Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சில்லறைத்தனமான குற்றச்சாட்டுகளை தவிர்த்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுங்கள் ; கிழக்கு முதலமைச்சர் சில்லறைத்தனமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு ஒரு போதும் விரும்புவதில்லை. அவற்றுக்கு பதிலளிப்பதற்கு செலவிடும் நேரத்தை மக்கள் பணி செய்வதில் செலவிடலாம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி என்னால் தடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சக அரசியல்வாதியும், பிரதியமைச்சருமான அமீர் அலி பாராளுமன்றத்தில…

  2. சர்வஜன வாக்கெடுப்புடனே புதிய அரசியலமைப்பு : லக்ஷ்மன் கிரியெல்ல புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதன் பிறகு மக்களின் ஆதரவை பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பது அரசின் முதல் கடமை என்றும், அது குறித்த சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது இரண்டாவது கடமை என்று, சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பிற்குட்படுத்தப்பட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும். எனவும் அது தொடர்பா…

  3. “கேப்பாப்பிலவு, மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது உண்மையை உணர்கிறோம்” தென்னிலங்கை மக்கள்:- கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 11ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை நேற்றைய தினம் தென்னிலங்கை சிவில் அமைப்புகளான தேசிய மீனவ இயக்கம் மற்றும் பங்குத்தந்தைமார், அருட்சகோதரிகள் உட்பட சகோதர மொழி பேசும் மக்கள் அடங்கிய குழுவினர் சந்தித்திருந்தனர். படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரசாரம் செய்யப்படுவதாக தென்னிலங்கை ச…

  4. காணாமற்போனோர் தொடர்பான பிரதமரின் யோசனை நிராகரிப்பு கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை நடத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொ ன்றை அமைப்பதாக பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரி த்துள்ளனர். அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது தமக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுதலை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த கா…

  5. தீர்­வின்­றித்­தொ­ட­ரும் ­கேப்­பா­ப்பு­லவு மக்­க­ளின் ­காணி மீட்­பு­ போ­ராட்டம் தென்­ப­கு­தி­ மக்­க­ளும் ­நே­ரில் ­வந்து ஆத­ரவு (கே.குமணன்) முல்­லைத்­தீவு கேப்­பா­ப்பு­லவு பிலக்­ கு­டி யி­ருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை மீட்­டெ­டுக்கும் நோக்கில் முன்­னெ­டுத்­துள்ள தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்டம் பத்­தா­வது நாளாக நேற்றும் தொடர்ந்து. இந்­நி­லையில் நேற்று முன்­தினம் இரவு போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்­களை வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் மயூரன் நேரில் சந்­தித்து மக்­களின் குறை­களை கேட்­ட­றிந்­த­தோடு தனது ஆத­ர­வி­னையும் தெரி­வித்தார். கேப்­பா­பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில் 84குடும்­பங்­க­ளுக்கு சொந்­த­மான 40ஏக…

  6. மாணவர்கள் கொலை; சந்தேக நபர்களின் மறியல் நீடிப்பு யாழ்ப்பாணம்-கொக்குவில் கே.கே.எஸ்.வீதி பகுதியில் பல்கலைகழக மாணவர்கள் இருவரை பொலிஸார் சுட்டுக்கொலை செய்த வழக்கு விசாரணையில் கைதாகியுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் மீது கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அண்மையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான வழ…

  7. யாழ்தேவி புகையிரத விபத்து : ஸ்தலத்திலேயே இராணுவ வீரர் பலி.! நடந்தது என்ன.? யாழ்தேவி புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், மற்றும் ஒரு இராணுவ வீரர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை 10.00 மணியளவில் அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், அரியாலைப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர். யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதம் வருகின்றதென சமிஞ்கை போடப்ப…

  8. விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு காணிகளில் 225 வீடுகள் அமைக்க நடவடிக்கை என்கிறார் யாழ்.அரச அதிபர் வலி-வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் 225 வீடுகள் அமைப்பதற்காக விரை வான நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாய கன் தெரிவித்துள்ளர். யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு வீட்டுத் திட்டத்தை விரைவாக வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் பலாலியில் உள்ள யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் நடைபெற்றது குறித்த கலந்துரையாடல் தொடர்பாக யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், …

  9. கடத்­திய தமி­ழர்­களை கொன்­ற­பின்னர் வேன் கடற்படை முகாமுக்குள் வைத்து துண்­டு­க­ளாக வெட்­டப்­பட்­டுள்­ளது : சி.ஐ.டி.மன்­றுக்கு அறி­விப்பு கொட்­டாஞ்­சே­னையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்­தப்­பட்டு காணாமல்போகச் ­செய்­யப்­பட்­ட­ வ­டிவேல் பக்­கி­ளி­சாமி லோக­நாதன், இரத்­ன­சாமி பர­மா­னந்தன் ஆகியோர் படு­கொலை செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் அதனை மறைக்­கவே அவர்கள் பய­ணித்த வேனை வெலி­சறை கடற்­படை முகா­முக்குள் வைத்து துன்டு துன்­டாக வெட்­டி­யுள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர். கடந்த 14 ஆம் திகதி இந்த விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட லெப்­டினன் கொமாண்டர் தம்­மிக அணில் மாபா­…

  10. சபாநாயகரின் ஆசனம் கீழே விழுந்தது : அரசாங்கத்திற்கு சகுனம் சரியில்லை பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் சபாநாயகரின் ஆசனம் கிழே விழுந்தது. இது அனைவரினதும் அவதானத்திற்கு உள்ளானது. மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் சட்ட ஒழுங்குவதி தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருக்கையில் சபைக்கு தலைமை வகித்த ஆனந்த குமாரசிறி எம்.பி தலைமை பொறுப்பை சேஹான் சேனசிங்கவிற்கு வழங்க முற்பட்ட போது சபாநாயகர் ஆசனம் கீழே விழுந்தது. இதன்போது சபையில் பேசிய கூட்டு எதிரணி எம்.பி மஹிந்தானந்த அழுத்கமகே இதுவரைக்கும் இல்லாத வகையில் சபாநாயகர் ஆசனம் கீழே விழுந்து விட்டது. அரசாங்கத்திற்கு சகுணம் சரியில்லை என தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழகிழமை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் …

  11. ஐ.நா. உணவு திட்ட பணிப்பாளர் இன்று வருகிறார் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின் பணிப்பாளர் இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தின் அழைப்பொன்றுக்கு இணங்க உலக உணவு திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எதரின் கசின் இலங்கை வரவுள்ளதாக தெரிவித்தார். நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் போசனை தொடர்பான தேசிய மூலோபாய கலந்தாலோசனைகளை வௌிப்படுத்தல் நிகழ்வில் கலந்து கொள்வதே அவரது பயணத்தின் நோக்கமாகும். அரச சார்ப்பற்ற அமைப்புகள், குடியியல் சமூகம், தனியார் பிரிவு மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதி நிறுவனங்கள் ஒன்றிணைந்து தயாரித்த குறித்த வேலைத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தலைமையிலான தெற்காசி…

  12. மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிக்க திட்டம் யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதி திட்டம் தீட்டப்படுகின்றதாக வடமாகாணசபையின் 84 ம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மாகாணசபையின் 84ம் அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

 முதலமைச்சர் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும். இரகசியமாக காணி அபகரிப்பது சம்பந்தமாக பேசுவதற்கு, பாராளுமன்ற அலுவல்கள் சம்பந்தமான மேலதிக பாதுகாப்பு செயலாளர் ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்து மாவட்ட செயலகத்

தில் சந்திப்பை நடத்தவிருந்தார். இதற்கு நாம்…

  13. வடமாகாண குடிநீர் பிரச்சனை. முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் நீண்ட விவாதம். வடமாகணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை மற்றும் நீர்வழங்கல் தொடர்பிலான பிரச்சனைகள் தொடர்பில் விசேட விவாதம் எதிர்வரும் 23ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் 84 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் …

  14. ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையை சாட்சி வறுமையில். ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கின் கண்கண்ட சாட்சியமாக உள்ள சிறுவனின் குடும்பம் மிக வறுமையான நிலையில் உள்ளதாக சிறுவனின் தாயார் தெரிவித்து இருந்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , எனது கணவர் எம்மை விட்டு நீண்ட காலமாக எம்மை விட்டு பிரிந்து வாழ்கின்றார். எமக்கு மூன்று பெண் பிள்ளைகளும் கடைச…

  15.  'போராட்டம் தொடரும் -சண்முகம் தவசீலன் அரச காணிகளை இராணுவத்தின் செயற்பாட்டுக்கு பெற்றுக்கொண்டு, படையினர் வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள போதிலும், தங்களுடைய போராட்டம் தொடருமென மக்கள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/191300/-ப-ர-ட-டம-த-டர-ம-#sthash.iHYi289M.dpuf கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். ராணுவம் மற்றும் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலிய…

  16. புலிகளின் விமான ஓடுபாதையை புனரமைத்து பாதை அமைக்கவே கேப்பாபுலவில் காணி அபகரிப்பு-முதல்வர் விக்கி தெரிவிப்பு விடுதலைப் புலிகள் உருவாக்கிய விமான ஓடுபாதையை புனரமைத்து அதற்கான பாதை ஒன்றை அமைப்பதற்காகவே, கேப்பாப்புலவு மக்களுடைய காணிகளை விமானப்படையினர் ஆக்கிரமித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனாலேயே கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை வழங்க முடியாது என்று விமானப் படையினர் தன்னிடம் கூறியதாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 84 ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இத…

  17. சுட்டெரிக்கும் வெயிலில் வீதியில் அமர்ந்து போராட்டம் : கேப்பபுலவில் 9 ஆவது நாளாக தொடர் போராட்டம் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி தொடர்ந்து இன்று ஒன்பதாவது நாளாக போராடிவரும் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உரியவர்களிடம் இருந்து தகுந்த பதில் கிடைக்கும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்களென அனைவரும் தமது சொந்த நிலத்தை கேட்டு இன்று ஒன்பது நாட்களாக போராடிவருகின்றனர். http://www.virakesari.lk/article/16381

  18. கடின உழைப்பினால்தான் இந்துக் கல்லூரிக்கு தொழிநுடப் பிரிவு கிடைத்தது – சந்திரகுமாா் கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் தொழிநுட்ப பிரிவை ஆரம்பிப்பதற்கு நாம் பெரும் போராட்டத்தையே நடத்தியிருந்தோம். ஒரு வலயத்திற்கு ஒரு பாடசாலைக்கே தொழிநுட்ப பிரிவு என்று இருந்த நிலையை மாற்றினோம் அதற்காக வலயக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒரு போராட்டத்தையே நடத்தியிருந்தோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா். இன்று 09-02-2017 கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப பிாிவு கட்டடத் தொகுதியை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு குறி…

  19. தமிழ் மக்கள் பேரவையால் மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி விழிப்பூட்டல் பிரசாரம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்துள்ள 'எழுக தமிழ்' பேரணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் மக்களட ரேவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். நாளை மட்டக்களப்பில் எழுக …

  20. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழு நியமனம் வரையறுக்கப்பட்ட அசோசியேட்டட் பத்திரிகை (லேக்ஹவுஸ்) நிறுவனத்தின் செயற்பாடுகளை முறைமைப்படுத்துதல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நால்வர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் நிமல் திசாநாயக்கா ஏனைய உறுப்பினர்களாக ராஜா பிரேமதாச, வீ.டீ.தகநாயக்கா, சட்டத்தரணி சந்ரசிறி செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு நிறுவனத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ பலவீனங்களை இனங்காணுதல், நிதிநிலை மற்றும் ஊழியர் நிர்வாகம் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக் குழு…

  21. சிலர்மீது பாய்ந்தார் டக்ளஸ் ஜே.ஏ.ஜோர்ஜ் வடக்கு மக்களின் காணிப்பிரச்சினையை வைத்து சிலர் சுயலாப அரசியலில் ஈடுபடுகின்றனர். காணியற்ற மக்களின் பிரச்சினையைத் தீர்க்க, அரசாங்கம் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளைச் சட்டங்களின் கீழான கட்டளைகளை அங்கிகரிப்பதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “வலி. வடக்கு பிரதேசத்தில் பொது மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்பதாமல் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களின் காணிப்பிரச்சினையை வைத்து சிலர் சுயலாப அரசியலை நடத்திச் செல்கின்ற…

  22. கேப்பாப்பிலவு போராட்ட மக்களின் பிரதிநிதிகள் நாளை பிரதமரை சந்திக்கின்றனர் ராணுவம் மற்றும் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக தொடர்கின்ற நிலையில் இது தொடர்பில் நாளையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் கலந்துகொள்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் …

  23. சிறிலங்கா கண்காணிப்பு பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை சிறிலங்காவுக்கு நெருக்கடியினை ஏற்படுத்துமா? [Wednesday 2017-02-08 19:00] சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்கும் Sri Lanka - Monitoring Accountability Panel (MAP)பன்னாட்டு நிபுணர்களை குழுவின் அறிக்கை சிறிலங்காவுக்கு நெருக்கடியினை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு பலமட்டத்தில் எழுத்துள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வழங்கிய பதினெட்டு மாத அவகாசத்தில், சிறிலங்கா அரசாங்கம் ஒத்துக் கொண்டிருந்த விடயங்களின் நடைப்பாடுகளை இப்பன்னாட்டுக்குழு கண்காணிக்கின்றது. வரும் பெப்ரவரி 27ம் நாள் தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிம…

    • 0 replies
    • 241 views
  24. இரணைதீவு முகாமை மூட முடியாது – பிரதமர் இரணைதீவு கடற்படை முகாமை மூடிவிடக் கூடிய சாத்தியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரணை தீவு கடற்படை முகாமை மூடிவிடுமாறு சிறிதரன் கோரியிருந்தமைக்கு அவ்வாறு குறித்த முகாமை மூடிவிட முடியாது என பிரதமர் பதிலளித்துள்ளார். இந்த முகாமை எந்த வகையிலும் மூட முடியாது என கடற்படையினர் தம்மை தெளிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். தென் இந்தியாவிலிருந்து வரும் மீனவர்களை தடுக்கவும், போதைப் பொருள் கடத்தல்களை இ;ல்லாதொழிக்கவும் இந்த…

  25. ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை. சாட்சியத்தை அச்சுறுத்தியவர்களின் ஓவியங்களை வரைய உத்தரவு. ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையின் கண்கண்ட சாட்சியமான சிறுவனை அச்சுறுத்தியவர் தொடர்பில் சிறுவனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னேடுத்து அச்சுறுத்தியவர்களை கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவு இட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 24ம் திகதி கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். படுகொலையை கண்ணால் கண்ட சாட்சியமாக 12 வயது சிறுவன் உள்ளதாக காவல்துறையினர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.