ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
அன்ரன் பாலசிங்கத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று 14.12.2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் ஈகச் சுடரினை காரைநகர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ அவர்கள் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும், தேசத்தின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்கள் பொது மக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்…
-
- 10 replies
- 715 views
- 1 follower
-
-
மறந்து விட்டேமா கிழக்குப் பல்கலை துணைவேந்தர் ரவீந்திரநாத்தை? விசாரணை நடத்துமா அரசு? குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் காணாமல் போய் இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன கொழும்பில் 2006 டிசம்பர் 15 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக முன்னைநாள் துணைவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் (பிறப்பு: பெப்ரவரி 22, 1951) காணாமல்போய் இன்றுடன் பத்து வருடங்கள் கடந்துவிட்டன. …
-
- 1 reply
- 300 views
-
-
ஹம்பாந்தோட்டை சம்பவம் யாழில் இடம்பெற்ற சம்பவங்களுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது : மஹிந்த (எம்.சி.நஜிமுதீன்) அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது கடற்படையினரைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனினும் இவ்வாறான நடவடிக்கைள் யாழ்ப்பாணத்தில் நடைபெறும்போது வேறுவிதமாகவே அது கையாளப்படுகிறது. கடற்படையைச் சேர்ந்த இருவரை அங்குள்ளவர்கள் தடுத்துவைத்திருந்தபோதும், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோதும் அவர்களை மீட்பதற்கு கடற்படை அனுப்பப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டுவதற்கு கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்…
-
- 0 replies
- 209 views
-
-
ஜனநாயக போராட்டங்களை அரச பயங்கரவாதத்தால் தடுத்தால் போராட்டங்கள் வலுப்பெறும்..! (எம்.ஆர்.எம்.வஸீம்) மக்களின் ஜனநாயக போராட்டங்களை அரச பயங்கரவாதம் மூலம் அரசாங்கம் தடுக்க முற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறுவதை தடுக்க முடியாது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், அரசாங்கம் பாரிய நிதி பிரச்சினைக்கு ஆளாகியுள்ளது. அதனால்தான் மக்கள் மீது பாரியளவில் சுமைகளை ஏற்றிவருகின்றது. இன்று வங்கிகளில் டொல…
-
- 0 replies
- 156 views
-
-
83ஐ திருத்தினால் சர்வஜன வாக்கெடுப்பு அழகன் கனகராஜ் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு உப-குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இடம்பெறவி ருக்கின்றது. இந்நிலையில், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி க்கொள்வதற்கு, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான தீர்மானத்தில் இந்த விவகாரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இலங்கை ஜனநாயக சோசலிசன் குடியரசின் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில், 83ஆம் உறுப்புரை ஏற்பாடுகளில் முரணாக இருந்தால் மட்டுமே, நாடாளுமன்ற…
-
- 2 replies
- 388 views
-
-
ஈழத்திற்கான அனைத்து அம்சங்களும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கம் எதிர்ப்போம் என்கிறது பொதுபலசேனா (ப.பன்னீர்செல்வம்) தமிழீழத்துக்கான அனைத்து அம்சங்களும் அடங்கிய புதிய அரசியலமைப்பை எதிர்ப்போம் என அறைகூவல் விடுக்கும் பொதுபலசேனா அமைப்பு, இந்தியாவின் தேவைக்காக பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படவுள்ளது என்றும் குற்றம் சாட்டியது. கொழும்பு, கிருலப்பனை பொதுபலசேனா தலைமையலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார். தேரர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; …
-
- 3 replies
- 490 views
- 1 follower
-
-
முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது : மாங்குளத்தில் சம்பவம் யாழ்ப்பாணத்திற்கு கன்டர் ரக வாகனமொன்றில் கடத்திச்செல்லப்பட்ட 11 முதிரை மரக்குற்றிகளுடன் சாரதியொருவரை மாங்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர். கொக்காவில் பகுதியில் வீதிப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாங்குளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன. பொலிஸார் குறித்த வாகனத்தை சோதனையிடுவதற்காக நிறுத்தியபோது மேற்படி வாகனம் நிறுத்தாது அதிகவேகமாக தப்பித்துச்செல்ல முற்ப்பட்டவேளை மோட்டார் சைக்கிளில் துரத்திச்சென்ற பொலிசார் உமையாள்புரம் பகுதியில் வைத்து வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். …
-
- 0 replies
- 292 views
-
-
யாழில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் பெண் தலைமைத்துவ குடும்பங்களை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் காலை 11.00 மணியளவில் "விழுது" அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் நாட்டில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களின் ,பொருளாதாரம்,சுகாதாரம்,கல்வி,பாதுகாப்பு, சார்ந்த பிரச்சினை கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அந்தவகையில் இன்றைய தினம் 14 மாவட்டங்களைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தலைவர்கள் வருகை தந்தி ருந்தனர். குறித்த கலந்துரையாடலில் காலி மாவட்டத்தில் 2004ம் ஆண்டு ச…
-
- 0 replies
- 290 views
-
-
ஓமந்தை சோதனை சாவடி காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம் ஓமந்தை சோதனைச்சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், பதிலீடாக வேறு 06 ஏக்கர் காணி இராணுவத்திற்கு வழங்குவதற்கு அரச அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறு ப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஓமந்தைச் சோதனைச்சாவடி அமைந்திருந்த இறம்பைக்குளம் காணி உரி மையாளர்களுக்கும் மேலதிக அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, …
-
- 0 replies
- 170 views
-
-
ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிளிநொச்சியில் இருவர் கைது ( எஸ்என்.நிபோஜன் ) கிளிநொச்சி, ஆனந்தபுரம் கிராமத்தில் கூடுதலான மதுபானப் போத்தல்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டிலும் ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று வியாழக்கிழமை இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்து, கிராம மக்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஒவ்வொன்றும் 750 மில்லிலீற்றர் கொள…
-
- 0 replies
- 307 views
-
-
நல்லாட்சியிலாவது நல்லிணக்கம் எட்டப்படுமா ? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன். உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கத்தினால் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவதும், பௌத்த சின்னங்கள், பௌத்த விகாரைகளை நாடு முழுவதும் நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆட்சி காலத்தில் மாத்திரமின்றி, தற்போது நல்லாட்சி என சொல்லப்படுகின்ற ஆட்சி காலத்திலும், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. முன்னதாக கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் பௌத்த விகாரைகள் என்பன அமைக்கப்பட்டு கிழக்கினை சிங்கள மயமாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. கிழ…
-
- 0 replies
- 414 views
-
-
மலேசியாவில் ஜனாதிபதி... இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு, மலேசியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அங்குள்ள இலங்கை பிரஜைகள் வரவேற்றனர். - See more at: http://www.tamilmirror.lk/188067/மல-ச-ய-வ-ல-ஜன-த-பத-#sthash.zbOuxqwE.dpuf
-
- 0 replies
- 174 views
-
-
யாழில் திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலைகள் யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் இன்று சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நீடித்த அடை மழை காரணமாக வலிகாமம் உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் மரக்கறி பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளமையாலும், பெரும்போக மரக்கறிப் பயிர்ச் செய்கை தற்போது ஆரம்பி க்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாலும் சந்தைக்கு எடுத்து வரப்படும் மரக்கறிகளின் அளவு முன்னரை விடக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவே மரக்கறிகளின் விலை அதிகரிப்பிற்கான காரணமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். http://onlineuthayan.com…
-
- 0 replies
- 376 views
-
-
புதிய வீடு கையளிப்பு வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் 2016ம் ஆண்டிற்கான வீடுடமைப்புத் திட்ட நிதியில் கைதடி மத்தியில் கட்டப்பட்ட புதிய வீடு வடமாகாண சபையின் முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் பயனாளியிடம் நேற்று (14) கையளிக்கப்பட்டது, வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலும் மொத்தமாக 17 வீடுகள் கட்டப்படுகின்றன, http://tamil.adaderana.lk/news.php?nid=2319&mode=head
-
- 0 replies
- 242 views
-
-
அரசியல் தீர்வு தொடர்பான சுதந்திரக்கட்சியின் யோசனை நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் உச்சபட்ச பயனை அடையவேண்டுமானால் தமிழ் தேசியக்கூட்டமைப்பானது ஒற்றையாட்சிக்குள் பொலிஸ், காணி அதிகாரங்கள் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களை பெறுவதற்கு முன்வரவேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா வலியுறுத்தியிருக்கின்றார். தற்போது இனப்பிரச்சினை தீர்வானது சமஷ்டி முறையிலா அல்லது ஒற்றையாட்சி முறையிலா அமையவேண்டும் என்பது தொடர்பில் பாரிய விவாதம் இடம்பெற்று வருகின்றது. இது த…
-
- 0 replies
- 213 views
-
-
எமது முடிவினை அறிவித்துவிட்டோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டம் (திருகோணமலை நகர் நிருபர்) 13 ஆவது திருத்தம் குறித்தோ மாகாண சபை அதிகாரங்கள் பற்றியோ பேசவேண்டிய தேவை கூட்டமைப்புக்கு இல்லை. எங்கள் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் தெளிவாகப் பேசியுள்ளோம். கட்சியின் தலைவர் அல்லாத எவருக்கும் பதில் அளிக்க வேண்டிய தேவை எமக்கில்லை என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பொலிஸ், காணி அதிகாரங்களுடன் 13 ஐ அமுல்படுத்த வேண்டும் என சுதந்திரக் கட்சியின் விசேட குழு ஜனாதிபதிக்கு விரைவில் அறிக்கை சமர்ப்ப…
-
- 0 replies
- 229 views
-
-
பொலிஸ், காணி அதிகாரங்களை பகிர்வதற்கு விடவே மாட்டோம் -இப்படிச் சொல்கிறது ஜே.வி.பி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்குவதற்கும், ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் புதிய அரசமைப்பு உரு வாக்கத்தின் உபகுழுக்களால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை மக்கள் விடுதலை முன்னணி முற்றாக நிராகரித்துள்ளது.இது தொடர்பில் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்ததாவது: போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும்போது, வழங்கப்படும் தீர்வு மீண்டும் ஒரு போரை ஏற்படுத்தாதவாறு - நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்காதவாறு அமைய வேண்டும். போரினால் வடக்கு-கிழக்குத் தமிழர்கள் மாத்திரம் பாதிக்கப்படவ…
-
- 0 replies
- 226 views
-
-
எமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நிதியளிப்பாளராக இருந்த எமில் காந்தனை கைது செய்யுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. ராடா, வழக்கு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/188057/எம-ல-க-ந-தன-க-க-த-றந-த-ப-ட-ய-ண-#sthash.P4dv6c8d.dpuf
-
- 0 replies
- 195 views
-
-
மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மலேஷியாவில் ஆர்ப்பாட்டம் ; முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்கிறது மலேஷிய அரசு (கோலாலம்பூரிலிருந்து ரொபட் அன்டனி) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மலேஷியாவில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் மலேஷியாவின் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியும். அது தொடர்பில் நாங்கள் கவலையடையவேண்டியதில்லை. ஆனால் அது தொடர்பில் இந்நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். தேவையான பாதுகாப்பை மலேஷிய அரசாங்கம் வழங்கும் என்று மலேஷியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்தார். ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றமை குறித்து நாங்கள் கவலையடையவேண்டியதில்லை.ஜனநாயக நாட்டில்…
-
- 0 replies
- 185 views
-
-
வட மாகாணத்தின் 2016ம் ஆண்டுக்கான நிதியில் 92% செலவு. 2017ம் ஆண்டுக்கு 86.5% நிதி ஒதுக்கீடு வட மாகாணத்தின் பல்வேறு துறைகளிலும் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய முதலீடுகளை உருவாக்கி வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதும், சிறிய நடுத்தர தொழில் முயற்சிகளுக்கூடாக மக்களின் வருமானத்தினை அதிகரிக்கச்செய்வதும் இவ்வரவு செலவுத் திட்டத்தினூடாக அடையப்படவேண்டிய இலக்குகளாக உள்ளன. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டதினை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்…
-
- 1 reply
- 535 views
-
-
தேசிய திறன் போட்டியில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் இரண்டாம் இடம் இலங்கையிலுள்ள மாவட்டச் செயலகங்களுக்கிடையே நடாத்தப் பெற்ற தேசியத் திறன் போட்டியில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்ற நிலையில் அதற்கான வெற்றிக் கேடயத்தினை இன்று 14.12.2016 கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியிடமிருந்து கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பங்குகொண்டனர். வடமாகாணத்தில் தேசியத் திறன் போட்டியில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முதற்தடவையாக இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது http://…
-
- 0 replies
- 208 views
-
-
தேர்தல் முறை மாற்றமானது எந்த ஒரு சமூகத்தையும் பாதிப்பதாக அமையக்கூடாது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் தொடர்பில் பாரிய வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் மற்றும் தேர்தல் முறை மாற்றம் என்பன தொடர்பிலேயே மிகவும் தீர்க்கமான முறையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. விசேடமாக புதிய அரசியலமைப்பின் ஊடாக தேர்தல் முறை மாற்றம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பில் சர…
-
- 0 replies
- 220 views
-
-
"இராஜதந்திர உறவுகளில் தோல்வியைக் கண்டுள்ள அரசாங்கம்" : கோத்தபாய ராஜபக்ஷ மத வழிபாட்டுத் தளங்களின் ஊடாக வலுவான இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப முடிந்துள்ள போதிலும் அரசாங்கம் இதில் தோல்வி கண்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியினர் ஜப்பானில் வாழும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மெற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில மற்றும் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்டவர்களே இவ்வாறு ஜப்பானில் சந்திப்புகளில் கலந்துக் கொண்டுள்ளனர். வெளிநாடுக…
-
- 0 replies
- 353 views
-
-
பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான 6 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியடம் கையளிப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான 171 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, 6 விசாரணை அறிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரையில் 1600 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் அதில் 165 முறைப்பாடுகள் பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாச தெரிவித்தார். இது குறித்து ஆணைக்குழுவின் செயலாளர் தொ…
-
- 0 replies
- 280 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் நாளை பிற்பகல் பணிக்கு திரும்பவில்லையென்றால் பணியில் இருந்து நீக்கப்படுவர் என அரசாங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. நாளை பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் குறித்த பணியாளர்கள் வழமைப்போல் பணிக்கு திரும்பவில்லையாயின் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/14394
-
- 0 replies
- 344 views
-