ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
மும்மொழிகளிலும் அறிவித்தல் இல்லாவிடில் நடவடிக்கை 21-01-2016 09:36 AM பொது அறிவித்தல்கள் யாவும் மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்தப்படாவிட்டால், பொது நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான கொண்டுவரப்படவுள்ளதாக அரச கரும மொழிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது அறிவித்தல்கள் யாவும் மூன்று மொழிகளிலேயே காட்சிப்படுத்தப்படல் வேண்டும் என்பது தொடர்பாக, அந்தந்த நிறுவனங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக, அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யூ.ஏ.ஜெயவிக்ரம தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/164298/%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2-%E0%…
-
- 0 replies
- 386 views
-
-
இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள வருமாறு ஈரானுக்கு அழைப்பு [ வியாழக்கிழமை, 21 சனவரி 2016, 03:06.21 AM GMT ] இலங்கைக்கான ஈரானின் புதிய தூதுவராக பதவியேற்றுள்ள மொஹம்மட் ஷெயிரி மீரானி, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் தூதுவருக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அமைச்சர் தெரிவித்தார். இரண்டு நாடுகளுக்குமிடையில் நல்ல புரிந்துணர்வும், திருப்தியான உறவும் இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் றிசாத், ஈரான் தொடர்பான சர்வதேச மட்டத்தில் உருவாகிய விவகாரங்களுக்கு இலங்கை என்றுமே ஈரானுக்கு ஆதரவாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். பொருளாதார சர்ச்சைகளுக்கு மத்தியில…
-
- 0 replies
- 361 views
-
-
சயிட் அல் ஹூசெய்ன் பெப். 5ம் திகதி இலங்கை விஜயம்! [ வியாழக்கிழமை, 21 சனவரி 2016, 01:00.18 AM GMT ] ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு விடுத்த அழைப்பிற்கு ஏற்ப, அல் ஹூசெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உள்ளிட்ட முக்கிய ஆளும் கட்சி பிரமுகர்களை ஹூசெய்ன் சந்திக்க உள்ளார். சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்புக்களையும் சந்திக்க உள்ளார். இலங்கை விஜயம் தொடர்பிலான திகதி நிர்ணயம் தொட…
-
- 0 replies
- 423 views
-
-
'கை'யில் வந்தால் இருவரும் ஆதரவு உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, கைச் சின்னத்தில் போட்டியிடுமாயின் அதற்கு ஆதரவளிப்பதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ (எம்.பி) ஆகிய இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அக்கட்சியின் பொருளாளரும் அமைச்சருமானஎஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் ஆலோசகர்களான முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகாவும் மஹிந்தவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 406 views
-
-
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்த தயாராகவுள்ள இலங்கையர் [ வியாழக்கிழமை, 21 சனவரி 2016, 03:48.20 AM GMT ] பிரித்தானியாவில் 13 வயதில் இருந்து வசிக்கும் இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்தாக அந்நாட்டு ஊடகமான டெய்லிபோஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது. ரகுவரன் பரமேஸ்வரன் என்ற இலங்கையர், தமது பெற்றோர் போரில் இறந்து விட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தை காண்பிக்க தவறியமையை அடுத்து, நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார். ரகுவரன் 2005ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் அடைக்கலம் பெற்றார். தற்போது 25 வயதாகும் ரகுவரன், நோத்ஒப்பில் வசித்து வருகிறார். அவரின் சட்டத்தரணி, வீசாவை புதுப்பிப்பது தொடர்பில் உரிய அறிவுரைகளை கூறியிருக்கவில்லை. இதனை…
-
- 0 replies
- 419 views
-
-
கோட்டாபய தலைமையில் அடுத்த தேர்தலுக்கு தயாராகும் மஹிந்த அணி? [ Thursday,21 January 2016, 04:47:47 ] நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தலைமைத்துவத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த முன்னணி என்ற தலைப்பின் கீழ் தேர்தலை எதிர்கொள்ள மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பான பேச்சுக்களும் இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்த செயற்பாடுகளை கோட்டாபய ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளும் யோசனையும் உறுப்பினர்களிடையே முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கத்திற…
-
- 0 replies
- 317 views
-
-
லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை வழக்கு சிறப்பு நீதிமன்றுக்கு மாற்றம் [ Thursday,21 January 2016, 03:27:12 ] ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பிலான வழக்கு, அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது வரை கொழும்பு மேல் நீதிமன்றின் 3 ஆம் இலக்க அறையில் இடம்பெற்று வந்த இது தொடர்பிலான விசாரணைகள் நேற்று புதன்கிழமை முதன் முறையாக 8ஆம் இலக்க அறையில் உள்ள சிறப்பு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன் போது இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முத்தையா சகாதேவன், இஸினோர் ஆரோக்கியநாதன் ஆகிய இருவரும் சிறப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். ல…
-
- 0 replies
- 313 views
-
-
விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலீருந்து நீக்கும் திட்டமில்லை – சம்பந்தன்:- 21 ஜனவரி 2016 சீ.வீ. விக்னேஸ்வரனை வட மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் எவ்வித திட்டங்களும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் சர்ச்சை காணப்பட்ட போதிலும், முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் திட்டங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதேவேளை, தமி;ழ் மக்கள் பேரவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய தினம் கிளிநொச்சியில் விசேட பேச்…
-
- 0 replies
- 460 views
-
-
தூக்கு மேடைக்கு அனுப்ப முயற்சி ; மஹிந்த ராஜபக்ச [ Thursday,21 January 2016, 03:20:40 ] நாட்டைப் பாதுகாத்த ஸ்ரீலங்காப் படையினரை ஜெனீவா பிரேரணைக்கு அமைய தூக்கு மேடைக்கு அனுப்புவதற்கு புதிய அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்தார். இரத்தினபுரி - எஹெலியகொடை புளுகஹபிட்டிய ஸ்ரீ சுமண பிரிவென் விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து உயிர் அர்ப்பணிப்புச் செய்து எமது படையினர் பாதுகாத்தனர். ஆனால் இன்று இந்த அரசு …
-
- 0 replies
- 329 views
-
-
வட மாகாணசபை ததேகூ உறுப்பினர்கள்- முதலமைச்சர் சந்திப்பில் 'இணக்கம்' முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கையில் வடக்கு மாகாணசபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று புதனன்று மாலை அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில் சர்ச்சைக்குரியதாக இருந்த பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வினைத்திறன் மிக்க ஒரு சபையாக வடமாகாண சபையை செயற்படுத்துவது, தமிழ் மக்கள் பேரவையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இணைந்து கொண்டிருப்பது, அரசியல் தீர்வுக்கான விடயத்தில் வடமாகாண சபையின் பங்களிப்பு ஆகிய விடயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. வினைத்திறன் மிக…
-
- 1 reply
- 622 views
-
-
எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள் மஹிந்த ஊடகவியலாளர்களுக்கு அறிவுரை எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச ஊடகவியலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நேற்றைய தினம் காலமான முன்னாள் அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கம்பா பிரதேசத்திற்கு சென்றிருந்த போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.அமரர் குணவர்தனவின் பூதவுடல் கம்பஹா பள்ளிய வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமரர் குணவர்தனவின் குடும்பத்தாருக்கு முன்னாள் ஜனாதிபதி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இறுதி அஞ்சலி செலு…
-
- 0 replies
- 375 views
-
-
இரா. சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் எழுதியுள்ள உருக்கமான கடிதம் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பி கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை மக்கள் இயக்கம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கைதிகள் விடயத்தில் சரியான தீர்மானத்தினை முழுமையாக எடுப்பீர்கள் என்ற நம்பிகையில் தான் கடந்த காலத்தில் கைதிகளினால் முன்னெடுத்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததை தாங்கள் அறிவீர்கள். ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வினை முன்வைப்பதாக என்னிடம் கூறியிருக…
-
- 0 replies
- 342 views
-
-
வடமாகாண விவசாய அமைச்சின் உழவர் விழாவில் கலந்துகொள்ள முல்லைத்தீவு வருகிறார் கவிஞர் வைரமுத்து- வடக்கு மாகாண விவசாய அமைச்சு நடாத்தும் உழவர் விழா நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தென்னிந்தியாவின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் 23ஆம் திகதி முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் உழவர் விழா இடம்பெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்துகொள்கிறார். உழவர்களை கௌரவப்படுத்தும் இந்த நிகழ்வில் சிறந்த வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையாளர்கள், சிறந்த கால்நடைப் பண்ணையாளர்கள், சிறந்த கோழிப் பண்ணையாளர்களுக…
-
- 0 replies
- 462 views
-
-
மன்னார் மறைமாவட்ட ஆயர் செயலகத்திலிருந்து வேண்டுகோள்! இராயப்பு யோசப் ஆண்டகை குறித்தோ மற்றும் ஆயர் இல்லத்தில் நிகழும் எந்த நிகழ்வாகினும் ஆயர் செயலகத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக செயற்பட்டு எந்தக் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ வெளியிட வேண்டாம் என கேட்டு நிற்கின்றோம். மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய இராயப்பு யோசப் ஆண்டகையின் 23 ஆண்டு கால தியாகம் நிறைந்த, இக்கட்டான காலத்தில் கூட ஓங்கி ஒலித்த அவரது உண்மைக்கான நீதிக்கான குரலும் அவருடைய மனித நேயப் பணிகளும் இலங்கையில் மட்டுமல்ல மாறாக உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு, பாராட்டப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும்.என மன்னார் மறைமாவட்ட ஆயர் செயலக…
-
- 0 replies
- 315 views
-
-
கஞ்சா வியாபாரி கைது! பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த குடும்பஸ்தர் ஒருவரை, இன்று கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைதானவர், குருநகர் பன்சல் வீதியினை சேர்ந்த 37 வயதுடைய நபரென பொலிஸார் கூறினர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்த, 14 வயது சிறுவனொருவனிடம் பணத்தினைக் கொடுத்து கஞ்சா வாங்கி வருமாறு பொலிஸார் அறுவுறுத்தியிருந்தனர். சிறுவனுக்கு கஞ்சாவினைக் கொடுக்க முற்பட்ட போது சிவில் உடையில் நின்ற பொலிஸார், அவரைக் கையும் மெய்யுமாக கைது செய்தனர். http://onlineuthayan.com/news/7301
-
- 0 replies
- 339 views
-
-
ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு! வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆட்சி, சட்டம், மனித உரிமைகள் செயற்குழுவில் பங்குகொள்ள இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை இன்று சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கைசேவையின் தலைவர், ஜீ. எஸ்.பி. சேவையின் உபதலைவர், ஜீ.எஸ். பி.பிளஸ் ஒருங்கிணைப்பாளர் போன்றோருடன் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையின் மனித உரிமைகள் உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். http://onlineuthayan.com/news/7…
-
- 0 replies
- 356 views
-
-
பூநகரியில் 860 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாக சிங்களவர்களுக்கு விற்பனை!: புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும் பரபரப்புத் தகவல்! பூநகரியில் 860 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாக சிங்களவர்களுக்கு விற்பனை!: புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும் பரபரப்புத் தகவல்கள் பூநகரியில் 860 ஏக்கர் காணி போலி ஆவணங்கள் மூலம் சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதுடன் அக்காணிகளில் புதைக்கப்பட்ட சடலங்கள் புதையல் பூஜை என்ற போர்வையில் அகற்றப்பட்டுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது: பூநகரி- கெளதாரிமுனை - பரமன்கிராயில் ப…
-
- 1 reply
- 423 views
-
-
இந்திய மீனவர்களின் 'அத்துமீறலை' ஆராய அமைச்சரவை குழு நியமனம் வடக்கு கடற்பரப்புக்குள் அண்மையில் நுழைந்ததாகக் கூறப்படும் இந்திய இழுவைப் படகு ஒன்று இலங்கை கடல் பரப்பில் நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சம்பந்தமாக விசேட அமைச்சரவை குழு மூலம் ஆராய்ந்துவருவதாக அரசாங்கம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் மீனவர் கூட்டுறவு சங்கங்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று அழைக்கப்பட்டபோது அரச தரப்பு இதனை அறிவித்தாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிந்தக பெர்னாண்டோ தெரிவி…
-
- 0 replies
- 251 views
-
-
இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த விமானதாங்கி யுத்தக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு செல்லவுள்ளது: 19 ஜனவரி 2016 இந்தியாவின் மிகவும்சக்திவாய்ந்த விமானதாங்கி யுத்தக்கப்பல் இந்த வாரம் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது. 44.500 தொன் ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியா வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதை உறுதிசெய்துள்ள அதிகாரிகள் இதன் மூலம் இந்திய இலங்கை உறவுகளில் ஓரு புது அத்தியாயம்ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கை துறைமுகத்திற்கு கடந்தஇரண்டுதசாப்த காலபகுதியில் விமானந்தாங்கி கப்பல் எதுவும்வருகைதராததை சுட்டிக்காட்டியுள்ள இலங்கை அதிகாரிகள்,இந்திய கப்பலிற்கு இலங்கை கடற்படையினர் விசேட வரவேற்பை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.அமெரிக்காவின் விமானத…
-
- 4 replies
- 707 views
-
-
மேலும் 41 பேர் தாயகம் திரும்பினர் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் நாடு திரும்பல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மேலும் 41 இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். தமிழகத்தின் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கையை வந்தடைந்த இவர்களில் 15 ஆண்கள் மற்றும் 26 பெண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. இதேவேளை, 100,000 இலங்கை அகதிகள் தமிழகத்தில் இருந்ததாகவும், அவர்களில் 5,600 பேர் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், 64,000 பேர் அங்குள்ள முகாம்கள…
-
- 0 replies
- 425 views
-
-
தேர்தலை வழி நடத்தும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைக்க வேண்டும்: குமார வெல்கம [ புதன்கிழமை, 20 சனவரி 2016, 04:26.22 AM GMT ] உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். பி.பி.சி சிங்கள சேவைக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பணிகள் மற்றும் தேர்தலை வழி நடத்தும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைவராக ஏற்றுக் கொள்கின்றோம். ஏனெனில் அவரே தேர்தலின் ஊடாக நியமிக்கப்பட்டவர். எனினும் மஹிந்தவுக்கே மக்…
-
- 1 reply
- 409 views
-
-
மயில் மாளிகை நீச்சல் தடாகத்தில் தங்கம் இல்லையாம்: மஹிந்த தான் தங்கவிருந்ததாகக் கூறப்படும் மயில் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் தங்கம் இல்லை முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், டொலர் திரட்டப்பட்ட விதம் தொடர்பில் தேடி பார்க்குமாறும் அவர் கோரிக்கைவிடுத்தார். பண்டாரகம குருச சந்தியில் உள்ள சுதர்ஷணாராமய விஹாரையில் மதவழிபாடுகளில் ஈடுபட்டு திரும்பும் போது, ஊடகவியலாளர்கள் அவரைச் சந்தித்தனர். இதன்போது கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்கள், புதிதாக உருவாக்கப்படும் கட்சிக்கு நீங்களா அல்லது உங்களுடைய சகோதரனா தலைவர்? …
-
- 0 replies
- 319 views
-
-
ஒற்றையாட்சிக்குள் முடங்குதலா இறுதித் தீர்வு? 'தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி முன்னெடுத்து வருகின்றது. சிங்கள கடும்போக்கு தளங்களான ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட தரப்புக்களோடு கூட கூட்டமைப்பு பேசி வருகின்றது. இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால், தமிழ் மக்களுக்கு என்றைக்குமே தீர்வு கிடைக்காது. அதற்கான வாய்ப்புக்களும் எதிர்காலத்தில் அமையாது.' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவில் கடந்த திங்கட்கிழமை ஊடகவியலாளர்கள் சிலருடனான சந்திப்பொன்றின்…
-
- 0 replies
- 299 views
-
-
கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிட காணாமல் போனோர் சங்கம் தீர்மானம் [ Wednesday,20 January 2016, 05:56:33 ] கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உண்மை நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள திகதி தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தமது சங்கத்துடன் இணைந்து, காணாமல் ஆக்கப்பட்…
-
- 0 replies
- 378 views
-
-
சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக இலங்கை மருத்துவர்களுக்கு எதிராக வழக்கு?20 ஜனவரி 2016 சட்டவிரோதமான முறையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக ஆறு இலங்கை மருத்துவர்களுக்கு எதிராக இந்திய காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். டொக்டர் மஹாதேவ, டொக்டர் சாதனா, டொக்டர் சமிளா, டொக்டர் நிரோசினி, டொக்டர் ஹபீபா செரீப் ஆகியோர் சட்டவிரோமான முறையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 60 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை ஏற்பாடு செய்த 36 வயதான இந்திய பிரஜை பிரஜாபதி என்பவரை இந்திய அதிகாரிகள் கைது செ…
-
- 0 replies
- 424 views
-