ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தெளிவான பதில் அளிக்கப்பட வேண்டும் – சம்பந்தன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்களின் கேள்விக்கு நியாயமான பதில் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற வெளிவகார அமைச்சின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , சில மாதங்களுக்கு முன்பு வவுனியா சென்ற போது அந்த அணியை சேர்ந்த பல தாய்மார்கள் , மனைவிமார்கள் என்னை சந்தித்தார்கள் அதனை தொடர்ந்து அந்த விடயத்தை பாராளுமன்ற…
-
- 2 replies
- 343 views
-
-
‘நுகேகொடை பேரணியால் பாதிப்பில்லை’ கவிதா சுப்ரமணியம் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில், அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு அரசியல்வாதியும் கலந்துகொள்ளமாட்டார் என்பதால், இந்தப் பேரணியால், அரசாங்கத்துக்கோ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது” என்று, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில், நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர…
-
- 0 replies
- 246 views
-
-
அரசியல் ரீதியில் நாடு தீர்மானம் மிக்க கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முஸ்லிங்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டும் அரசியல் ரீதியில் நாடு தீர்மானம் மிக்க கட்டத்தை எட்டியுள்ள இந்த நேரத்தில் முஸ்லிங்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார். அரசியலமைப்பு திருத்தம் இடம்பெற்றுவரும் இந்த நிலைமையில் முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதுடன் இந்த நேரத்தில் முஸ்லிங்களின் இராஜதந்திரம்மிக்க தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டுமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் ந…
-
- 0 replies
- 124 views
-
-
உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக ராஜீவ் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்தார் – சீ.ஐ.ஏ உள்நாட்டு அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்தார் என அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ தெரிவித்துள்ளது. சீ.ஐ.ஏவின் இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. 1987ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலை இலக்கு வைத்து, ராஜீவ் காந்தி இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்தார் எனவும் குறிப்பாக இலங்கையின் வட பகுதிக்கு இந்திய ஹெலிகொப்டர் மூலம் உணவு உள்ளட்ட பொருட்களை கொண்டு வந்து வழங்கியிருந்த நடவடிக்கையானது இந்து மக்களை திருப்திபடுத்தி வாக்கு…
-
- 0 replies
- 314 views
-
-
நல்லூர் போராட்டத்தை புகைப்படம் எடுத்த வெளிநாட்டு பிரஜைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிட கோரி வவுனியாவில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை வெளிநாட்டு பிரஜைகள். புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அத்துடன் போராட்டம் தொடர்பில் அவர்களுடன் வழிகாட்டியாக வந்திருந்தவரிடம் கேட்டு அறிந்து கொண்டனர். Tagsஉண்ணாவிரத போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் http://globaltamilnews.net/archives/15303
-
- 0 replies
- 285 views
-
-
'விமலின் கைதில் அரசியல் பின்புலம்' வி.நிரோஷினி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் கைதின் பின்னணியில், அரசியல் காரணமொன்று இருப்பதாக, அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில் தெரிவித்தார். மேலும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கைவிட்டு, சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றுவதிலேயே இந்த அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாகவும், அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “வாக்குறுதிகளுடன் ஆட்…
-
- 0 replies
- 152 views
-
-
தமிழர்களின் ‘தங்கம்’: பதிலளிக்க ‘மந்தம்’ யுத்தத்தின் பின்னர் மீட்டெடுக்கப்பட்ட, தமிழ் மக்களின் தங்கம் தொடர்பிலான கேள்விக்குப் பதிலளிப்பதற்கு இரண்டுவாரகால அவகாசத்தை அரங்சாங்கம் கோரியுள்ளது. நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்றுக்காலை 10.30க்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான வாசுதேவ நாணயக்கார, யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு தங்கம், எங்கேனும் நம்பிக்கைப் பொறுப்பில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதா எனக் கேள்வி கேட்டிருந்தார். இடையீட்டு கேள்விகளாக, “இவ்வைப்…
-
- 0 replies
- 290 views
-
-
யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் பாரிய தீ ( படங்கள் இணைப்பு ) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எம்து செய்தியாளர் தெரிவித்தார். புதிய பெண்கள் விடுதியின் முதலாமாடியில் ஏற்பட்ட தீ பரவியதில் விடுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் விடுதியில் இருக்கும் மாணவிகளை அப்புறப்படுத்தம் நடவடிக்கையில் தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரும் ஈடுபட்டுள்ளனர். மின்னொழுக்கு காரணமாக தீயேற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றபோதிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச…
-
- 2 replies
- 674 views
-
-
ஓரினச்சேர்க்கை யோசனை அமைச்சரவையில் கூறியது யார்? : அமைச்சர் விளக்கம் (ப.பன்னீர் செல்வம், எம்.எம்.மின்ஹாஜ்) அமைச்சரவையில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி கோரி யோசனை முன்வைக்கப்படவில்லை. இப்படி யோசனை முன்வைக்கப்பட்டதாக கூறியது யார்? மனித உரிமை செயற்பாட்டுத் திட்ட அறிக்கையில் பாலியல் நாட்டம் என்ற யோசனையே முன்வைக்கப்பட்டதாக சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மருத்துவ திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் ம…
-
- 0 replies
- 158 views
-
-
வர்த்தக நிலையங்களில் நள்ளிரவில் துணிகரக்கொள்ளை : முல்லைத்தீவில் சம்பவம் முல்லைத்தீவு நகரில் இன்று அதிகாலை இரண்டு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாக உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலும் மாவட்ட செயலகத்துக்கு அண்மையாக உள்ள ஆடையகம் ஒன்றிலும் இந்த கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. இதில் பல்பொருள் அங்காடியில் சுமார் அறுபதாயிரம் ரூபா பணமும் மற்றும் சிகரெட் வகைகளும் களவாடி செல்லப்பட்டுள்ளதோடு ஆடை விற்பனை நிலையத்தில் முன்னூறு ரூபா பணம் மற்றும் ஆடைகள் பலவும் களவாடப்பட்டுள்ளன. குறித்த இரு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்…
-
- 0 replies
- 131 views
-
-
ராஜித கூறியது பொய்; அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஹொரணை வகவத்தை கைத்தொழில் வலயத்திற்கு இறப்பர் தொழிற்சாலைக்காக அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன் தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறினார். அமைச்சர் மலிக் சமரவிக்ரம வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனை கூறியுள்ளார். குறித்த தொழிற்சாலைக்காக ஹொரணை பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் சிறிய தொகை பணத்திற்காக குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது தவறான கருத்து என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் மலிக் சமரவிக்ரம, அரச அளவையாளர்களால் அளவிடப்பட்டுள்ள பெறுமதிக்கு அமைவாக அந்த இடம் 9…
-
- 0 replies
- 158 views
-
-
கடற்படை புலனாய்வுப் பிரிவு முன்னாள் பொறுப்பாளர் கைது செய்யப்பட உள்ளார் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் கைது செய்யப்பட உள்ளார். கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் ரியர் அட்மிரால் ஆனந்த குருகேவை கைது செய்ய உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் ராமஜெயம் ட்ரொஸ்கியிடம் தெரிவித்துள்ளனர். 2009ம் ஆண்டு இரண்டு கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இந்த முன்னாள் கடற்படை அதிகாரி கைது செய்யப்பட உள்ளார். இதே சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்பய்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள லெப்டினன் கமான்டர் தம்மிக்க அனில் மாபாவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ம் திகதி வரையில் …
-
- 0 replies
- 353 views
-
-
இன முரண்பாட்டை ஏற்படுத்தும் செய்தி. பதில் அளிக்க மறுத்த காவல்துறையினர். இன முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமான செய்தி ஒன்றின் உண்மை தன்மையை அறியும் நோக்குடன் சில ஊடகவியலாளர்கள் , யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரை சந்திக்க சென்ற வேளை , தன்னை இப்பொழுது சந்திக்க முடியாது சனிக்கிழமை வந்து சந்தியுங்கள் என கூறி ஊடகவியலாளர்களை சந்திக்காது சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் திருப்பி அனுப்பியுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். அக் கொலை சம்பவத்துடன் முஸ்லீம் இளைஞர் ஒருவருக்கு தொடர்பு உண்டு எனவும் , அந்நபரை காவல்துறை தேடி வருவதாகவும் , அவர…
-
- 0 replies
- 244 views
-
-
வவுனியாவை பிரம்டன் நகருடன் சகோதர நகரமாக்குவது தொடர்பான தகவல்களில் உள்ள தவறுகளால் பிரம்டன் நகர முதல்வர் லிண்டா ஜெப்ரி அவர்கள் மிகவும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளதாக பத்திரிகைகள் சுட்டிக் காட்டியுள்ளன. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரம்டன் நகர மேயரைச் சந்திக்கச் சென்ற அன்று முதல்வர் நகரசபையில் பிரசன்னம் தரமால், விடுமுறை எடுத்துச் சென்றத சம்பவம் இடம்பெற்றிருந்ததோடு, அன்றைய தினம் கவுன்சில் கூட்டமும் இடம்பெறவில்லையென்ற போதும் “அடையாளத்திற்கான ஒரு சம்பிரதாய கூட்டமாக” சிலரைச் சந்தித்து விட்டு முதலமைச்சர் சென்ற நிகழ்வானது இந்த விவகாரத்தை ஏற்கனவே அடையாளம் காட்டியிருந்தது. பிரம்டன் மேயர் தனது வவுனியாவை இணை நகரமாக்குவது தொடர்பான விவகாரத்தில் வீழ்ச்சியைச் ச…
-
- 3 replies
- 566 views
-
-
யாழ். ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞன் ஒருவரை தற்போது பொலிஸார் தேடி வருகின்றனர். முச்சக்கரவண்டியொன்றில் தனித்திருந்த குறித்த பெண்ணின் வீட்டுக்குள் சென்று அவர் மீது குறித்த இளைஞனும் தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. கொலை இடம்பெற்ற போது யாழ். ஐந்து சந்திப்பகுதியைத் தற்காலிக வசிப்பிடமாகவும், புத்தளத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட முஹம்மட் பரீன் (வயது-33) என்பவர் அப்பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பொலிஸார் குறித்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இவர் தலைமறைவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. …
-
- 0 replies
- 474 views
-
-
கொழும்பில் சீனாவின் புதுவருட கொண்டாட்டம் சீனா தனது புதுவருடக் கொண்டாட்டத்தை அடுத்த மாதம் இலங்கையில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. வசந்த திருவிழா என்ற ழைக்கப்படும் சீனப் புதுவருடவிழா சீனா்களுக்கு மிக முக்கியமானதொரு கொண்டாட்டமாகும். இலங்கை- சீன நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் 60வருட கால நிறைவைக் காண்பது, இந்த வருடத்தின் முக்கிய நிகழ்வாகும். அதேபோல றபர்-அரிசி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திட்டு 65வருடங்கள் நிறைவு பெறுகின்றன.. பல இசை நிகழ்வுகள், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள் , திரைப்பட விழா போன்றன சீன அதிகாரிகளால் ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளன. பெப்ரவரி6ந் திகதி இடம்பெறு…
-
- 1 reply
- 319 views
-
-
நல்லூர் ஆலய சூழலில் அடையாள உண்ணாவிரத போராட்டம் வவுனியாவில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழில் இன்றைய தினம் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடுமாறு கோரி வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நான்காவது நாளாக இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் நல்லூர் ஆலய சூழலில் அடையாள உண்ணாவிரத போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னேடுக்கப்ப…
-
- 4 replies
- 439 views
-
-
மருதங்கேணியில் சுழல்காற்று -கே.மகா மருதங்கேணி, கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட சுழல்காற்றினால், கடற்கரையில் நின்ற படகுகள் தூக்கி வீசப்பட்டு சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, இப்பகுதியில் உள்ள திருமண மண்டமும் சேதமாகியுள்ளதாக வடமராட்சி, கட்டைக்காடு, கடற்தொழிலாளர் சங்க தலைவர் ஜேம்ஸ் கிறிஸ்துராஜா தெரிவித்துள்ளார். இதேபோன்று, முல்லைத்தீவு கடற்பகுதியில், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/190458/மர-தங-க-ண-ய-ல-ச-…
-
- 0 replies
- 275 views
-
-
நல்லாட்சியின் திட்டங்களை மகிந்த காலத்து அதிகாரிகள் குழப்புகின்றனர்-யாழில் அமைச்சர் மங்கள நல்லாட்சி அரசாங்கம் பழைய அரசுடன் போராட வேண்டி உள்ளது. நல்லாட்சி அரசாங்கம் புதிய திட்டங்களை கொண்டுவந்தாலும் பழைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அதனை முறியடிக்கின்றனர். எத்தடை வரினும் எமது திட்ட்ங்களை நிறை வேற்றுவோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகத்தினை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் தனதுரையில் மேலும் தெரி விக்கையில் வெளிநாட்டு வெளிவிவகார கொன்சில…
-
- 0 replies
- 275 views
-
-
நல்லாட்சி அரசிற்கு வழங்கும் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் ; அனந்தி சசிதரன் நல்லாட்சி அரசானது தமிழ் மக்கள் எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றாது தொடர்நதும் இழுத்தடித்து ஏமாற்றி வருவதால் நல்லாட்சி அரசிற்கு வழங்கி வருகின்ற ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகவியிலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சனைகள் குறித்துப் பேசுவார்கள் தங்கள் ப…
-
- 0 replies
- 287 views
-
-
பலத்த பாதுகாப்புடன் ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேக நபர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாலின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். ஊர்காவற்துறை கரம்பெண் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் ஏழு மாத கர்ப்பிணி பெண் நேற்று செவ்வாய்க்கிழமை கொள்ளையர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டு இருந்தார். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் சுழிபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவரை மண்டைதீவு சந்தியில் வைத்து கைது செய்திருந்தனர். …
-
- 0 replies
- 429 views
-
-
உலக டிஜிட்டல் மாநாடு இலங்கையில் :கூகுள், பேஸ்புக் தலைவர்கள் பங்கேற்பர் உலகின் முன்னணி நிறுவனங்கள் பங்கு பற்றும் டிஜிட்டல் மாநாட்டை இவ் வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மாநாடானது எதிர்வரும் மார்ச் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக , தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மாநாட்டில் கூகுள், பேஸ்புக் , சோசல் கெப்பிட்டல் மற்றும் இன்பொயிஸ் முதலான உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் பங்கு பற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள்…
-
- 0 replies
- 507 views
-
-
காணாமல் போனோர் தொடர்பில் விபரங்களை திரட்ட மனித உரிமை செயலகத்தில் அணி திரண்ட இளைஞர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக 40ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இலங்கை மனித உரிமை செயலகத்தில் அணி திரண்டுள்ளனர். குறித்த இளைஞர்கள் மனித உரிமை செயலக அதிகாரிகளிடம் காணாமல் போனோர் தொடர்பில் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தமது உறவுகள் காணாமற் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் விசாரணைகள் தற்போது எந்த கட்டத்தில் உள்ளது தொடர்பாகவும், கடந்த 8 வருடங்களாக மக்களுக்கான பதில் வழங்கப்படாமைக்கான காரணம், மற்றும் வவுனியாவில் காணாமற் போனோரின் விபரங்களையும் கேட்டறிந்துள்ளனர். காணாமற் போனோரின் விபரங்கள் தங்…
-
- 0 replies
- 360 views
-
-
இந்திய குடியரசு தின விழா... யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதகரத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 68 ஆவதுகுடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (26) கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதகரத்தில் கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி இந்நிகழ்வில் கலந்துகொண்டார். சிவபூமி இல்லம், வட்டுக் கோட்டை இந்துக்கல்லூரி, கைதடி நவீல்ட் இல்லம், தேவிபுரம் இனிய வாழ்வு இல்லம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவிகளின் கலை நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன. (படங்கள்: எம்.றொசாந்த்…
-
- 0 replies
- 482 views
-
-
புத்திர சோகத்தில் ஈழம்: அரசென்ன? நாமே கண்டுகொள்ளாதிருக்கிறோம்! – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழத்தை இன்றுவரை வாட்டிக்கொண்டிருக்கிற விடயம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் கண்ணீர். தீர்வு கிடைக்கும் வரை வாட்டுகிற விடயமாகவே இது இருக்கும். போர் முடிந்து எட்டு ஆண்டுகளை அண்மிக்கும் காலத்திலும் இறுதிப் போர்க்காலத்திலும் அதற்கு முன்பாகவும் காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என்று பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் கதி என்னவென்று அறிய முடியாமல் இருக்கிறது. மிக மர்மமும் மிகக் கொடூரமான மனித உரிமை சார்ந்த விடயமாகவும் இன ஒடுக்குமுறையின் பாற்பட்ட விடயம…
-
- 0 replies
- 313 views
-