ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143411 topics in this forum
-
10 வருடம் சம்பளம் இல்லாது சவூதியில் இருந்த இலங்கைப்பெண் ; மொத்த சம்பளத்துடன் நாடு திரும்பினார் (எம்.ஆர்.எம்.வஸீம்) சவூதியில் பத்துவருடங்களாக சம்பளம் எதுவும் பெறாமல் பணியாற்றிவந்த பெண்ணொருவர் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெலிஅத்த பிரதேசத்தைச்சேர்ந்த நந்தா மனம்பெரே என்ற பெண் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து கடந்த 2006ஆம் ஆண்டு வீட்டுப்பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். அந்த நாள் முதல் அவருக்கு தொழில் செய்த வீட்டில் சம்பளம் வழங்கியிருக்கவில்லை. அத்துடன் தன…
-
- 0 replies
- 499 views
-
-
இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்கும் வயது 12 ஆக உயர்கிறது இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுபிராயத்தினருக்கு தண்டனை வழங்கும் வயது எல்லையை 12 ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன் பிரகாரம் தற்போது நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்டத்திலுள்ள தண்டனை கோவையில், சில திருத்தங்களை செய்ய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் முன் வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஓப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்ட கோவையில் தண்டனை வழங்குவதற்குரிய ஆகக் குறைந்த வயது எல்லை 8 ஆகும். உத்தேச திருத்தம் 12 வயதுக்குட்பட்ட சிறுவரொருவரால் குற்றமொன்று புரியப்பட்டால் தண்டனை வழங்கப்படக் கூடாது …
-
- 0 replies
- 413 views
-
-
பிரித்தானிய அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு பிரித்தானிய அமைச்சர் பார்னோஸ் அனேலி யாழ்ப்பாணத்திற்கு செல்ல உள்ளார். எதிர்வரும் வாரம் அவர் இலங்கைக்கு வரஉள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஜனநாயகத்தை மேம்படுத்துதல், மனித உரிமைகளை பாதுகாத்தல், ஊழல் மோசடிகளை ஒழித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியன குறித்து வலியுறுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்களை அனேலி சந்திக்க உள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெண்க…
-
- 0 replies
- 321 views
-
-
ஆட்சி மாற்றத்தின் பின்னரும் முல்லை கேப்பாபுலவு பெண்களுக்கு இராணுவம் தொந்தரவு: முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு மக்களின் காணிகளில் பாரிய முகாமிட்டுள்ள இராணுவத்தினர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனிடம் கேப்பாபுலவு மக்கள் இதை எடுத்துரைத்துள்ளனர். தமது நிலத்தை கோரி தொடர்ச்சியாக இந்த மக்கள் பல வகையிலான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். கேப்பாபுலவு என்ற வளம் மிக்க பிரதேசத்தை அபகரித்துக்கொண்டு தம்மை மாதிரிக் கிராமம் ஒன்றில் குடியிருத்தியு…
-
- 0 replies
- 351 views
-
-
நான் சீனாவின் நிதியமைச்சர் அல்ல ; ரவி கருணாநாயக்க (ரொபட் அன்டனி) நான் சீனாவின் நிதியமைச்சர் அல்ல. மாறாக இலங்கையின் நிதியமைச்சராகவே உள்ளேன். அந்தவகையில் சீன தூதுவர் முன்வைத்துள்ள விடயங்களை நிராகரிக்கின்றேன் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து பெறப்படும் கடன்களின் வட்டி விகிதம் அதிகம் எனில் ஏன் தொடர்ந்தும் சீனாவிடம் இலங்கை கடன் கோரவேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஷியான்லேங் தெரிவித்திருந்த கருத்து குறித்தே நிதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கைக்கு 2 வீதத்த…
-
- 0 replies
- 436 views
-
-
யாழ் பொலிஸ் நிலையத்திற்கு ஒரு மாதத்தில் மூன்றாவது பொறுப்பதிகாரி நியமனம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் தண்டனை இடமாற்றம் பெற்றதையடுத்து , ஊர்கா வற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட கேம விதான நேற்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். யாழ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிமை வாளுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணம் செய்தவர்கள் என;ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும் இது தொடர்பில் குறித்த கைது தொடர்பில் மேலதிகாரிகளிற்கு அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் பதில் பொறுப்பதிகாரி முல்லைத்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்…
-
- 1 reply
- 206 views
-
-
ஊடகவியலாளர்களுடன் முரண்பாடு மன்னிப்பு கோரியது மாணவர் ஒன்றியம் ஊடகவியலாளர்களை மாணவர்கள் எதிர்த்துப் பேசிய சம்பவத்திற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மன்னிப்பு கோரியு ள்ளது. மாணவர்கள் ஊடகவியலாளர்களை முறைகேடாக அல்லது எதிர்த்துப் பேசினார்கள் என்ற கருத்து நிலவிவருகின்றது. இதற்கு மாணவர் ஒன்றியம் சார்பில் தாம் மன்னிப்பு கோருவதாக யாழ் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கந்தசாமி ரஜிவன் தெரிவித்துள்ளார் . நேற்று புதன்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்க ண்டவாறு அவர் தெரிவித்தார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 239 views
-
-
மாணவர் மதுவுக்கு அடிமையாவதற்கு பெற்றோரே முழுமுதற் காரணம் பாடசாலை மாணவர்கள் மது, போதைப்பொருட்களிற்கு அடிமையாவதற்கு அவர்களது பெற்றோர்களே முக்கிய காரணம் என மது வரித்திணைக்களத்தின் வடமாகாண உதவி மதுவரி ஆணையாளர் ந. சோதிநாதன் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தற்போது இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் மது, போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றன.இதற்கு பெரும்பாலும் அவர்களின் பெற்றோரே. மாணவர்கள் இன்று மதுபானங்களை கொள்வனவு செய்கின்றார்கள் எனின் அவரகளிடம் பணம் எப்படி வருகின்றது. நான் மாணவனாக இருந்த காலப்பகுதியில் (1979ஆம் ஆண்டளவில்) எனது வீட்டிற்கும் …
-
- 0 replies
- 247 views
-
-
சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்பேன் : சு.க. நிகழ்வில் ஜனாதிபதி உறுதி தோல்விகளை சந்தித்து பிளவடைந்து காணப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தூய்மையாக்கி எதிர்காலத்தில் மக்களின் பலத்தை கொண்டு எமது கட்சியின் தலைமையில் அரசாங்கம் அமையும் என இவ்விடத்தில் உறுதிபூணுகிறேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் ஆரம்பகட்ட நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை மஹரகமவில் நடைபெற்றது. இந்நிகழ்விலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் ஆரம்ப நிகழ்வை கட்சியின் மத்திய இடமாக விளங்கும் கொழும்பின் மஹரகம பக…
-
- 1 reply
- 358 views
-
-
"என் தந்தையை இந்திய இராணுவத்தினர் இந்தக் காணியில் வைத்தே அடித்துக் கொன்றனர்" என் தந்தையை இந்திய இராணுவத்தினர் இந்தக் காணியில் வைத்தே அடித்துக் கொன்றனர் என மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு நாவலடிச் சந்தியில் தமது வீடு, காணி என்பனவற்றை இழந்துள்ள காசிம்பாவா பர்ஸானா தெரிவித்தார். அந்தத் துயரம் மறைவதற்குள் இப்பொழுது இலங்கை இராணுவத்தினர் எமது இடத்தைக் கைப்பற்றி எம்மை அகதிகளாக்கியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொழும்பு, மட்டக்களப்பு. திருகோணமலைச் சந்தி நாவலடியில் படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை மீட்டுத் தருமாறு கோர…
-
- 0 replies
- 471 views
-
-
முழுப்பூசனிக்காயை சேற்றில் மறைக்கலாமா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக யாழ்ப்பாணத் தம்பி கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்? எண்டு சொல்லுவினம். பிறகென்ன? இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான் எண்டுற மாதிரித்தானே கதைக்கினம். பொடியள் ஆயுதம் தூக்க நாங்கள்தான் காரணம்! நாங்கள் காரணம்!! எண்டு சொல்லிச்சினம். யாழ்ப்பாணத்திலை வாழுற முகாம் மக்களின்டை துயரத்தை அங்கை போய் பாக்கச் சொல்லிச் சொன்னார் ஜனாதிபதி மைத்திரி. ஆனால் ஜனாதிபியின்டை பேஸ்புக்கிலை ஒரு கதை விட்டிருக்கினம். அதாவது புலியளின்டை பயங்கரவாத நடவடிக்கையாலைதான் வலி மக்கள் அகதி ஆனவையளாம். ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு …
-
- 1 reply
- 413 views
-
-
யுத்தகுற்றங்களிற்கான பொறுப்புக்கூறலை மறந்துவிடுங்கள் – எக்கனமிநெக்ஸ்ட் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் தேசிய அரசாங்கத்திற்குள் காணப்படும் மோதல்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல்சீர்திருத்தங்களை பாதித்துள்ளதுடன், அரசாங்கத்திற்குள் நெருக்கடியை ஏற்படுத்தி பிரதமரை கவிழ்ப்பதற்கான முயற்சிகளை எதிரணியினர் மேற்கொள்வதற்கான துணிச்சலையும் அளித்துள்ளது. ஓக்டோபர் 12 ம் திகதி ஜனாதிபதி வெளியிட்ட கடுமையான கருத்துக்களால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்வதற்கான முயற்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த உரையில் ஜனாதிபதி பிரதமரின் ஆட்சியின் கீழ் உள்ள இரு அமைப்புகள் மீது நேரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்த…
-
- 0 replies
- 303 views
-
-
யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களே ஹாவா குழுவில் அதிகம் அங்கம் வகிக்கின்றனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு யாழ்ப்பாணத்தில் காணப்படும் பிரபல பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரம் கற்கும் மாணவர்களே அதிகளவில் ஹாவா குழுவில் அங்கம் வகிப்பதாக வடக்கில் கடமையாற்றி வரும் காவல்துறை அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஹாவா குழு குறித்து விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஹாவா குழுவில் சுமார் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும், இவர்களில் அதிகளவானர்கள் பாடசாலை மாணவர் எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஹாவா குழு உறுப்பினர்கள் தொலை…
-
- 0 replies
- 287 views
-
-
மாதகல் கடலில் 52கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பு ஊடாக கடத்தப்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனைக் கடத்தி வந்த சந்தேகநபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.ஏ.ஆர் மாசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து மாதகல் கடற்பரப்பு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கேரள கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக இளவாலை பொலிஸா ருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து காங்கேசன்துறை விஷேட பொலிஸ் குழு கடற்படையினரது உதவியுடன் விசாரணை நடவடிக்கைகளை முன்னெ டுத்தது. இந்தநிலையில் மாதகல் கடல்பகுதியில் சந்தேகத்திற்கு இட…
-
- 0 replies
- 150 views
-
-
பழைமையான மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏ-9 வீதியில் போக்குவரத்து தடை (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சியில் பழைமை வாய்ந்த மரமொன்று முழுமையாக சரிந்து விழுந்ததில் பலமணிநேரம் ஏ9 வீதியில் போக்குவரத்து தாமதமடைந்திருந்தது. கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள பழைமை வாய்த ஆல மரம் சரிந்து விழுந்ததில் பல நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. நேற்று புதன் கிழமை இரவு ஒன்பது முப்பது மணியளவில் மழை பெய்து கொண்டிருந்த வேளை குறித்த மரம் வேரோடு சரிந்து ஏ9 வீதிக்கு குறுக்காக விழ்ந்துள்ளது. இதனால் பல மணி நேரம்போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்ட அனார்…
-
- 0 replies
- 394 views
-
-
மத்தியவங்கி விவகாரம் : நீதிமன்ற விசாரணை ஊடாக தீர்வைப்பெற வேண்டும் : சு.க. நிகழ்வில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு மத்திய வங்கி பிணைமுறிகள் விவகாரம் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு தீர்வு காண முயாது. இவ்விடயம் தொடர்பில் நாட்டு மக்கள் உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமாயின் நீதிமன்றம் ஊடாகவே தீர்வை பெற்றுகொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் ஆரம்பகட்ட நிகழ்வு தற்போது மஹரகமவில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்நிகழ்விலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஆட்சியில் தவறுசெய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவும் எனது ஆட்சியில் எவரும் த…
-
- 0 replies
- 277 views
-
-
பெண்களை வர்ணிப்பதும் பாலியல் இம்சையே.! மாணவியொருவரின் அழகை விமர்சித்தால் வர்ணனை செய்தால் கூட அதுவும் பாலியல் இம்சையாகுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவித்தார். காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற மாணவர்களும் ஒழுக்க விழுமியமும் எனும் செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ஒரு பெண்ணின் அழகை விமர்சித்தால் வர்ணனை செய்தால் அதுவும் கூட பாலியல் இம்சையாகும். அந்தப் பெண்ணுக்கு செய் யும் பாலியல் தொந்தரவாகும். அதேபோன்றுதா…
-
- 0 replies
- 311 views
-
-
பிரதமர் ஹொங்கொங் சென்றடைந்தார் 15 ஆவது ஜேர்மனிய வியாபார ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹொங்கொங் சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார். ஆசிய பசுபிக் வலய வர்த்தகர்கள் மற்றும் ஜேர்மனிய வர்த்தகர்களுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர் நடைபெறும் முதலாவது மாநாடு இதுவாகும். ஹொங்கொங் விக்டோரியா துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஹொங்கொங் சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மண்டபத்தில் இன்று முதல் எதிர்வரும் 05ம் திகதி வரை இம்மாநாடு இடம்பெறுகின்றது. …
-
- 1 reply
- 256 views
-
-
அமைச்சரின் தீர்மானத்தை செயற்படுத்த இடமளியோம்! பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் வாயிற் காப்போராக கடமையாற்ற, பாதுகாப்பு தரப்பினரை நியமிக்கும் போக்குவரத்து அமைச்சரின் தீர்மானத்தை செயற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என, பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற் காப்போர் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பொருட்டு, அமைச்சரால் மற்றுமாரு பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, அந்த சங்கத்தின் செயலாளர் நிமல் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற் காப்போர், மேற்கொண்டுள்ள தொடர் வேலை நிறுத்தம் காரணமாக, அந்தக் கடமைகளில் பாதுகாப்பு தரப்பினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக, நேற்று போக்குவரத்து …
-
- 0 replies
- 388 views
-
-
இறந்த நிலையில் மீன்கள்... வடமலை ராஜ்குமார் திருகோணமலை கடற்கரையில், பெருமளவு மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. பூச்சக்கன்னி (சிங்களத்தில் போலோ) எனப்படும் பெறுமதியான மீன் இனத்தைச் சேர்ந்த மீன்களே, இவ்வாறு கரையோதுங்குகின்றன. சுமார் 20 ஆயிரம் கிலோகிராமுக்கு அதிகமான மீன்கள், இதுவரை இறந்த நிலையில் கரையோதுங்கியுள்ளதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான காரணத்தை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் நேற்று 2ஆம் திகதி 10 ஆயிரம் கிலோகிராமுக்கு அதிகமான மீன்கள், கரைவலை மூலம் பிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/185244/இற…
-
- 0 replies
- 270 views
-
-
வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபரை விடுவிக்க உத்தரவிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விரைவில் கைது! மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சந்தேக நபரை விடுவிக்குமாறு உத்தரவிட்டதாகக் கூறப்படும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி புங்குடுதீவு பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து குறித்த பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு குறித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஆலோசனை வழங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தெரி…
-
- 0 replies
- 199 views
-
-
வடக்கில் ஆவா குழு உருவாக்கம் -அரசின் குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தா முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே வடக்கில் ‘ஆவா’ குழுவை உருவாக்கினார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ள குற்றச்சாட்டை, கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார். ”மலினத்தனமான குற்றச்சாட்டுகளைத் சுமத்துவதை விட்டு, அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பொறுப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கடமையை அவர் சரியாக செய்ய வேண்டும். அபத்தமான கதைகளைக் கொண்டு வரக் கூடாது. இதுபோன்ற செயல்களைச் செய்யும் ஆற்றல் எனக்கு இருக்குமேயானால், அதனை நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்வேன். அமைச்சர்களால் மேற்கொள்ளப்படு…
-
- 0 replies
- 173 views
-
-
அம்பாறையில் சட்டவிரோத புத்தர் சிலையை அகற்ற பிக்குகள் மறுப்பு அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் இறக்காமம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாய க்கல்லி மலை மீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை திடீரென வந்த பௌத்த பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவினரால், தமிழ்க்கிராமமான மாணிக்கமடுவை அடு த்த மாயக்கல்லி மலை மீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. அந்தப் பகுதியில் பௌத்தர்கள் எவரும் வசிக்காத நிலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையானது அந்தப்பகுதியில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களிடையே அதிருப்தியையும் விசனத்த…
-
- 0 replies
- 141 views
-
-
லசந்தவின் கைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்க உத்தரவிட்ட கோத்தா!வெளிவந்தது இரகசிய ஆவணம் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்னதாக, அவரது கைத்தொலை பேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்பது, அரச புலனாய்வுச் சேவை இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவை தலைவராக இருந்த, கீர்த்தி கஜநாயக்கவின் கையொப்பத்துடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கொழும்பு ரெலிகிராப் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணத்தில், லசந்த விக்கிரமதுங்கவின் கைத்தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட சில கைத்தொலைபேசி உரையாடல்கள…
-
- 0 replies
- 153 views
-
-
அரபு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வது ஏன்? காரணம் கூறுகிறார் கலகொட : பின்னணியில் பைசர் உள்ளதாகவும் தகவல் (ஏ.ஆர்.ஏ.பரீல்) ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் அபுதாபி போன்ற நாடுகள் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்து, ஹோட்டல்கள் நிறுவி முஸ்லிம் குடியேற்றங்களையும் பள்ளிவாசல்களையும் நிறுவுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியிலிருந்து செயற்படும் அமைச்சர் பைசர் முஸ்தபாவைக் கைது செய்து இது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும், அவரது அமைச்சுப் பதவியை பிரதமர் ரத்துச் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கோரியுள்ளது. அம்பகமுவ பிரதேச சபை பிரிவில் நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட…
-
- 11 replies
- 1k views
- 1 follower
-