Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ; தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் காணாமல் போனோர் தொடர்பிலான பதிவுகளை செய்வதற்கு அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள அலுவலகம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். ஒரே நாட்டினுள் இரு வேறு சட்டங்களின் கீழ் ஆட்சி நடத்துவது நாட்டின் இறைமையை பாதிக்கும் என மஹிந்த அதரவு அணியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இந்த அலுவலகம் மூலமாக சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் தமக்கு தேவையான வகையில் ஆதாரங்களை மாற்றியமைப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ஆதரவு அணியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு க…

    • 2 replies
    • 267 views
  2. மாணவர் மீட்பு பேரவையில் காணாமல் போனோர் சம்பந்தமான தகவல்களை திரட்டிவரும் நபருக்கு நீலவாணை ரீ.ஐ.டீ பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கல்முனை குவாரி வீதியைச்சேர்ந்த செல்லத்துரை சுதாகர் என்பவரே இவ்வாறான விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கருத்துத்தெரிவித்த அவர், தான் கல்முனையில் இயங்கி வரும் மாணவர் மீட்பு பேரவையில் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்து செயற்பட்டு வருவதாகவும் அண்மைக்காலமாக இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை சேகரித்து எமது அமைப்பிற்கு கையளித்ததாகவும் தெரிவித்தார். மேலும், அண்மையில் எனது வீட்டிற்கு வந்த பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினர் என்னை விசாரித்து சென்றதாகவும், வேலை நிமிர்த்தம் குறிப்பிட…

    • 0 replies
    • 467 views
  3. மட்டக்களப்பிலிருந்து உள்நாட்டு விமான பயணம் புதுப்பிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையம் விமான போக்குவரத்துக்காக எதிர்வரும் 10ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/176453/மட-டக-களப-ப-ல-ர-ந-த-உள-ந-ட-ட-வ-ம-ன-பயணம-#sthash.YMMHwxnU.dpuf

  4. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் இளைப்பாறிய மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் இன்று காலை சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் இந்துக் கல்லூரியில் கற்பித்த பல ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த ஒன்றுகூடலினால் தாம் பெருமகிழ்வடைவதாகவும் ஆசிரியர்கள் லங்காசிறியுடன் கருத்துக்களை பரிமாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://news.lankasri.com/events/03/105349

    • 0 replies
    • 473 views
  5. அரசியல் அமைப்பில் பௌத்தர்களுக்கு இடமில்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மொரட்டுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். இன்று எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பௌத்தர்கள் என்ற ரீதியில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. இந்த விடயம் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. நாட்டின் அரசியல் அமைப்பு குறித்து கண்காணித்துக்கொண்டிருக்க வேண்டும். என்ன மாற்றங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன. வா…

    • 0 replies
    • 380 views
  6. இரத்தினபுரி - நிவித்திகலை தமிழ் பாடசாலை ஒன்றில் மாணவிகள் மூவர் கடத்தப்பட்டுள்ளதுடன், அதில் இருவர் இரத்தினபுரி பஸ் நிலையத்துக்கு அருகில் அநாதரவான நிலையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு, பாடசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மூன்று மாணவியரும் எவ்வாறு கடத்தப்பட்டனர் என்பது பற்றி பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தற்போது கடத்தப்பட்டுள்ள மாணவியின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி குறித்த மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறு தாய் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவித்து நபர் ஒருவர் பாடசாலைக்கு சென்றுள்ளார். எனினும் பாடசாலை நேரத்தில் பெற்றோர், பாதுகாவலர் இல்லாமல் மாணவியை அனுப்ப பாடசாலை நிர்வாகமும், ஆசிரியர்களும் மறுப்பு தெரிவித…

    • 0 replies
    • 525 views
  7. ஆசிய நாடுகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் இலங்கை அதிக கவனம் எடுத்து வருவதாகவும் முப்படைகளும், புலனாய்வு பிரிவும் சர்வதேச புலனாய்வு பிரிவுகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். எக்காரணம் கொண்டும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை இலங்கைக்குள் செயற்பட அனுமதிக்கப்போவதில்லை எனவும் இலங்கைக்குள் எவரது செயற்பாடுகள் உள்ளதா எனவும் ஆராய்ந்து வருவதாகவும் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=160916&category=TamilNews&language=tamil

    • 1 reply
    • 239 views
  8. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீளவும் இலங்கையில் இயங்க ஆர்வம்:- சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீளவும் இலங்கையில் இயங்குவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களே இவ்வாறு ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சில சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவ்வாறு புதிய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் மீளவும் இயங்க ஆர்வம் காட்டி வருகின்றன. Friedrich Naumann Foundation போன்ற நிறுவனங்கள் இலங்கையில் மீளவும் விரைவில் தமது பணிகளை ஆரம்பிக்க உள்ளன. லிபரல் அரசியலையும் அரசியல்வாதிகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிறுவனம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்த…

  9. கடற்கரைக்கு செல்வோர் அவதானமாக இருக்கவும் ; பாசிக்குடா கடற்கரையில் ஜெலிபிஸ் அதிகரிப்பு ( சசி) மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரையில் ஜெலிபிஸ் அதிகரித்து காணப்படுவதால் கடற்கரைக்கு செல்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். குறித்த மீன்வகை மனித உடலில் ஒட்டும் தன்மையுடையதாகக் காணப்படுகின்றதால், அது உடலில் ஒட்டும் சந்தரப்பத்தில் உடலில் பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பாசிக்குடா கடற்கரைக்கு செல்வோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஜெலிபிஸ் மிகவும் பழமையான மீனினம் என்பதோடு,சுமார் 70 கோடி வருடங்களுக்கு முன் கடலில் உருவாகியிருப…

  10.  'புலியுடன் உறவாடியவரின் நண்பனை நம்புகின்றோம்' பாநூ கார்த்திகேசு 'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பினை பேணிவந்த மற்றும் சர்வதேச நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்துவருகின்ற ராஜ் ராஜரட்ணத்தின் நண்பனான மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை, நாங்கள் நம்புகின்றோம்' என்று, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 'ராஜ் ராஜரட்ணத்தின்; நிறுவனத்தில் பணியாற்றினார் என்றொரு விடயத்துக்காக மட்டுமே, மத்திய வங்கியின் ஆளுநரை விமர்சிக்க முடியாது' என்றும் அவர் தெரிவித்தார். பொரளையில் நேற்றுப் புதன்கிழமை (06) நடைபெற்…

    • 1 reply
    • 406 views
  11.  வடக்கு இளைஞன் மேற்கில் கைது போலியான விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்வதற்கு முயன்ற வடக்கைச் சேர்ந்த இளைஞனை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 36 வயதான சந்தேகநபர், கிளிநொச்சி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று அறியமுடிகின்றது. சந்தேகநபர், ஓமான் விமான சேவைக்கு உரிய விமானத்தில், மஸ்கட் ஊடாக இத்தாலிக்கு செல்லும் நோக்கிலேயே விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளார். அவர், தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே அவரை கைதுசெய்துள்ளதாக அவ்வதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேகநபர், தன்னடைய உ…

  12.  சிறைக்குள் செல்பி களுத்துறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவைப் பார்வையிடுவதற்காகச் சிறைக்குச் சென்றிருந்த திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி இராஜங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, அவருடன் செல்பி எடுத்துகொண்டார். மத்துகம, மீகஹாதென்ன கனிஷ்ட வித்தியாலயத்துக்குள் பெற்றோர் சிலர் சகிதம், அத்துமீறி நுழைந்து 10 மாணவர்களை பாடசாலையில் இணைத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்காக, அவர், செவ்வாய்க்கிழமை மாலை சென்றிருந்த போது, கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில்…

  13. புனர்வாழ்வு பெறத் தயார்: 12 அரசியல் கைதிகள் எடுத்துரைப்பு பல்லேகல, தும்பற சிறைச்சாலையிலுள்ள 12 அரசியல் கைதிகள், தாம் புனர்வாழ்வு பெற்றுச் செல்ல தயாராகவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜிடம் கூறியுள்ளனர். அந்த சிறைச்சாலைக்கு நேற்றுப் புதன்கிழமை (6) விஜயம் மேற்கொண்டு அரசியல் கைதிகளை பார்வையிட்ட அவர், அவர்களது குறைகளையும் கேட்டறிந்து கொண்டார். இதன்போதே, அக்கைதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இவ்விஜயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ், மேலும் கூறியதாவது, 'தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தயாராகவுள்ளதால், தாமும் புனர்வாழ்வு பெறுவதற்கு சம்மதித்ததாக போகம்பறை சிறைச்சாலையிலுள்ள அரசியல் க…

  14. கொத்தனி குண்டுகள் விவகாரம்: பரணகமவின் பண்டித பேச்சு என்கிறார் மங்கள தடைசெய்யப்பட்டோர் இலங்கைக்கு வர ஏற்பாடு  இரண்டு ஆண்டுகளில் இராணுவ நீக்கம்  நீதிப் பொறிமுறை தொடர்பில் முடிவில்லை  செப்டெம்பருக்குள் உண்மையை கண்டறியும் பொறிமுறை  ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவால் ஆபத்தில்லை இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில், கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்தப் பயன்பாடு சட்டரீதியற்றது அல்ல என, காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்த கருத்துகள் குறித்து, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின்…

  15. யுத்தக் குற்றம் குறித்த உள்ளக விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனினும், இது அவரின் தனிப்பட்ட தீர்மானம் எனவும், அது அரசாங்கத்தின் தீர்மானம் அல்லவெனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விடயம் தொடர்பாக பல்வேறான கருத்துக்கள் காணப்படுகின்றன. எனினும், குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் இன்னுமும் தீர்மானம் எடுக்க வில்லை. இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரின் நிலைப்பாட்டை கூறியுள்ளார். அத…

    • 0 replies
    • 327 views
  16. கிளிநொச்சி உதயநகரில் 2010ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட வீட்டினுள் பதுங்கு குழிஇருப்பதனைக் காரணம் காட்டி இன்றுவரை எம்மைக் குடியமர இராணுவம் தடைபோடுவதாககாணி உரிமையாளர் தெரிவித்தார். இது தொடர்பில் காணி உரிமையாளரான 3 பிள்ளைகளின் தாயாரான திருமதி.திரேஸ் தனேஸ்குமார் தகவல் தருகையில் , உதயநகர் மேற்கில் வசிக்கும் நான் இறுதி யுத்தத்தில் கணவரை இழந்து 3 பிள்ளைகளுடன் வாழ்வாதாரத்திற்காக சந்தையில் கடை நடாத்தியே வாழ்ந்து வருகின்றேன். இந்த நிலையில் எனது பூர்வீக காணியில் இருந்த வீட்டினில் முன்னர் விடுதலைப்புலிகளின் நிறுவனம் ஒன்று இயங்கியது. இதன்போது அவர்கள் ஓர் பதுங்கு குழியினை அமைத்திருந்தனர். மீள் குடியமர்வின்போது 2010ம் ஆண்டு எனது வீட்டில்…

    • 0 replies
    • 310 views
  17. மிகப்பெரிய அளவில் மோசடி செய்த குற்றச்சாட்டில் தற்போது அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இலங்கை-அமெரிக்க கோடீஸ்வரரான ராஜ் இராஜரத்தினம் தன்னுடைய நண்பர் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இராஜரத்தினம் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் ஒன்றாக இரண்டு வருடங்கள் படித்தவர் என்றும், அவருடைய கெலியன்ஸ் குரூப் நிறுவனத்தில் நிதி நிர்வாகத்தில் தான் அவருக்கு உதவி புரிந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தான் பத்து மாதங்களாக அவரது நிறுவனத்தில் பொருளாதார சிக்கல்கள் தொடர்பில் ஆய்வறிக்கைகள் தய…

    • 4 replies
    • 631 views
  18. iews - 27 பொன் ஆனந்தம் கிராமத்தில் பல இடங்களிலும் வெடிச் சத்தம் கேட்டவண்ணமிருந்தன. அச்சம் காரணமாக நாம் வீட்டினுள் இருந்துகொண்டிருந்தோம். அப்போது திடீரென வீட்டிக்குள் புகுந்த இராணுவத்தினரில் ஒருவர், எனது முகத்தின் கன்னப்பகுதியில் கோடரியால் கொத்தினர்;. என்னுடன் இருந்த என் சகோதரங்களையும் இவ்வாறு கொத்தினர் என திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரத்தில் இடம்பெற்ற 26 பொதுமக்கள் படுகொலை செய்தமை தொடர்பான வழக்கில் கணபதிப்பிள்ளை நிரோசன் சாட்சியமளித்தார். இந்த வழக்கு விசாரணை, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் ஏழாவது நாளாகவும் நேற்று இடம்பெற்றது, இதன்போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். ஜூரிகள் முன்னிலையில் விசாரணைகள் நடத்தப்படும் இவ்வழக்கில், நேற்றைய விசாரணை…

  19. ஹெரொயின் வைத்திருந்த தேரர் உட்பட மூவர் கைது ஹெரொயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தேரர் உட்பட மூவரை அனுராதபுரம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கொழும்பு - புத்தளம் பிரதான வீதியினூடாக ஹெரொயின் கொண்டுசெல்லப்பட்ட போது நொச்சிகம பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.32 கிராம் ஹெரொயின் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களில் தேரர் கல்கமுவ பகுதியில் உள்ள விகாரையில் உள்ளவரெனவும், ஏனைய சந்தேக நபர்கள் வத்தளை மற்றும் பமுனுகம பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சந்தேக நபர்களை தம்புத்தேகம நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக ப…

    • 2 replies
    • 368 views
  20. தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தின் ஊடாக இதுவரை ஒருவர்கூட விடுவிக்கப்படவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார். கொழும்பு – மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நேற்றுப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ‘‘தமிழ் அரியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தினால் எவ்வித பிரயோசனமும் இல்லை. அந்த நீதிமன்றத்தின் ஊடாக இதுவரை ஓர் அரசியல்கூட விடுதலை செய்யப்படவில்லை என்ற பெரும் குறையை என்னிடம் அரசியல் கைதிகள் தெரிவித்தார்கள். ஒரு வாக்குமூலத்தின் ம…

  21. இந்தியத் துணைத்தூதரகம் யாழ்ப்பாணம் ஊடக அறிக்கை குருதேவ் இரவீந்திரநாத் தாகூர் தினம் இந்தியாவின் பிரபல கவிஞரும், எழுத்தாளரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான குருதேவ் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1922, 1928 மற்றும் 1934ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டமையை நினைவு கூரும் முகமாகவும் அவரது 155ஆவது பிறந்த தின நினைவு நாளை கொண்டாடும் முகமாகவும் ஓர் சிறப்பு நினைவுப் பேருரை உள்ளடங்கிய கலா நிகழ்வினை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தினருடன் இணைந்து எதிர்வரும் சனிக்கிழமை 9 ஜுலை, 2016 அன்று காலை 9.30 மணிக்கு மருத்துவபீட வளாகத்தில் அமைந்துள்ள ஹுவர் அரங்கில் நடாத்த இந்தியத்துணைத்தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. நினைவுப் பேருரையை இந்தியாவில் மேற…

    • 2 replies
    • 377 views
  22. இலங்கை மீதான விசுவாசம் வலுவடைந்துள்ளது: கிளஸ்டர் பாவித்திருந்தால் பாரதூரமான குற்றம் : ஜெனிவா தொடர்பில் மங்கள விளக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழான நல்லாட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலும் இலங்கை மீதான சர்வதேசத்தின விசுவாசம் வலுவடைந்துள்ளதென தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர, இறுதி யுத்தத்தின் போது கிளஸ்டர் குண்டுகள் பாவிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளஸ்டர் குண்டுகள் பாவித்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் பாவித்திருந்தால் அது பாரதூரமான குற்றமாகும் என்றார். ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடரில் இலங்கை சார்ப…

    • 5 replies
    • 467 views
  23. சுற்றுலா மையங்களை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர் -சண்முகம் தவசீலன் “வடமாகாண சபைக்கு சொந்தமான பல சுற்றுலா மையங்களை இரானுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்” என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். வடமாகாண சுற்றுலா மையம் நேற்று மாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “2010ஆம் ஆண்டு போர் முடிந்துவிட்ட பின்பு ஊரை பார்ப்பதற்காக இந்த வீதி வழியாக கூட்டிக்கொண்டு வந்தார்கள் இராணுவத்தினர். அப்போது இங்கிருக்கின்ற அதிகாரிகள் சிலரும் என்னுடன் வந்தனர் அந்த ந…

  24. எசல வீரகோனை வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்க இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று தெரிவித்துள்ளார். இந்த நியமனம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வழங்கப்படும். தற்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகிஸ்வரா, இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகர் பதவியை பொறுப்பேற்க இருப்பதாலேயே எசல வீரகோனை நியமிக்க உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=160988&category=TamilNews&language=tamil

  25. வெளிநாட்டிலிருந்து சாட்சியமளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் வெளிநாடுகளிலிருந்து சாட்சியமளிக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது அமுலில் உள்ள சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டம் இந்த மே மாதம் அமுல்படுத்தப்பட்டது. நேரடியாக நீதிமன்றில் பிரசன்னமாகாது வீடியோ கான்பிரன்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளிலிருந்து சாட்சியமளிக்க அனுமதிக்கும் வகையில் அரசாங்கம் சட்டத் திருத்தம் செய்ய உள்ளது. அழுத்தங்கள் தலையீடுகள் இன்றி குறிப்பிட்ட நாடுகளின் இலங்கைத் தூதரங்களிலிருந்து சாட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.