ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரி நிற்கின்றோமே தவிர பழிவாங்க இல்லை – இரா.சம்பந்தன் யுத்தத்தின்போது கட்டளைகளை வழங்கியவர்களே குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டுமென தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரி நிற்கின்றோமே தவிர பழிவாங்க முயற்சிக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்களின் கருத்தறியும் செயலணியின் இறுதி அறிக்கை நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் வெளியிடப்பட்டதையடுத்து அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளை நியமிக்க முடியாதென ஜனாதிபத…
-
- 1 reply
- 279 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை பிற்போட தீர்மானம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான காலம் பிற்போடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தினை அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிவரை குறித்த ஒப்பந்தம் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன மெர்ச்சன்ட்ஸ் துறைமுக ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், குறித்த திட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தவாறு உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/…
-
- 0 replies
- 199 views
-
-
வவுனியாவில் வாள் வெட்டுக்குழுக்கள் அட்டகாசம் வவுனியா கற்குழி பகுதியில் நேற்று இரவு 09.50 மணியளவில் வாள் வெட்டுக்குழுக்கள் அட்டகாசம் புரிந்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புதுவருட தினத்தன்று வவுனியா, கற்குழிப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்திருந்தனர். குறித்த வாள் வெட்டுச்சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சையின் பின்னர் நேற்று மாலை வீடு திரும்பியதையறிந்த ச…
-
- 0 replies
- 371 views
-
-
2 படகு மற்றும் 10 மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 2 படகு மற்றும் 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இன்று காலை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடந்த 6 நாட்களாக நெடுந்தீவு வடக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நேற்று அத்துமீறி மீன் பிடியில் குறித்த மீனவர்கள் ஈடுப்பட்டிருந்த வேளையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு காலை 9 மணியளவில் மலேரியா பரிசோதனை செய்த பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். http://www.virakesari.lk/…
-
- 0 replies
- 136 views
-
-
முல்லைத்தீவில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பு முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கிவரும் வாரச்சந்தையில் பாடசாலைக்கு செல்லும் வயதிலிருக்கும் சிறுவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் உரிய தரப்பினர் இதனை கண்டும் காணாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்களால் கவலை தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கிவரும் வாரச்சந்தையில் பல சிறுவர்கள் வியாபாரிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகிறது. இவ்வாறு சிறுவர்களை வேலைக்கு அமர…
-
- 0 replies
- 141 views
-
-
இலங்கையில் பிரபல கார் தொழிற்சாலை : அடிக்கல் நாட்டப்பட்டது குளியாப்பிட்டியவில் அமையப்பெறவுள்ள வொக்ஸ்வாகன் மோட்டார் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று நடைபெற்றது. குளியாப்பிட்டிய லபுயாய பிரதேசத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் குறித்த மோட்டார் வாகன தொழிற்சாலை அமையப்பெறவுள்ளது. அடிக்கல் நாட்டு நிகழ்வில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உட்பட பலர் கலந்து கொண்டனர். http://www.virakesari.lk/article/15029
-
- 4 replies
- 773 views
-
-
யாழ். பலாலி விமானத்தளம், பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்திசெய்யப்படும். அது இலங்கைக்கு மாத்திரமல்லாமல் தென்னிந்தியாவுக்கும் சேவைகளைமேற்கொள்ளும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு தமிழ் பேசும் வடக்கு பகுதியை தொடர்புபடுத்தும்வகையில் இந்தியா அதனை அபிவிருத்தி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், காங்கேசன்துறை துறைமுகம்அபிவிருத்தி செய்யப்படும்போது தமிழகத்துடனான தொடர்பு மேலும் அதிகரிக்கும் என்று அவர்சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை திருகோணமலை துறைமுகம் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானியமுதலீடுகளின் கீழ் அபிவிருத்தி செய்…
-
- 0 replies
- 218 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று பிற்போட்டமைக்கான காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. ஆந்திர பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவால் இலங்கைக்கு அனுப்பி வைத்த இந்திய பிரதிநிதிகள் குழுவை சந்திக்கும் நோக்கிலேயே ஜனாதிபதியின் யாழ் விஜயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆந்திர பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தேசிய அரசாங்கத்தின் இரண்டாம் வருட பூரத்தி நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். எனவே,ஆந்திர பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு இ…
-
- 0 replies
- 215 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் குழுவினர் யாழ் சென்றுள்ளனர் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் சஞ்சய் பாண்டே அடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற மீனவர் பேச்சுவாரத்தையில் கலந்துகொள்ள வந்திருந்த குறித்த குழுவினர் யாழ். சென்று கீரிமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்திய வீட்டுத்திட்டத்தை பார்வையிட்டதுடன் இந்திய அரசினால் அண்மையில் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் பார்வையிட்டுள்ளனர். மேலும், யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் இரண்டு பில்லியன் செலவில் அமைக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தின் நிர்மாணப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து கொண்…
-
- 2 replies
- 400 views
-
-
ரவிராஜ் வழக்கு தீர்ப்பில் உடன்பாடு இல்லை : ராஜித ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தனக்கும் உடன்பாடு இல்லையென சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலர்கள் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட ரீதியாக வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளதாக தோன்றுகிறது. குறித்த வழக்கினை மேன்முறையீடு செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துவருகின்றார். எவ்வாறாயினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்…
-
- 1 reply
- 549 views
-
-
கலப்பு நீதிமன்றம் வேண்டும் சர்வதேச நீதிபதிகள் அவசியம் (ரொபட் அன்டனி) நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணி பரிந்துரை விசேட வழக்குரைஞர் அலுவலகம் சர்வதேச குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிப்பது சட்டவிரோதமானது சிறுபான்மை மக்கள் குறித்த ஆணைக்குழு காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படுவதுடன் அதன் ஒவ்வொரு அமர்விலும் சர்வதேச நீதிபதி ஒருவராவது இடம்பெறவேண்டியது அவசியம் என்று நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத் தறியும் செயலணி பரிந்துரை செய்துள்ளது. நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் அறிக்கை நேற…
-
- 2 replies
- 968 views
-
-
சீனா இலங்கையில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்கவில்லை – அரசாங்கம் சீனா இலங்கையில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்கும் நோக்கில் சீனா செயற்படவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக சிலர் பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்தவொரு நாட்டினாலும் இவ்வாறு இராணுவ முகாம்களை அமைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்யும் நோக்கில் ஒப்பந்த அடிப்ப…
-
- 0 replies
- 318 views
-
-
ஜனாதிபதியின் உடல் நிலை குறித்த செய்திகளில் உண்மையில்லை – அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உடல் நிலை குறித்து சில ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் உண்மையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் சில இணைய ஊடகங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உடல் நிலை மோசமமைடந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை ரத்து செய்த காரணத்தினால் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. http://globaltamilnews.net/archives/12636
-
- 0 replies
- 263 views
-
-
கடந்த வருடத்தில் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ள கடற்படை இலங்கை கடற்படை கடந்த வருடத்தில் கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் மூலம் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 6371 நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது. எவன்கார்ட் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்த கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடற்படைக்கு வழங்கப்பட்டது.அதன்படி இந்நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படை இதுவரை ஈட்டியுள்ள வருமானம் 263 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்கு 7457 கப்பல் …
-
- 4 replies
- 528 views
-
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு இலட்சம் பேர் தமிழகத்தில் -அரச அதிபர் தெரிவிப்பு யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 1 இலட்சம் பேர் இந்தியாவில் இருப்பதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுக்களின் தலைவர் லோர்ட் நெசபியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த லண்டனின் இலங்கைக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுத்தலை வர் லோர்ட் நெசபி இன்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 1 மணித்தியாலம் நீடித்த குறித்த சந்திப்பின் போது, யாழ்.மாவட்டத்தில் பொது நிலம…
-
- 1 reply
- 490 views
-
-
மைத்திரியின் மனமாற்றம் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறவிருந்த “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” என்ற செயற்றிட்டத்தின் பிராந்திய அலுவலகத் திறப்பு விழாவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவிருந்த போதிலும், இன்று ஏற்படக்கூடிய அரசியல் பதற்ற நிலைமையைக் கருத்திற்கொண்டு, அவரது பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 10 பேர், அதிலிருந்து விலகி, ஒன்றிணைந்த எதிரணியில் இன்று இணையவுள்ளனர் என, முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டால், அரசாங்கத்திலும் கட்சியிலும் ஏற்…
-
- 0 replies
- 319 views
-
-
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் 250 கிலோ எடை கொண்ட கடல்பசு இறந்து கரை ஒதுங்கியுள்ளது இராமேஸ்வரம் அருகே புதுமடம் கடற்கரையில் 250 கிலோ எடையுள்ள கடல்பசு கரை ஒதுங்கியது. வனத்துறையினர் கைப்பற்றி பிரேதபரிசோதனை செய்து புதைத்துள்ளனர். இராமேஸ்வரம் அடுத்துள்ள புதுமடம் கடற்கரையில் நேற்று இறந்த நிலையில் கடல்பசு கரை ஒதுங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கரை ஒதுங்கிய கடல் பசுவை கைப்பற்றி இறந்தது குறித்து ஆய்வு செய்தனர். மன்னார் வளைகுடா கடல் பகுதயில் பாறையில் மோதி உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த கடல் பசு டுஹாங் டுஹாங் …
-
- 0 replies
- 300 views
-
-
-
- 0 replies
- 240 views
-
-
காதலனை நிறுத்த ரயிலை நிறுத்திய யுவதி கைது.! கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு புறப்படவிருந்த இரவு தபால் ரயிலில் வெடி குண்டிருப்பதாக, பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் யுவதியை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 18 வயதான குறித்த யுவதியானவள் தன் காதலனை ஊருக்கு செல்லவிடமால் தடுப்பதற்காகவே இவ்வாறன செயற்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். குறித்த யுவதியானவள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கடந்த 27ஆம் திகதியன்று கிடைந்த அனாமதேய தகவலையடுத்து, இரு மணித்தியாலயங்கள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் சோதனைகளின் பின் ரய…
-
- 0 replies
- 266 views
-
-
“முதலாவது அமர்வில் புதிய அரசியலமைப்பு குறித்த விவாதம்” : சபாநாயகர் இந்த வருடத்தின் முதலாவது சபைக் கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டார். இதன்படி 1வது சபை அமர்வு எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, தொடர்ந்து 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புதிய வருடப் பிறப்பை முன்னிட்டு ஆசிர்வாதம் பெற மல்வத்துபீட அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்திக்க இன்று சென்றிந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/15058
-
- 0 replies
- 214 views
-
-
கட்டுநாயக்க விமான நிலைய புனர் நிர்மாணம்: விசேட போக்குவர்த்து நடைமுறை அமுலுக்கு கட்டுநாயக்க சர்வசே விமான நிலையத்தின் ஓடுபாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் விசேட போக்குவர்த்து நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் சிரமத்தினை குறைக்கும் விதமாக காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை விசேட போக்குவரத்து நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. விமான ஓடுபாதையின் நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/15032
-
- 1 reply
- 399 views
-
-
அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் இனங்களுக்கிடையே முறுகல் ஏற்படுத்த முயற்சி பிரித்தானிய பிரபுகள் சபை உறுப்பினரிடம் அமைச்சர் ஹக்கீம் எடுத்துரைப்பு சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில், பௌத்த வழிபாட்டுத் தலங்கள் அங்கு காணப்பட்டதற்கான நினைவுச் சின்னங்களும், தடயங்களும் இருப்பதாக கூறிக்கொண்டு சில பேரினவாத தீவிரவாத சக்திகள் மேற்கொண்டு வரும் முஸ்தீபுகளினால் இனங்களுக்கிடையிலான முறுகல்களும் விரிசல்களும் அதிகரிப்பதற்கான அச்சம் நிலவுவதாகவும், இந்த பரபரப்பான நிலைமையை அரசாங்கம் உரிய முறையில் தலையிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டியது அவசியமென்…
-
- 0 replies
- 367 views
-
-
முன்னாள் போராளிகளுக்காக விசேட செயற்றிட்டம் அவசியம் ஜனாதிபதியிடத்தில் நேரடியாக கோருவதற்கு கூட்டமைப்பு முடிவு (ஆர்.ராம்) முன்னாள் போராளிகளுக்காக விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் என் பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் நேரடியாக கோருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவிக்கையில், எமது மக்களின் விடுதலைக்காக போராடிய போராளிகள் யுத்த நிறைவின் பின்னர் புனர்வாழ்வு பெற்ற…
-
- 0 replies
- 220 views
-
-
திருமலை துறைமுகத்தின் அனைத்து எண்ணெய் குதங்களும் இந்தியாவுக்கே அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறுகிறார் (பா.ருத்ரகுமார்) திருகோணமலை துறைமுகம் தொடர்பில் 2002ஆம் ஆண்டில் இந் தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப் பந்தத்தின் பிரகாரம் அத்துறைமுகத் தின் அனைத்து எண்ணெய் குதங்களும் இந்தியா வசமே உள்ளன. முன் னைய அரசாங்கங்களும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தன. அதனால் எமது நாட்டிலுள்ள குறித்த துறைமுக அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கி அதிலிருந்து வரும் ஐம்பது வீதத்திலான லாபத்தினை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பெற்றோலிய வள …
-
- 0 replies
- 198 views
-
-
2020 வரை அரசை அசைக்க முடியாது சுதந்திரக்கட்சியின் அமைச்சர் திட்டவட்டம் (பா.ருத்ரகுமார்) தற்போது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது அன்று இருந் ததா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. அதனால் தான் இன்று காரசாரமான கருத்து பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன. எனவே, நாட்டினையும் பாதுகாத்து கட்சிகளையும் காட்டிக்கொடுக்காத நிலையான சக்திமிக்கதான ஒரு அரசாங்கம் 2020 வரையில் நீடிக்கும் என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பெற்றோலிய வள அமைச்சின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக வியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையி…
-
- 1 reply
- 306 views
-