Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் கைதி சித்திரவதை செய்து கொலை :ஏழு பேருக்கு விளக்கமறியல் ; ஒருவருக்கு பிடியாணை (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் 2011ஆம் ஆண்டு திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸாரினால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் 7 பேரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏழாவது சந்தேக நபர் மன்றில் முன்னிலையாகாத நிலையில் குறித்த நபருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ம…

  2. மன்னார் முசலி பிரதேச பகுதியில் இன்று ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை அடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. குறித்த பகுதியில் இன்று இரவு ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து அங்கு பொது மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் அண்மைய நாட்களில் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த ஒருவரை இன்று பொது மக்கள் மடக்கி பிடித்துள்ள நிலையில், பொது மக்களுக்கும், கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் அங்கு இடம்பெற்ற சம்பவம் என்ன..? தற்போது கடற்படையினருடைய நிலைப்பாட…

  3. பெல்ஜியத்தில் சொக்லெட் தயாரித்த ரணில் (படங்கள் இணைப்பு) பெல்ஜியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொக்லெட் நிறுவனமொன்றில் வைத்து சொக்லெட்டுகளை தயாரித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொக்கலட் தயாரிப்பதை போன்ற புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வது மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பிரதமர் பெல்ஜியம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/12472

  4. பிரபாகரனின் இறப்பிற்கு மரண சான்றிதழ் வழங்க முடியும் – பசில் ராஜபக்ஷ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்தமைக்கான, மரண சான்றிதழ் வழங்கப்படாவிட்டாலும் நல்லாட்சியில் அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான மரண சான்றிதழை ஏன் மஹிந்த அரசு வழங்கவில்லை என்பது சர்வதேச ரீதியில் எழுப்பப்பட்டு வரும் கேள்வியாகும். இந்நிலையில், நேற்றைய தினம் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த பசில் ராஜபக்ஸவிடம் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதி…

  5. யாழில் விபத்து : இருவர் காயம் யாழ் தட்டாதெருச் சந்தியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் சாரதிகள் இருவரும் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒழுங்கை ஒன்றிலிருந்து யாழ் தடடாதெருச் சந்திக்கு ஏறும்பொழுது யாழிலிருந்து கே .கே .எஸ் வீதி நோக்கி சென்ற மோ. சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதியதிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வ…

  6. யாழ்ப்பாணம்-திருநெல்வேலி சந்தியில் இரண்டு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியபோது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் மன்னிக்க முடியாத பாவச் செயல் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ் மேல் நீதிமன்றத்தில் நேற்று (18) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிபதி இளஞ்செழியன் எதிரிக்கு பிணை வழங்க மறுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார். விபத்து மரண சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் மேல் நீதிமன்றத்தில் பிணை மனுக்கள் நிதானமாகவே பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் பிணை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாகவே எதிர்வரும் 23 ஆம் திகதி வழ…

  7. யாழ்.கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள சமதான நீதவான் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (18) இரவு வேளையில் குறித்த வீட்டின்மீது மதுபானப் போத்தல்களால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இந்த சம்பவம் ஒரு மாத காலமாக இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் (21-09-2016) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, இது தொடர்பில் பொலிஸாரினால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தாக்குதல் நடாத்தியவர்கள…

  8. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை மந்தநிலை அடைந்துள்ளதாக மீனவசமூகம் கருத்து வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் 617 ஏக்கர் காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளதாகவும், இது உச்சநிலையை அடைந்துள்ளதாகவும் மீனவசமூகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த அளவுக் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி அளவீடு செய்ய முற்பட்ட போது மக்களின் எதிர்ப்பின் காரணத்தினால் நில அளவீடு கைவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி பொலிஸாரின் பாதுகாப்புடன் அளவீடு செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட சமயம் …

  9. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான CSN தொலைக்காட்சி சேவை மற்றும் அதனை நடத்தி செல்லப்பட்ட நிறுவனத்தின் காணி என்பன நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள 29 பெர்சஸ் காணியை டீ.ஏ.ராஜபக்ச அறக்கட்டளைக்கு 2003ஆம் ஆண்டு 30 வருடங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டது. இதற்காக வருடாந்தம் 163,125 ரூபா செலுத்தப்பட்டுள்ளது. எனினும் அந்த காணியை வேறு எந்தவொரு நடவடிக்கைக்காகவும் பயன்படுத்த முடியாது என்ற ஒப்பந்தத்தை மீறி, CSN வர்த்தகத்தை நடத்தி சென்ற காரணத்தினால் அதற்கமைய ஒப்பந்தம் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்து…

  10. எம்மால் பல தரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகப் பின்வரும் திகதிகளில் பதிவாளரூடாகத் துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட கடிதங்கள் சம்பந்தமாக குறிப்பிடத்தக்கவளவு உரிய தீர்வுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் நாளை புதன்கிழமை முதல் மீண்டும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக யாழ். பல்கலைக் கழக ஊழியர் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்துப் பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்ட காலத்தில் பல அலுவலகங்கள் முறையாக திறக்காத நிலையில் பொதுவான வரவுப்பதிவேட்டில் கையெழுத்திட்ட பயிலுநர்களின் கொடுப்பனவானது ஏனைய பல்கலைக்கழ…

  11. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மக்கள் பலம் மட்டும் தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் சர்வதேசத்தின் நிலைப்பாட்டையும் மாற்றியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போது புதிய அரசியலமைப்புக்கான நகல் வெளியிடப்படவுள்ள நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களில் முழுமையான அரசியலமை…

    • 4 replies
    • 558 views
  12. அபகரிக்கப்பட்ட அம்பாறை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் அம்பாறை என்றால் அழகிய பாறை என்று அர்த்தம். ஈழத்தில் உள்ள தமிழ்ப் பெயர்களில் மிகவும் செம்மையானதொரு பெயர் அம்பாறை. மிகவும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அம்பாறை தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்த பூமி. தமிழ் மக்களின் தாயகப் பகுதியில் மிகவும் தொன்மையான பல ஆலயங்களையும் செழுமையான பாரம்பரியங்களையும் கொண்டு அமைந்திருக்கிறது அம்பாறை. சிங்கள அரசுகள் முன்னெடுத்த குடியேற்றத் திட்டங்களின் மூலம் தமிழ் மக்கள்நிலங்களை இழந்தார்கள். 1950களுக்குப் பின்னர் சிங்கள அரசுகள் முன்னெடுத்த தீவிர நில ஆக்கிரமிப்புத் திட்டத்தில் அதிகம் பலியானது அம்பாறை. பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டப்பட்டு அவர்களி…

    • 2 replies
    • 984 views
  13. யாழ் நகரை அபிவிருத்தி செய்யும் வகையில் உலகவங்கி பிரதிநிதிகள் கள நிலைமைகள் குறித்து ஆராய்வு நாட்டின் நகர அபிவிருத்தி திட்டங்களை முன்னேற்றும் வகையில் உலக வங்கியின் அபிவிருத்தி செயற்றிட்ட உயர் மட்ட அதி காரிகள் குழுவினர் இன்றையதினம் யாழ் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.இக்குழுவினர் எதிர்வரும் 05 ஆண்டு களுக்கான யாழ் மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டத்தினை முன்னெடுக்கும் வகையில்கள நிலைமைகளை ஆராய்ந்து கொண்ட னர். இக்குழுவினர் யாழ் ஆரியகுளப்பகுதிக்கு விஜயம் செய்ததுடன் அங்குள்ள நிலைமைகளையும் கண்டறிந்தனர். அத்துடன் 120 கிலோ மீற்றர் கொண்ட கொடிகாமம் வீதி,பழையபூங்கா வீதியில் உள்ள மாவட்ட செயலக நிர்மாணப்பணிகள…

  14. வலிகாமம் வடக்கில் 26 வருடங்களுக்கு மேலாக படையினர் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பு இரு வாரங்களில் விடுவிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனினும், இரு மாதங்கள் கடந்தும் அந்த நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். உறுதியளிக்ப்பட்டவாறு காணிகள் விடுவிக்கப்படுமா? இல்லையா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மக்களின் இந்த ஆதங்கம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் கேட்டபோது, இக்காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் மேற்படி காணியை ஜனாதிபதியே மீளக் கையளிக்க வேண்டும் என்பதற்காகவே காலதாமதமாகின்றது என சுட்டிக்காட்டுகின்றனர். …

  15. வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு, சிங்கள மேலாதிக்கம் நீக்கப்பட்டு, தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தும் வகையிலான தன்னாட்சி அதிகாரத்தை உள்ளடக்கிய அதிகாரப் பரவலாக்கலே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்ற தமிழ் மக்களினதும் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படையான கூற வக்கில்லாதவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பதே சிறந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈழு மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் பேரணியே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு காரணம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொலைபேசியில் தொடர்…

  16. வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. வடமாகாண சபையை பலப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆசிய மன்றத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலத்திரனியல் நூலகம், சட்டவள நிலையம் என்பன அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன. இந்நிகழ்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) வடமாகாண சபை பேரவைச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/184243/வடம-க-ண-சப-ய-ன-உத-த-ய-கப-ர-வ-இண-யத-தளம-அங-க-ர-ர-ப-பணம-

  17. Global எனும் பெயரில் சில சமூக விரோதிகள் அப்பாவி மக்களை இத் திட்டத்தால் ஏமாற்றி வருகின்றார்கள். பிரமிட் திட்டத்துக்கு மாற்று பெயர்கள் வைத்து நடத்துகிறார்கள் ….. தயவு செய்து மக்கள் இவற்றுக்கு ஏமாற வேண்டாம் … கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் பிரமிட் வியாபாரம் / வலையமைப்பு வியாபாரம் (Network Business) அல்லது GLOBAL LIFE STYLE எனும் பெயர்களில் பொது மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பல அமைப்புக்களை கானக் கூடியதாக இருக்கின்றது. இவ் அமைப்புகள் பொது மக்களை மூலைச் சலவை செய்து அவர்களது வியாபாரமானது நன்மை பயக்கக் கூடியது என்று பொது மக்களை ஏமாற்றுகின்றார்கள். இவ் வியாபாரத்தில் அதிகம் எமது தமிழ் சமூகம் ஏமற்றப்பட்டிறுப்பதை அறிந்ததனால் பதிவேற்றம் செய்கிறோம் பிரமி…

  18. இராணுவ புலனாய்வாளர் தற்கொலை : தொலைபேசி மூலம் முக்கிய தகவல்கள் (எம்.எப்.எம்.பஸீர்) சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவை தானே கொலை செய்­த­தாக கடிதம் ஒன்­றினை எழுதி வைத்­து­விட்டு தற்­கொலை செய்­து­கொண்ட இர­ணு­வத்தின் சார்ஜன் மேஜர் தர ஓய்­வு­பெற்ற இரா­ணுவ புலனாய் வு வீரரின் கைய­டக்கத் தொலை­பேசி இலக்கம் ஊடாக மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­கான மிக முக்­கி­ய­மான தக­வல்கள் சில குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. அவர் நெருங்கிப் பழ­கிய மற்றும் தொடர்­பு­களைப் பேணிய நபர்கள் தொடர்­பி­லான தக­வல்­களை மையப்­ப­டுத்­தியே இந்த சந்­தே­கிக்­கத்­தக்க விசா­ரணைக் குரிய தக­வல்­களை குற்றப…

  19. கூட்டொப்பந்தம் கைச்சாத்து பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் தொடர்பான கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நாளாந்த வேதனமாக 730 ரூபாய் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்து தொழிற்சங்கங்கங்களுடன் முதலாளிமார் சம்மேளனம் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/184212/க-ட-ட-ப-பந-தம-க-ச-ச-த-த-

  20. வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்கு பிணை கிடையாது செந்தூரனின் பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் : யாழ் முளவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவைக் கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் பிணை வழங்க முடியாது என தெரிவி;த்த நீதிபதி இளஞ்செழியன் மாணவன் செந்தூரனுக்குப் பிணை வழங்க மறுப்பு தெரிவித்து பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார். வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்தது மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்திரனசிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை மனு தள…

  21. நடைமுறையில் இருக்கும் மொழிச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த தவறிவரும் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதிகார பர வலாக்கலை வழங்கப்போகின்றது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். மொழிப்பிரச்சினை என்பது தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கான ஒரு முன்னோடி எனவும் குறிப்பிட்டுள்ள அவர், தன்னை காட்சிக்காக அமைச்சராக வைத்திருப்பதற்கு ஒருபோதும் தயாரில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். அரச கரும மொழிக் கொள்கை தொடர்பாக நியதிச் சட்ட சபைத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு…

  22. பல வாரங்களாக உடல் நலக் குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை நலம் விசாரிப்பதற்காக ஈழத்தமிழர் குழுவொன்று அப்பலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் நலன் தொடர்பாக விசாரித்துள்ளது. ஈழத் தமிழர் நட்புறவு மையம் சார்பாக திரு காசியானந்தன் தலைமையில் ஈழத் தமிழர்களான சிவம் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட குழுவினரே இன்று முற்பகல் 11.30 மணியளவில் அப்பலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் நலன் குறித்து விசாரித்துள்ளனர். அப்பலோ மருத்துவமனையில் அதிமுகவின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்த இக்குழு, முதலமைச்சரின் உடல் நலன் குறித்து விசாரித்தது. அத்துடன் இச்சந்திப்பு அரை மணித்தியாலங்கள் வரை நீடித்ததாகவும் …

  23. உலகத்திலுள்ள மிக பழமையான கார்களிலொன்று யாழ்ப்பாணத்தில் (படங்கள், காணொளி இணைப்பு) (ரி.விரூஷன்) உலகத்திலுள்ள மிக பழமையானதும் பிரபல்யமானதுமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வனிடமுள்ளது. இக் கார் 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையர்களும் இருந்திருந்தனர். அவ்வாறு ஓர் பண்ணையாளரான பொன்னையா இராஜேந்திரன் தனது பண்ணைகளை சுற்றிப்பார்க்கவும் வேட்டைக்கு செல்லவும் இக் காரையே பயன்படுத்தியிருக்கிறார். …

  24. வெளிவிவகார அமைச்சின் கன்சியூலர் அலுவலக கிளை அடுத்தவருடம் யாழில் வெளிவிவகார அமைச்சின் கன்சியூலர் அலுவலகத்தின் கிளை அலுவலகம் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இயங்குமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தொழில் வாய்ப்பினை பெற்றுச்சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களு க்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பி ட்டுள்ளார். “வெளிவிவகார அமைச்சின் கன்சியூலர் அலுவலகத்தின் கிளை அலுவலகங்கள் இரண்டை பருத்தித்துறை மற்றும் தேவேந்திரமுனையில் அமைப்பதற…

  25. மக்கள் வயிற்றுப்பசியுடன் இருக்கையில் நல்லிணக்க பொறிமுறைகள் சாத்தியப்படுமா ? - ஐ நா விஷேட நிபுணர் (லியோ நிரோஷ தர்ஷன்) மக்கள் வயிற்றுப்பசியுடன் இருக்கையில் நல்லிணக்க பொறிமுறைகள் சாத்தியப்படுமா? சிறுபான்மையின் மக்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விஷேட நிபுணர் ரீட்டா ஐசக் நிதியா தெரிவித்தார். காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறை உள்ளிட்ட விடயங்களில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.