ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
அரசியலமைப்பு திருத்தம் மட்டுமே கொண்டுவரப்படும் சமஷ்டி, சர்வதேச நீதிபதிகள் இல்லை என்கிறார் எஸ்.பி. (க.கமலநாதன்) சமஷ்டி முறைமையை மையப்படுத்திய அரசியலமைப்போ அல்லது சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற கட்டமைப்போ ஒருபோதும் வராது என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு குறித்து பேசுகின்ற பலர் அது தொடர்பில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வ…
-
- 0 replies
- 334 views
-
-
காலில் ஆணி அடித்து மர்மஉறுப்பை குறட்டால் நசுக்கினார்கள். சுமணனை அடித்தே கொன்றார்கள். சுன்னாக காவல்துறையினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் சாட்சியம். முழங்காலில் இருத்தி , இரு கைகளையும் கால்களுடன் இணைத்து கட்டி , இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி தூக்கி உயிரிழக்கும் வரையில் அடித்தே கொன்றார்கள். உயிரிழந்த பின்னரும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை. என யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமட…
-
- 3 replies
- 316 views
-
-
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான ஊழல் மீண்டும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. சுன்னாகம் பிரதேசத்தில் மின் உற்பத்தியை மேற்கொண்டு, யாழ்ப்பாணம் முழுமைக்கும் மின்சார சேவையை மகிந்த ஆட்சிக் காலத்தில் வழங்கிய நிறுவனமான நோதேர்ன்பவர் மற்றும் அதன் தாய் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பெரும் பணத்தொகை பரிமாறப்பட்டுள்ளதாக மல்லாகம் நீதிமன்றம் துணிகரமான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. இப் பணப்பரிமாற்றத்தில் வட மாகாண சபை முதலமைச்சர், அவரை பின்னணியில் இயக்கும் நிமலன் கார்த்திகேயன் என்ற அவுஸ்திரேலிய குடியேற்றவாசி, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்களே செயற்பட்டனர் என்ற தகவல்களை இனியொரு ஆரம்பம் முதல் வெளிப்படுத்தி வந்துள்ளது. வன்னிப் படுகொலைக…
-
- 5 replies
- 846 views
-
-
'ஆக்கப்பூர்வமாகச் செயற்படுங்கள்' -எஸ்.என்.நிபோஜன் “போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பதை விடுத்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கிளிநொச்சி யில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர்போராட்டமும் பரவிபாஞ்சான் மக்களின் காணி மீட்புக்கான தொடர் பேராட்டமும், இரவு பகலாகத் தொடர்கிறது. இன்று மூன்றாவது நாளாகவும், இரண்டு போராட்டங்களிலும் ஈடுப்பட்டுள்ள அம்மக்கள் கூறியதாவது, “நாங்கள், மக்கள் பிரதிநித…
-
- 0 replies
- 220 views
-
-
மட்டக்களப்பில் ரி-56 ரக துப்பாக்கியுடன் இளைஞன் கைது.! வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நகருக்குப் பயணித்த பஸ்ஸிலிருந்து ரி-56 ரகத் துப்பாக்கியொன்றை நேற்றிரவு பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த பஸ்ஸில் சோதனை மேற்கொண்டு இத்துப்பாக்கியை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டி என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபர் தற்போது மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரனைகளுக்காக தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/16942
-
- 0 replies
- 382 views
-
-
முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியை கண்டுப்பிடித்த காத்தான்குடி மாணவன் : அமெரிக்கா சென்று சாதிக்க வேண்டும் என்கிறார் இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் காத்தான்குடி நகரத்தைச் சேர்ந்த இம்ஹாத் முனாப் என்ற மாணவரே குறித்த கருவியை கண்டுபிடித்துள்ளார். இவர் காத்தான்குடி பிரதேசத்தைச சேர்ந்த் முஹமட் முனாப் மசூதியா தம்பதிகளின் புதல்வர் ஆவார். முழு உலகிலும் பரவலாக காணப்படும் இரு பிரச்சினைகளில் ஒன்று கழிவு முகாமைத்துவம், மற்றையத…
-
- 0 replies
- 214 views
-
-
காணிகளை விடுவிக்க கோரி யாழில் போராட்டம்.! ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள நிலங்களை மீளத்தரக்கோரி பல்வேறு அமைப்புகள் இணைந்து யாழில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். பஸ் நிலையம் முன் ஆரம்பமான மேற்படி ஆர்ப்பாட்டம், பின்னர் மகஜர் ஒன்றை கையளிக்கும் பொருட்டு யாழ். மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என கடந்த மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு ப…
-
- 0 replies
- 234 views
-
-
ஜெனிவா செல்கிறது உயர்மட்ட தூதுக்குழு (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் உயர்மட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்வதற்கு தயாராகிவருகின்றது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான ன குழுவினரே இந்தக்இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் தலைமைவகித்து கலந்துகொள்ளவுள்ளனர். எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவா செல்லவுள்ள அமைச்சர் மங்கள சமரவீர 28 ஆம் திகதி ஜெனிவாவில் உரையாற்றவுள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சின…
-
- 0 replies
- 252 views
-
-
""இராணுவப்பிடிக்குள் ஜனாதிபதி உள்ளாரா?'' (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காத்திரமான தீர்மானம் எடுக்க முடியாதிருப்பதானது அவர் இராணுவ பிடிக்குள் இருக்கின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் சந்தேகம் வெளியிட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் தனது உரையில் மேலும் தெரிவ…
-
- 1 reply
- 391 views
-
-
அவலங்களுடன் தொடர்கிறது போராட்டம் யாழ்.பல்கலை மாணவர்கள் நேரில் சென்று ஆதரவு (கே.குமணன்) கேப்பாப்புலவு பிலக்குடியி ருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி முன்னெடுத் துவரும் தொடர் போராட்டம் நேற் றும் தொடர்ந்தது. போராட்டத்தின் 22 ஆவது நாளான நேற்று யாழ்.பல் கலைக் கழக மருத்துவபீட மாணவர்கள் போராட்டக்களத்துக்கு வருகைதந்து மக்களுக்கான ஆதரவினை தெரிவித்தனர். அத்துடன் உதவி பொருட்களையும் வழங்கி வைத்தனர். தொடர்ந்து போராட்டக்களத்தில் உள்ள மக்களுடன் இணைந்து விமானப்படை முகாமுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மாணவர்கள் முன்னெடுத்தனர். இந்நிலையில் போராட்…
-
- 0 replies
- 274 views
-
-
'யுத்த அங்கவீனர்களை கணக்கிட காலம் தேவை’ வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் தொடர்பில் கணக்கிடுவதற்கு, இன்னும் இரண்டுவார கால அவகாசம் வேண்டுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிநின்றார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்த கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இ…
-
- 0 replies
- 203 views
-
-
‘தனியார் நீதிமன்றமா, இது கூடத் தெரியாதா?’ -ஜே.ஏ.ஜோர்ஜ் ‘”உலகில் எந்த நாட்டிலும் நீதித்துறையை தனியார் மயப்படுத்தும் முறை இல்லை. இதனைக் கூட அறியாதவர்கள் உள்ளமைதான், மக்கள் விடுதலை முன்னணியின் இன்றைய நிலைக்கு காரணம்” என, சபைமுதல்வரும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அவர் தொடரந்து கூறுகையில், “இலங்கையில் கல்விகற்கும் மருத்துவ மாணவர்கள், பட்டம் பெற்றதும் நாட்டை கைவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று விடுவதால் தான், நாட்டில் வைத்தியர்களுக்குத் தட்டுபாடு நிலவுகின்றது. அதன்காரணமாகத்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க இடமளிக்க வேண்டியுள்ளது” என்றார். அதன்போது குறுக்கிட்டுக் கேள்வியெழுப்பிய பிமல் …
-
- 0 replies
- 189 views
-
-
‘கிளி, முல்லையில் நகர சபையே இல்லை’ ஜே.ஏ.ஜோர்ஜ் நாட்டில் இருக்கின்ற 25 மாவட்டங்களுக்கும் நகர சபைகள் இருக்கின்றன. எனினும், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஒரு நகர சபையேனும் இல்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன், சபையில் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம், வட மாகாண சபையின் கீழுள்ள, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்குரிய மடு, ஒட்டுசுட்டான், கண்டாவளை மற்றும் மருதகேணி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக…
-
- 0 replies
- 274 views
-
-
விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தார் மத்திய வங்கி ஆளுநர் விசாரணைகள் இன்றும் தொடரும் (பா.ருத்ரகுமார்) மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைகள் நேற்று ஆரம்பமாகின. மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியின் சாட்சிப் பதிவோடு இந் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின. பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வ தற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை அணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி, பி.எஸ் ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற உதவி கணக்காய்வாளர் நாயகம் கே. வேலுப்…
-
- 0 replies
- 195 views
-
-
அரசியல் தீர்வு விடயத்தில் உறுதியான நிலைப்பாடு தேவை அமெரிக்க காங்கிரஸ் குழுவிடம் சம்பந்தன் வலியுறுத்தல் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) உங்களின் கோரிக்கைகள், இலங்கை குறித்த அவதானங்கள் உள்ளிட்ட விடயதானங்களடங்கிய முழுமையான அறிக்கையொன்றை வாஷிங்டனுக்கு சமர்ப்பிப்போம் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க காங்கிரஸ்குழு எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜ யம் மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை அமெரிக்க காங்கிரஸ் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. அமெரிக்க சபை ஜனநாயக …
-
- 0 replies
- 322 views
-
-
'படம்பிடித்து அச்சுறுத்தவில்லை' மேனகா மூக்காண்டி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களைப் படம்பிடிக்கவோ அல்லது வீடியோப் பதிவு செய்யவோ, பாதுகாப்புத் தரப்பு உத்தரவிடவில்லை. அத்துடன், முகாம் தேவைக்காக, அங்கிருக்கும் படையினர் புகைப்படம் எடுத்திருக்கலாமே தவிர, அது பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்று, பாதுகாப்புத் தரப்பு, நேற்றுத் தெரிவித்தது. “படை முகாம் என்பது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வெளியிலிருந்து படை முகாமுக்கு வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தேவையும், அம்முகாமில் உள்ள அதிகாரிகள் வசம் உள்ளது. அதனால், தங்களது பாதுகாப்புக்காக அவர்கள் ப…
-
- 0 replies
- 475 views
-
-
"தமிழ் பிரிவினை வாதிகளே சுமந்திரனை கொல்வதற்கு முயற்சிக்கின்றனர்" அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதனை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆதரிக்கின்றமையினாலேயே தமிழ் பிரிவினை வாதிகள் அவரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் வசந்த பண்டார தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளி னால் நாடு பிளவுபட்டு மிகப் பெரிய அச்சுறுத்தலை சந்திக்க போகின்றது. நாட்டில் சமஷ்டி ஆட்சியும் உருவாகி விடும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றிய…
-
- 0 replies
- 280 views
-
-
மட்டக்களப்பில் அகழ்வு பணியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கட்டான்சேனை ராணுவ முகாமுக்கு அருகாமையிலுள்ள தனியார் காணியில் மனித எச்சங்கள் என சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் நீதிவான் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வுப் பணிகள் இன்று இரண்டாவது நாள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெற்றன. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம் .ஐ.எம். ரிஸ்வி முன்னிலையில் நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் அகழ்வு பணிகள் நடைபெற்றன. இந்த அகழ்வுப் பணிகளின் போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்பு துண்டுகள் , சில கம்பி துண்டுகள் , மனித பல் மற்றும் இரு வெள்ளிச் சங்கிலி துண்டுகள் உட்பட சில தடயங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படு…
-
- 0 replies
- 318 views
-
-
வடமாகாண கல்வி அமைச்சர் நாங்கள் சொல்வதை கேட்பதுமில்லை. எமக்கு பதிலளிப்பதும் இல்லை – அனந்தி கவலை வடமாகாண கல்வி மேம்பட வேண்டும். அதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார், வடமாகாண சபையின் 85அவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். வடமாகாண கல்வியில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறினால் அவற்றை உரிய முறையில் கல்வி அமைச்சர் செவிமடுப்பதாக எனக்கு தெரிவில்லை. நாம் ஏதேனும் கேட்டாலும் , இவர்களுக்கு என்ன பதில் சொல்வது போன்றதொரு பாணியில் எங்களை பார்த்து விட்டு அவற்றுக்கு பதில் சொல்வத…
-
- 0 replies
- 353 views
-
-
ஜனாதிபதி மீது சந்தேகம் – சுகிர்தன். ஜனாதிபதி மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் சு.சுகிர்தன் தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் 85அவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இலங்கையை போதைவஸ்து இல்லாத நாடாக மற்ற வ…
-
- 0 replies
- 215 views
-
-
நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்ற இலங்கையர்களுக்கு சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – நோர்வே தூதுவர் இலங்கையின் துறைமுகம் மற்றும் கப்பற்றுறையில் முன்னேற்றங் காண வேண்டுமாயின் இத்துறைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்த வேண்டுமென இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjorn Gaustadsaether தெரிவித்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடக பிரிவுடனாhன விசேட ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்றும் பொருட்டு இலங்கையர்களுக்கு சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். நோர்வே நிறுவனங…
-
- 0 replies
- 409 views
-
-
படை முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்! – ஐ.நா.வுக்கு அறிக்கை இலங்கை படை முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கையளித்துள்ளது. இலங்கை ராணுவத்தால் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் மூவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணம் நேற்று (திங்கட்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தாலும் பொலிஸாராலும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 55 பெண்க…
-
- 2 replies
- 743 views
-
-
மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் சிவமோகன் எம். பி. கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் தமது நிலங்களை விடுவித்து தருமாறு கோரி மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றத்துக்கு செல்லாது மக்களோடு உணவுதவிர்ப்பு போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஈடுபட்டுள்ளார். புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் வீதியில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பத்தொன்பதாவ…
-
- 0 replies
- 197 views
-
-
பாதுகாப்பு துறையில் மறுசீரமைப்பு செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை – HRW பாதுகாப்புத்துறையில் மறுசீரமைப்பு செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என இலங்கை அரசாங்கம் மீது மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதும் எனினும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 25 முக்கிய விடயங்களில் பாதுகாப்பு…
-
- 0 replies
- 156 views
-
-
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், படையினரிடம் உள்ள காணிகளின் விபரங்கள் கோரப்பட்டுள்ளது:- வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்த விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை வழங்குமாறு, இளைஞர் அமைப்பொன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியாவை தலைமையாக கொண்டு பரந்த அளவில் செயற்படும் இளைஞர் வலையமைப்பு ஒன்று, வடபகுதியைச் சேர்ந்த 34 பிரதேச செயலகங்களுக்கும் தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பப் படிவங்களை தபால் மூலம் நேற்று (திங்கட்கிழமை) அனுப்பி வைத்துள்ளது. குறித்த விண்ணப்பத்தில், பிரதேச செயலக பிரிவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணியின் அளவு, கா…
-
- 0 replies
- 296 views
-