Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக இன்றைய தினம் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றது இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் ,சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் ,இளையோர் அமைபுக்கள் இணை ந்து குறித்த போராட்டத்தினை நடாத்தியிருந்தனர் மேலும் குறித்த போராட்டத்தினை அடுத்த 11 மணியளவில் கேப்பாபுலவு மக்களை சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவினையும் தெரிவிக்க உள்ளனர். http://onlineuthayan.com/news/23728

  2.  புலி பூச்சாண்டி எதற்காக: எழுக தமிழில் சி.வி.ஆவேசம் 'விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த பின், புலிகள் திரும்பவும் வந்துவிட்டார்கள் அல்லது வரப் போகின்றார்கள் என்று, பூச்சாண்டி காட்டுவது என்ன காரணத்துக்;காக' என்று, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்ணேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக்கழகத் திடலில் தற்போது நடைபெற்றுவரும் எழுக தமிழ் பேரணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில், 'எழுமின், விழ…

  3.  இராணுவம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும்: புதுக்குடியிருப்பு மக்கள் சண்முகம் தவசீலன் புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம், இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது. 19 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள், வீடுகள் மற்றும் பொருளாதார நிலையங்கள் என்பவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள், கடந்த 8 வருடங்களாக வாடகை வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு …

  4. ஊழல், மோசடி குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­ப­ண­மானால் கோத்தா கைதாவார் ; அர­சாங்கம் கூறு­கின்­றது முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ மீது காணப்­ப­டு­கின்ற ஊழல், மோசடி உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆதா­ரங்கள் நிரூ­பிக்­கப்­பட்டால் அதற்­க­டுத்த நட­வ­டிக்­கை­யாக அவர் கைது செய்­யப்­ப­டுவார் என்று சுற்­று­லாத்­துறை மற்றும் கிறிஸ்­தவ விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க தெரி­வித்தார். கொழும்பு கங்­கா­ராம விகா­ரையின் வரு­டாந்த பெர­ஹரா நிகழ்வு நேற்று முன்­தினம் தினம் ஆரம்­ப­மா­னது. அதன் இரண்டாம் நாள் ஊர்­வ­லத்­துக்கு சுற்­று­லாத்­துறை மற்றும் கிறிஸ்­தவ விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து கங்­கா­ரா…

  5. எழுக தமிழ் பேரணியை நியாயப்படுத்தும் காணி மீட்பு, காணாமல்போனோர் விவகாரம் உரிமைக்குரலாக மாற்றமடைகின்றது : அமைச்சர் மனோ கேப்­பாப்­பு­லவு மக்­களின் காணி­மீட்பு போராட்­டமும் காணாமல் ஆக்­கப்­பட்டுள்ள­வர்­களின் உற­வினர்களின் எதிர்ப்­பார்ப்பும் கிழக்கில் நடை­பெறும் எழு­க ­தமிழ் பேர­ணியை நியா­யப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இப்­பே­ரணி தொடர்பில் விமர்­சிப்­ப­தற்கோ அல்­லது வேண்டாம் என கூறு­வ­தற்கோ எவ­ருக்கும் உரிமை கிடை­யாது என தேசிய சக­வாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கனேசன் தெரி­வித்தார். முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்­தி­லேயே காணா­ம­லாக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் அனைத்தும் நடை­பெற்­ற­…

  6. வன்னியில் பன்றிக் காய்ச்சலால் மூவர் பாதிப்பு வன்னியில் பன்றிக் காய்ச்சல், பீடிக்கப்பட்ட மூன்று பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா, மாங்குளம் மற்றும் பெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் சிறுவர்கள் மூவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றவர்கள், அருகில் உள்ள அரச வைத்தியசாலையை உடனடியாக நாடி, உரிய பரிசோதனை மற்றும் சிகிசை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். - S…

  7. கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்) வவுனியா மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (10) காலை 9.30 மணியளவில் ஒன்றிணைந்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மைத்திரி-ரணில் அரசு ஏன் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் உள்ளது என்பது பற்றி உரிய தரப்புக்கள் வாய் திறந்து கேள்வி எழுப்புதல் வேண்டும் என்று தெரிவித்து இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தினை வவுனியாவில் நடாத்தியுள்ளார்கள். கேப்பாப்புலவு மக்களுக்கு நீதிவேண்டும், வேண்ட…

  8. சாவகச்சேரிப் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு சாவகச்சேரி - சரசாலை, கனகம்புளிச்சந்திக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பாவனை நிலையில் உள்ள கைக்குண்டு 2, மிதிவெடி 2, கிளைமோர் 1, செல் 1 என்பன கைப்பற்றபட்டுள்ளன. இன்றைய தினம் நண்பகல் வேளையில் வீட்டுக் கிணறு ஒன்றிலிருந்தே மேற்கண்ட வெடி பொருட்க்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் ஆரம்ப காலத்தில் இராணுவம் இருந்ததாகவும் தற்போது வீட்டு கிணற்றினை துப்பரவு செய்யும் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.onlineuthayan.com/news/23711

  9. மகிந்த அரசு செய்யாத மிக மோசமான செயலை நல்லாட்சி அரசு செய்கிறது : வடக்கு விவசாய அமைச்சா் ஐங்கரநேசன் நாசுக்கான முறையில் இனிப்பு தடவிய நஞ்சுகளாக அபிவிருத்தி என்று சொல்லி சொல்லி எங்களிடம் இருக்கின்ற அத்தனை அதிகாரங்களையும் பறிக்கின்ற நடவடிக்கைகளுக்கு தற்போதைய அரசு தயாராகி வருதுடன் பறித்துக்கொண்டும் இருக்கின்றாா்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சா் பொ. ஜங்கரநேசன் தெரிவித்தார். இரணைமடு பாரிய நீா்பாசன திட்ட முகாமைத்துவ அலுவலக கட்டிட திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு திருத்தம் பற்றி பேசப்பட்டுக்கொண்டே, எம்மிடம் இருக்கின்ற அதிகாரங்…

  10. கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் தாயுடன் வாழ்ந்துவந்த யுவதி ஒருவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த இராணுவப் படை அதிகாரி ஒருவர் நேற்றிரவு 2.00 மணியளவில் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு இராணுவப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த வருடம் கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதிக்கு இராணுவச் சிவில் அதிகாரியாக இருந்த லெப்டினன் சுரங்க என்னும் இராணுவ அதிகாரி அப்பகுதி மக்கள் வீடுகளுக்குச் சென்று மக்கள் தொடர்பான குடும்ப விபரங்களைப் பெற்றுள்ளார். அவ்வேளை பாதிக்கப்பட்ட மேற்படி யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் வசிப்பதைத் தெரிந்து அந்த யுவதிக்கு தாம் உதவுவதாக நாடகமாடி அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். …

  11. மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ''எழுக தமிழ்'' எழுச்சிப் பேரணி தொடர்பான ஊடக சந்திப்பு

  12. முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இரண்டு ஏக்கர் காணியில் ஹோட்டல் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்காக 99 வருடம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்போதுநிதி முறைக்கேடு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நிதி குற்ற விசாரணை பிரிவு விசாரணை மேற்கொள்வதான நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நலின் ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இந்த ஹைட் ஹோட்டல் தொகுதி நிர்மாணிக்கும் நிகழ்விற்கு மாத்திரம் 70 இலட்சம் செலவிடப்பட…

  13. சில்லறைத்தனமான குற்றச்சாட்டுகளை தவிர்த்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுங்கள் ; கிழக்கு முதலமைச்சர் சில்லறைத்தனமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு ஒரு போதும் விரும்புவதில்லை. அவற்றுக்கு பதிலளிப்பதற்கு செலவிடும் நேரத்தை மக்கள் பணி செய்வதில் செலவிடலாம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி என்னால் தடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சக அரசியல்வாதியும், பிரதியமைச்சருமான அமீர் அலி பாராளுமன்றத்தில…

  14. சர்வஜன வாக்கெடுப்புடனே புதிய அரசியலமைப்பு : லக்ஷ்மன் கிரியெல்ல புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதன் பிறகு மக்களின் ஆதரவை பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பது அரசின் முதல் கடமை என்றும், அது குறித்த சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது இரண்டாவது கடமை என்று, சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பிற்குட்படுத்தப்பட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும். எனவும் அது தொடர்பா…

  15. “கேப்பாப்பிலவு, மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது உண்மையை உணர்கிறோம்” தென்னிலங்கை மக்கள்:- கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 11ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை நேற்றைய தினம் தென்னிலங்கை சிவில் அமைப்புகளான தேசிய மீனவ இயக்கம் மற்றும் பங்குத்தந்தைமார், அருட்சகோதரிகள் உட்பட சகோதர மொழி பேசும் மக்கள் அடங்கிய குழுவினர் சந்தித்திருந்தனர். படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரசாரம் செய்யப்படுவதாக தென்னிலங்கை ச…

  16. காணாமற்போனோர் தொடர்பான பிரதமரின் யோசனை நிராகரிப்பு கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை நடத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொ ன்றை அமைப்பதாக பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரி த்துள்ளனர். அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது தமக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுதலை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த கா…

  17. தீர்­வின்­றித்­தொ­ட­ரும் ­கேப்­பா­ப்பு­லவு மக்­க­ளின் ­காணி மீட்­பு­ போ­ராட்டம் தென்­ப­கு­தி­ மக்­க­ளும் ­நே­ரில் ­வந்து ஆத­ரவு (கே.குமணன்) முல்­லைத்­தீவு கேப்­பா­ப்பு­லவு பிலக்­ கு­டி யி­ருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை மீட்­டெ­டுக்கும் நோக்கில் முன்­னெ­டுத்­துள்ள தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்டம் பத்­தா­வது நாளாக நேற்றும் தொடர்ந்து. இந்­நி­லையில் நேற்று முன்­தினம் இரவு போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்­களை வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் மயூரன் நேரில் சந்­தித்து மக்­களின் குறை­களை கேட்­ட­றிந்­த­தோடு தனது ஆத­ர­வி­னையும் தெரி­வித்தார். கேப்­பா­பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில் 84குடும்­பங்­க­ளுக்கு சொந்­த­மான 40ஏக…

  18. மாணவர்கள் கொலை; சந்தேக நபர்களின் மறியல் நீடிப்பு யாழ்ப்பாணம்-கொக்குவில் கே.கே.எஸ்.வீதி பகுதியில் பல்கலைகழக மாணவர்கள் இருவரை பொலிஸார் சுட்டுக்கொலை செய்த வழக்கு விசாரணையில் கைதாகியுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் மீது கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அண்மையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான வழ…

  19. யாழ்தேவி புகையிரத விபத்து : ஸ்தலத்திலேயே இராணுவ வீரர் பலி.! நடந்தது என்ன.? யாழ்தேவி புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், மற்றும் ஒரு இராணுவ வீரர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை 10.00 மணியளவில் அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், அரியாலைப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர். யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதம் வருகின்றதென சமிஞ்கை போடப்ப…

  20. விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு காணிகளில் 225 வீடுகள் அமைக்க நடவடிக்கை என்கிறார் யாழ்.அரச அதிபர் வலி-வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் 225 வீடுகள் அமைப்பதற்காக விரை வான நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாய கன் தெரிவித்துள்ளர். யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு வீட்டுத் திட்டத்தை விரைவாக வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் பலாலியில் உள்ள யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் நடைபெற்றது குறித்த கலந்துரையாடல் தொடர்பாக யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், …

  21. கடத்­திய தமி­ழர்­களை கொன்­ற­பின்னர் வேன் கடற்படை முகாமுக்குள் வைத்து துண்­டு­க­ளாக வெட்­டப்­பட்­டுள்­ளது : சி.ஐ.டி.மன்­றுக்கு அறி­விப்பு கொட்­டாஞ்­சே­னையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்­தப்­பட்டு காணாமல்போகச் ­செய்­யப்­பட்­ட­ வ­டிவேல் பக்­கி­ளி­சாமி லோக­நாதன், இரத்­ன­சாமி பர­மா­னந்தன் ஆகியோர் படு­கொலை செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் அதனை மறைக்­கவே அவர்கள் பய­ணித்த வேனை வெலி­சறை கடற்­படை முகா­முக்குள் வைத்து துன்டு துன்­டாக வெட்­டி­யுள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர். கடந்த 14 ஆம் திகதி இந்த விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட லெப்­டினன் கொமாண்டர் தம்­மிக அணில் மாபா­…

  22. சபாநாயகரின் ஆசனம் கீழே விழுந்தது : அரசாங்கத்திற்கு சகுனம் சரியில்லை பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் சபாநாயகரின் ஆசனம் கிழே விழுந்தது. இது அனைவரினதும் அவதானத்திற்கு உள்ளானது. மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் சட்ட ஒழுங்குவதி தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருக்கையில் சபைக்கு தலைமை வகித்த ஆனந்த குமாரசிறி எம்.பி தலைமை பொறுப்பை சேஹான் சேனசிங்கவிற்கு வழங்க முற்பட்ட போது சபாநாயகர் ஆசனம் கீழே விழுந்தது. இதன்போது சபையில் பேசிய கூட்டு எதிரணி எம்.பி மஹிந்தானந்த அழுத்கமகே இதுவரைக்கும் இல்லாத வகையில் சபாநாயகர் ஆசனம் கீழே விழுந்து விட்டது. அரசாங்கத்திற்கு சகுணம் சரியில்லை என தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழகிழமை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் …

  23. ஐ.நா. உணவு திட்ட பணிப்பாளர் இன்று வருகிறார் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின் பணிப்பாளர் இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தின் அழைப்பொன்றுக்கு இணங்க உலக உணவு திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எதரின் கசின் இலங்கை வரவுள்ளதாக தெரிவித்தார். நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் போசனை தொடர்பான தேசிய மூலோபாய கலந்தாலோசனைகளை வௌிப்படுத்தல் நிகழ்வில் கலந்து கொள்வதே அவரது பயணத்தின் நோக்கமாகும். அரச சார்ப்பற்ற அமைப்புகள், குடியியல் சமூகம், தனியார் பிரிவு மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதி நிறுவனங்கள் ஒன்றிணைந்து தயாரித்த குறித்த வேலைத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தலைமையிலான தெற்காசி…

  24. மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிக்க திட்டம் யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதி திட்டம் தீட்டப்படுகின்றதாக வடமாகாணசபையின் 84 ம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மாகாணசபையின் 84ம் அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

 முதலமைச்சர் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும். இரகசியமாக காணி அபகரிப்பது சம்பந்தமாக பேசுவதற்கு, பாராளுமன்ற அலுவல்கள் சம்பந்தமான மேலதிக பாதுகாப்பு செயலாளர் ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்து மாவட்ட செயலகத்

தில் சந்திப்பை நடத்தவிருந்தார். இதற்கு நாம்…

  25. வடமாகாண குடிநீர் பிரச்சனை. முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் நீண்ட விவாதம். வடமாகணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை மற்றும் நீர்வழங்கல் தொடர்பிலான பிரச்சனைகள் தொடர்பில் விசேட விவாதம் எதிர்வரும் 23ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் 84 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.