ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143392 topics in this forum
-
திருகோணமலை துறைமுக அபிவிருத்தி பணிகளை இந்தியாவிடம் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி நிலையை அடைந்திருப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் சம அளவிலான உறவைப் பேணும் வகையில் இத்துறைமுகத்தை இலங்கை பயன்படுத்தி வந்தது. அதேவேளை சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கைக்கு சிறிய இலாபத்தை கூட பெற்றுத் தரவில்லை, இதனால் நாட்டிற்கு பாரிய கடன்சுமையே ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே அந்த…
-
- 1 reply
- 365 views
-
-
வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான செயற்திட்டங்கள் தொடர்பில் கனேடிய சர்வதேச முகவர் அமைப்புடன் (சீடா) வடக்கு சுகாதார அமைச்சர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி தொடர்பான சர்வதேச கருந்தரங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு கனடா சென்றுள்ள அமைச்சர் சத்தியலிங்கம் தலைமையிலான குழு நேற்று (18) கனேடிய சர்வதேச முகவர் அமைப்பினரை சந்தித்துள்ளனர். மேலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் குளோறியா விஸ்மன் தலைமையிலான பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திறன்விருத்…
-
- 0 replies
- 355 views
-
-
வடமாகாணத்தில் மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை காட்டும் ஒரு சில நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கின்றது. அதனை விட மற்றைய பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை எங்களின் விருப்பத்தை அறியாமல் எங்கள் மீது திணிப்பதாகவே இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசனிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நெடுந்தீவுக்கான போக்குவரத்து படகு நெடுந்தாரகை நாளைய(20) வெள்ளோட்டம் விடப்படவுள்ள நிலையில் அந்த நிகழ்வு நடைபெற்வுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக யாழ் சென்றிருந்த அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசன் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த…
-
- 2 replies
- 411 views
-
-
கொள்ளுப்பிட்டியில் மல்லுக்கட்டு... பல்கலைக்கழக மாணவர்களால் கொள்ளுப்பிட்டியில், இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு பொலிஸார் கலைப்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ) - See more at: http://www.tamilmirror.lk/190016/க-ள-ள-ப-ப-ட-ட-ய-ல-மல-ல-க-கட-ட-#sthash.L5UzYHOs.dpuf
-
- 2 replies
- 417 views
-
-
'அரசாங்கத்துக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை' -எம்.றொசாந்த் “யாழில் உள்ள குளங்களை புனரமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக நல்லாட்சி அரசிடம் கோரிக்கை விடுத்த போதும், நல்லாட்சி அரசு அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை” என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழில் உள்ள குளங்களை புனரமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக நல்லாட்சி அரசிடம் கோரிக…
-
- 0 replies
- 317 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியை சூட்சுமமான முறையில் லண்டனுக்கு அனுப்ப முயற்சித்த வழக்கை 25ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன், சந்தேகநபர்களின் பிணைமனு குறித்து 25ஆம் திகதி அறிவிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் விடுதலைப்புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பி ஒன்றை நாரஹேன்பிட்டியிலுள்ள விரைவு அஞ்சல் (கொரியர்) நிறுவனத்தினூடாக லண்டனுக்கு அனுப்ப முயற்சித்த குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவர் சார்பிலும், பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பிணை மனு தொடர்பிலான நிலைப்பாட்டை இம்மாதம் 25ஆம் திகதி அறிவிக்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு …
-
- 0 replies
- 263 views
-
-
'அதிகாரிகளுக்கு நல்லிணக்கம் இல்லை' -செல்வநாயகம் கபிலன் “கீரிமலையில் பகுதியில் மீள்குடியேற்றம் செய்துவைக்கப்பட்ட நல்லிணக்கபுரம் பகுதி மக்களுக்கு இதுவரை காணி உறுதிகள் வழங்கி வைக்கப்படவில்லை” என மீள்குடியேறிய மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன், இராணுவத்தின் மனிதவலுவுடனும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் காணப்பட்ட அரச காணியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் 100 குடும்பங்களுக்கு காணியுடன் வீடு வழங்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி, கடந்த வருடம் விஜயம் செய்த போது வீடுகளை பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார். ஆனால், மீள்குடியேற்றம் செய்து…
-
- 0 replies
- 220 views
-
-
சிலர் யுத்தம் செய்தபோது பலர் இங்கிருந்து படுகொலை செய்தனர் - இதுவே உண்மை நிலையாகும் என்கிறது அரசாங்கம் இறுதிக்கட்டப் போரில் இராணுவம் படுகொலைகளில் ஈடுபட்டிருந்தால் அதற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். படுகொலைகளை நியாயப்படுத்தவோ ஆள்கடத்தல்களை அங்கீகரிப்பதோ நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையில்லை. சிலர் போர் செய்யும் போது பலர் இங்கிருந்து படுகொலை செய்தனர். இதுவே உண்மை நிலையாகும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாட்டை பிளவுப்படுத்தும் நிபந்தனைகளுக்கு அடிப்பணிந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வில்லை. பிரிவினைவா…
-
- 0 replies
- 366 views
-
-
யாழ் தேவி ரயில் மீது கல்வீச்சு -செல்வநாயகம் கபிலன் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மீது, கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். மல்லாகம் ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து இத் தாக்குதல் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் ரயிலின் முன்கண்ணாடி சேதமைந்துள்ளதுடன் ரயில் சாரதியான டி.எம்.தர்மசேன (வயது 47) காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் கூறினர். - See more at: http://www.tamilmirror.lk/189981/ய-ழ-த-வ-ரய-ல-ம-த-…
-
- 0 replies
- 431 views
-
-
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் இந்தக் குழு இயங்கவுள்ளது. வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டு திட்டமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளதாகவும் இது குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி குழுவினை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவினால் பரிந்துரைகள் குறித்து விரிவாக ஆராயப்பட உள்ளது.இந்த செயற் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் எவற்றை அமுல்படுத்த முடியும், எவற்றை அ…
-
- 1 reply
- 377 views
-
-
சமஷ்டி என்ற பேச்சிற்கே இடமில்லை- சுதந்திரக்கட்சி மீளவும் தெரிவிப்பு சமஸ்டி மூலமாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்ற அழுத்தத்தை பிரயோகித்து அல்லது சர்வதேச தூண்டுதலை ஏற்படுத்தி அதனூடாக எவரேனும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அந்த பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும் இணங்கப்போவதி ல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. சமஸ்டி தீர்வு தொடர்பில் பேசவும் வேண்டாம் என்று குறிப்பிட்ட விசேட வேலைத்திட்ட அமைச்சரும், முன்னாள் மனித உரிமைகள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, சர்வசன வாக்கெடுப்பு இல்லாது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றி தீர்வுக்கான பயணத்தை முன்னெடுக்க முடியும் எனவும் கூறினார். …
-
- 0 replies
- 254 views
-
-
யாழ் - வல்வெட்டித்துறையின் முன்னாள் நகர சபைத் தலைவர் வல்வை ந. அனந்தராஜ் எழுதிய 'வல்வையின் முதுசொம்' தமிழர்களின் வரலாற்று ஆவண நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை (20) பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் த. ஜெயசீலன் தலைமையில் நடைபெற்வுள்ளது. இந்த நூலை பிரதேச செயலர் த.ஜெயசீலன் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் ஓய்வு நிலை உபஅதிபர் கலைப்பரிதி சிவா.கிருஷ்ணா மூர்த்தி பெற்றுக் கொள்ளவுள்ளார். அத்துடன், நூல் வெளியீட்டுரையை எழுத்தாளர் ந. சீவரத்தினமும், நூலின் நயப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர…
-
- 0 replies
- 387 views
-
-
புதிதாக அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது – ஆனந்தசங்கரி:- புதிதாக அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை ஒரு போதும் அழைக்கவில்லை எனவும், அவரை சந்திக்க கிடைத்த போது புதிய அரசியல் சாசனம் அவசியமில்லை என தாம் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய நிலையில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காது எனக் குறிப்பிட்டுள்ள அவர், பிரச்சினைகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்…
-
- 0 replies
- 269 views
-
-
கிளிநொச்சியில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுவதாக குற்றச்சாட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிா்ப்புத் தொிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பொருத்து வீட்டுக்கு விருப்பம் தெரிவிக்கின்றவா்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் கிளி நொச்சி மாவட்டத்தில் காணியற்றவா்கள், ஒரு அங்கத்தவா் குடும்பங்கள், காணி கிளிநொச்சியில் இருந்தும் நிரந்தரமாக …
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கை ஐக்கிய குடியரசு என பிரகடனம் செய்யப்பட வேண்டும் வழிநடத்தல் குழுவுக்கு முன்மொழிய நான்கு அரசியல் தரப்புக்கள் தயாராகின்றன (ஆர்.ராம்) இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசு என்பது இலங்கை ஐக் கிய குடியரசு என பிரகடனம் செய்யப்பட வேண்டும். நிறைவேற்று அதிகார முறைமையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டாலும் நாட் டின் தலைவர் மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி ஆவார். ஜனாதிபதி சார்ந்திருக்காத ஏனைய மூன்று இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூவர் துணை ஜனாதிபதிகளாக நியமிக்கப்படவேண்டும் என்பது உட்பட முக்கிய பரிந்துரைகள் இலங்கை ... அடங்கிய வரைபை புதிய அரசியலமைப்பை…
-
- 0 replies
- 244 views
-
-
வீதியில் அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியதால் கொழும்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரியை பொலிஸ் கூண்டில் 12 மணித்தியாலங்கள் அடைத்து வைத்த பொலிஸார் 2017-01-19 09:05:55 (எம்.எப்.எம்.பஸீர்) தனது அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறிய கொழும்பு பிரதேசத்தின் பொலிஸ் நிலையம் ஒன்றின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஒருவரை சுமார் 12 மணி நேரம் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிய முடிவதாவது, கடந்த திங்களன்று இரவு பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பொலிஸ்குழுவொன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்…
-
- 1 reply
- 225 views
-
-
-
- 0 replies
- 370 views
-
-
சந்திப்பு சுவிற்ஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்மை இன்று (19) சந்தித்தார். - See more at: http://www.tamilmirror.lk/189979/சந-த-ப-ப-#sthash.VnsTyZLk.dpuf சந்திப்பு 19-01-2017 01:51 PM Comments - 0 Views - 25 சுவிற்ஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும், நிர்வாக தலைவருமான கிளவ்ஸ் ஷ்வாப்பை இன்று (1…
-
- 0 replies
- 335 views
-
-
மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு ( ஆர்.வி.கே.) யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வுசெய்தனர். அத்துடன் இந்த மைதான நிர்மாணப்பணிகள் இவ்வருடம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ ஒரு நாடு ஒரு அணி “ எனும் பொதுவான இலக்கின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் கிரிக்கெட் அரங்கு எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மா…
-
- 3 replies
- 721 views
-
-
யாழிலும் மாலபே கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் யாழ். மருத்துவ பீட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக கூடிய மாணவர்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேவேளை, கையெழுத்துக்களையும் சேகரித்து வருகின்றனர். தனியார் மருத்துவ கல்லூரிகள் குறித்து அரசாங்கத்திற்கு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு உரிய தீர்வு கிடைக்காத ந…
-
- 1 reply
- 418 views
-
-
சிறுபான்மை மக்களுக்கு அநீதி தேர்தலுக்கு அவசரம் வேண்டாம் எல்லை நிர்ணயக்குழு அறிக்கை தொடர்பில் மு.கா. த.மு.கூ., ஈ.பி.டி.பி., ந.ம.இ. கூட்டாக வேண்டுகோள் (ஆர்.ராம்) எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சரிடத்தில் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக வர்த்தமானி பிரசுரத்தை வெளியிட்டு புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடானது சிறுபான்மை இனத்தவருக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். அத்துடன், சிறு மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்ற வகையில் முன்னெடுக்கப்படும் ஜன…
-
- 0 replies
- 187 views
-
-
உண்ணாவிரதம் இருக்க போவதாக வெளியான செய்தி பொய் என்கிறார் அனந்தி சசிதரன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகின்றேன் என சில இணைய தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான பதிலை வழங்காது விடின் அனந்தி சசிதரன் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் , எதிர்வரும் 21ம் திகதி அவர் தனது போராட்டத்தை ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்து உள்ளதாக சில இனையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, தான் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக எந்த ஊடகங்களுக்கும் தெரிவிக்கவில்லை எனவும் அந்த செய்தியில் உண்மை இல்லை எனவும் தெரி…
-
- 0 replies
- 351 views
-
-
ஆட்சி மாற்றத்தின் பின்னரான இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து சுவிஸ் பாராட்டு இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஏற்படுத்தப்பட்ட சாதகமான படிமுறைகளை சுவிட்ஸர்லாந்து வரவேற்று ள்ளது. ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதி பூபிஸ் லொய்ட்காட் தெரிவித்துள்ளார். டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற சந்திப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இந்த கருத்துக்களைக் கூறியுள்ளார். இதுவரை இலங்கைக்கு சுவிட்ஸர்லாந்து வழங்கிய உதவிகளுக்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின், ம…
-
- 0 replies
- 240 views
-
-
திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து விரைவில் முடிவு: அமைச்சர் சரத் பொன்சேகா திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. டெல்லி சென்றிருக்கும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, அங்கு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். திருகோணமலை துறைமுகம் விரைவில் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். “ஆழ்கடல் துறைமுகங்களில் திருணோகமலை துறைமுகம் முக்கியமான ஒன்று. அதை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் சம அளவிலான உறவைப் பேண…
-
- 0 replies
- 311 views
-
-
பாழடைந்த காணிக்குள் புதைக்கப்பட்டிருக்கும் மர்மபொருள் : மட்டுவில் மக்கள் பரபரப்பு மட்டக்களப்பு பாரதி லேன் 4 ஆம் வீதியில் அமைந்நது பாழடைந்த தனியார் காணியொன்றில் மர்மமான பொருள் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காணியானது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் டெங்கு உருவாகும் வகையிலும் மாசடைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் இந்த காணி உரிமையாளர்கள் எந்தவித கவனம் செலுத்தாமல் உள்ளமையால் இந்த மர்ம புதையல் தொடர்பாக சுகாதார பரிசோதகர் கவனத்துக்கு மக்கள் கொண்டுச் சென்றுள்ளனர். குறித்த காணியில் புதைக்கப்பட்டுள்ள மர்மபொருள்ள என்ன என்று தெரியாத நிலையில் மக்கள் அங்கு கூடி நின்றுள்ளதோடு …
-
- 0 replies
- 249 views
-