Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பஷிலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாபஸ்…! திவிநெகும வழக்கில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் மீளப்பெற்றுள்ளார். இன்று குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி குறித்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகையை மீளப் பெறுவதாக குறிப்பிட்டார். முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சில கோளாறுகள் காணப்படுவதால், மீண்டும் இது குறித்து வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே குறித்த குற்றப் பத்திரிகையை மீளப் பெற அனுமதிக்குமாறும் அரச தரப்பு சட்டத்தரணி…

  2. மட்டக்களப்பில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை! மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரண்டு இலட்சத்து 41ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று(06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை ஒழிக்கும் வகையில் மதுவரித் திணைக்களம் பல்வேறு நடவடிக்கையினை கடந்த ஒரு மாதமாக ம…

  3. எலும்புத் துண்டுகளை உண்ணும் அமைச்சர்கள் புதிய கட்சியை பார்த்து குரைக்கின்றார்கள்!- மஹிந்த எலும்புத் துண்டுகளை உண்ணும் அமைச்சர்கள் புதிய கட்சியை பார்த்து குரைக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி அபயராமாயவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… கூட்டு எதிர்க்கட்சி மிகவும் வலுவானதாக தொடர்ந்தும் இயங்கி வருகின்றது. கட்சியை பிளவுபடுத்தவோ அல்லது பிரிக்கவோ எவரினாலும் முடியாது. புதிய கட்சியின் பிரதானியாக பசில் ராஜபக்ச கடமையாற்ற வேண்டும் என்பதனை கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களே தீர்மானித்தனர். ஸ்ரீலங்கா ச…

  4. சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவிற்குப் பயணம் செய்யவுள்ளார். அடுத்த வருடம் மார்ச் மாதம் 23ஆம் திகதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடாத்தவுள்ளார் என ரஷ்ய தூதுவர் லெக்சான்டர் கர்சாவா தெரிவித்தார். சிறீலங்கா – ரஷ்யா தொடர்பான இருதரப்பு உறவுகள் தொடர்பாக நேற்றைய தினம் கொழும்பிலுள்ள ரஷ்யத் தூதரகத்தில் விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சிறீலங்காவின் பாதுகாப்புத் தேவைக்கான தளபாடங்களை ரஷ்யாவினால் நிறைவேற்றமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், உலகத்தில் ரஷ்ய பாதுகாப்புத் தளபாடங்களே தரமானவ…

  5. தமிழக முதலமைச்சரும் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் தானைத் தலைவியுமாய்விளங்கிய மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் இயற்கை எய்தினார் எனும்சேதியறிந்து நாம் சொல்லொணாத் துயர் அடைந்திருக்கிறோம் என நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது. காலத்தால் ஆற்ற முடியா இப் பெருந்துயரில் துடிதுடித்துக் கொண்டிருக்கும் தமிழகமக்களுடனும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுடனும்நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தன்னை இணைத்துக் கொள்வதுடன் தமிழீழ மக்கள்சார்பில் முதலைமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு தனது இறுதி வணக்கத்தைத்தெரிவித்துக் கொள்கிறது என நா.கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்வி.உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  6. மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவிற்கு இன்று ஈழத் தமிழர் சார்பில் சிவசேனை அமைப்பின் தலைவரும், தமிழ்ப் பற்றாளருமான மறவன்புலவு க.சச்சிதானந்தன் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினார். சென்னை இராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நேரடியாகச் சென்ற அவர் இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பில் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளதாவது, அம்மையாரின் உடல் இருந்த இடம் அடைந்தேன். அவர்களின் கால்கள் இருந்த பக்கத்தில் நின்று வணங்கி அஞ்சலித்தேன். பால்நினைந்தூட்டும் திருவாசக வரிகள் சொன்னேன். துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் ஜெயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன், அமைச்சர் பாண்…

  7. தாம் மரணிக்கும் வரை சிங்கள பேரினவாதத்தைச் சேர்ந்த எந்த ஒரு வீரரையும் தமிழ்நாட்டு மண்ணில் கால்பதிக்க விடாமல் உலகத் தமிழினம் போற்றிய "ஈழத் தாயாக" திகழ்ந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெயிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வளர்ந்தபோது அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர். ஆனால் அதே அதிமுக ராஜீவ் படுகொலையை முன்வைத்து அந்த இயக்கத்துக்கு பரம எதிரியாகப் போனது காலத்தின் துயரம். கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பின்னர் மீண்டும் அதிமுக தன்னுடைய 'தாய்' முகத்தை ஈழத் தமிழர்களிடத்தில் காட்டியது. 2009ஆம் ஆண்டு ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை சிங்களப் பேரினவாதம், பன்னாட்டு படைகளு…

  8. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா, குட்செட் வீதியில் அமைந்துள்ள ஊடக கற்கை நிறுவனத்தில் இன்று (06) மாலை 7 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் வவுனியா வரியிறப்பாளர் சங்க பிரதிநிதிகள், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு பிரதிநிதிகள், பிரஜைகள் குழு உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தனர். இதன்போது அஞ்சலி உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. …

  9. தமிழர்கள் ஒரு விடிவு, சமாதானத்தினை நோக்கிய பாதையில் சென்று கொண்டிருக்கையில் அதனை தடுத்து அவர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமையை மழுங்கடிக்கின்ற செயற்பாட்டை பேரினவாதிகள் செயற்படுத்தி வருகின்றார்கள் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். லண்டன் சைவ முன்னேற்ற சங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட அறநெறி பாடசாலை கட்டட திறப்பு விழாவும்இ அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையில் சைவநெறி அறப்பணி மன்றம் நடாத்தும் சிவதொண்டர் மாநாடு சிவநெறி அறப்பணி மன்றத் தலைவர் சைவ வித்தகர் யோ. கஜேந்திரா தலைமையில் நிந்தவூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் பேரினவாதிகளின் பின்னனியில் இருந்து செயற்படும் ம…

  10. தீவக தாக்குதல் வழக்கு நாளை -இன்று தொகுப்புரைகள் வழங்கப்பட்டன நாரந்தனை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் இன்றையதினம் அரச, எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரை களை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நிகழ்த்தி முடி த்த னர். அத்தோடு இவ் வழக்கின் தீர்ப்பானது நாளைய தினம் 10:30 மணியளவில் வழங்கப்ப டும் என நீதிபதி தெரிவித்தார். யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி. பி யினர் 2001/11/28 அன்று மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக தொடர் வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று சட்டத்தரணிகள் சார்பில் தொகுப்புரைகள் இடம்பெற்றன. …

  11. செச்னியாவின் அனுபவங்களிலிருந்து இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் – ரஸ்ய தூதுவர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் செச்னியாவின் அனுபவங்களிலிருந்து இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் Alexander Karchava தெரிவித்துள்ளார். சிறுபான்மை தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். செச்னியா விவகாரத்தில் ரஸ்யாவின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். சிவில் யுத்தத்தின் பின்னர் நல்லிணக்க நிலைமைகள் குறித்து கண்டறிந்து கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றை செச்னியாவிற்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்விவகார…

  12. யாழில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு -எம்.றொசாந்த் யாழ். வர்த்தகர்கள் யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை இன்று 2 மணியுடன் பூட்டி, மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதன்போது கடை வாயில்களில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/187573/ய-ழ-ல-வர-த-தக-ந-ல-யங-கள-க-க-ப-ட-ட-#sthash.aZb9Ga3L.dpuf

  13. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுதில்லை ; ஜீ.எல். பீரிஸ் குற்றச்சாட்டு (எம்.சி.நஜிமுதீன்) எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தின் மீது மாற்றுக்கருத்துக் கொண்டவராக இல்லை. எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படுவதில்லை என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். தற்போது இலங்கை பாராளுமன்றில் எந்தவொரு நாட்டிலும் பின்பற்றப்படாத சம்பிரதாயம் நடைமுறையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஏனெனில் சகல நாடுகளிலும் அரசாங்கத்தின் மீது மாற்று கருத்து உள்ளவர்களே எதிர்க்கட்சியாக செயற்படுகின்றனர். மேலும் தேவையான சந்தர்ப்பத்தில் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு ஆட்சியமை…

    • 1 reply
    • 440 views
  14. சந்திரிகாவின் தீர்வுத்திட்டத்துக்காக கையுயர்த்தியதை மஹிந்த மறந்துவிட்டாரா? முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கடந்த 2000 ஆம் ஆண்டு மாகாண சங்கங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு வரைபு ஒன்றை முன்வைத்தபோது அன்று மஹிந்த ராஜபக்ஷ ஒரு அமைச்சரவை அமைச்சராக அந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கியதை இன்று மறந்துவிட்டார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். மேலும் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் மற்றும் கோத்திரவாதத்தில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பது தெரிகின்றது. பரிந்துரைக்கும் இறுதி யோசனைக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பு …

  15. வடக்கு முதல்வர், வட மீனவர்களுக்காக ஒரு கடிதமாவது எழுதியுள்ளாரா? ; விஜித்த ஹேரத் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய மீனவர்களுக்காக எத்தனை கடிதம் எழுதியிருப்பார். ஆனால் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் வட மீனவர்களுக்காக ஒரு கடிதமாவது எழுதியுள்ளரா? என ஜே.வி.பி. எம்.பி. விஜித்த ஹேரத் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன் அத்துமீறும் இந்திய படகுகளுக்கு துப்பாக்கி சூடு நடத்துவதாக கூறிய பிரதமர் என்ன செய்கிறார்? இவர்கள் இருவரும் இந்தியாவிற்கு அடிமைப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் வரவு–செலவுத் திட்டத்தின் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் செலவினத் தலைப்பிலான குழு நி…

  16. வடமாகாண சபையில் அஞ்சலி... மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஜெயராமுக்கு, இன்று செவ்வாய்க்கிழமை (06) வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா ஜெயராம் செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றுத் திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். அவருடைய இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெறும் நிலையில், வடமாகாண சபையின் மாதாந்த அமர்வும் நடைபெறுகின்றது. இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், வடமாகாண சபை மாதாந்த அமர்வு, நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. (படப்பிடி…

  17. இலங்கை தமிழ் மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தார் : மறைவு வேதனையளிக்கின்றது : இரா. சம்பந்தன் இலங்கைவாழ் தமிழ்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இந்தியாவின் மைசூர் மாநிலத்தில் ஜெயராம் - வேதவல்லி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். பெங்களூர் பிஷப் கொட்டன் மகளிர் உயர் கல்லூரியில் கல்வ…

  18. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பேரணி (குமணன்) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணியானது காலை 10.30 அளவில் முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி இலங்கை செஞ்சிலுவைச் சங்க காரியாலயத்திற்கு முன்பாக நிறைவடைந்தது. இந்த பேரணியை அன்பிற்கும், நட்பிற்கும் வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. பாராபட்சமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர். அத்துடன், இளைஞர்க…

  19.  'ஞானசார தேரரை கைதுசெய்யவும்' சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனமுறுகலை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரையும் அவரோடு இயங்கும் இனவாதக் குழுக்களையும் கைது செய்வதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பமான பொதுபலசேனா அமைப்பு, முஸ்லிம்களுக்கெதிரான மிக மோசமான வன்முறைகளை அரங்கேற்றியது. மஹிந்த அரசாங்கம், பொதுபல சேனாவின் இந்த மோசமான செயற்பாட்டை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல…

  20.  'ஒட்டுண்ணிக் குழுவின் தலைவர் கஜேந்திரன்குமார்' மனித அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு, கொடிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று நாம் போராடியபோது, தமிழ் மக்கள் அழிவதை விரும்பி யுத்தம் எனும் தீயிக்கு இந்த ஒட்டுண்ணிக்குழுவின் தலைவர் கஜேந்திரன்குமார, எரிபொருளை ஊற்றியவர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்களுக்கு ஈ.பி.டிபியும், அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறியிருக்கின்றார் இது அரசியல் காழ்ப்புணர்வோடு ஆதாரமற்ற ஒரு பொய்யாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

  21. ஜீப் ­மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­யவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார் முன்னாள் எம்.பி. ரவிராஜ் கொலையை நேரில் கண்ட விமான சேவை உத்­தி­யோ­கத்தர் சாட்சி (எம்.எப்.எம்.பஸீர்) நார­ஹேன்­பிட்டி மாதா வீதியில் இருந்து பிர­தான பாதையை நோக்கி வேக­மாக மரூன் நிற ஜீப் வண்டி (ரவி­ராஜின் ஜீப்) வந்­தது. அந்த பகுதி வளைவைக் கொண்­டது. இதன் போது நான் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த வேனின் வேக­மா­னது சடுதியாகக் குறைக்­கப்­பட்­டது. பாதை­யோ­ரத்தில் கறுப்பு நிற பையுடன் ஒருவர் நின்­றி­ருந்தார். மறு கணமே அந்த மரூன் நிற ஜீப் மீது அந் நபர் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்தார். அதன்­போது அந்த ஜீப் வண்டி சிறிது தூரத்­துக்கு இழுத்து செல்­லப்­பட்­டது. அடுத்த சி…

  22. சர்சைக்குரிய மங்களராம விஹாராதிபதிக்கு நீதிமன்றம் அழைப்பாணை.! அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களை ஒன்று திரட்டிய குற்றச்சாட்டுக்காக நீதி மன்றத்தில் பிரசன்னமாகுமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு இன்று அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற அசாரதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி சுமணரத்ன தேரர் தனது தொண்டர்களைத் திரட்டிக் கொண்டு வந்து பொலிஸ் தடைகளுக்கு மேல் ஏறி அமர்ந்து கொண்டு கூச்சலிட்டதுடன் ஆரவாரமும் செய்திருந்தார். இதனால் மட்டக்களப்பு நகரில் அன்றைய தினம் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. கடைகள் இழுத்து மூடப்பட்டிருந்தன, போக்குவரத்த…

  23.  ஜெயாவுக்கு ஜனாதிபதி மைத்திரி இரங்கல் தமிழ்நாட்டு முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொண்டுள்ளார். தனது டுவிட்டர் கணக்கிலேயே அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது மக்கள் நேசிக்கும் ஒரு தலைவராக இருந்தார். அவர் நேசித்த அன்புக்குரியவர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துகொள்கின்றேன் என்றும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/187516/ஜ-ய-வ-க-க-ஜன-த-பத-ம-த-த-ர-இரங-கல-#sthash.DudH97ML.dpuf ஜெயாவுக்கு நாமல் ராஜபக்ஷ …

  24. எதிர்க்கட்சி தலைவராக தொடர்ந்தும் சி.தவராசா எம்.றொசாந்த் வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக சி.தவராசாவே நீடிப்பார் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற சபை அமர்வின்போதே அவர் இதனைத்தெரிவித்தார். வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து சி.தவராசாவை நீக்கி விட்டு அப்பதவியை வை.தவநாதனுக்கு வழங்குமாறு ஈ.பி.டி.பியின் செயலர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தார். வடமாகாண சபை தேர்தலின்போது ஈ.பி.டி.பி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டமையால் இக்கோரிக்கையை டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரிடமும் வடமாகாண …

  25. வேலைக்குச் செல்லாமல் அம்மாவுக்கு அஞ்சலி ஆர்.ரமேஸ் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பெரும்பாலான தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள், இன்று வேலைக்குச் செல்லாமல், தமிழ்நாட்டு முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஜெயராமுக்கு, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/187522/வ-ல-க-க-ச-ச-ல-ல-மல-அம-ம-வ-க-க-அஞ-சல-#sthash.YZG9Tt7S.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.