ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
தமிழகத்திலுள்ள அகதிகளில் 20 பேர் நாடு திரும்புகின்றனர்.! உள்நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழல் காரணமாக இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் 20 பேர் எதிர்வரும் 15 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் 10 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு நாடு திரும்பவுள்ள அகதிகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் மீளவும் குடியேற்றப்படவுள்ளனர். மேலும் தாயகம் திரும்பும் அகதிகள…
-
- 0 replies
- 241 views
-
-
பரோனஸ் அனிலே வந்தார்; நாளை யாழுக்கு செல்வார் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனிலே, மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), இலங்கை வந்தடைந்தார். இனமோதல்களில் பாலியல் வன்முறைகள் தொடர்பான பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதியாகவும் கடமையாற்றும் இவர், தனது பதவிக் காலத்தில், இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருந்து பலதரப்பட்ட அரச மட்ட சந்திப்புகளில் ஈடுபடவுள்ள அவர், நாளை செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, வடமாகாண ஆளுநரையும் மு…
-
- 0 replies
- 215 views
-
-
'தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டுத்தரவும்' தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அதனை மீட்டுத்தருமாறு, இலங்கைக்கு உத்தியோகபூர்வ குறுகியகால விஜயத்தை மேற்கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தூதுக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘30 வருடகாலங்களாக இடம்பெற்ற அழிவுப்போரிலிருந்து படிப்படியாக முன்னேறிவரும் நாட்டை பல்வேறு திட்டங்கள் மூலமாக முன்னேற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகவும் பாராட்டுகிறது. ‘இந்நாட்டிலுள்ள …
-
- 0 replies
- 163 views
-
-
முன்னாள் போராளி குறித்து சம்பந்தனிடம் முறைப்பாடு கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தனது கணவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி, கிளிநொச்சிக்கு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் முறைப்பாடு செய்துள்ளார். முன்னாள் போராளியான 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நடராசா சபேஸ்வரன் என்பவர், கடந்த 23ஆம்திகதி விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவரிடம் அவரது மனைவி குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது கணவர், முன்னாள் போராளியாவார். இறுதி யுத்தத்தின் போது என் கணவர், இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் 2010ஆம் ஆண…
-
- 0 replies
- 275 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவது எனது நோக்கமல்ல ; விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்க தாம் முயற்சி செயற்வதாக எழும் தனது கருத்துக்களில் வலு இருக்கின்றதா என்பதைக் கூட்டமைப்பினர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். காலைக்கதிர் நாளிதழின் பிரசுரமும் ஆரம்ப விழாவும் நேற்று இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டமைப்பின் ஒற்றுமை தம்மால் சீர்குலைந்து போகக்கூடும் …
-
- 1 reply
- 269 views
-
-
“ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது அவசியம்” : மைத்திரி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை இவ் வருடம் நிறைவு செய்யமுடியாது. அடுத்த வருடமே அது நடைபெறும். மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று விடயம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். நான் ஒருதடவையே ஜனாதிபதியாக இருப்பேன் கூறியதில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். http://www.virakesari.lk/article/13219
-
- 1 reply
- 443 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புதுடெல்லி வந்திருந்த அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை, பிபிசி தமிழோசையின் ஃபேஸ்புக் நேரலையில் பங்கேற்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒருங்கிணைந்து ஒரு கட்சியாக உருவாக்குவதில் என்ன பிரச்…
-
- 1 reply
- 334 views
-
-
பெருமளவு பொலிஸார் போதைப்பொருள் விற்பனை பங்காளிகள்-சந்திரிகா குற்றச்சாட்டு பொலிஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோரும் சில அரசியல்வாதிகளும் இலங்கையில் நட க்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகளாக இருப்பதாக முன்னாள் ஜனா திபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்தும் முன்னர், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹாவில்நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போதே முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். கிராமத்தில் உள்ள விகாரைகளின் பி…
-
- 0 replies
- 274 views
-
-
யாழில் மூன்று இளைஞர்கள் கைது -மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் யாழ்.கொக்குவில், திருநெல்வேலி மற்றும் சில்லாலைப் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நேற்றுச் சனிக்கிழமை(05) கைது செய்யப்பட்டுள்ள தாக கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் கபில்நாத், திருநெல்வேலி பகு தியை சேர்ந்த கெங்காதரன் பிருந்தாபன், சில்லாலைப்பகுதியை சேர்ந்த அலெக்ஸ் அரவி ந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. சீருடை மற்றும் சிவில் உடையில் வந்தவர்களே கைது செய்து …
-
- 0 replies
- 280 views
-
-
அண்ணன் சம்பந்தனின் கோரிக்கைகளை ஏற்று அரசியலுக்குள் பிரவேசித்த நான்; பதவிகள், அதிகாரங்களை அடைய வேண்டும் என என்றுமே அவாக் கொண்டதில்லை எனத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், முதலமைச்சர் பதவி எனக்குக் கிடைத்தமை ஒரு சிலரின் மனதை பாதித்திருந்தால் அதற்கும் சம்பந்தனே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார். காலைக்கதிர் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் யாழ்.நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சம்பந்தன் என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவேளை, வடக்கு முதலமைச்சர் பதவி ஏதோ வகையில் என் மடியில் வந்து விழுந்தது. அது ஒ…
-
- 1 reply
- 461 views
-
-
-
- 0 replies
- 238 views
-
-
சுலக்சனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார் சம்பந்தன் [ Sunday,6 November 2016, 04:54:28 ] பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்சனின் இல்லத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் விஜயம் செய்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் சென்று குடும்பத்தினருடன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது சுலக்சனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த இரா. சம்பந்தன் மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெறும் எனவும், நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந…
-
- 2 replies
- 443 views
-
-
'ஆவா' சந்தேகநபர்கள் 6பேர் கைது ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் 6பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilmirror.lk/185472/-ஆவ-சந-த-கநபர-கள-ப-ர-க-த-
-
- 0 replies
- 341 views
-
-
வடக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கென 600 மில்லியன் யூரோக்களை வழங்குவதற்கு ஒஸ்ரியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் ஆகியன முன்வந்துள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் குறித்த நிதியானது நேரடியாக வடக்கு மாகாண சபையிடமோ அல்லது மத்திய அரசிடமோ வழங்காது நேரடியாக குறித்த நாடுகளே அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளன என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். குறித்த நிதி மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை வைத்தியசாலைப் புனரமைப்புச் செய்வதற்கும், வடக்கு மாகாணத்தில் விசேட தேவையுடையயோர் 42ஆயிரம் வரையில் உள்ளனர் எனவும், அவர்களுக்காக விசேட வைத்தியசாலையொன்றை முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 296 views
-
-
மறவன் புலவில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி தமிழரசு கட்சியின் பேச்சாளர் சுமந்திரனுக்கு இலக்கு வைக்கப்பட்டு இருந்தது என்று வடமாகாண சபை உறுப்பினர் சயந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிக் கிளைத் திறப்பு விழா நிகழ்வில் நன்றியுரை ஆற்ற அழைக்கப்பட்ட சயந்தன் நன்றி கூறுவதைத் தவிர்த்து தனது மற்றும் சுமந்திரனின் அரசியல் எதிரிகளை வசைபாடுவதில் நீண்ட நேரம் செலவளித்தார். உரையின் இறுதியில் அந்தத் தற்கொலை அங்கியை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச்சென்ற முக்கிய சூத்திரதாரி இன்னும் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்ட சயந்தன், அந்தச் சூத்திரதாரி தனது அலுவலகத்துக்கு முன்னால் வீடு வாடகைக்கு எடுத்து வெளிநாட்டுப் பெண்ணை அமர்த்தி சுமந்திர…
-
- 0 replies
- 426 views
-
-
இறக்காமத்தில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விவகாரத்துடன் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதுடன் மாத்திரமன்றி அதற்கு அருகிலுள்ள காணியையும் தேரர்கள் கோரியிருப்பதாகவும் தான் அறிந்துள்ளதாகவும் இதற்குப் பின்னால் நல்லாட்சியின் முக்கிய அமைச்சரொருவர் இருப்பதாக கூறப்படுவதாகவும் அவ்வாறாயின் அந்த அமைச்சர் தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க முயலும் சக்திகளுக்கு துணை போகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் சிறுபான்மை சமூகத்தினரின் பூர்விக இடங்கள் திட்டமிடப்பட்ட வகையில் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் யுத்தததால்…
-
- 0 replies
- 261 views
-
-
அரசியல் தீர்வைக் குழப்ப வன்முறை குழுக்கள்! வடக்கு, கிழக்கு இணையாவிட்டால் தமிழ் பேசும் மக்களின் நிலங்கள் பறிபோகும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆர்.பி., எஸ்.கணேசன் நாட்டில் அரசியல் தீர்வுக்கான நட வடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற வேளையில் அதைத் தடுத்து நிறுத்துவதற்கு பல சக்திகள் இலங்கையின் பல பாகங்களிலும் செயற்பட்டு வருகின்றன. தற்போதைய அரசியல் தீர்வுக்கான முயற்சியை தொடர்வதாக இருந்தால் அமைதி, சமாதானம் என்பன நீடிக்க வேண்டும். அமைதி, சமாதானம் இல் லாத குழப்பகரமான சூழலில் அரசி யல் தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது கடினம். ஆகவே சமாதானத்தைக் குலைத்து அமை…
-
- 0 replies
- 202 views
-
-
சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி மரநடுகை மாதத்ததை முன்னிட்டு, வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி சனிக்கிழமை (05) ஆரம்பமாகியது. பொதுமக்களுக்கு தரமான மரக்கன்றுகளைப் பெற்றக்கொடுத்தல், உள்ளூர் தாவர உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தல் ஆகிய நோக்கத்தில் இம்;மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த தாவர உற்பத்திப் பண்ணையாளர்கள் 14 காட்சிக் கூடங்களை அமைத்துள்ளனர். ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு கல்வி அமை…
-
- 0 replies
- 204 views
-
-
சீனத்தூதுவரின் கருத்தால் அதிருப்தி வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்படுகிறார். சீனத்தூதுவரின் கருத்து தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக, சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங்கிற்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பாணை விடுக்கவுள்ளார். கடந்தவாரம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய சீனத் தூதுவர், யி ஷியாங்லியாங், முன்னைய ஆட்சிக்காலத்தில் அதிக வட்டிக்கு சீனா கடன் வழங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார். 2 வீத வட்டிக்கே கடன் வழங்கப்பட்டதாகவும்,நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதுதொடர்பான தவறான தகவல்களை தெரி வித்து வருவதாகவும் அவர் குறிப்…
-
- 0 replies
- 304 views
-
-
பின்தங்கிய, எல்லையோர பிரதேசங்களில் நில அபகரிப்புக்கள் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கையை அந்நியர்கள் கைப்பற்றியபோது கரையோரங்களைத்தான் முதலில் கைப்பற்றினர். அதன் ஊடாக அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டு மையத்தில் இருக்கும் ஆட்சி அதிகாரங்களைப் கைப்பற்றினார்கள். அத்துடன் எல்லை ஓரங்களிலேயே தமது அடையாளங்களையும் நிலை நிறுத்தினர். இவ்வாறான நிலை ஒன்றையே இன்று ஈழமும் எதிர்கொள்கிறது. தமிழர் தாயகத்தின் எல்லை ஓரங்களை கைப்பற்றும் முயற்சியில் பெரும்பான்மையினர் ஈடுபடுகின்றனர். அத்துடன் அங்கு தமது அடையாளங்களை நிலைநிறுத்தும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். இழக்கப்…
-
- 0 replies
- 640 views
-
-
இலங்கை ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெறுவதற்கு ஜேர்மனி உதவி இலங்கை ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெறுவதற்கு ஜேர்மனி தங்களது பங்களிப்பை தர எதிர்பார்த்துள்ளதாக ஜேர்மனின் துணை அதிபர் சிக்மர் கேப்ரியல் தெரிவித்துள்ளார். 15 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கை சரியான பாதையில் தங்களது முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது, அதற்கு ஜேர்மன் தங்களது வாழ்த்துக்களை கூறிக்கொள்வதாக சிக்மர் கேப்ரியல் தெரிவித்துள்ளார். இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் கல்வித்துறை முன்னேற்றங்கள் மற்றும் நவீன அபிவிருந்தி தொடர்பாகவும் ஜேர்மனின் துணை அதிபரிடம் த…
-
- 0 replies
- 215 views
-
-
சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழந்தார் ஜீ.எல்.பீரிஸ் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இயல்பாகவே இழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் புதிய கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது உறுப்புரிமை இயல்பாகவே பறிக்கப்படும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/13204
-
- 0 replies
- 235 views
-
-
'சி.வி தொடர்பான முடிவு சரியானது' வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நாம் அன்று தெரிவு செய்தது சரி என நான் நினைக்கிறேன'; என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாளிதழ் ஒன்றின் சிறப்பு இதழ் வெளியீடு, யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை (05) இடம்பெற்றது. இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு மாகாண தேர்தல் நடாத்துவதற்கு முடிவு வந்த போது முதலமைச்சர் தெரிவு என்பது ஒரு முக்கிய விடயமாக இருந்தது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று கூடி ஆராய்ந்தது. அதற்கு முன்பே, சி.வி.விக்னே…
-
- 0 replies
- 554 views
-
-
சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள இராணுவ வீரர்களை சந்தித்தார் மஹிந்த..! ஓய்வூதியத்தில் காணப்படும் முரண்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஒல்கோட் மாவத்தையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ள விசேட தேவையுடைய இராணுவ வீரர்களை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை சந்தித்துள்ளார். 12 வருடங்கள் இராணுவ சேவையாற்றாத விசேட தேவையுடையோருக்கும் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்கக் கோரி இந்த போராட்டம் கடந்த 5 தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்றிலிருந்து சாகும் வரையான உண்ணாவிரத போராட்டமாக விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13161
-
- 2 replies
- 499 views
-
-
கிளிநொச்சி கோவில் ஒன்றில் திருடர்கள் கைவரிசை : அம்மனின் நகைகள் திருட்டு கிளிநொச்சி ஆனந்தநகா் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அல்லது ஆலய மண்டபத்தின் மேலுள்ள துவாரத்தின் ஊடாக திருடா்கள் உள்நுழைந்து திருடியிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது. இச்சம்பவத்தின் போது 5 பவுண் தங்க நகைகளான இரண்டு அம்மனின் தாலி, ஒரு சங்கிலி, ஒரு கண்மடல் போன்றன திருடப்பட்டுள்ளதோடு ஆலயத்தின் மூல விக்கிரகத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஜம்பொன் இயந்திர தகடும் திருடா்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு சுமா…
-
- 7 replies
- 643 views
-