ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
யாழ்.செயலகத்திலும் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் 69ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரச அதிபர் வேதநாயகம் தலைமையில் இடம் பெற்றது. இதில் யாழ் மாவட்ட அரச அதிபர், முப்படையை சே்ந்த தளபதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், யாழ் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் என பலர் பங்கு பற்றினர். இந்நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமானது. யாழ் மாவட்ட அரச அதிபர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார் . இதனைத்தொடர்ந்து பொலிஸார், முப்படையினர்,மாணவர் படையணி, பாடசாலை மாணவர்கள் போன்றவர்களின் அணிவகுப்பு இடம்பெற்றது. http://onlineuthayan.…
-
- 1 reply
- 676 views
-
-
69ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசியகீதம் இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் நடை பெற்றது.இதன்போது, தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தசாப்தங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசை க்கப்பட்டதை அடுத்து தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் குழப்பகரமான நிலை ஏற்பட்டது. ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக பொதுபல சேனா, சிங்ஹலே போன்ற அமைப்புக்களும், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில போன்ற சில அரசியல்வாதிகளும் போர்க்கொடி உயர்த்தினர். …
-
- 0 replies
- 391 views
-
-
யாழ். மாவட்ட செயலகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஸன் யாழ்.மாவட்ட செயலகத்தை சுற்றிப் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலகத்தைச் சூழவுள்ள வீதிகள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஐpலிங்கம் தலைமையில் மாவட்டச்செயலகத்தின் அருகில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தையடுத்தே, மாவட்டச் செயலகத்துக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. "குறித்த போராட்டத்துக்கு இடையூறு விளைவித்தோ அல்லது அதனைத் தடுத்தாலோ போராட்டம் அமைதியான முறையில் நடைபெறாது. அதுவொரு எழுச்…
-
- 0 replies
- 298 views
-
-
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை ; காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் அனைத்து வாயில்களை அடைத்து புதுக்குடியிருப்பு மக்கள் கதவடைப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள தமது காணிகளை 682 ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளதாகவும் தமது வாழ்வியல் பிரதேசங்களை விடுவிக்குமாறும் கேப்பாப்புலவு மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுமாறு கோரியும் புதுக்குடியிருப்பு மக்கள் குறித்த போராட்டத்தை இன்று காலை 7 மணி முதல் முன்னெடுத்து வருகின்றனர். இதனால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தி…
-
- 1 reply
- 369 views
-
-
இலங்கைக்கு கூகுள் கொடுத்த கௌரவம்! இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, கூகுள் நிறுவனம் இலங்கையைக் கௌரவித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் இலங்கையின் தேசியக் கொடி பறப்பதைப்போல் பதிவு செய்துள்ளது. கூகுளின் குறித்த முகப்பு பக்க மாற்றமானது, இலங்கைக்கு கூகுள் நிறுவனம் கொடுத்த கௌரவமாக பார்க்கப்படுகிறது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 188 views
-
-
வவுனியா அகழ்வாராய்ச்சியில் தொல்பொருட் சின்னங்கள் கண்டுபிடிப்பு வவுனியா – மஹா கச்சக்கொடி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது அநுராதபுரம் யுகத்திற்கான ஆறு தூபி கள் உள்ளிட்ட பல தாதுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது சுமார் 50 ஓலைச்சுவடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களத்தின் முல்லைத்தீவு பிராந்திய பொறுப்பதிகாரி புலஸ்திகம சிரிரத்ன தேரர் குறிப்பிட்டார். மேலும், 10 அடி உயரமான சிலைகளும் 110 க்கும் அதிகமான கற்குகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, வரலாற்று சிறப்புடைய பண்டைக்கால கட்டடங்களும் வவுனியா மஹா கச்சக்கொடி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 311 views
-
-
அரசியலில் குதிக்கிறார் ரவிராஜின் மகள்? படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மகள், பிரவீனா ரவிராஜ் அரசியலில் நுழையவுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்று அவர் அரசியலில் இறங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. விரைவில் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளவுள்ளார். அவருக்கு இளைஞர் விவகாரங்களுடன் தொடர்புடைய பொறுப்பு ஒன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரவீனா ரவிராஜ்…
-
- 0 replies
- 184 views
-
-
சமாதானமும் சுபீட்சமும் பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்டவேண்டும் : சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது; மனிதர்கள் தமது சுதந்திரத்துக்காக மேற்கொண்ட போராட்டங்களினால் மானுட வரலாறு அழகு பெற்றுள்ளது. இலங்கையரான நாமும் அவ்வாறான பெருமைமிகு சுதந்திரப் போராட்ட வரலாற்றுக்கு உரித்தானவர்களே. பல நூற்ற…
-
- 0 replies
- 231 views
-
-
70ஆவது சுதந்திர தினத்திற்கு நாடு மிஞ்சப்போவதில்லை : முன்னாள் ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தியில் ஆரூடம் காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது, ஒற்றையாட்சியை சிதைத்து விட்டு பிளவுபட்ட இலங்கைக்குள் பொலிஸ் அதிகாரத்துடனான தனிப்பிராந்திய ஆட்சிகள் உருவாக்குவதற்காகவா என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 70 ஆவது சுதந்திர தினத்திற்கு நாடு மிஞ்சப்போவதில்லை எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார். 69ஆவது சுதந்திர தினம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 179 views
-
-
வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம் (படங்கள்) வவுனியாவில் சற்று முன் சுதந்திர தின நிகழ்வுகள் நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. ரோஹன புஸ்பகுமரா தலைமையில் ஆரம்பமாகியது. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர். மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலகா, மேலதி அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார், வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் திரு. ம. ஆனந்தராஜ், வவுனியா மாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளர் வாசல, வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் கருணதாசா, நகரசபை செயலாளர் திரு. ஆர். தயாபரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர் ம…
-
- 0 replies
- 248 views
-
-
கறுப்புக் கொடி போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வொன்றும் சரியான முறையில் பெற்றுத்தரப்படவில்லையென கோரி தமிழ் மக்கள் வட கிழக்கில் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருந்தனர். இந்நிலையில் குறித்த கறுப்புக் கொடி போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை, மனிதவுரிமைகள் விவகாரம், ஆக்கிரமிக்கப்பட்ட நில விடுவிப்பு , புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பின்னடைவு என தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு எதிராக குறித்த போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 198 views
-
-
“கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது“ கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளதுடன் சகல மக்கள் மத்தியிலும் இந்த ஆண்டு நல்லிணக்கததைக் கொண்டுவரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றதென எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எமது 69 ஆவது சுதந்தி…
-
- 0 replies
- 153 views
-
-
கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதான செய்தி தாங்கிய புறாக்கள் எஸ்.என். நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியைத் தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. கிளிநொச்சி புகையிரத நிலைய முன்றலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டன. குறித்த புறாக்கள், சுமார் நான்கு மணித்தியாலயங்களில் கொழும்பைச் சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சிறிய துண்டு ஒன்றில் தகவல்கள் எழுதப்பட்டு புறாக்களின் காலில் …
-
- 0 replies
- 202 views
-
-
அமைச்சர் தயாசிறியின் கருத்துக்கு வட மாகாண முதலமைச்சர் பதில் யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களை எப்போது அறிவது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டை ஒன்றிணைப்பதற்கு சிறந்த முறை சமஷ்டி என உலகிலுள்ள அனைவரும் கூறுகின்றனர். எனினும், அது நாட்டைப் பிளவுபடுத்துகின்றது என தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் மாத்திரம் கூறுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தயாசிறி தன்னை விரட்ட வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், யுத்த குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராயவில்லை எனின், ஆட்களை வரவழைத்து அவர்களிடம் என்ன நேர்ந்தது என நாம் ஆராய வேண்டும் என தாம் கூறியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையே தாம்; இனவாதத்தை ஏற்படுத்துவதா…
-
- 0 replies
- 179 views
-
-
சுதந்திர தின ஒத்திகை: கடற்படை அதிகாரி படுகாயம் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஒத்திகையின் போது, கடற்படை அதிகாரியொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெலிகொப்டரில் இருந்து குதித்த பராசூட் வீரரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/190935/ச-தந-த-ர-த-ன-ஒத-த-க-கடற-பட-அத-க-ர-பட-க-யம-#sthash.ZCrGyIG3.dpuf
-
- 2 replies
- 348 views
-
-
‘5 - 10 வருடங்களில் போராட்டம் வெடிக்கும்?’ எஸ்.நிதர்ஸன் ‘யுத்தத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட 12,000 முன்னாள் போராளிகள், புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், தமது குடும்ப சிந்தனையுடன், வாழ்க்கையைக் கொண்டுநத்த கஷ்டப்பட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், அவர்களை மீண்டும் கைது செய்து பிரச்சினை ஏற்படுத்தினால், இன்னும் 5 அல்லது 10 வருடங்களுக்குள், மற்றுமொரு போராட்டம் வெடிக்க வேண்டிய நிலமை ஏற்படும்” என்று, வடமாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம், எச்சரிக்கை விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, “தமி…
-
- 1 reply
- 461 views
-
-
போர்க்குற்ற விசாரணை தேவையற்றது-சந்திரிக்கா போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ள சந்திரிகா குமாரதுங்க, கொழும்பு ஆங்கில நாளி தழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். ‘நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட செயற்பாடு. இப்போது அவசியமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதும், காணாமல் போனோருக்கான பணியகமும் தான். இவை நடைமுறைக்கு வந்த பின்னர், போர்க்குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்களுக்கு தேவை இருக்காது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற ச…
-
- 0 replies
- 237 views
-
-
கர்ப்பிணி பெண் கொலைக்கும் சந்தேகநபர்களுக்கும் தொடர்பில்லை – சட்டத்தரணி விண்ணப்பம் ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண் படுகொலை செய்யபப்ட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு உள்ள இரு சந்தேக நபர்களும் சம்பவம் நடந்த தினத்தன்று சம்பவ இடத்தில் இருக்கவில்லை என சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்து உள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தன் ஊடாக குறித்த வழக்கை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றார். …
-
- 0 replies
- 408 views
-
-
ஆபத்தான நிலையில் ஒருவர் ; 4 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனியிலும் இரவிரவாக இன்று நான்காவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில் ஒருவர் மயக்கமுற்று ஆபத்தான நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது குறித்த தினத்தில் விடுவிக்கப்படவில்லை. இதன்காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடிய…
-
- 3 replies
- 505 views
-
-
அரசியல் அந்தஸ்துடன் வாழ வேண்டுமானால் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமாகின்றது சிறுபான்மை சமூகங்கள் அடுத்த ஆண்டு நாட்டின் 70 ஆவது சுதந்திரத் தினத்தை அரசியல் தீர்வைப் பெற்று சகல சமூகங்களும் நிம்மதியுடனும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழ்நிலையில் கொண்டாட வேண்டும். இன்றைய தினம் (04.02.2017) அரசியல் தீர்வொன்றை எதிர்பார்த்தவர்களாக சிறுபான்மையினத்தவர்களான நாம் 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம், சிறுபான்மையினத்தவர்களின் ஒரே அபிலாஷை சுதந்திர இலங்கையில் நிம்மதியாகவும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம் என்ற உணர்வுடனும் தமது தாய்த் திருநாட்டில் வாழ வேண்டும் என்பதே ஆகும், எனவே சிறுபான்மை ம…
-
- 0 replies
- 421 views
-
-
போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனின் கொடும்பாவி எரிப்பு (படங்கள் இணைப்பு) வவுனியாவில் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள இ.போ.ச. சாலை ஊழியர்கள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப. டெனீஸ்வரனின் கொடும்பாவிக்கு இறுதிக்கிரியை நிகழ்வுகளை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொண்டனர். இதற்கு முன்னதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலகா, ஆகியோர் இ.போ.ச. சாலைக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை சந்தித்து கலந்தரையாடியதுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டேனிஸ்வரனுடனும் கலந்துரையாடி ஒரு சாதகமான முடிவினை பெற்றுத்தருவத…
-
- 0 replies
- 477 views
-
-
புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்தை தடுப்பதற்கு பல சக்திகள் முயற்சி அனைத்து சவால்களிலும் வெற்றிபெறுவோம் என்கிறார் சம்பந்தன் (திருகோணமலைநகர், மூதூர் நிருபர்கள்) புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சியை தடுப்பதற்கு பல சக்திகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அனைத்து சவால்களையும் தடைகளையும் வெற்றிகொள்வோம் என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழில்நுட்ப பிரிவிற்கான அடிக்கல் நாட்டுவைபவம் நேற்றையதினம் அதிபர் எஸ். ஆனந்தசிவம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அடிக்கல்லை நாட்டி உரையாற்ற…
-
- 0 replies
- 191 views
-
-
பத்திரிகை கண்ணோட்டம்
-
- 0 replies
- 282 views
-
-
அதிரடிப்படையினரை கண்டு ஓடியவர்களிடமிருந்து வாள்கள் மீட்பு உரும்பிராய் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் கடமையிலிருந்த, விசேட அதிரடிப்படையினரை கண்டு தப்பித்து ஓடிய நபர்களிடம் இருந்து வாள்கள் மிட்கப்பட்டுள்ளன. யhழ் - உரும்பிராய் பகுதியில் நேற்றிரவு விசேட அதிரடிப்படையினர் கடமையிலிருந்த சமயம் மோட்டார் வண்டி ஒன்றில் இரு வாள்கள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் அவ்வீதியில் விசேட அதிரடிப்படையினரை கண்டதும் தமது மோட்டார் வண்டியை திருப்பி தப்பிச் செல்ல முயன்றனர். இச் செயற்பாட்டால் சந்தேகமுற்ற விசேட அதிரடிப்படையினர் குறித்த இளைஞர்களை பின்தொடர்ந்து சென்றபோது இடையில் குறித்த இ…
-
- 0 replies
- 252 views
-
-
‘பேய் பிடித்த முதலமைச்சர்’ கவிதா சுப்ரமணியம் “நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள சமுதாயத்துக்கு இடையில், இனவாதத்தையும் விரோதத்தையும் தூண்டிவிடும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, இனவாதம் எனும் பேய் பிடித்துள்ளது” என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, தொடர்ந்துரைத்த அவர், “நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள, சி.வி.யின் இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்களுக்காக, வடக்கிலுள்ள தமிழ் மக்கள், அவருக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே, அவர்களால் முன்னேற முட…
-
- 1 reply
- 442 views
-