ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
விக்னேஸ்வரனை வரவேற்பதிலும் சந்திப்பதிலும் நான் பெருமையடகின்றேன் - ஒன்ராறியோ முதல்வர் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை வரவேற்றதிலும் சந்தித்ததிலும் தான் பெருமையடைவதாக ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வெயின் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வெயினை சந்தித்தார். இந்த இருதரப்புகளுக்கிடையான சந்திப்பு, இரு தரப்பு அரச தலைவர்களுக்கும் முதல் தடவையாக அமைந்ததுடன், ஒன்ராறியோ - வட மாகாணங்களுக்கிடையான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை, கத்தலின் தனது அலுவலகத்தில் வரவேற…
-
- 0 replies
- 200 views
-
-
அரசாங்கம் தனது அர்ப்பணிப்பை காட்ட வேண்டும் என நினைத்தால் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் தமது உறவுகள் காணாமல் போனார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பதை தெரிந்துகொள்ள ஏங்கும் ஆயிரம் கணக்கான குடும்பங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டும் என விரும்புகின்றார்கள். எனவே அரசாங்கம் தனது அர்ப்பணிப்பை காட்ட வேண்டும் என நினைத்தால், நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் நடவடிக்கைகள் நாட்டில் நிலையான நீதியை நிலைநாட்ட முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. எனவே அரசாங்கம் சர்…
-
- 0 replies
- 280 views
-
-
அனுராதபுர சிறைசாலையில் அவஸ்தைபடும் அரசியல்கைதி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அனுராதபுர விமானபடை தாக்குதல் வழக்கு தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத சட்டத்தின்கீழ் அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரை சிறைக்குள்ளே சிறைவைத்து இம்சைபடுத்துவதாக தெரிவிக்கபடுகிறது. கடந்த 2009 ஆண்டு பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ராசவல்லவன் என்பவருக்கு எதிராக கடந்த 2008 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனுராதபுர விமானபடை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புள்ளதாக தெரிவித்து அனுராதபுர விசேட மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருக்கின்றது. இந்தநிலையில் குறித்த அரசியல் கைதி சிறையில் இருந்து தப்பிச்செல்ல திட்டம் இ…
-
- 1 reply
- 305 views
-
-
முல்லைத்தீவில் மீனவர் உடைமைகளுக்கு சேதம்; மீன்பிடிப்படகு எரியூட்டப்பட்டுள்ளது முல்லைத்தீவு, தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் மீனவர்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் சேதமாக்கப்பட்டு மீன்பிடிப்படகு ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்புக்குளத்தில் இரண்டு மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் வெலிஓயா பகுதியில் இருந்து வரும் நபர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளூர் மீனவர்களின் உடைமைகளை சேதப்படுத்தி, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு வெலிஓயா பகுதி மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்…
-
- 0 replies
- 384 views
-
-
யாழில் அனர்த்த ஆபத்தை தடுக்க 10 விட்டங்கள் முன்மொழிவு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 3 ஆண்டுகளில் அனர்த்த ஆபத்துக்களை தடுப்பதற்காக 426 மில்லியன் ரூபா செலவில் நடை முறைப்படுத்துவதற்கு 10 திட்டங்கள் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வருட திட்டங்களுக்காக 181 மில்லியன் ரூபாவுக்கானதும், 2018 ஆம் ஆண்டின் திட்டங்களுக்காக 145 மில்லி யன் ரூபாவுக்கானதும், 2019 ஆம் ஆண்டு 100 மில்லியன் ரூபாவுக்கானதுமான திட்டங்களே அடையாளப்படுத்தப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி 3 வருடங்களுக்கும் நெடுந்தீவு பிரதேச செயலகர் பிரிவில் உள்ள குள திருத்தத்திற்காக 20 மில்லியன் ரூபாவும், …
-
- 0 replies
- 231 views
-
-
சவுதியில் சம்பளம் கிடைக்காத பூநகரி பெண்ணுக்கு சம்பளம் வழங்கி வைப்பு சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஒரு வருடமாக சம்பளம் வழங்கப்படாமல் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த பெண்ணொருவருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்தப்பட வேண்டிய பணத்தை வழங்கியு ள்ளது. கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை ஜெக்லின் என்ற பெண்ணுக்கே இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெண் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் முதலாம் ஆண்டில் சம்பளம் வழங்கியுள்ளதுடன் இரண்டாம் ஆண்டில் இரு ந்து சம்பளம் வழங்கவில்லை என வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ரியாத்தில் உள்ள இலங்கை தூ…
-
- 0 replies
- 311 views
-
-
கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதி நியமனம் -ஜே.ஏ.ஜோர்ஜ் கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அஜீத் காரியகரவன்ன, நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன, தெரிவித்தார். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக இதுவரை செயற்பட்டு வந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, பட்டலந்த பயிற்சி முகாமின் புதிய கட்டளைத் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க, 2015.10.18 ஆம் திகதியுடன் அங்கிருந்த மாற்றப்பட்டு மேஜர் ஜெனரல் அமல் கரு…
-
- 0 replies
- 286 views
-
-
வடமாகாண சபையில் நேற்று இடம் பெற்ற விவாதத்தின் போது வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான தவராசா வட மாகாண சபையில் செயற்பாடுகள் குறித்து தனது எதிர்ப்பு கருத்தினை வெளியிட்டார். வடமாகாண சபை தனது அதிகாரங்களை முறையாக பயன்படுத்துவதில்லை, வெறும் பிரேரனைகள் கொண்டு ஆக்க பூர்வமான செயற்பாடுகளை செய்வதற்கு வட மாகாண தொழிற்பட வேண்டும் எனவும் தவராசா விவாதித்தார். http://www.tamilwin.com/politics/01/131483?ref=home
-
- 0 replies
- 351 views
-
-
இலங்கையின் உள்ளூர் நீதி அமைப்புகளின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதனை அண்மையில் ரவிராஜ் கொலை வழக்கில் இடம்பெற்றதினை வைத்து பார்க்கலாம் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரித்து வரும் நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழு கடந்த ஜனவரி மாதம் பல முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கி ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. இதனை வரவேற்ற உலகத் தமிழர் பேரவை, இப்பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடமாக இலங்கை முழுவதும் கலந்தாய்வு மேற்கொண்ட 11 உறுப்பினர்கள் அடங்கிய நல்லிணக்க ஆலோசனைக்கா…
-
- 0 replies
- 184 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் வைத்து குறித்த அமைச்சரை கோத்தபாய சந்தித்துள்ளார். கோத்தபாய தனக்கு சொந்தமான காரில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த இரகசிய சந்திப்பு கிட்டதட்ட ஒரு மணித்தியாலம் வரை நீடித்துள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அங்கு கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகாத போதிலும் அமைச்சர் ஊடாக அரசாங்கத்தின் பிரதானி ஒருவருக்கு கோத்தபாய ராஜபக்ச தகவல் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக உள்ள வெலிக்கடை கொலை …
-
- 0 replies
- 279 views
-
-
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது அப்பகுதியில் அத்துமீறி விகாரை அமைத்திருக்கும் பௌத்த பிக்குகள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்னையாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை நிறுத்துவதற்கான தடை உத்தரவை நீதிமன்றத்தின் ஊடாக மகாவலி அபிவிருத்தி சபை பிறப்பித்துள்ள போதும், குறித்த பகுதியில் இன்னும் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரை ஒன்றும், அதனை சுற்றி சில சிங்கள குடியேற்றங்களும் காணப்படுவதாக பண்னையாளர்கள் கூறியுள்ளனர். குறித்த பகுதியில் இன்று மாடு மேய்த்துக்கொண்…
-
- 6 replies
- 872 views
-
-
நெடுந்தீவில் விசேட வைத்திய நிபுணர்களின் மருத்துவ முகாம் யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள் 40 பேர் கொண்ட குழுவினர் இணைந்து இன்று 12.01.17 நெடுந்தீவில் விசேட மருத்துவ முகாம் ஒன்றை நடாத்தினர். இதில் 555 பேர் பயன் பெற்றனர். நெடுந்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து தொலைவில் இருக்கும் ஒரு பிரதேசம். இங்கு மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. நெடுந்தீவு பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் வேண்டுகோளை அடுத்து பல்வேறு வைத்திய நிபுணர்கள் இவ் வைத்திய முகாமில் கலந்து கொண்டனர். காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை…
-
- 0 replies
- 430 views
-
-
வலி.வடக்கு ஊறணி பிரதேசம் தைப்பொங்கலன்று உரிமையாளர்களிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளது வலி. வடக்கு ஊறணி பிரதேசம் தைப்பொங்கலன்று உரிமையாளர்களிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்றையதினம் அறிவித்துள்ளார். கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்களின் நலன் கருதியும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாகவும், ஊறணி கடற்கரைப்பகுதி எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் செல்வதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் இராணுவத்தினராலோ அல்லது கடற்படையினராலோ விதிக்கப்பட…
-
- 0 replies
- 543 views
-
-
வெள்ளி கிரகத்தை இன்று தெளிவாக பார்க்க முடியும்.! இலங்கையில் வெள்ளிக் கிரகத்தை இன்று தெளிவாக பார்க்க முடியும் என ஆர்த்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று மாலை 6.30 இல் இருந்து இரவு 9 மணி வரையில் இதனை மேற்கு வானில் தெளிவாக பார்க்க முடியும். http://www.virakesari.lk/article/15380
-
- 0 replies
- 281 views
-
-
இராணுவ வாகனம் இளைஞன் மீதும் பொலிஸ் வாகனம் தாதி மீதும் மோதல் : வவுனியாவில் சம்பவம் வேகமாகச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று இளைஞர் ஒருவர் மீதும், பொலிஸ் வாகனம் தாதி ஒருவர் மீதும் மோதிய சம்பவம் வவுனியாவில் இருவேறு பகுதிகளில் பதிவாகியுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக இன்று (12) பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள கராஜ் ஒன்றில் பணிபுரியும் 25 வயதுடைய நிம்புஜோர்ஜ் என்றஇளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். …
-
- 0 replies
- 254 views
-
-
-
- 0 replies
- 502 views
-
-
வெளிநாடுகளுக்கு 10301 ஏக்கர் காணிகளை வழங்கிய மஹிந்த இன்று கூச்சலிடுகிறார் லசந்த கொலை வழக்கு விசாரணையில் திருப்தியில்லை என்கிறார் ராஜித (ரொபட் அன்டனி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சியின்போது வெளிநாடுகளுக்கு 10301 ஏக்கர் காணிகளை வழங்கியுள்ளார். அவற்றில் விற்பனை செய்யப்பட்ட காணிகளும் உள்ளன. அவ்வாறு செய்தவர் இன்று அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு எதிராக கூச்சலிடுகின்றார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். லசந்த படுகொலை தொடர்பான விசாரணைகள் திருப்திகரமாக இல்லை என்ற குற்றச்சாட்டை நானும் முன்வைக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 176 views
-
-
வவுனியாவில் 10ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்க விண்ணப்பபடிவம் விநியோகம் வவுனியா மாவட்டத்தில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை வழங்குவதற்கு கிராமசேவையாளர்களூடாக விண்ணப்பப்படிவம் விநி யோகிக்கப்பட்டு வருகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சினால் இவ்விண்ண ப்பப்படிவங்களின் விநியோகம் அரசாங்க அதிபரின் சிபாரிசுக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றது. கிராமசேவையாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர், கிராமசேவையாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. …
-
- 0 replies
- 531 views
-
-
விமல் கைதானார்.! முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டார். http://www.virakesari.lk/article/15286
-
- 5 replies
- 967 views
-
-
ரவிராஜ் தீர்ப்பை இரத்து செய்ய சட்டமா அதிபர் கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்து விட்டு, வழக்கு விசாரணைகளை மீண்டும் நடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அறங்கூறனர் சபையின் முன் வழக்கை விசாரித்த விசேட மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கு சம்பந்தமான சட்டரீதியான விடயங்களை போதுமான வகையில் தெளிவுப்படுத்தவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கூறியுள்ளார். அத்துடன் வழக்கு விசாரணைகளை நள்ளிரவு வரை நடத…
-
- 1 reply
- 332 views
-
-
இனவாதத்தை தூண்டாமலிருப்பது கடினமாயின் கடலில் குதியுங்கள் இனவாதிகளை வலுப்படுத்திய காலம் மறைந்துவிட்டது என்கிறார் மனோ (க.கமலநாதன்) தமிழ், சிங்கள, முஸ்லிம் என இனவாதிகள் எவ ராக இருப்பினும் அவர்களை அரசாங்கம் கண்டுகொள்ளாது, அவர்களை வலுப்படுத்திய காலம் மறைந்து போய்விட்டது. எனவே, இனவாதிகள் நாட்டை சீரழிக்க இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இனவாதம் பேசி நாட்டை சீரழிக்காமல் இருப்பது தமக்கு கடினம் என்று நினைப்பவர்கள் கடலில் சென்று குதியுங்கள் என தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராச்சி மத்திய நிலையத்தின் கே…
-
- 0 replies
- 324 views
-
-
பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக சோளம் பயிரிட்டு பசுக்களுக்கு உணவாக்கிய தேரர் (எம். செல்வராஜா பதுளைநிருபர்) பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக புண்ணியம் தேடும் வகையில் அரை ஏக்கரில் முழுமையாக பயிரிட்ட சோளப் பயிர் முழுவதையும் பசுக்களுக்கு உணவாகக்கொடுத்து தேரர் ஒருவர் தானம் செய்துள் ளார். மெதகமை, கொட்டபோவதேவஹிரி விகாரையின் விகாராதிபதியான பியரட்ன தேரரே தனது பெற்றோரின் ஆத்மசாந்திக்காக இவ்வாறு தானம் செய்துள்ளார். இத் தேரர் அரை ஏக்கர் காணியில் தாமே நிலத்தை சீர்ப்படுத்தி சோளப் பயிர் செய்து அதில் விளைந்தவற்றை பசுக்கள் உண்பதற்கு வாய்ப் பளித்தார். …
-
- 0 replies
- 331 views
-
-
'மீண்டும் ஜனாதிபதியானால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் ?' : பதிலளித்தார் மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைத்தால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, நாட்டை யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்ற சரியானதை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கேள்வி உங்களுடைய தம்பி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவ…
-
- 1 reply
- 396 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் 2020இல் இல்லை -ஜே.ஏ.ஜோர்ஜ், ப.பிறின்சியா டிக்சி “புதிய அரசியலமைப்பின் ஊடாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, ஜனாதிபதித் தேர்தல் 2020ஆம் ஆண்டு நடைபெறாது” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோது, அதில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “நிறைவேற்று அதிகாரம்…
-
- 1 reply
- 625 views
-
-
தனித்தே ஐ.தே.க. களமிறங்கும் (எம்.எம்.மின்ஹாஜ்) அடுத்த தேர்த லின் போது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்தே போட்டியிடும். எனினும் தேசிய அரசாங்க கொள்கையில் மாற்றம் ஏற்படாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கம்பஹாவில் விசேட சந்தை கட்டடத்தொகுதியை நேற்று முன் தினம் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில், இலங்கையின் பொருளாதாரம் யுத்தத்தினால் ஒருபுறம் வீழ்ச்சி அடையும் போது மறுபுறம் எல்லை மீறிய கடன் பெற்றதனா…
-
- 0 replies
- 318 views
-