ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
போராட்டத்திலீடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகள் யாவும் விடுவிக்கப்படும் : பாதுகாப்பு அமைச்சு விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்கவேண்டுமெனக்கோரி பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படைத்தளம் முன்பாக கடந்த 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த போர்டடாக்களத்துக்கு சற்றுமுன்னர் (ஒரு மணியளவில்) வருகைதந்த முல்லை மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குணபாலன் ஆகியோர் மக்களிடம் உங்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என தெரிவித்தனர். இதில் மக்களிடம் கருத்து தெரிவித்த அரச அதிபர், சற்றுமுன்னர் எனக்கு …
-
- 4 replies
- 645 views
-
-
கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது வா.கிருஸ்ணா வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன், முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்தப் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று (11) காலை, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது. மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும், இதன்போது தமது ஆதரவைப் புதிய கட்சியின் உருவாக்கத்துக்கு வழங்கியுள்ளது. முன்னாள் மீள்கு…
-
- 13 replies
- 1.4k views
-
-
காணிகளிலுள்ள எமது அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவம்! கேப்பாப்பிலவு மக்கள் குற்றச்சாட்டு முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை மீளவும் தங்களிடம் விரைவாக கையளிக்கவேண்டும் எனக்கோரி பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பனியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது பதின்னான்காவது நாளாகவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமது காணிகளிலுள்ள வரலாற்று அடையாளங்கள் மற்றும் பயன்தரு மரங்கள் என்பவற்றை இராணுவத்தினர் அழிப்பதாக நேற்று மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாம் போராட்டம் ஆரம்பித்த பின்னர் இந்த இடத்தில் வருகை தருபவர்களிடம் தமது காணி…
-
- 2 replies
- 382 views
-
-
"வாய் திறந்தால் பொய் சொல்பவர் தான் சுமந்திரன்" வாய் திறந்தால் பொய் சொல்பவர் தான் சுமந்திரன். இவ்வாறு பொய் சொல்லிச் சொல்லியே சுமந்திரன் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மணற்தறை வீதியிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்திற் நேற்று மாலை ஊடகவியியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது கேப்பாபபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதமைச் சந்தித்திருந்தால் தீர்வு கிடைத்திருக்குமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்டிருக்கும் கருத்து குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரி…
-
- 4 replies
- 783 views
-
-
விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம் அம்பலமாகியுள்ளது - அனந்தி சசிதரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே தவிர தமிழினத்தின் விடிவுக்கான எந்த அத்திவாரமும் இடப்படவில்லை என்பதே எனது கருத்தாகும் என தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம் அம்பலமாகியுள்ளதாக குறிபப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் எம்மை மேடையில் ஏற்றவில்லை மாறாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே த…
-
- 6 replies
- 1.4k views
-
-
விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் பிரதமர் ரணில் சந்திப்பு அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநில ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுனர் லிண்டா டேசாவும் பங்கேற்கவுள்ளார்கள். இதேவேளை டிக்கீன் பல்கலைக்கழகம் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம். கல்வி …
-
- 0 replies
- 273 views
-
-
சுமந்திரன் படுகொலை சதி விவகாரம்: 2 ஆவது சந்தேகநபரை மீள தமது பொறுப்பின் கீழ் எடுத்து விசாரணை செய்ய ரி.ஐ.டி. நடவடிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுச் எய்யப்ப்ட்டுள்ள முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களில் ஒருவரான வேலாயுதம் விஜேய் குமார் என்பவரை மீள பயங்கரவாத புலனாய்வாளர்களின் (ரி.ஐ.டி.) பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயங்கரவாத புலனயவுப் பிரிவின் வவுனியா அலுவலகம் ஊடாக கைது செய்யப்ப்ட்ட அவர் பொலிஸ் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ள நிலையிலே…
-
- 0 replies
- 342 views
-
-
ஓமந்தையில் மரகடத்தல் முறியடிப்பு சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகள் வவுனியா ஓமந்தை உப வன பரிபாலனத் திணைக்களத்தினால் நேற்றிரவு கைப்பற்றப்பட்டுள்ளன. வவுனியா ஓமந்தை உப வன பரிபாலனத் திணைக்களத்திற்கு நேற்று கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வவுனியா ஓமந்தை பெரியமடு பகுதியிலிருந்து கனகராயன் குளம் நோக்கி சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த மூன்று இலட்சம் பெறுமதியான 13 முதிரை மரக்குற்றிகளையும் ஒரு பட்டா ரக வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர். முதிரைக்குற்றிகளை கடத்த முற்பட்ட பட்டா ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் தப்பியோடியுள்ளார். கடத்தல் சம்பவத்துடன் தொட…
-
- 0 replies
- 500 views
-
-
அதிகாரப் பகிர்வில் ஆகக்கூடிய அதிகாரங்களை பெற முயல வேண்டும் -கிழக்கு முதலமைச்சர் புதிய அரசியலைப்பில், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கூட்டாக இணைந்து ஆகக்கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முயன்று வருவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். எங்களுக்குள் ஒரு தீர்க்கமான உடன்பாடு எய்யப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரும் உறுதியாக உள்ளார்கள் எனவும் இரு சமூகங்களும் மனப்பூர்வமாக இணைந்தால், அரசாங்கத்திடமிருந்து ஆகக் கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ‘இரண்டு சமூகங்களுக்குமிடையில் அதிக வ…
-
- 0 replies
- 334 views
-
-
கிளிநொச்சியில் வீடுகளுக்கு செல்லாத மின்சார சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் எறியப்பட்டுள்ளது. குறித்த மின் கட்டண சிட்டைகள் கடந்த வருடம் நவம்பா் மாத்திற்குரியதும், கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம், முரசுமோட்டை,ஊரியான், …
-
- 0 replies
- 272 views
-
-
அம்பகாமம் காட்டுக்குள் புலிகளின் ஆட்லறி செல்கள் மீட்பு முல்லைத்தீவு அம்பகாமம் காட்டு பகுதியிலிருந்து இன்று காலை புலிகள் பயன்படுத்திய ஆட்லறி செல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானப்படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினா் தெரிவித்துள்ளனா். ஒவ்வொரு எறிகணையும் 16 கிலோ கிராம் கொண்டது என்றும் விமானப்படையினா் தெரிவித்துள்ளனா். குறித்த அம்பகாமம் காட்டுப்பகுதிக்கு அருகில் தான் 2009 ஆம் ஆண்டுக்கு முன் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விமானப் படைத்தளம் காணப்படுகிறது. தற்போது அது இலங்கை விமானப்படையினரின் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http…
-
- 0 replies
- 463 views
-
-
கனகபுரம் துயிலுமில்லம் காணியில் வேலியமைத்த தனியாா் – பிடுங்கி எறிந்தது பிரதேச செயலகம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று செவ்வாய் கிழமை 15-02-2017 தனியாா் ஒருவரினால் வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது குறித்த மாவீரர் துயிலுமில்லம் காணியின் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து தனிநபா் ஒருவா் கூலியாட்களை கொண்டு கம்பி கட்டைகள் போட்டப்பட்டு வேலி அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தாா். கடந்த நவம்பா் மாதம் மாவீரர் நாள் நிகழ்வில் பொதுச் சுடரேற்றி நிகழ்வு நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் எல்லையிட்டு வேலி அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தாா் இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கரைச்சி …
-
- 0 replies
- 383 views
-
-
இராணுவத்தை விட்டுத் தப்பியோடிய 563 படையினர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தை விட்டு தப்பிச் சென்றவர்கள் மீண்டும் படைகளில் இணைந்து கொள்வதற்கு அல்லது சட்டரீதியாக படைகளில் இருந்து விலகிக் கொள்வதற்கு, பாதுகாப்பு அமைச்சு கடந்த ஆண்டு இறுதியில் பொதுமன்னிப்புக் காலத்தை அறிவித்திருந்தது. 2016 டிசெம்பர் 31ஆம் நாளுடன் பொதுமன்னிப்புக் காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 9ஆம் நாள் இராணுவமும், காவல்துறை யும் இணைந்து, தப்பியோடிய படையினரைக் கைது செய்யும் பாரிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே 563 தப்பியோடிய படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ வரலாற்றில் தப்பியோட…
-
- 1 reply
- 360 views
-
-
நீச்சல் குளத்துடன் இலங்கையில் அதிக நவீன சிறைச்சாலை : புகைப்படங்கள் வெளியாகின அம்பாந்தோட்டை அகுனுகொலபெலச என்ற பகுதியில் 58 ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஆயிரத்து 996 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சிறைச்சாலையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி குறித்த சிறைச்சாலையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இச் சிறைச்சாலையில் இரண்டாயிரம் கைதிகளை சிறை வைக்கும் வசதி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் புதிய சிறைச்சாலையில் ஒரு வைத்தியசாலையில்,தொழிற்கல்வி பயிற்சி மையம், கைத்தொழிற்காக தனியொரு கட்டிடம், அதிகாரிகளுக்காக 140 தங்குமிடங்கள் மேலும் நான்கு ஆயிரம் மீற்றர் நீளமான ஓடுபாதை , 25 மீற்றர் நீளம…
-
- 9 replies
- 2k views
-
-
இலங்கை, தனது கடப்பாட்டை மீறியதாக காட்டம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், இலங்கை தனது கடப்பாட்டை மீறியுள்ளதாக, சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITPJ) குற்றஞ்சாட்டியுள்ளது. இதைவிட இன்னும் இரண்டு நியமனங்கள் துன்பம் தருவதாக உள்ளதாக அந்தச் செயற்றிட்டம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அந்தச் செயற்றிட்டம், நேற்று (13) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐ.நா அறிக்கையில் சித்திரவதை செய்தவர் எனப் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர், பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புக்கான அதிகாரசபை எனப்படும் அமைப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் …
-
- 0 replies
- 332 views
-
-
வீதியில் அநாதரவற்று நிற்கும் பேரூந்தால் மக்கள் அச்சம் வவுனியா குளுமாட்டு சந்தியிலிருந்து மரக்காரம்பளை நோக்கி பயணிக்கும் பாதையில் தனியார் பேருந்து ஒன்று கடந்த நான்கு நாட்களாக அநாதரவற்ற நிலையில் நிற்பதால் தாம் அச்சத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த நான்கு நாட்களாக மரக்காரம்பளை வீதி காளி கோவிலுக்கு அருகே தனியார் பேரூந்து ஒன்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதியில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தாம் அச்சத்தில் உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர். இவ் விடயம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸாரை தொடர்பு கொண்ட கேட்டபோது, …
-
- 0 replies
- 314 views
-
-
சிவப்புநிறமாக மாற்றமடையும் ஆரியகுளத்துநீர் யாழ்ப்பாண நகரில் உள்ள ஆரியகுளத்தின் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. சுற்றுச் சூழலில் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த நிலை எற்பட்டுள்ளதா? என பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் குளத்தில் பெருமளவு கழிவுப் பொருட்கள் கொட்டப்படுகின்றன. இது தொடர்பில் யாழ் மாநகர சபையினர் எதுவிதமான நடவடி க்கைகளையும் மேற்கொள்ளவில்லை. யாழ்ப்பாண நகரில் சில நீர்நிலைகளே உள்ளன. அவற்றினை பேணிப்பாதுகாப்பது மற்றும் சுத்திகரிப்பது தொடர்பாக யாழ் மாநகர சபையினர் அக்கறை செலுத்துவதில்லை. ஆரிய குளத்தின் நீர் கடந்த சில நாட்…
-
- 1 reply
- 601 views
-
-
பொறுமையின் எல்லையை கடந்து விட்டோம்-பிலக்குடியிருப்பு மக்கள் வேதனை கடந்த 14 நாட்களாக தொடர்ந்தும் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாங்கள் பொறுமையின் எல்லையை கடந்து விட்டோம் என, முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இனிவரும் நாட்களில் நாங்கள் எடுக்கின்ற விபரீதமான முடிவுகளுக்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு, பிலவு பிரதேசம் விமானப் படையின் வசம் மிக நீண்ட காலமாக உள்ளது. இந்தநிலையில், தமது பூர்வீ…
-
- 0 replies
- 279 views
-
-
பலாலி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க ஆவணத்தில் கையெழுத்திடேன்-முதல்வர் விக்கி பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவது தொடர்பான எந்தவொரு ஆவணத்திலும் தான் ஒப்பமிடப் போவதில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்விலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணசபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் பலாலி விமான நிலைய விரி வாக்கம் தொடர்பான திட்டத்துக்கு தாம் ஒப்புதல் அளிக்கமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவதற்காக மேலும் 1600 ஏக்கர் நிலத்தை …
-
- 0 replies
- 325 views
-
-
காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண்பது என்பது இலகுவான விடயமல்ல வடக்கு, கிழக்கில் 3 ஆயிரம் ஏக்கர் காணி விரைவில் விடுவிக்கப்படும் என்கிறார் ருவன் (எம்.சி.நஜிமுதீன்) காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தி தீர்வு முன்வைப்பதென்பது இலகுவான விடயமல்ல. எனவே அவ்விடயத்தில் காலக்கெடு வழங்குவது கடினமானது. எனினும் காணாமல் போனோரின் விடயத்தில் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுத்து விரை வில் தீர்வு முன்வைப்பதற்கு எதிர்பார்க்கிறோம். அத்து டன் வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள மூவாயிரம் ஏக்கர் காணியை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்…
-
- 0 replies
- 205 views
-
-
ஆதரவு தெரிவிக்க வருபவர்களை புகைப்படம் எடுக்கும் படையினர் -எம்.றொசாந்த் கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்க மற்றும் உதவிகளை வழங்க செல்வோரை விமான படையினர் தமது அலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றார்கள். அத்துடன் வருபவர்களின் வாகன இலக்கங்களையும் குறிப்பெடுத்து கொள்கின்றனர். கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். அப்பகுதி மக்களின் காணியில் அமைந்துள்ள பாரிய விமான படைத்தளத்தை விட்டு விமான படையினர் வெளியேற வேண்டும் என கோரி படைத்தளம் முன்பாக மக்கள் குடியமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். …
-
- 0 replies
- 366 views
-
-
வடக்கில் மீண்டும் வெடிச்சத்தம் : மஹிந்த (ஆர்.யசி ) வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கும் சமஷ்டி மூலம் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்தவுமே இந்த அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முயற்சித்து வருகின்றது. இந்த அரசாங்கத்தினால் அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர அதிகாரம் உள்ளது. ஆனால் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. வடக்கில் மீண்டும் வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மொனராகலையில் மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்…
-
- 0 replies
- 306 views
-
-
(க.கமலநாதன்) எழுக தமிழ் பேரணியூடாக தற்போது இனவாதம் துண்டிவிடப்படுகின்றதுடன் தமிழ் மக்களும் தூண்டுதல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என தூய்மையான ஹெல உறுமைய அமைப்பு தெரிவிக்கின்றது. எழுக தமிழ் உள்ளிட்ட பேரணிகளை நடத்தி வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தூண்டி விடப்படுகின்றனர். அதனை பொருட்படுத்தாமல் நல்லாட்சி அரசாங்கம் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு வலுச்சேர்த்துக்கொண்டிருக்கின்றது. அன்று நாட்டினை பிளவுபடுத்துகின்ற நோக்கத்தில் செயற்பட்டவர்கள் இன்றும் அவ்வாறே செயற்படுகின்றனர். தற்போதைய அரசாங்கம் புலிகளை பாதுகாத்து அவர்களின் மீள் ஊருவாக்கத்திற்கு சக்தி வழங்கிக்கொண்டுள்ளது மறுபுறத்தில் இராணுவத்தினை தண்டிக்க முன்னெடுப்…
-
- 0 replies
- 337 views
-
-
(க.கமலநாதன்) சிலவேளை கருணாவின் ஒத்துழைப்பு கிட்டியிருக்காவிட்டால் நாட்டின் கிழக்குப் பகுதியை புலிகளிடத்திலிருந்து மீட்க முடியாது போயிருக்கும். அதனால் அவ்வாறான ஒருவர் தலைமையில் கட்சி நிறுவப்படுவது காலோசிதமான முயற்சியாகுமென பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமைய அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுபப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளமையானது வரவேற்கத்தக்கதாகும். காரணம் அவர் இறுதி யுத்த காலத்தில் நாட்டின் கிழக்கு பகுதியை புலிகளிடத்திலிருந்து மீட்டெடுக்க பெரும் உதவி செய்தவர். http://www.virakesari.lk/article/16588 தற்போது அவர் கட்சி ஆரம்பிக்க முற்படுகின்றமை…
-
- 0 replies
- 321 views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள தமது காணிகளையும் வீடுகளையும் இராணுவம் விடுவிக்க வேண்டுமெனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நாளை முதல் சுழற்சி முறையிலான அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்றையதினம் பிரதேசசெயலாளர் ம.பிரதீபனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம் முன்னால் இடம்பெற்றுவரும் போராட்டம் இன்றையதினம் பதினோராவது நாளை எட்டியுள்ளது. புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்க…
-
- 0 replies
- 427 views
-