ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143431 topics in this forum
-
இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கு 2 ஆயிரம் அழைப்புகள் இந்தியாவின் உதவியின் கீழ், இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைக்கான அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் கிடைத்துள்ளன. அரச வைத்தியசாலைகளில் இந்த அம்பியூலன்ஸ் வண்டி சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்திய அம்பியூலன்ஸ் வண்டி சேவை தற்போது வழங்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/178283/இந-த-ய-அம-ப-ய-லன-ஸ-ச-வ-க-க-ஆய-ரம-அழ-ப-ப-கள-#sthash.VsgDLkJT.dpuf
-
- 0 replies
- 186 views
-
-
பாதயாத்திரையை புதுமையாக வரவேற்க ஏற்பாடு கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ள, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரையை புதுமையான முறையில் வரவேற்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அப்பாதயாத்திரை, நாளை திங்கட்கிழமை கொழும்பை வந்தடையும். இந்நிலையில், களனி பகுதியில் புல் கட்டுகள் தொங்கவிடப்பட்டு, அதற்கு அருகில், பாதாயத்திரையை களனி மக்களாகிய நாங்கள் வரவேற்கின்றோம் என்று எழுதப்பட்டுள்ள பாதைதைகளும் வைக்கப்பட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/178294/ப-தய-த-த-ர-க-க-ப-த-ம-ய-ன-வரவ-ற-ப-#sthash.oYTsULsM.dpuf
-
- 0 replies
- 270 views
-
-
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தொடர்பான சட்டத்திட்டங்களில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர் ஜெனீவா பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையின் அடிப்படையில் இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது ஏற்கனவே இதற்கு மகிந்த தரப்பில் இருந்து எதிர்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன எனினும், இந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல் போனோர் தொடர்பான தகவல்கள் ஒன்றிணைக்கப்பட்டு, எவ்வாறு நீதிநடவடிக்கைஎடுக்கப்படும் என்பதில் தெளிவ்லை என்று கூறப்படுகிறது காணாமல் போனோர் தொடர்பான சீரான சட்டத்திட்டங்கள் எவையும் சிறிலங்காவில் இல்லாத நிலையில், இது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டி இருப்பதாக அவர்கள் தெரிவித்த…
-
- 0 replies
- 315 views
-
-
தமது உயர் கல்வியினை பெறுவதற்கான புலமைப் பரிசிலினை பெற்று 15 இலங்கை மாணவர்கள் சீனா செல்வதாக சீன செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. கிடைக்கப்பட்ட சுமார் ஆயிரம் விண்ணப்பங்களில் இந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் உள்ள பல்கலைகழகத்தில் இந்த மாணவர்கள் 5 வருடம் தமது உயர் கல்வியினை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானம், கலை, முகாமைத்துவம், மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் இந்த மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்வர் என உயர் கல்வி அமைச்சின் செயலாளர் டி சி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சீன தூதுவராலயத்தில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். http://www.sei…
-
- 3 replies
- 462 views
-
-
மகிந்த அணியினர் மேற்கொண்டு வரும் பேரணியை வரவேற்பதற்கு அனுமதிப்பெறப்பட்டுள்ள கொழும்பு ஹைட் திடலை தமக்கு வழங்கவேண்டும் இல்லையேல் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக இடதுசாரி ஜனநாய கட்சியின் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார எச்சரித்துள்ளார். குறித்த மைதானத்தின் புனர்நிர்மாணப்பணிகளை காரணம் காட்டி பெறப்பட்டிருந்த அனுமதி ரத்துச்செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே வாசுதேவ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, மகிந்த அணியினரால் நடத்தப்படும் பேரணி இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்தது. இன்றைய பேரணியின் போது லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளர் திஸ்ஸ விதாரண உட்பட்ட பலர் பங்கேற்றனர். எனினும் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்…
-
- 0 replies
- 348 views
-
-
போர்குற்றம் தொடர்பான அரசுக்கு எதிராக இருந்த ஆயுதங்கள் பகிர்வு, வரவு தொடர்பானதகவல்கள் உள்ளடக்கப்பட்ட ஆவணங்களையே கொஸ்கம வெடிப்பு சம்பவத்தில்தீக்கிரையாக்கபட்டது அதற்காகவே அந்த வெடிப்பு சம்பவம் திட்டமிட்டுநிகழ்த்தபட்டது என நல்லிணக்க செயலணியிடம் மக்கள் எடுத்து காட்டியுள்ளனர். நல்லிணக்க செயல்முறைக்கு மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று யாழ் சண்டிலிப்பாய்பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதுமக்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில்இரண்டாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர். …
-
- 0 replies
- 261 views
-
-
மட்டக்களப்பில் 4000 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவிருந்த தேசிய நீரியல்வளப் பண்ணை, பல்வேறு தரப்புகளில் இருந்தும் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளால், வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது. பல்வேறு தரப்புகளும் நிபந்தனைகளை விதித்து எதிர்ப்புகளைத் தெரிவித்து, வருவதால் மட்டக்களப்பில், தேசிய நீரியல்வளப் பண்ணைத் திட்டத்தை மட்டக்களப்பில் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்று, கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சின் செயலர் மங்கலிக அதிகாரி, கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு நேற்று அறிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள நாயாறில், 1200 ஏக்கர் நிலப்பகுதியை உள்ளடக்கியதாக இந்தப் பண்ணையை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. 4000 மில்லியன் ரூபா செலவிலான இந்த திட்டத்தின் மூலம் 10 ஆயிர…
-
- 1 reply
- 224 views
-
-
இலங்கை: எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு மைதான அனுமதி ரத்து எதிர்வரும் முதலாம் தேதி கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த மைதானத்தின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அளஹப்பெரும தெரிவித்துள்ளார். பாதயாத்திரை கொழும்பிற்கு வந்து சேர்ந்த பின்னர் கொழும்பு ஹைட் மைதானத்தில் மாபெரும் கூட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், அந்த மைதானத்தை பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த டலஸ் அளஹப்பெரும, ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். …
-
- 0 replies
- 198 views
-
-
இலங்கை: `போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு பொதுமன்னிப்பு கூடாது' மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மன்னார், ஒட்டுசுட்டான், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் சனிக்கிழமை இடம்பெற்றன. உண்மையைக் கண்டறிதல், நடந்தவைகளுக்கு நீதி வழங்குதல், இழப்புக்களுக்கான நிவாரணம், குற்றங்கள் மீள் நிகழாமை ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டதாக நல்லிணக்கப் பொறிமுறை அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. நாட்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கி அதன் அடிப்படையில் இந்தப் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்தறியும் செயற்பாடுகள் ம…
-
- 0 replies
- 270 views
-
-
பாதயாத்திரையால் உடல் எடையை குறைக்க முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய இயலாது ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதயாத்திரையால், பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் எடையை மாத்திரமே குறைக்க முடியுமே தவிர அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். குறித்த கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிய பாதயாத்திரையால் எதுவும் மாற்றமடைய போவதில்லை. அதற்காக அரசாங்கம் பீதியடைவதற்கும் ஒன்றுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார். கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று (30) கலந்துக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார். குறித்த…
-
- 0 replies
- 359 views
-
-
இறந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் எமது மனதில் உள்ள சோகங்களை வெளிக்காட்டவும் எமக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் வேண்டும் என, நல்லிணக்க பொறிமுறை செயலணிக்குழுவினரிடம் கிளிநொச்சி மக்கள் இன்று கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரண்டாம் நாள் அமா்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. நாம் இறந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் எமது மனதில் உள்ள சோகங்களை வெளிக்காட்டவும் எமக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் வேண்டும். அதுவும் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதாக வெற்றிவிழா கொண்டாடப்படுகின்ற மே மாதம் பதினெட்டாம் திகதியே நாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவே பிரகடனப்படுத்த வேண்டும். …
-
- 0 replies
- 381 views
-
-
மன்னார்- கட்டுக்கரை நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன், வடக்கு மீன்பிடி அமைச்சால் அமைத்துக்கொடுக்கப்பட்ட நன்னீர் மீன் சந்தையை வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஜெ.ஜெ.சி.பெலிசியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர். அவர்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன்கள் மற்றும் நன்னீர் இறால் போன்றவற்றை பார்வையிட்டதோடு அங்குள்ள மீனவர்களுடனும் கலந்துரையாடினர். அக் கலந்துரையாடலில் குறித்த நன்னீர் இறால் தற்போது மிகுந்த தரமான வருமானத்தை தமக்கு தருவதாகவும், இவ்வகை இறால்கள் சாதாரணமாக இரண்டு இறால்கள் ஒரு கிலோ எடை வரும். ஆகவே இவற்றை…
-
- 0 replies
- 442 views
-
-
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி நிதிக் கொள்கையில் இறுக்க நிலையை பின்பற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘பண வீக்கத்தில் ஒற்றை இலக்கத்தை தொடர்ந்தும் கடைபிடிக்கும் நோக்கில் எமது பிரதான நிதிக் கொள்கையில் இரண்டு வட்டி வீதங்களையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். மத்திய வங்கியிலிருந்து வர்த்தக வங்கிகள் பெறும் பணத்துக்கு (மீள் விற்பனை வீதம்) நூற்றுக்கு 8 சதவீதத்திலிருந்து நூற்றுக்கு 8.5 சதவீதமாகவும் வர்த்தக வங்கிகளிலிருந்து மத்திய வங்கிக்கு பெறப்படும் பணத்திற்கு (மீள் …
-
- 0 replies
- 290 views
-
-
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியிலான எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தொற்றினால் இதுவரையில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார். எலிக்காய்ச்சல் காரணமாக நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சேற்று நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் தொழில்புரிவோருக்கு எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=162526&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 280 views
-
-
இஞ்ச எங்கடை பாதங்களைப் பறிச்சுப் போட்டு பாதை யாத்திரை போறார்! யாழ்ப்பாணத் தம்பி:- என்ன இது சின்னப் பிள்ளைத் தனமாய் இருக்குது? என்று நீங்கள் எல்லாரும் நினைக்கிற மாதிரித்தான் நானும் நினைக்கிறன். பின்னை என்ன? ஆட்சியைக் கைப்பற்ற பாதை யாத்திரை நடத்தலாம் எண்டால் எலக்சன் டிப்பார்ட்மன்ட் எதுக்கு? நல்ல சிரிப்பாய் கிடக்குது... அதுதான் மக்கள் தேர்தலிலை வாக்களிச்சு, ஆட்சியும் வேண்டாம் ஆளும் வேண்டாம் எண்டு வீட்டுக்கு அனுப்பிட்டுதுகளே? பிறகேனாம் கால் தேய நடக்கிறார். சின்னப் பிள்ளையள் பலூன் கேட்டு அடம் பிடிச்ச மாதிரி அடம்பிடிக்கிறார். ஓ.. ஆட்சியை தாவென்று அடம்பிடிக்கிறார். உப்பிடி அடம்பிடிச்சு அமைக்கிறது ஆட்சியலில்லை.. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…
-
- 0 replies
- 254 views
-
-
யால தேசிய வனவிலங்குகள் சரணாலயம் மூடப்படுகிறது... யால தேசிய வனவிலங்கு சரணாலயம் எதிர்வரும் செம்டம்பர் மாதத்திலிருந்து தற்காலிகமாக மூடப்படவுள்ளது. இதனை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் செம்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிவரையில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/9596
-
- 0 replies
- 263 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும், ஜனசட்டன பாதயாத்திரை கொழும்பை அடையும் போது, அமைதியைக் குழப்பும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு முழு அளவில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் பேராதனையில் இருந்து தொடங்கப்பட்ட பாதயாத்திரை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கின்றது. இந்தப் பாதயாத்திரை நாளை மறுநாள் கொழும்பு நகரை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதயாத்திரையில் வருவோர், கொழும்பு நகருக்குள் அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்த முனைந்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக, சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட காவல்துறையை தயார் நிலையில் வைத்திருக்க தேசிய பாதுகாப்புச் சபை முடிவு செய்த…
-
- 0 replies
- 268 views
-
-
எமது தனித்துவம் எமக்கு தேவை: கனேடிய அமைச்சரிடம் சி.வி தெரிவிப்பு -சொர்ணகுமார் சொரூபன் தமிழர்களாகிய எமது தனித்துவம் எமக்கு தேவை. அதையே நாம் கோருகிறோம். மாறாக நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் தான் எடுத்துரைத்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன், இன்று வெள்ளிக்கிழமை (29), வடக்கு மாகாண முதலமைச்சரை கைதடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகவியலாளருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேல…
-
- 2 replies
- 468 views
-
-
பாதயாத்திரையை கட்டுபடுத்த பொலிஸார் முன்வைத்த கோரிக்கைகள் நிராகரிப்பு ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மேற்கொண்டு வரும் அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரையை கிரிபத்கொடையிலிருந்து கொழும்பு வரையிலான பகுதியில் கட்டுபடுத்த பேலியாகொடை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நிராகரித்துள்ளார். குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் சனீமா விஜேபண்டார நேற்று (29) பிறப்பித்துள்ளார். இந்நிலையில் குறித்த பாதயாத்திரையில் பொதுமக்களுக்கு தொந்தரவு மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுமாயின் உடனடியாக நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை பாதயாத்திரையை வரக்காபொல பகுதி…
-
- 0 replies
- 368 views
-
-
ஹெரோயினுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! 6 கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றுமொரு நபருக்கு போதைப்பொருளை விநியோகிப்பதற்கு முற்பட்டபோதே குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மறைத்து வைத்து இந்த பொலிஸ் உத்தியோகத்தர் விநியோகித்து வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் http://onlineuthayan.com/news/15638
-
- 0 replies
- 333 views
-
-
விபத்தில் வெளிநாட்டு பிரஜை படுகாயம் -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் படுகாயமடைந்த நிலையில் (29) யாழ். போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் வெளிநாட்டு பிரஜைகளான சுற்றுலா பயணிகள் இருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்துள்ளனர். அதன்போது, அவர்களுக்கு மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் சுற்றுலா பயணியான பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - See more …
-
- 0 replies
- 289 views
-
-
கூட்டு எதிர்கட்சியினர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அஞ்சியே பாத யாத்திரை செல்வதாக கடுவெல நகரசபையின் முன்னாள் நகரசபைத் தலைவர் எச்.புத்ததாச தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதயாத்திரை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர் - எதிர்வரும் நாட்களில் விமல் வீரவன்ச தம்பதியினர் சிறைக்குச் செல்ல நேரிடும் . மஹிந்த ராஜபக்ஷ பாத யாத்திரை சென்று பழகியவர் என்ற போதிலும் அதனைக் கண்டு தாம் ஏமாற்றமடையப் போவதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்வதே விமல் வீரவன்சவின் நோக்கமாகும் எனவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார். …
-
- 0 replies
- 298 views
-
-
பாகிஸ்தானின் தேசிய விமானசேவை நிறுவனமொன்று சிறீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவையிடமிருந்து ஏ-330 ரக விமானங்கள் மூன்றை குத்தகைக்குப் பெறும் உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது. இதற்கான நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இடம்பெற்றதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஒப்பந்தத்திற்கமைய முதலாவது விமானம் அடுத்த கிழமை பாகிஸ்தான் விமான சேவை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் பாகிஸ்தான் – பிரித்தானியா பயணசேவைக்கு ஈடுபடுத்தப்படவுள்ளது. ஏனைய விமானங்கள் இரண்டும் அடுத்த மாதமளவில் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவையின் கடனை ஈடுசெய்யும் …
-
- 0 replies
- 274 views
-
-
ஐநாவின் மனித உரிமைப்பேரவைக்கு சிறீலங்காவின் பிரதிநிதியொருவர் நியமிக்கப்படவுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடாத்தப்படவுள்ள மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே இலங்கையில் மனித உரிமைப் பிரதிநிதியொருவர் நியமிக்கப்படவுள்ளார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 11 மாத காலத்திற்கு இந்தப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தேவையேற்படின் அவரது பதவிக்காலம் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைக் காரியாலயம் திறக்கப்படுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமையும் குறிப்…
-
- 0 replies
- 287 views
-
-
எத்தகைய பேதமுமின்றி ‘சட்டம் எல்லோருக்கும் பொதுவானது’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தமது ஆட்சிக் காலப்பகுதியில் தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் எப்பொழுதும் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையிலேயே புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சுயாதீனமானதும், பாரபட்சமற்றதும், நடுநிலையானதுமான சட்ட முறைமையை நாட்டில் கட்டியெழுப்புவது முதன்மையானதாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். நேற்று (29) பிற்பகல் மூதூரில் இடம்பெற்ற மூதூர் …
-
- 0 replies
- 354 views
-