Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி கடந்த மாதம் 27 திகதி தொடக்கம் இன்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெறும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றிற்கும் அதிகமான பட்டதாரிகள் இணைந்துள்ளனர். வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்த நிலையில், வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இந் நிலையில், தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற தமது போராட்டம் தொடரவுள்ளதாகவும், இதுவரை பல்வேறு வாக்குறுதிகளை கேட்டு ஏம…

    • 0 replies
    • 260 views
  2. இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 13 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அதிகாலை இருவேறு படற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை இன்றைய தினம் யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.. வெற்றிலைக்கேணி சுண்டிக்குளம் கடற்பரப்பில் 9 மீனவர்களும், நெடுந்தீவு கடற்பரப்பில் 04 மீனவர்களும் அவர்களின் இரண்டு விசைப்படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளன.. இவர்கள் ஐகாதாப்பட்டினம்,இராமேஸ்வரம்,புதுக்கோட்டை ஆகிய பகுதியினை சேர்ந்தவர்கள் தெரியவருகின்றது.. குறித்த மீனவர்களை இன்றைய தினம் யாழ் ஊ…

    • 0 replies
    • 267 views
  3. அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைகழக மாணவர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நயினாதீவை சொந்த இடமாக கொண்டவரும், தற்போது கொழும்பில் வசித்து வரும் , ரஜரட்ட பல்கலைகழக மாணவ னான தவகுலரெத்தினம் ரகுராம் (வயது 24) எனும் மாணவனே உயிரிழந்தவராவார். சக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்தவேளை வீதி வளைவொன்றில் மோட்டார் சைக்கிளை திரு ப்ப முற்பட்டநிலையில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த விபத்து சம்பவத்தில் குறித்த மாணவன் உயிரிழக்க மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள…

    • 0 replies
    • 641 views
  4. பன்றிக் காய்ச்சல் தொடர்பில் பதற்றமடைய தேவையில்லை யாழ்.போதனா பணிப்பாளர் அறிக்கை பன்றிக்காய்ச்சல் நோய்த்தாக்கம் தொடர்பாக மக்கள் பதற்றமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், புள்ளிவிபரங்களின் படி 42 நோயாளர்கள் இன்புளூவென்சா நோய்க்கான விசேட சிகிச்சையை பெற்றுள்ளனர். இவர்களில் இரத்தப் பரிசோதனை முடிவுகளின்படி 9 நோயாளர்கள் மட்டுமே குறித்த H1N1 நோய்த் தாக்கத்திற்குள்ளானது அவதானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு சென்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்றுநோ…

    • 0 replies
    • 220 views
  5. வலி. வடக்கு மக்களின் காணி விடுவிப்பு குறித்து ஐனாதிபதி உறுதியான பதிலை வழங்கவேண்டும் இல்லையேல் இராணுவ முகாம் முற்றுகை யாழ். வரவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலி வடக்கு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் உறுதியான பதிலை வழங்க வேண்டும். இல்லையேல் இராணுவ முகாம்களை முற்றுகையிட்டு தொடர்போராட்டம் முன்னெடுப்போம் என வலிவடக்கு மக்கள் எச்சரித்துள்ளனர். வலி.வடக்கு காணிகளை விடுவிக்குமாறு கோரி வயாவிளான் கிழக்கு, வயாவிளான் மேற்கு மற்றும் பலாலி தெற்கைச் சேர்நத மக்களால் நேற்றைய தினம் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று வயாவிளான் ரெயிலர் கடைச்சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாம் முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போதே மக்கள் மேற்படி தீர்மானத்தை அறிவித்துள்ளனர். …

    • 0 replies
    • 260 views
  6. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், யாழில் மாபெரும் பேரணி நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பேரணி ஆரம்பமானது. குறித்த பேரணியை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பங்குபற்றி ஆரம்பித்து வைத்தார். குறித்த பேரணி யாழ். ஆஸ்பத்திரி வீதி வழியாக ஏ9 வீதியை வந்தடைந்து, யாழ். மாவட்ட செயலகத்தில் நிறைவு பெற்றது. இந்தப் பேரணியில், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் மற்றும் உதவி அரசாங்க அதிபர் காணி முர ளிதரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், யாழ்.மாவட்ட செயலக உத்தி…

    • 0 replies
    • 358 views
  7. அரசியலமைப்பு: புதிதாகவே வரும்; திருத்தம்தான் வரும் அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில், அரசாங்கத்தில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடான கருத்துகள் உள்ளமையை, நேற்று (01) இடம்பெற்ற இருவேறு ஊடகவியலாளர் மாநாட்டில் அவதானிக்க முடிந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து, புதிய அரசியலமைப்பை தயாரித்து, தான் மக்களுக்கு அளித்த வா…

    • 0 replies
    • 293 views
  8. ஜெனிவாவில் 2 ஆண்டுகள் காலஅவகாசம் கோரவுள்ளதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரப் போவதாக, சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலர் மனோ தித்தவெல பிபிசியிடம் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற முடியும் என்று சிறிலங்கா நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறிலங்காவுக்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில்,…

    • 0 replies
    • 252 views
  9. சிறிலங்கா குறித்த நிலைப்பாட்டை ஜெனிவாவில் இன்று வெளிப்படுத்துமா அமெரிக்கா? சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு இன்று ஜெனிவாவில் வெளிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில், சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை வழங்கும் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. எனினும், கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம், சிறிலங்கா தொடர்பான எந்த நிலைப்பாட்டையும் இதுவரையில் வெளியிடவில்லை. புதிய அரசு பதவியேற்ற பின்னர் அமெரிக்க உயர் அதிகாரிகள் மற…

    • 1 reply
    • 376 views
  10. வடகிழக்கை சிங்கள மயமாக்குவதற்கே சிறிலங்கா காலஅவகாசம் கோருகிறது – கிருபாகரன் குற்றச்சாட்டு வடக்கு கிழக்கை சிங்கள மயமாக்குவதற்கும் இராணுவ மயமாக்குவதற்குமே சிறிலங்கா அரசாங்கம் கால அவகாசம் கோருகிறார்கள் என பிரான்ஸ் தமிழர் உரிமை மையத்தின் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்தார். ஐ.நா.மனித உரிமை பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றிய பின் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கிருபாகரன் இதனை தெரிவித்தார். அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை கற்பனைகள் நிறைந்த கட்டுக்கதைகள், இந்த உரை சர்வதேச நாடுகள் சிலவற்றிற்கு இனிப்பாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் இதனை நம்பமாட்டார்கள். சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான எந்த தீர்வையும…

    • 0 replies
    • 271 views
  11. பிக்கு சத்தியாக்கிரகம் மொஹொமட் ஆஸிக் கண்டி-திகனை கந்தே விஹாரையை சேர்ந்த இசுருபுர சித்தார்த்த தேரர், ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் உள்ள வாவிக் கரையோரத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்றுக் காலை (01) ஆரம்பித்த தேரர், தன்னை சுற்றியும், சில துண்டுப் பிரசுரங்களையும் அவர், மக்களின் பார்வைக்காக வைத்துள்ளார். தெல்தெனியவில், இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளராக அன்று போட்டியிட்ட மைத்திரிபால சி‌றிசேனவுக்கு ஆசி வழங்கியதால் சிலர் தம்மை துன்புறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தனது விகாரைக்கு தீ வைத…

  12. கேப்பாபுலவு ஈழத்தின் முன்னுதாரணமான சனப் போராட்டம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள், தங்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை நடாத்தி ஒரு மாதம் கடந்த நிலையில் அதாவது 30 நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் வெற்றி பெற்றுள்ளனர். கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்ட போராட்ட வழிமுறை மிகவும் கூர்மையானது. ஆனால் மிகவும் நெருக்கடி கொண்டது. அப்படி நெருக்கடி கொண்ட அந்தப் போராட்டத்தில்தான் உக்கிரமும் மிகுந்திருந்தது. இரவு பகலாக 30 நாட்கள் அந்த மக்கள் பனியிலும் வெயிலிலும் மேற்கொண்ட போராட்டம் சாதாரணமானதல்ல. இது உன்னதமான மக்கள் போராட்டம்…

  13. கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு: 20 பேர் கைது கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த 9 பேரும், சம்பவம் இடம்பெற்ற வேளையிற்கு நீதிமன்றத்திற்கு வருகை தந்த 11 பேருமே இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். மேலும், பாதாள குழு ஒன்றின் தலைவரான தெமுனி, ஹெரால்ட் ரோஹன என்ற கொனாகோவிலே ரோஹா என்பவரை கொலை செய்வதற்காக இந்த ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/17254

  14. வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து : ஒருவர் படுகாயம் : மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டு இருவர் தப்பியோட்டம் (படங்கள்) வவுனியாவில் இன்று (01) இரவு 7.45 மணியளவில் மன்னார் வீதியிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வவுனியா பகுதியிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிள் பாலாமைக்கல் வீதியில் திருப்ப முயன்றபோது மன்னார் வீதியில் வந்த மோட்டார் சைக்கிளுடன் எதிர் எதிரே மோதி விபத்திற்குள்ளாகியது. இதையடுத்து வவுனியா வீதியிலிருந்து மன்னார் வீதி நால…

  15. விமல்ராஜ் மீதான துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர். களுதாவளை கடற்கரை வீதியை அண்டி அமைந்துள்ள அவரது வீட்டுக்கு கடந்த 22ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், அவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு, தப்பிச்சென்றனர். - See more at: http://www.tamilmirror.lk/192385/வ-மல-ர-ஜ-ம-த-ன-த-ப-ப-க-க-ச-ச-ட-ஒர-வர-க-த-#sthash.cmgnMkf8.dpuf

  16. பிலா குடியிருப்பு மக்களின் போராட்டம் மாலை முடிவுக்கு வந்துள்ளது. கேப்பாபுலவு , பிலகுடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்நிலையில் இன்றைய தினம் பிலகுடியிருப்பு காணிகளை விடுவிக்கப்பட்டது. முன்னதாக பிலகுடியிருப்பில் உள்ள 54 குடும்பங்களில் 37 குடும்பங்களின் காணிகள் முற்றாக விடுவிக்கப்பட்டது. 7 குடும்பங்களின் காணிகள் பகுதிகளவில் விடுவிக்கப்பட்டன ஏனைய 10 குடும்பங்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. பிலகுடியிருப்பு மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கபாட்டால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி மக்கள் தொடர்ந்து போராட்டத்…

  17. இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டியது அவசியம் ஜெனிவாவில் எடுத்துரைத்தது பிரிட்டன் (ரொபட் அன்டனி) ஜெனிவா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கைதொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்கு நாம் இலங்கைக்கு கால அவகா சத்தை வழங்கவேண்டும் என் பதனை ஏற்றுக்கொள்கின்றோம் என்று பிரிட்டன் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தது. ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய உயர்மட்ட அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரிட்டனின் வெ ளிவிவகார பொதுநலவாய பாராளுமன்ற செயலர் ஆலோக் சர்மா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில் இலங்கை வெ ளிவிவகார அமைச்சர் மங…

  18. வாள்வெட்டில் கைதாகி பிணையில் சென்றவர்களே தாவடியிலும் அட்டகாசம் -மீளவும் கைதாகி விளக்கமறியலில் மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட செந்தூரன், தனு போன்றவர்கள் மீண்டும் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் யாழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தில் பரவலாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் தொடர்புபட்டிருந்த றொக்ஸ் ரீம்| அங்கத்தவர்கள் யாழ் பொலிஸாரின் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 8 பேர் யாழ் நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 8 மாதங்களாகத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க ப்பட்டிருந்தனர். இந்நிலையில் கு…

  19. பாதாள உலகக் குழு செய்யவில்லையாயின் அப்போதைய அரசாங்கமா செய்தது ; அமைச்சரவைப் பேச்சாளர் கேள்வி முன்னைய ஆட்சிக்காலத்தில் களுத்துறை சம்பவம் போன்று நடைபெறவில்லையா? அப்படியாயின் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை பாதாள உலகக் குழு செய்யவில்லையாயின் அப்போதைய அரசாங்கமா செய்ததென அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன கேள்வியெழுப்பினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவரால் களுத்துறை சிறைச்சாலையில் இருந்து வந்த பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே…

  20. காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை: போராட்டம் தொடர்கிறது -எஸ்.நிதர்ஸன் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 54 ஏக்கர் காணிகளில், 42 ஏக்கர் காணிகள், இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், 42 ஏக்கர் காணியும் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்பகுதி மக்களின் காணியில் அமைந்துள்ள பாரிய விமான படைத்தளத்தை விட்டு விமான படையினர் வெளியேற வேண்டும் என கோரி படைத்தளம் முன்பாக மக்கள் குடியமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

  21. போராடினால்தான் எதுவும் கிடைக்கும் என்றாயிற்று எதுவும் தானாக நடக்கும் என்ற பேச்சுக்கே இந்த நாட்டில் இடமில்லாமல் போயிற்று. அந்தளவுக்கு எல்லாவற்றுக்கும் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தங்கள் சொந்த மண்ணில் குடியிருப்பதற்கு அனுமதியுங்கள் என்று மன்றாடியும் சரிவராத நிலையில், கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்களின் தொடர் போராட்டம் அவர்களின் நிலத்தை மீட்பதற்கு வழிவகுப்பது மட்டுமன்றி, தமிழர் தாயகத்தில் எங்கெல்லாம் படையினர் தமிழ் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனரோ அங்கெல்லாம் நில மீட்புப் போராட்டம் நடப்பதற்கும் வழிவகுத்துள்ளது. நில மீட்புக்காக மட்டுமல்ல காணாமல்போன வர்களின்…

    • 0 replies
    • 266 views
  22. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சித்திரவதை குற்றத்தை இலங்கை அரசு ஏற்பு இலங்கையில் அரச படையினர் பாலியல் வன்முறை உள்ளிட்ட சித்திரவதைகளை திட்டமிட்டு ஒரு ஆயுதமாகப் பாவித்து வருகின்றனர் என்று கடந்த தசாப்த காலமாக பரவலாக முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களை இதுவரை மறுத்து வந்த இலங்கை அரசாங்கம் நேற்றையதினம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முதன்முறையாக அவற்றை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இலங்கையில் சித்திரவதைகள் அரச படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல் வேறு உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்களும், ஆர்வலர்களும் தெரிவித்து வந்த நிலையில், ஜெனிவா ஐ.நா மனித பேரவையின் 34ஆவது கூட்டத்தில் நேற்று உரையாற்றிய வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர, அ…

    • 0 replies
    • 878 views
  23.  கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு “கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு பகுதிலுள்ள காணிகள், இரண்டொரு நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என, இராணுவம் மற்றும் விமானப்படையினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டளையிட்டுள்ளார்” என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், நேற்று (27) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர், “கேப்பாப்புலவு காணிப்பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதியைச் சந்தித்துக் பேச்சுவார்த்தை நடத்தினோம். அங்கு 54 காணிகளுக்கு உரிமங்கள் காணப்படுகின்றன. அதில் 42ஐ பரி…

    • 2 replies
    • 646 views
  24. சிறிலங்காவை சுற்றிய கடலில் சீனாவுடன் போட்டி போடும் ஜப்பான் கடந்த 65 ஆண்டுகளாக நீடிக்கும் ஜப்பான் – சிறிலங்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, இவ்விரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்திய மாக்கடலின் கடல்சார் பாதுகாப்பு உறவானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்விரு நாடுகளும் இணைந்து கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடல்சார் விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை ஜனவரி மாதம் ஆரம்பித்தன. சிறிலங்காவின் கடல் சார் பாதுகாப்பு மற்றும் குற்றங்களை எதிர்ப்பதற்கான திறனை வளர்த்துக் கொள்ளல் போன்ற விடயங்களுக்காக ஜூன் 2016 அன்று ஜப்பானால் சிறிலங்காவிற்கு 16.3 மில்லியன் டொலர் பெறுமதியான உதவித் திட்டம் வழங்கப்பட…

    • 0 replies
    • 410 views
  25. சில பொலிஸ் அதிகாரிகளின் கவனயீனக்குறைவினால், முழு பொலிஸ் சேவைக்கும் அவப்பெயர் உண்டாகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொரளையிலிருந்து தனது முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது குறித்த சாரதி வீதி விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 30 ஆம் திகதி ஆஜராகுமாறு போக்­கு­வ­ரத்து பொலி­ஸார் உத்­த­ரவு பத்­திரம் ஒன்றை வழங்கியுள்ளனர். பொலிஸார் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்ற சாதரண விடயத்தை மறந்து கவனயீனமாக செயற்பட்டதால் குறித்த முச்சக்கரவண்டி சாரதி குறித்த உத்தரவு பத்திரத்தை சமுக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது சமுகவலைத்த…

    • 0 replies
    • 287 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.