ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நீதிமன்ற துறையில் நியமனங்களை மேற்கொள்ளும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனது தனிப்பட்ட தேவைக்கு நியமனங்கள் மேற்கொண்டதில்லை. அண்மையில் ஊடகங்களில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் நியமனம் குறித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த நியமனம் சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றதுறைசார் நிறுவனங்களின் அனுமதியும் இந்த நியமனத்திற்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற விவகாரங்கள் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள…
-
- 0 replies
- 201 views
-
-
கிளிநொச்சி மக்களுக்கு அவசர அறிவித்தல் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படுவதால் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றபங்களிப்பை வழங்கி உயிர்களைக் காக்க உதவிடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித…
-
- 0 replies
- 354 views
-
-
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கடலோரப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தாராபுரம் கடலோரப்பகுதியில் மன்னார் பிரதேச சபையின் அனுமதியின்றி சுற்றுலா விடுதி அமைக்கும் வகையில் கட்டடம் நிர்மாணிக்கப்படுகின்றமை தொடர்பில், மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வரும் குறித்த கட்டடத்திற்கான நிர்மானப்பணிகளை இடைநிறுத்தும் வகையில் மன்னார் பிரதேச சபையினால் அறிவித்தலொன்று ஒட்டப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு நேற்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பாராளுமன…
-
- 0 replies
- 282 views
-
-
யுத்தம் காரணமாக கணவரை இழந்த பெண்கள் பாலியல் கொடுமைகளை எதிர்நோக்க நேரிடலாம் யுத்தம் காரணமாக கணவரை இழந்த பெண்கள் பாலியல் கொடுமைகளை எதிர்நோக்க நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இராணுவத்தினராலும், தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களினாலும் பாலியல் சித்திரவதைகளை கணவரை இழந்தப் பெண்கள் எதிர்நோக்கி வருவதாகவும் யுத்தம் காரணமாக பெண்கள் இவ்வாறு கணவரை இழந்துள்ளதாகவும் இவ்வாறான பெண்கள் சித்திரவதைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான பெண்கள் அதிகாரிகளினால் தொடர்ந்தும் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் அதிகாரிகளும், சிங்கள இராணுவத்தினரும் இவ்வாறு ப…
-
- 3 replies
- 484 views
-
-
ஒரு தனி மனித செயற்பாடு ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பெரும் இழுக்கினை ஏற்படுத்தும் என்பது உண்மையான கூற்று. இலங்கையில் இப்போது பௌத்தம் அழிந்து கொண்டு வருகின்றது என்று பல வகையான போராட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பௌத்த துறவி தனக்கு பல வகையான நோய் இருப்பதாக கூறி பணம் சேர்ப்பதும், பின்னர் சிகரட் புகைப்பதும் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஆசைகளை துறப்பவரே துறவி அப்படியான ஒருவர் இவ்வாறான ஓர் செயலில் ஈடுபடுவது அனைத்து மதங்களிடையேயும் பலவாறான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. புனித பௌத்த மதத்தில் வாழ்ந்து வரும் இவ்வாறான போலிக் காவி அணிந்த ஏமாற்றுப் பேர்வழிகள், ஏமாற்றிப் பிழைக்கும் …
-
- 0 replies
- 341 views
-
-
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை அதிகரிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் வாக்குறுதியளித்துள்ளன. வடக்கிற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணைப்பாளர் ஹூனா மெக்கோலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுலாய் மார்க் ஆகியோர் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை சந்தித்து இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது அதிகமாக பேசப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரத்தை பரவலாக்க வேண்டிய தேவை மற்றும் வடக்கு மாகாண சபைக்கு கிடைத்த அதிகாரங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்…
-
- 0 replies
- 311 views
-
-
மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர் ( எம்.மின்ஹாஜ்) இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார். அத்துடன் மனித கடத்தல் காரர்களுக்கு அஞ்சி அவுஸ்திரேலியாவில் குடியேறி சட்டவிரோத முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மன்னித்து விட்டோம்.ஆகவே முகாம்களில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் மேலும் காணாமல் போனோர் குறித்து இனங்காண்பதற்கு கா…
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
கேப்பாப்புலவு காணிகள்; 2 வாரங்களில் விடுவிப்பு? ப. பிறின்சியா டிக்சி முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் விமானப்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள், இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமாக எவ்வளவு காணிகள் உள்ளன? அவற்றை எத்தனைக் குடும்பங்கள் கோரியுள்ளன? முகாம் அமைந்துள்ள மொத்தக் காணியையும் விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா ஆகியோர், இன்னும் ஓரிரு தினங்களில் கலந்துரையாடி, முடிவு எட்டப்பட்ட பின்னர், அந்தக் காணிகள் வி…
-
- 1 reply
- 338 views
-
-
‘தமிழ் மக்கள் பேரவையில் அரசியல் கலப்பில்லை’ எஸ்.நிதர்ஸன் “தமிழ் மக்கள் பேரவையில் அரசியல் கட்சிகளும் இணைந்திருப்பதால், அரசியல் கட்சிகள் அதிலிருந்து அரசியல் இலாபங்களைப் பெறலாமென நினைக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் பேரவை, அரசியல் கலப்பற்ற மக்கள் இயக்கமாகவே செயற்பட்டு வருகிறது” என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில், அவர் மேலும் கூறியதாவது, “பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு, அரசியல் ரீதியான முன்னோக்குகள் மற்றும் தேவைகள் இருக்கக்கூடும். ஆனால், தமிழ் மக்கள் பேரவையைப் பொறுத்தவரையில், இப்போதும் மக்களுட…
-
- 1 reply
- 458 views
-
-
மனித புதைகுழி விவகாரம்: றேடியோ காபன் பரிசோதனைக்கு பரிந்துரை எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார், திருக்கேதீஸ்வரம், மாந்தை மனித புதைகுழி தொடர்பில், எதிர்வரும் மார்ச் மாதமளவில் உதவி செய்வதாக, வெளிநாட்டு தடயவியல் நிபுணர் குழுவினர், மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், இம்மனித புதைகுழி தொடர்பிலான “றேடியோ காபன்” பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறித்த புதைகுழியின் வயது, மரணம் மற்றும் சம்பவத்தை அளவிடுவதற்கு, குறித்த பரிசோதனை உடனடித் தேவையாக அமையாதென்றும் அக்குழுவினர் தெரிவித்துள்ளதாக, மன்றில் தெரிவிக்கப்பட்டது. மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்க…
-
- 1 reply
- 318 views
-
-
நம்மவர்கள் ஆறு பேருக்கு டுபாயில் சிறைத்தண்டனை கொள்ளைக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இலங்கையர் அறுவருக்கு, டுபாய் நீதிமன்றம் தலா 5வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், டுபாயில் அதிசொகுசு ஆடம்பர வீடுகளில் தங்க நகைகள் உள்ளிட் பெறுமதியான பொருட்களை திருடினார் என்ற இந்த அறுவருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது என்று டுபாய் கஜிலி டைம்ஸ் பத்திரிகை நேற்று (15) செய்தி வெளியிட்டிருந்தது. நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை காலம் நிறைவடைந்ததன் பின்னர், குற்றவாளிகளான அந்த அறுவரையும் நாடுகடத்துமாறும் அந்த நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 311 views
-
-
யாழிலிருந்து தமிழ்-பௌத்தர் வேட்பு மனு “எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களிலிருந்து விண்ணப்பங்களை கோராமல் விட நாம் தீர்மானித்துள்ளோம். எனினும், யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்-பௌத்தரினால் வேட்பாளருக்கான விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என, ஜாதிக ஹெல உறுமயவின் உள்ளூராட்சி குழுவின் தலைவர் வண்.புதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ், ஜாதிக ஹெல உறுமய போட்டியிடும் என்றும் வண்.புதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்தார். அதனடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களை தவிர, ஏனைய 1…
-
- 0 replies
- 318 views
-
-
இலங்கைக்காக ரூ. 97 மில்லியன் தேவைப்படுகிறது மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனின் அலுவலகத்தின் கருத்துப்படி, இலங்கை தொடர்பான அதன் பணிகளுக்கு, 648,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக 97.58 மில்லியன் ரூபாய்) தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலுமுள்ள அனைத்து மக்களுக்குமான சேவைகளைப் புரிவதற்கு, தமக்குத் தேவைப்படும் செலவை ஈடுசெய்வதற்குரிய அன்பளிப்புகளை மேற்கொள்ளுமாறு, நாடுகளுக்கும் தனியார் கொடையாளர்களுக்கும், அவ்வலுவலகம் கோரியுள்ளது. “எங்களுடைய உலகம், அளவுக்கரிய நிலையற்ற தன்மைக்குள் சென்றுள்ளது.பல நாடுகளில், சட்டங்கள் கூட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. வெளிநாட்டவர் மீதான வெறுப்பு, இன, சம பாகுபாடு…
-
- 0 replies
- 323 views
-
-
ஸ்ரீ லங்கன், மிஹின் லங்காவை பேர்ப்பேச்சுவல் வாங்குகிறது? ஸ்ரீ லங்கன், மிஹின் லங்கா எயார்லைன்ஸ்கள் போன்ற அரச நிறுவனங்களை, பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் பிரைவெட் லிமிட்டெட் வாங்குகின்ற சதித்திட்டமொன்று காணப்படுவதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்தது. பெரியளவில் இயங்குகின்ற சில அரச நிறுவனங்களை, பேர்ப்பெச்சுவல் நிறுவனம் வாங்க முயலுகின்றது என்பது, நம்புவதற்கு போதுமான காரணங்கள் காணப்படுவதாகவும், அவ்வெதிரணியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், தொடர்ந்து உரையாற்றிய அவர், “வாங்குபவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, இன்னொரு நிறுவனத்தினைப…
-
- 0 replies
- 365 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம்: சீனா புதுக் குழப்பம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான முதலீட்டைத் தாமதிப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவிவரும் அரசியல் சூழலே சீனாவின் இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனா இடையிலான கடல்வழி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முகமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த டிசம்பர் மாதம் சீனா கையெழுத்திட்டது. இது தவிர, அம்பாந்தோட்டையில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழிற்பேட்டை ஒன்றை அமைக்கவும் சீனா எண்ணியிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த ஜனவரி 7ஆம் திகதி…
-
- 0 replies
- 264 views
-
-
அர்ஜுன மகேந்திரன் பொறுப்புமிக்க எந்த அரச பதவியிலும் இல்லை : அரசாங்கம் அர்ஜூன மகேந்திரன் தற்போது அரசாங்கத்தின் எந்தவொரு உத்தியோகப்பூர்வ பதவியிலும் இல்லை என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். அவர் ஒருசில அமைச்சர்களை சந்தித்துப் பேசலாம். ஆனால் அவர் எந்தவொரு பொறுப்புமிக்க பதவியிலும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கேள்வி: மத்தியவங்கியின் முன்னாள் ஆளு…
-
- 0 replies
- 512 views
-
-
தெற்கில் துப்பாக்கி காட்டிய கோத்தா சண்டியர் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ வடக்கில் யுத்தம் நடைபெற்றபோது தெற் கில் துப்பாக்கிகளைக் காட்டிக்கொண்டிருந்தார். அவர் தெற்கிலேயே சண்டித்தனத்தைக் காட்டினார். ஆனால், யுத்தம் வடக்கில் நடைபெற்றது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுபபிய கேள்விகளுக்கு பதலிளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:- கேள்வ…
-
- 0 replies
- 180 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ பெற்று வளர்த்த குழந்தையை நாம் கொல்ல முடியுமா? மஹிந்த ராஜபக்ஷ பெற்றெடுத்து ஐந்து வருடங்களாக வளர்த்த குழந்தையை கொலை செய்யுமாறு எங்களிடம் கூறுகின்றனர். எமது நாட்டுக்கு தனியார் கல்லூரி மருத்துவக்கல்லூரிகள் கட்டாயம் அவசியமானது. சைட்டம் கல்லூரியின் தரம் தொடர்பில் மருத்துவ சபை கேள்வி எழுப்புவதற்கு உரிமையில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் மருத்துவ பீடம் அமைக்கப்பட்டபோது கோத்தாவுக்கு அஞ்சிக்கொண்டு மௌனமாக இருந்தவர்கள் இன்று சைட்டத்தை எதிர்க்கின்றனர் என்றும் ராஜித்த சேனாரட்ன குற்றம் சாட்டினார். மேலும் மஹிந்த ராஜபக்ஷ பெற்றெடுத்து ஐந்து வருடங்கள…
-
- 0 replies
- 225 views
-
-
ஒரே இரவில் காணிகளை வழங்க முடியாது ; கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் அரசாங்கம் தெரிவிப்பு காணிகளை வழங்குமாறு கோரி மக்கள் போராட்டம் நடத்தினாலும் ஒரே இரவில் காணிகளை வழங்கிவிட முடியாது. அரசாங்கம் காணிகளை எப்படியாவது வழங்கும் என்று தெரிந்தே மக்கள் போராட்டம் நடத்துகின்றனர் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கடந்த ஆட்சி காலத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு அஞ்சிக்கொண்டிருந்த மக்கள் இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துக…
-
- 0 replies
- 222 views
-
-
தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் : புகைப்படம் எடுக்கும் விமானப்படை முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள, கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பில் விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள, 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றுடன் பதினேழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விடுவிக்கப்படும் என்ற உறுதி மொழியை நிராகரித்த மக்கள், தமது சொந்த நிலங்களில் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடருமென தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் போராட்டத்துக்கு வருபவர்களையும…
-
- 0 replies
- 263 views
-
-
விடுவிக்கப்படாத காணி விவகாரம் : ஜனாதிபதியுடன் கலந்துரையாட கூட்டமைப்பு தீர்மானம் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவசர கலந்துரையாடலை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. விடுவிக்கப்பட்டதாககக் கூறப்பட்ட போதிலும் தங்களது காணி இதுவரை கிடைக்கவில்லை என்த் தெரிவித்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் இந்த நிலமீட்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவில் இரண்டு நில மீட்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கு…
-
- 2 replies
- 251 views
-
-
வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம் : கேப்பாப்புலவு மக்கள் காணி விடுவிக்கப்படும் என்ற தகவலை அடுத்து ஆவலோடு காத்திருக்கின்றோம். வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம். எமது சொந்த நிலங்களில் கால் பதித்த பின்னரே எமது போராடடத்தை நிறுத்துவோமென இன்றும் 16 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொர…
-
- 2 replies
- 927 views
-
-
யாழ் விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர் வடக்கு மாகாணத்திற்கு விஐயம் செய்திருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைச் சந்தித்து மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த மேற்படித் தூதுக் குழுவினர் ஏ9 வீதி கைதடியிலுள்ள மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனைத் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடினர். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாகாணத்த…
-
- 0 replies
- 371 views
-
-
மாணவர்களுக்கிடையில் மோதல்: 6 பேர் வைத்தியசாலையில்; 10 பேர் கைது கொழும்பிலுள்ள மூன்று பிரதான பாடசாலைகள் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/191593/-ம-ணவர-கள-க-க-ட-ய-ல-ம-தல-ப-ர-வ-த-த-யச-ல-ய-ல-ப-ர-க-த-#sthash.knyRL4jd.dpuf
-
- 0 replies
- 307 views
-
-
வழங்கப்பட்ட பாதுகாப்பு அசௌகரியமாக உள்ளது – மக்களை சுதந்திரமாக சந்திக்க முடியவில்லை – சுமந்திரன்: தனக்கு வழங்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அசௌகரியமான சூழலை ஏற்படுத்தி உள்ளது எனவும், மக்களுடன் சுதந்திரமாக பேச முடியவில்லை எனவும் , இந்த பாதுகாப்பை தான் விரும்பவில்லை எனவும் , ஆனாலும் தற்போது பாதுகாப்பு அத்தியாவசியமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , என்னை மூன்று தடவைகள் கொலை செய்ய முயற்சித்து உள்ளார்கள். என கிளிநொச்சி நீதிமன்றில் பொலிசார் எழுத்து மூலம் தகவல்கள் வழங்கியுள்ளனர். என்னை கொல்வதற்கு வெளிநாட்டில் இருந்து பணம் மற்ற…
-
- 4 replies
- 409 views
-