ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் இளைஞர் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு கல்வியங்காடு விளையாட்டு அரங்க வீதியில் இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிசென்று உள்ளனர். கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள புலவனார் வீதியால் குறித்த இளைஞர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு நபர்கள் இளைஞரை வழி மறுத்து தாக்கியுள்ளனர். தாக்குதலாளிகளிடமிருந்து தப்பித்த இளைஞர் விளையாட்டரங்கு வீதி வழியாக தப்பியோடிவேளை தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி மூர்க்கத்தனமாக வாளினால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ் போதனா வை…
-
- 0 replies
- 279 views
-
-
பதுளையில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பதுளை மேல் நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்துள்ளார். 2014ஆம் ஆண்டு கண்டக்கெட்டிய பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவரின் கொலை வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/131089?ref=home
-
- 2 replies
- 425 views
-
-
வவுனியா கோவில் குஞ்சுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோருடன் கிராமத்தவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். நிர்வாகத்திறன் அற்ற பாடசாலை அதிபரை மாற்ற வேண்டும், போதியளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பௌதீக வளங்கள் பாடசாலைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலை வாயிலை மறித்து இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பாடசாலையில் 56 மாணவர்கள் கற்று வந்த நிலையில் அம் மாணவர்களுக்கு முறையான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறாமையினால் பெற்றோர் வேறு பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை மாற்றி வருவதாகவும்., இதன் காரணமாக பாடசாலை மூடப்படும் …
-
- 0 replies
- 496 views
-
-
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த நிதி அமைச்சராக ரவி தெரிவு ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் சிறந்த நிதி அமைச்சராக இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதனிலை நிதி சஞ்சிகைகளில் ஒன்றான தி பாங்கர் சஞ்சிகையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையை ஒர் புதிய பொருளாதாரப் பரிமாணம் நோக்கி ரவி கருணாநாயக்க நகர்த்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1.5 பில்லியன் டொலர்கள் நிதியையும் சர்வதேச நாணய நிதியத்திடம் ரவி கருணாநாயக்க பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/13201
-
- 0 replies
- 294 views
-
-
மேலைத்தேய ஆடைகளுக்கு விடுமுறை; ஜனாதிபதி உத்தரவு அரச உயர் அதிகாரிகள், ஐரோப்பிய முறையிலான ஆடைகளை அணிவது கட்டாயம் என முன்னாள் ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த சுற்றுநிருபத்தை தான் இல்லாது செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அரச சேவையின் உயர் அதிகாரிகள், இனிமேல் அத்தியாவசிய தேவைகளை விடுத்து, ஏனைய சந்தர்ப்பங்களில் கழுத்துப் பட்டி மற்றும் கோட் உடனான உத்தியோகப்பூர்வ ஆடை அணிய வேண்டியதில்லை என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 479 views
-
-
யாழில் போலி பொது சுகாதார பரிசோதகர்கள் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொது சுகாதாரப் பசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்தி வீட்டு உரிமை யாளர்களை தொந்தரவு செய்த இருவர் குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு பொது சுகாதாரப் பசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்திய இருவர் வீட்டில் டெங்கு நோய் நுளம்புகள் பெருகும் இடங்கள் உள்ளனவா என பார்வை இட வந்துள்ளோம் என கூறி வீட்டில் உள் நுழைந்து ள்ளனர். பின்னர் காரணம் இல்லாமல் டெங்கு பெருகும் …
-
- 0 replies
- 411 views
-
-
சுகாதாரம் சார் வசதிகளை சீர் செய்யக் கோரிக்கை யாழ் மாநகர சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கான சுகாதா ரம் சார்ந்த அடிப்படை விடயங்கள் இன்னமும் பூர்த்தியாக்கப்படாமையினால் வர்த்தகர்கள் பெரும் இன்னல்களை எதிர்நோ க்குவதாக கவலை தெரிவித்துள்ளனர். யாழ் மாநகர சபையினால் 312 வர்த்தக நிலையங்கள் யாழ் நகரில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.குறித்த வர்த்தக நிலையங்கள் மாதம் ஒன்றிற்கு 25000 ரூபாயினை யாழ் மாநகர சபைக்கு பற்று நிதியாக வழங்கி வருவதோடு சோலை வரியினையும் செலுத்தி வருகின்றனர்.எனினும் அவர்களுக்கான சுகாதார வசதிகள் இன்னமும் பூரணப்படுத்தப்படவில்லை. குறிப்பாக பொ…
-
- 0 replies
- 315 views
-
-
கிணற்றை காணவில்லை என முறைப்பாடு : வவுனியா நகரில் சம்பவம் சதீஸ் வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவத் தளபதி கொப்பாகடுவவின் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கிணறு ஒன்றை சில வருடங்களாக காணவில்லையென வவுனியா நகரசபை செயலாளரான ஆர்.தயாபரனிடம் சமூக நலன்விரும்பி ஒருவரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த பல வருடங்களுக்கு முன்பு வவுனியா நகரசபையினால் பொதுமக்கள் பாவனைக்காக வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவ தளபதி கொப்பாகடுவ சிலைக்கருகில் குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அந்த கிணறு இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. இவ் விடயம் தொடர்பாக நகரசபை …
-
- 1 reply
- 360 views
-
-
கீரை விற்ற சிறுமியின் கற்றல் செயற்பாட்டிற்கு நிதியுதவி சாவகச்சேரி பொதுச் சந்தையில் வறுமை காரணமாக கற்றல் உபகரணங்களை வாங்குவதற்காக கீரை வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் தாக்குதலுக்குள்ளான சிறுமிக்கு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் உதவ முன்வந்துள்ளது. சாவகச்சேரி பொதுச் சந்தையில் கீரை வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுமி மீது சக பெண் வியாபாரி தாக்கிய சம்பவம் சமூக ஆவர்வல ர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாணவியின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவ சமூக அமைப்புக்கள் பல முன்வந்துள்ளன. தாக்குதலுக்கு ள்ளான மாணவி மற்றும் அவரின் சகோதரிக்கும் கற்றல் நடவடிக்கைகளுக்காக சாவகச்சேரி கைத்தொழில…
-
- 0 replies
- 370 views
-
-
ரூ.44 இலட்சம் பெறுதியான அலைபேசிகளுடன் கார் கடத்தல் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த அலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர், தனது கார் மற்றும் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலைபேசிகள் மற்றும் 7 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றுடன் கட்த்திச் செல்லப்பட்டு கொலன்னாவை பிரதேசத்தில் கைவிடப்பட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறைக்குச் சென்ற நிலையில், நான்கு பேர் அடங்கிய குழுவினரால் குறித்த அலைபேசி விநியோக பிரதிநிதி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்த பணம், அலைபேசிகள் மற்றும் கார் என்பவற்றை கடத்திச் சென்றவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்…
-
- 0 replies
- 190 views
-
-
பிரிட்டன் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் அழகு ராணிப் போட்டி இலங்கையின் பிரபல்யமான பிரீமியர் சிலோன் நிறுவனமும், மிஸ் இங்கிலாந்து என்ற பிரித்தானிய நிறுவனமும் இணைந்து இல ங்கையில் அழகு ராணிப் போட்டியை கூட்டாக நடாத்த கடந்த வாரம் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. வருடா வருடம் மிஸ் பிரீமியர் இலங்கையர் தெரிவுக்கான போட்டிகளை பிரிட்டனின் பிரபல்யமான அழகு நிலைய நிறுவனத்துடன் இணைந்து நடா த்தப் போவதாக பிரிமீயர் சிலோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோட்டல்கள், உடற்பயிற்சி நிலையங்கள், கரவன்ஸ் எனப்படும் நகரும் வாகன ஹோட்டல்கள், உல்லாசப் படகுகள் போன்வற்றை வைத்துக்கொண்டு, விடுதலை நாட்களுக்கான திட்ட ஒழுங்குகளை மேற்கொள்வதில் இலங்கை நிறுவனம் பிரபல்யமாக உள்ளது. …
-
- 0 replies
- 230 views
-
-
-
- 0 replies
- 374 views
-
-
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்தவேண்டும்; வட,கிழக்கை இணைக்கக்கூடாது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கூடாது; சுதந்திரக் கட்சி தீர்மானம் (ரொபட் அன்டனி) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையானது தற்போது இருக்கின்ற வகையிலேயே தொடரவேண்டுமென்றும், அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டுமென்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற சுதந் திரக் கட்சியின் முக்கிய கலந்துரையாடல் ஒன்றிலேயே கட்சியின் பொதுச்செயலாளர் துமிந…
-
- 0 replies
- 320 views
-
-
‘இலங்கையை ஜனநாயக நாடாக்கினார் மைத்திரி’ கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையை ஜனநாயக நாடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றினார் என, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கைக்கு வந்துள்ள முதலமைச்சர் நாயுடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டிய விழாவில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதில் ஆந்திரப் பிரதேச நிதி, திட்டமிடல், வர்த்த வரிகள், சட்ட விவகாரங்கள் அமைச்சர் யனமல ராம கிருஷ்ணுடு, பஞ்சாயத்து, கிராம மற்றும் நீர் விநியோக அமைச்சர் சிந்தகயலா அய்யனா பட்ருடு, இலங்கைக்கான இந்தியாவின் பதில் உயர்ஸ்தானிகர் அர…
-
- 0 replies
- 437 views
-
-
அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி சிறப்பு பொலிஸ் குழுவினர் விசாரணை - இதுவரை 63 பேர் கைது; 51 பேருக்கு விளக்கமறியல்- (எம்.எப்.எம்.பஸீர்) அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவெல, இலங்கை – சீன கைத்தொழில் மற்றும் அபிவி ருத்தி வலயத்தின் ஆரம்ப நிகழ்வின் போது நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்தோரை கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழுக்களa் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எப்.யூ. பெர்னான்டோவின் மேற்பர்வையில் அம்பாந்தோட்டை உதவி பொலிஸ் அத்தியட்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இப்பொலிஸ் குழுக்கள் நீதிமன்ற உத்தரவை மீறியோரைக் கைது செய்யும் நடவடிக…
-
- 0 replies
- 211 views
-
-
மனித பாவனைக்கு உதவாத இறைச்சிகள் யாழ் .இறைச்சிக் கடையில் மீட்பு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பண்ணையில் உள்ள மாட்டிறைச்சி கடையில் நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத 120 கிலோ நிறையுடைய இறைச்சி மற்றும் குடல்கள் சுகாதாரப் பகுதியினரால் நேற்று அதிரடியாகக் கைப்பற்றப்பட்டன. கோழிக் கால்கள் மாட்டுக் கால்கள் கொண்ட கழிவுகளும் பல நாட்களாக வைத்திருந்த இறைச்சிகளுடன் காணப்பட்டமை சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. பண்ணையில் உள்ள மாட்டிறைச்சி கடையில் குளிர்சாதனப் பெட்டியில் மாதக்கணக்காக தேக்கி வைக்கப்பட்ட பாவனைக்கு உதவாத குடல், இறைச்சி என்பன பொலித்தீன் ப…
-
- 0 replies
- 248 views
-
-
கூட்டு எதிர்க்கட்சியின் பத்து எம்.பிக்கள் விரைவில் கைது! அம்பாந்தோட்டையில் நீதிமன்றத்தின் தடையை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பத்துப் பேர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். “ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றதன் மூலம் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர். பேரணியின் போது எடுக்கப்பட்ட காணொளிப் பதிவை வைத்து, அதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு காவல் துறைக் குழு அடையாளம் கண்டுள்ளது. வன்முறையைத்…
-
- 0 replies
- 248 views
-
-
தனது காலில் விழ முயன்ற பாதுகாப்பபு பிரிவினரை தடுத்து நிறுத்திய ஜனாதிபதி தனது காலில் விழுவதற்கு முயற்சித்த பாதுகாப்புபிரிவினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுத்த சம்பவம் ஒன்று அண்மை யில் இடம்பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இரவு ஜனாதிபதி மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனவரி மாதம் முதலாம் திகதி காலை கொழும்பிற்கு வந்துள்ளார். அதன் பின்னர் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டி ருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகளை சந்தித்து ஜனாதிபதி புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலக அதிகாரிகள் வெற்ற…
-
- 0 replies
- 239 views
-
-
முல்லைத்தீவில் வரலாற்றுச்சின்னங்கள் அழிந்து போகும்நிலையில்.! ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்த காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை நகரில் (தற்போதைய மாவட்ட செயலக வளாகம்) ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில் அக்கோட்டையானது அதிக பாதுகாப்பு வழங்கி வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அபிவிருத்தி என்ற பேரில் அக்கோட்டையினை பேரினவாதிகள் அழித்தொழிக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவர…
-
- 0 replies
- 215 views
-
-
நாமல் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்படக்கூடிய அபாயத்தில்? பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதாக நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 7ம் திகதி ஹம்பாந்;தோட்டை கைத்தொழில் முதலீட்டு வலயம் குறித்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற தரப்பினருக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஹம்பாந்தோட்டையின் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 26 பேரை கைது…
-
- 0 replies
- 231 views
-
-
புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்; அனைத்துக் கட்சிகளையும் ஒத்துழைக்குமாறும் வலியுறுத்தல் (ஆர்.ராம்) புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இத்தருணத்தில் அதனை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர…
-
- 0 replies
- 272 views
-
-
ஜனாதிபதி சிறிசேனவின் ஆட்சியில் இலங்கையில் பாரிய மாற்றங்கள் விரைவில் சிங்கப்பூராக மாறும் என்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு (ப.பன்னீர்செல்வம்) இந்தியாவும் இலங்கையும் அயல் நாடுகள். எல்லைகளால் இரு நாடுகளும் பிரிக்கப்பட்டிருந்தாலும் உணர்வுகளையும் வரலாற்றையும் எவராலும் தகர்க்க முடியாது என இந்தியாவின் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு தகவல் தொழில்நுட்ப அறிவும் வளர்ச்சியும் அத்தியாவசியமானவையாகும் என் றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு ந…
-
- 1 reply
- 278 views
-
-
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு -சுமந்திரன் நம்பிக்கை புதிய அரசியல் அமைப்பின் ஊடாக கடந்த 70 வருடமாக புரையோடியுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியுடன் உள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கு இதுவரை காலமும் ஒத்துழைப்பு வழங்கியது போன்று அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
-
- 3 replies
- 739 views
-
-
கன்னியமர்வு சுருங்கியது அழகன் கனகராஜ் 2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று காலை 9:30க்கு கூடும். கன்னியமர்வுடன் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, அரசியலமைப்பு சபையின் ஆறு உப- குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள 21 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல் குழு, கடந்த 05ஆம் திகதி வியாழக்கிழமை கூடவிருந்தபோதும் அந்தக் கூட்டம், காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்று ஆரம்பமாகவிருந்த, ஆறு உப-குழுக்களின் சமர்ப…
-
- 0 replies
- 215 views
-
-
80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் கஷ்டப் பிரதேசங்களில் இருந்து கடந்தாண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 வெளிமாவட்ட மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உயத்தரம் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிகள், கஷ்டப்பிரதேச கோட்டா அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சிறப்புச் சலுகையைப் பெற ஏனைய வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கஷ்டப் பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளை எழுதியதாக…
-
- 4 replies
- 946 views
-