 298 views
-
-
இந்திய ராணுவத்தின் கிளைமோர்க் குண்டு கட்டுவனில் மீட்பு பாடசாலைக்கு நடந்து சென்ற சிறுமி, சாலையோரம் காணப்பட்ட பொருளைச் சுரண்டிய போது வெளிப்பட்டது சுமார் 25 கிலோ கிராம் நிறையுடைய அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு. இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையினர் பயன்படுத்திய கிளைமோர்க் குண்டாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது” இவ்வாறு பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கட்டுவன் சாலையில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸாரால் மீட்கப்பட்ட குண்டு நீதிமன்றின் அனுமதியுடன…
-
- 1 reply
- 245 views
-
-
ரஷ்யாவுக்குப் பயணமானார் ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விசேட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (22) ரஷ்யாவுக்குப் பயணமானார். 1974ஆம் ஆண்டில் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் மேற்கொண்ட ரஷ்ய விஜயத்தின் 44 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவுக்கு மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். ரஷ்ய ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, உயர் மரியாதையுடன் வரவேற்பதற்கு ரஷ்ய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/193509/ரஷ-ய-வ-க-க-ப-பயணம-ன-ர-ஜன-த-பத-#sth…
-
- 3 replies
- 360 views
-
-
கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்தார் விஜயகலா நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும், இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள, தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, தாயகம் தழுவிய ரீதியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த 20 ஆம் திகதி முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 31 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு சென்ற சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜய…
-
- 0 replies
- 240 views
-
-
வெள்ளை வேனில் கடத்தப்பட்ட எனது தங்கையின் ஒரே மகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் (வீடியோ இணைப்பு) (எம்.ஆர்.எம்.வஸீம்) வெள்ளை வேனில் வந்தவர்களால் கடத்தப்பட்ட எனது தங்கையின் ஒரே மகனான பஸ்லமை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மகனின் கவலையால் எனது தங்கை நோய்வாய்ப்பட்டுள்ளார். அவரை எப்படியாவது எங்களிடம் ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடத்தப்பட்ட பஸ்லமின் தாய் மாமாவான மொஹமட் மூஸின் வேண்டுகோள் விடுத்தார். கொழும்பு புறக்கோட்டையில் காணாமலாக்கப்பட்டவர்களை விடுதலைசெய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் ஒருவார காலத்திற்கு முன்னெடுக்கும் போராட்டம் ஆறாவது நாளாக இ…
-
- 0 replies
- 236 views
-
-
முல்லைத்தீவில் தேசிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பம் !!! முல்லைத்தீவு மாவட்டத்துக்கான தேசிய விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு பரந்தன் வீதியில் வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையாக 32 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த விளையாட்டு மைதானம் அமையவுள்ளது. இதற்கான அளவீடு பணிகள் இன்றுகாலை முன்னெடுக்கப்பட்டது. 780மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த காலங்களில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அளவீடு நடைபெறும் பகுதியான முல்லைத்தீவு நகருக்கு அண்மையாக தேசிய வ…
-
- 0 replies
- 283 views
-
-
முச்சக்கர வண்டியை தூக்கி வீசிய ரயில் : யாழில் சற்றுமுன்னர் கோர விபத்து (படங்கள்) யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற கடுகதி ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி தூக்கிவீசப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளானார். முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/18108
-
- 0 replies
- 383 views
-
-
யாழ்ப்பாண மாநகரில் இரகசிய இடங்களில் சிசிரிவி கமராக்கள் - ஆணையாளர் “யாழ்ப்பாண மாநகரப் பகுதியில் திண்மக் கழிவுகளைக் கொட்டுவோரை இனம் கண்டுகொள்வதற்காகக் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தும் பணிகள் இடம்பெறுகின்றன.கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படும் இடங்கள் தொடர்பில் எந்தத் தகவலும் தெரியப்படுத்தப்படமாட்டாது” இவ்வாறு யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார். “யாழ்ப்பாண மாநகரத்தில் திண்மக் கழிவகற்றும் நடவடிக்கைகள் 90 வீதம் வெற்றிபெற்றுள்ளன. பெரும்பாலான குடியிருப்பாளர்கள் திண்மக்கழிவுகளை சேகரித்து தரம்பிரித்துக் கழிவகற்றும் பிரி…
-
- 0 replies
- 300 views
-
-
கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினைக்கு ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கும் : அமைச்சர் சுவாமிநாதன் கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார். அத்துடன் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய முடியும் என்ற கோரிக்கைக்கு தான் உடன்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சி…
-
- 0 replies
- 210 views
-
-
கலப்பு நீதிமன்றத்தை வலியுறுத்துவார் ஹுசைன் இன்று விவாதம் ; உறுப்பு நாடுகள் பங்கேற்கும்; இலங்கை பிரதிநிதியும் உரையாற்றுவார் (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பான விவாதம் இன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது. இதன்போது மீண்டும் இலங்கை விவகாரத்தில் சர்வதேச நீதிபதிகளுடன் கூடிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை முன்னெடுக்கப்படவேண்டும் என செய்ட் அல் ஹுசைன் வலியுறுத்துவார் என்று தெரியவருகின்றது. ஜெனிவா நேரப்படி 12 மணிமுதல் பகல் 3 மணிவரை இந்த விவாதம் நடைபெறவுள்ளது. ஆரம்பத்தில் இல…
-
- 1 reply
- 204 views
-
-
ஜெனிவாவில் முகாமிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர்கள் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் வடமாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் ஜெனிவாவில் முகாமிட்டு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றி வருகின்றனர். வடமாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா, மயூரன், அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே. சிவாஜிங்கம் ஆகியோர் ஜெனிவாவில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக மனித உரிமை பேரவை அமர்வுகளிலும் விசேட உப குழுக்கூட்டங்களிலும் உரையாற்றிவருகின்றனர். …
-
- 0 replies
- 217 views
-
-
மன்னாரில் உள்ள எனது அலுவலகம் புலனாய்வுப் பிரிவினரால் சோதனை ஜெனிவாவில் தகவல் வெளியிட்டார் செபமாலை அடிகளார் (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேரவையில் நான் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது மன்னாரில் உள்ள எனது அலுவலகத்தை திங்கட்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர். இதுதான் இலங்கையின் தற்போதைய நிலைமை என்று மன்னார் சிவில் சமூக குழுவின் தலைவர் பாதிரியார் செபமாலை அடிகளார் தெரிவித்தார். நேற்று முன்தினம் ஜெனிவா மனித உரிமை வளாகத்தில் இடம்பெற்ற உப குழுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் குறிப…
-
- 0 replies
- 219 views
-
-
இரண்டு வருட கால அவகாசத்தை எதிர்த்து பரந்துபட்ட அறிக்கை நாளை புலம்பெயர், சிவில் சமூக, அரச சார்பற்ற அமைப்புக்கள் ஜெனிவாவில் நடவடிக்கை (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்கைக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர் அமைப்புக்களும் இலங்கையின் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து அறிக்கையொன்றை நாளை ஜெனிவாவில் வெளியிடவுள்ளன. நாளையதினம் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்…
-
- 0 replies
- 358 views
-
-
சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த விமல் வீரவன்ச : பிணை வழங்க வேண்டுமென கோரிக்கை கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது சிறை அறையில் உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த விடயத்தினை தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன. விமல் வீரவன்ச வெலிக்கடை சிறைச்சாலையில் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்சவுக்கு 73 நாட்களுக்கு மேலாக பிணை வழங்கப்படாத காரணத்தினாலேயே குறித்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகன…
-
- 0 replies
- 613 views
-
-
முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் : ஜெனிவாவில் ஆதங்கத்தை வெளியிட்டார் பாயிஸ் அமீர் இலங்கையின் நீதி மற்றும் அரசியல் தீர்வு செயற்பாடுகளில் சர்வதேசம் ஈடுபடும்போது முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்ட வர்களாகவே காணப்படுகின்றனர் என்று சட்டத்தரணியும் சிவில் அரசியல் உரிமை தொடர்பான செயற்பாட்டாளருமான பாயிஸ் அமீர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வளாகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்த இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான உப குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; இலங்கையின் நீதி மற்றும் அரசியல் தீர்வு…
-
- 0 replies
- 149 views
-