ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
கடந்த காலத்தில் தனித்து பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளின் அமைப்புகள் இணைந்து தமக்கென தனியான பௌத்த பீடம் ஒன்றை ஏற்படுத்த தயாராகி வருகின்றன. இந்த அமைப்புகள் கடந்த காலத்தில் நாடு, சிங்கள இனம் மற்றும் பௌத்த மாதம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த அமைப்புகள் எனக் கூறப்படுகிறது. தனித்து போராட்டங்களில் ஈடுபடும் போது கிடைக்கும் பலன்களை விட இணைத்து புதிய பீடத்தை ஏற்படுத்தி தமது நிலைப்பாடுகளை முன்னெடுத்தால், அதிக பலன் கிடைக்கும் என்ற காரணத்தில் இந்த பௌத்த பிக்கு அமைப்புகள் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளன. குறித்த பௌத்த பிக்கு அமைப்புகள் கடந்த இரண்டு மாதங்களாக இணைந்து இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள…
-
- 5 replies
- 376 views
-
-
வடக்கு, கிழக்கு விகாரைகளை புனரமைக்க சீன தேரர் உதவி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள விகாரைகளை புனரமைப்பதற்கு, சீனாவைச் சேர்ந்த தேரர் ஒருவர், 20 மில்லியன் ரூபாயினை நன்கொடையாக வழங்கியுள்ளார். சீனாவின் க்வான்துன் பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த சங்கத்தின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய மின்க் ஸின் என்ற தேரரே, இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகுறைந்த வசதிகளுடன் காணப்படும் 100 விகாரைகளுக்கு, இந்த நன்கொடை பகிர்ந்தளிக்கப்படுவதுடன் ஒரு விகாரைக்கு 2 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புத்தசாசன அமைச்சின் மேற்பார்வையின் கீழ், இந்த நிதிப் பகிர்ந்தளிப்பு இ…
-
- 2 replies
- 378 views
-
-
கேடுகெட்ட ஆட்சியினை செய்து விட்டு நல்லவர்களை போல் நடிப்பதில் மஹிந்த ராஜபக்ச போன்று வேறு யாரும் இருக்க முடியாது என அமைச்சர் சரத் பொன்சேகா ஆவேசத்தோடு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தொடர்பிலான இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், கோடி கோடியான திருட்டில் ஈடுபட்ட மஹிந்த தற்போது நல்லாட்சி தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். இது வேடிக்கையான விடயம். அவரது ஆட்சியில் 100 பில்லியன் வரையிலான பணம் கொள்ளையிடப்பட்டது, அவை எங்கே போனது? என முடிந்தால் கூறுங்கள். அவை அனைத்தும் மக்களுடைய பணம். யுத்தம் செய்தோம் எனக் கூறுகின்றார் மஹிந்த, ஆனால…
-
- 0 replies
- 281 views
-
-
பிரதமர் வாக்குறுதிகள் தருவார் ஆனால் நிறைவேற்ற மாட்டார். பிரதமரையும் அரசாங்கத்தையும் நம்பி நம்பியே தமிழர்கள் ஏமாற்றத்தை எதிர் நோக்குகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமை்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றில் இன்று உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள், வடக்கிற்கு அரசாங்கம் கொடுத்துள்ள முன்னுரிமை எத்தகையது என்பதை சிந்திக்க வைக்கும் விதமாக அவரது உரை அமைந்திருந்ததாக பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வரவு செலவுத் திட்டத்தின்படி வடமாகாணத்துக்கு பாரிய அபிவிருத்தி என்பது வெறும் கண்துடைப்பாகவே அமைந்துள்ளது. கா…
-
- 0 replies
- 227 views
-
-
பருவகாலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் கொக்கு இனத்தை சேர்ந்த வர்ணப்பறவைகள் வல்லைவெளி ஆற்றில் குவிந்துள்ளன. நீண்டதூரம் பறக்க கூடிய இந்த பறவைகள் மாரிகாலம் ஆரம்பமாகும் போது நீண்டவாவிகள் உள்ள வல்லைவெளி, மட்டக்களப்பு வாவி போன்ற இடங்களுக்கு வருகின்றன. ஒஸ்ரேலியா, போன்ற வேறு கண்டங்களிலிருந்து இவை பருவகாலத்திற்கு இங்கு வருகின்றன. நன்றி படமும் வீடியோவும் செந்தூரன் சிவச்செல்வம், பருத்தித்துறை. http://www.thinakkathir.com/?p=66830
-
- 1 reply
- 499 views
-
-
அரசியல் ரீதியாக தமிழர்களை வழிநடத்துவதற்கு சரியான தலைமைத்துவம் இல்லை. அந்த தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் களைகள் எல்லாம் தாங்கள்தான் பயிர்கள் என்று சொல்லி எழுந்து நின்று ஆடிக்கொண்டிருக்கின்றன என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இன்று (18-11-2016) ஊற்றுப்புலத்தில் நெல் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, “களைகள் என்று சொல்லப்படுவது தனியே பயிரோடு சேர்ந்தது மாத்திரமல்ல. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கூடாக களைகளை நீங்கள் நீக்க நாங்கள் எவ்வாறு இயந்திரம் உங்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறோமோ அதேபோல் உங்களுக்கும், அரசியல் உட்பட சமூகத்தில் பல களைகள் உள்ளன. அந்தக் கள…
-
- 3 replies
- 385 views
-
-
அடுத்த ஆண்டு தீபாவளித் தினத்திற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றை வழங்கிவைக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சியில், தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று இரவு தேசிய தீபாவளிப் பண்டிகை நடைபெற்றது. இதில் ஆட்சியாளர் மைத்திரிபால ச…
-
- 37 replies
- 2.8k views
- 1 follower
-
-
வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தவராசா வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சின்னத்துரை தவராசா நீக்கப்ப ட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக ஈபிடிபியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் தவநாதன், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். எனினும்,மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம், பிரதி நிதி த்துவம் செய்யும் கட்சிக்கு இல்லை என்றும், அதனை வடமாகாணசபையின் அவைத்தலைவரே முடிவு செய்ய முடியும் என்றும், முன்னர் ஒரு ச…
-
- 3 replies
- 383 views
-
-
புத்தரின் போதனையை பரப்புவதற்கு பதிலாக ஒருசிலர் மதம் பிடித்து செயற்படுகிறார்கள் காவியுடை அணிந்து, புத்தரின் போதனையை மக்களுக்குப் பரப்ப வேண்டிய பௌத்த பிக்குகளுள் ஒரு சிலர் மதம் பிடித்து செயற்படுவதால் அவர்கள் பிக்கு என்று கூறுவதற்கே அருகதையில்லாதவர்கள். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரி வித்துள்ளார். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு உலக தரிசன நிறுவன த்தின் உதவியுடன் இலவசமாக பால் கொள்கலன்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையி…
-
- 2 replies
- 375 views
-
-
தமிழில் தேசிய கீதம்: எதிர்க்கும் மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம் தமிழில் தேசிய கீதம் பாடுவதை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறி, உயர் நீதிமன்றம் அந்த மனுவை, இன்று (18) நிராகரித்தது. இந்த மனு, மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது, குறித்த மனு தொடர்பான சட்டமா அதிபரின் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த விளக்கங்களைக் கருத்திற்கொண்டே, இந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அரசியலமைப்பின் பிரகாரம், தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கான அனுமதி, அரசியலமைப்பு விதிமுறைகளில் காணப்படுகின்றது என, சட்டமா அதிபரினால் முன்…
-
- 1 reply
- 249 views
-
-
இந்து சமயத்திற்கு இருந்த மிக நெருக்கடியான காலகட்டத்தில் அனைத்து வகையான நெருக்கடிகளையும் தனி ஒருவராக அல்லது இன்னும் குறிப்பிட்ட சிலருடன் இணைந்து கொண்டு முறியடித்தவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்பாணம் நல்லூரில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குரு பூசை ஸ்ரீ துர்க்கா தேவி மணி மண்டபத்தில் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையொட்டி இன்று(18) நடைப்பறெ்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களை நினைவு கூர்வதும் அவர்களின் குருபூசை நிகழ்வுகள் பற்றிய மாநாடுகளை நடாத்துவதும் அன்னா…
-
- 0 replies
- 664 views
-
-
இராணுவத்தின் சூட்டில் பலியான ஐந்து மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு வவுனியாவில் இராணுவத்தினரால் 2006 ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐந்து விவசாய கல்லூரி மாணவர்களின் 10ஆவது வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை விவசாயக் கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் குமு தினி சந்திரகாந்தன் தலைமையில் இன்று நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி ஏ 9 வீதியில் அமைந்துள்ள விவசாயக் கல்லூ ரிக்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த இராணுவ ட்ரக் மீது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரண்டு அதிகாரிகள் உட்ப…
-
- 1 reply
- 313 views
-
-
தமிழர்கள் அனைவரையும் புலி என்று திட்டிய மட்டு.மங்களராமய விகாராதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை (ஏறாவூர் நிருபர்) சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை மிகக் கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தமிழர்கள் அனைவரையும் புலிகள் என குறிப்பிட்டுள்ளமை குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் கண்டனத்தினை வௌியிட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அரச காணிகளை தங்களுக்கு வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப…
-
- 28 replies
- 3k views
-
-
அவைக்குள் ஆண் விபசாரி தான் எங்க உக்காந்து இருக்கிறேனு, ஒரே டவுட்டாதான் நேத்து இருந்தது உங்க மணியாட்டிக்கு. என்னா, உயரிய சபையில் என்னா என்னா நடக்கனும், என்னா என்ன பேசனுமுனே பலருக்கு தெரியபோங்க, விசயத்துக்கும் பேசுறதுக்கும் எந்தவிதமான சம்பந்தமே இருக்காது. இன்னும் சிலரோ சொல்லவேண்டியத சுருக்கமா, நச்சுனு, வலிக்காம, மத்தவுங்க மனசு நெகிழுமாறு சொல்லிப்புடுவாங்க, சிறிதரன் எம்.பியும் அவ்வாறு மனத நெகிழ வைத்துவிட்டாரு. சிங்கள பொதுமகனுக்கும், தலைவர்களுக்கும் சிந்தனையில் மாற்றம் வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுத்துவைத்துள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை விடுவியுங்கள், இறக்கச்சிந்தனையை காண்பியுங்கள், உங்கள் இதயங்களில் இருக்கும் ஈரமானப்பகுதிகளை தட…
-
- 0 replies
- 453 views
-
-
த.தே.கூ ஆதரவு, ஜே.வி.பி, எதிர்ப்பு 2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றது. அத்திட்டத்துக்கு ஜே.வி.பி எதிர்த்து வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்த போது, ஆளும் தரப்பினர் மேசைகளில் தட்டி ஆரவாரஞ் செய்தனர். - See more at: http://www.tamilmirror.lk/186379/த-த-க-ஆதரவ-ஜ-வ-ப-எத-ர-ப-ப-#sthash.uzNKkLpb.dpuf இ.தொ.கா, ஈ.பி.டி.பி ஆதரவு 2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் தற்போது…
-
- 2 replies
- 1k views
-
-
யாழ்.மணியந்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியில் தனது வீட்டு வளவினுள் கஞ்சா செடியை வளர்த்து வந்த ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று இரவு கைது செய்யப்பட்டார். 2ஆம் குறுக்குத்தெரு மணியம்தோட்டம் யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள மாய கிருஷ்ணன் ராஜேந்திரன் என்பவரே கைது செய்யப்பட்டவராவார். குறித்த நபர் தனது வீட்டு முற்றத்தில் இச்செடிகளை வளர்த்து வந்துள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பொலிஸ் அதிகாரிகளான சிறிகஜன்,சொருபன்,மற்றும் ஜெயத் ஆகிய மூவரும் குறித்த வீட்டிற்கு சென்று அவரை கைது செய்ததுடன் கஞ்சா செடிகளையும் கைப்பற்றினர். 23 சென்ரி ம…
-
- 0 replies
- 242 views
-
-
மஹிந்தவின் பிறந்தநாள் கொண்டாட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று வெள்ளிக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். மஹிந்த ராஜபக்ஷ, கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, எடுக்கப்பட்ட வீடியோ. - See more at: http://www.tamilmirror.lk/186321/மஹ-ந-தவ-ன-ப-றந-தந-ள-க-ண-ட-ட-டம-#sthash.IKeLag49.dpuf
-
- 2 replies
- 436 views
-
-
'வீதி விபத்தைத் தடுப்போம்' வீதி விபத்தினைத் தடுக்கும் முகமாக விழிப்புணர்வு நடவடிக்கை, யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்பாக சக்தி கலாசார அபிவிருத்தி மன்றத்தினால் நேற்று வியாழக்கிழமை (17) நடத்தப்பட்டது. ஏறத்தாழ 22 அமைப்புக்களின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நடவடிக்கையின் போது, வாகனங்கள் மறிக்கப்பட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மன்றத்தின் சார்பாகப் பலரும் கலந்துகொண்டிருந்ததோடு, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், தாதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: எஸ்…
-
- 0 replies
- 233 views
-
-
'பலத்த சவால்களுக்கு முகங்கொடுக்கத் தயார்' இலகுவான சவால்களுக்கு அல்லாமல் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிபெறச் செய்வதே இன்று தாய் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய பணியாகும் என,ஈ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வரலாற்றில் இடம்பெற்ற குறைகளை சரிசெய்து, தாய் நாட்டுக்காக புதிய பயணத்தை மேற்கொள்வதற்கு, நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இன்று ஒன்றுபட்டுள்ளன. எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும், நாட்டினதும் மக்களினதும் வெற்றிக்காக அப்பயணத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (18) முற்பகல், புளத்சிங்ஹல - மதுராவல பிரதேசத்துக்கு விஜயமொன்றை மேற…
-
- 0 replies
- 219 views
-
-
சி.வி, ஞானசார தேரரை கைதுசெய்: இராஜங்க அமைச்சர் பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளினால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தோல்வியை தழுவிக்கொண்டார் என்று சுட்டிக்காட்டிய இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா, இனவாதத்தை தூண்டி, தன்னை பிரபலப்படுத்திக்கொண்டு அரசியலுக்கு வருவதற்கு முயற்சிகின்ற ஞானசார தேரரையும், அரசியலில் இருந்துக்கொண்டு இனவாதத்தை பேசிக்கொண்டிருக்கின்ற, வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனையும், வெறுப்புணர்வை தூண்டும் சட்டத்தின் கீழ் கைதுசெய்யுமாறும் கோரிநின்றார். வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகளுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துமாறு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போதும் கோரிநின்றேன். இப்போதும், கூறுகி…
-
- 0 replies
- 285 views
-
-
வாக்கெடுப்பை பார்வையிட ஹெலியில் வந்தார் ஜனாதிபதி 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில், நாடாளுமன்றத்துக்கு 2:20க்கு வருகைதந்தார். ஜனாதிபதி வந்திறங்கிய ஹெலியிலிருந்து அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இறங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறும். - See more at: http://www.tamilmirror.lk/186338/வ-க-க-ட-ப-ப-ப-ர-வ-ய-ட-ஹ-ல-ய-ல-வந-த-ர-ஜன-த-பத-#sthash.UqoPUkQV.dpuf
-
- 0 replies
- 220 views
-
-
ஜெயா பாணியென இலங்கை அவையில் கிண்டல் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுகொண்டிருக்கின்றது. ஆளும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களுடைய வாதப்பிரதிவாதங்களை முன்வைத்து உரையாற்றிக்கொண்டிருக்கின்றனர். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்திலிருந்து விவாதத்தை அவதானித்துகொண்டிருகின்றார். இந்நிலையில், இந்த விவாதத்தின் கலந்துகொண்டு இன்றுக்காலை உரையாற்றிய, எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அனுரகுமார திஸாநாய…
-
- 0 replies
- 217 views
-
-
32 இலங்கையர்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர் இலங்கையின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென்று நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே நீதியமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், இன்று முதல் இனவாத அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நாட்டில் இடமில்லை என்றும் நீதியமைச்சர் கூறியுள்ளார். சில இணையத்தளங்கள் ஊடாக உண்மையற்ற மற்றும் அடிப்படைவாத செய்திகளை வௌியிடுவதாகவும், இதனால மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். அத்துடன் நா…
-
- 0 replies
- 176 views
-
-
கைதான இளைஞர்கள் மீது புலி முத்திரை குத்துவது நியாயமா? ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளோரில் 11 பேரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் அருணி ஆட்டிகல உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் இருவரை பிணையில் விடுவித்திருக்கின்றார். கடந்த இரு வாரங்களாக யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இந்த 13 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்ப…
-
- 0 replies
- 194 views
-
-
சமாதானத்தை நோக்கி நல்லாட்சி அரசு-சம்பந்தன் நல்லாட்சி அரசாங்கம் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம் அனைத்தையும் நிலைநிறுத்தி நாட்டை சமாதானத்தை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றது என இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். அத்துடன் நல்லிணக்கம்,ஜனநாயகம்,சுதந்திரத்தை வலுப்படுத்தல் மற்றும் தேசிய சமாதானத்தை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னோக்கி செல்லும் எனவும் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் நாட்டை ஓர் தெளிவான பார…
-
- 5 replies
- 515 views
-