ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இனி உந்தப் பருப்பு வேகாது மோனே- யாழ்ப்பாணத் தம்பி மகிந்தர் வாயை திறந்தாலே எங்களுக்குச் சிரிப்புத்தான். சிலபேருக்கு மகிந்த இல்லாட்டி அரசியல் இல்லை எண்டு புலம்புறினம். ஆனால் என்னைப் பொறுத்தவரையிலை மகிந்தவின்டை ஆட்சி கொடிய ஆட்சிதான். அந்தக் கொடிய ஆட்சியிலையும் வாயை அப்பப்ப திறந்து நல்லா கொமடி விடுவார்.. அது பெரிய இழப்புத்தான். இருந்தாலும் இப்பவும் ஆள் வாய் திறந்தால் நல்ல சிரிப்புத்தான். மகிந்தவின்டை காவியத்திலை இப்ப அவர் கோமாளி கரக்டரிலைதான் நடிக்கிறார். இருந்தாலும் மனுசன் இன்னும் நல்லா அடிக்குது. பின்னப் பாருங்கவன். தமிழ் அரசியல் கைதிகள் ஒரு சிலரை விட்டிருக்கினம். அதுக்கு பு…
-
- 0 replies
- 807 views
-
-
மகிந்த ராஜபக்சவின் அதிஸ்ட மோதிரம் காணாமல் போய் மீட்கப்பட்டது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அதிஸ்ட மோதிரம் நேற்று முன்தினம் கொழும்பு ஐந்து நட்சத்திரஹோட்டலில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் காணமற்போனதாகவும் எனினும் ஹோட்டல் பணியாளர்கள் அதனை பின்னர் கண்டுபிடித்து கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு சினமன் ஹோட்டலில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மகிந்தராஜபக்ச கலந்து கொண்;டவேளை அவரது அதிர்ஸ்டமோதிரம் காணமற்போனதால் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புகடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பு உருவானது. அவர்கள் உடனடியாக தேடும் நடவடிக்கையை மேற்கொண்டனர். குறிப்பிட்ட நிகழ்வில…
-
- 0 replies
- 673 views
-
-
புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் வரவேற்கப்பட வேண்டியது – HRW:- 29 நவம்பர் 2015 புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் வரவேற்கப்பட வேண்டியது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்ட 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 தனி நபர்களை கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தடை செய்திருந்தது. எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயிலான புதிய அரசாங்கம் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த அமைப்புக்களில் எட்டு அமைப்புக்களையும் 267 நபர்களையும் தடைப் பட்டியலிலிருந்து நீக்கியது. இந்த நடவடிக்கையானது வரவேற்கப்பட வேண்டியது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய …
-
- 1 reply
- 657 views
-
-
7.5 கிலோ கிராம் கஞ்சாவுடன் கொழும்பு பஸ்ஸில் இருவர் கைது சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கிச் செல்லவிருந்த பஸ்ஸொன்றில், 7.5 கிலோகிராம் கஞ்சாவை வைத்திருந்த இரண்டு பேரை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியிருந்து கொழும்புக்குச் செல்லவிருந்த தனியார் பஸ்ஸில் இருந்தவர்களே இவ்வாறு சனிக்கிழமை (28) இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பின்னர், குறித்த பஸ்ஸை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவ்விருவரும் கொழும்பை வசிப்பிடமாக…
-
- 0 replies
- 565 views
-
-
இலங்கையின் கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களிடையே கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை என கண் மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் கண்புரை நோயால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு தேவையான சிகிச்சை அளிக்க போதிய நிதியுதவிகளை பொதுமக்களிடமிருந்து பெறும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கிழக்கிலிருந்து புறப்பட்ட நடை பயணம் ஒன்று தலைநகர் கொழும்பில் முடிவடையவுள்ளது. 'விஷன் 2020' எனும் அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்தது பத்துலட்சம் பேர் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இதில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்புகின்றனர். இலங்கை அ…
-
- 0 replies
- 721 views
-
-
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் பஸ் நிலையம் மற்றும் பொது மலசலகூடம் என்பவற்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏ-9 வீதி மாங்குளம்; சந்திப்பகுதியானது, வடமாகாணத்தின் முக்கிய இடமாகக் காணப்படுவதுடன் முல்லைத்;தீவு மன்னார், ஆகிய பகுதிகளை இணைக்கின்ற பிரதான சந்தியாகவும் தினமும் 4,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற இடமாகவும் காணப்படுகின்றது. குறிப்பாக மன்னார், வெள்ளாங்குளம் தொடக்கம் மாங்குளம் வரைக்குமான வீதியிலுள்ள வெள்ளாங்குளம், கல்விளான், துணுக்காய், மல்லாவி, ஒட்டறுத்தகுளம், வன்னிவிளாங்குளம், உள்ளிட்ட கிராம மக்களும் இதேபோன்று மாங்குளம் தொடக்கம் ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வரையான வீதியில் அமைந்துள்ள கிராம மக்களும்; இந்த மா…
-
- 0 replies
- 763 views
-
-
தொண்டமானாறு அக்கரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வல்வெட்டித்துறை, இமையானன் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சங்கீத்தன் (வயது 18) என்ற இளைஞன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று வெள்ளிக்கிழமை கடலுக்கு குளிக்க சென்றிருந்த நிலையிலே குறித்த இளைஞன் அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை (28) சடலத்தை மீட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார்; தெரிவித்தனர். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/160156#sthash.puVUQu5Y.dpuf
-
- 0 replies
- 511 views
-
-
வளலாய் பிரதேச அபிவிருத்திக்கு 67 மில்லியன் ரூபா நிதியுதவி; ஸ்ரீலங்காவுக்கான நோர்வே தூதுவர் [ Sunday,29 November 2015, 06:10:30 ] யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வளலாய் பிரதேசத்தின் அபிவிருத்திக்கென நோர்வே அரசாங்கத்தினால் 67 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்காவுக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர் தெரிவித்தார். ஸ்ரீலங்காவுக்கான தூதுவராக பதவியேற்ற தோர்ப்ஜோன், நோர்வே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக வடக்குக்கு நேற்று முன் தினம் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் ஒரு அங்கமாக கடந்த 30 வருடங்களாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீள்குட…
-
- 0 replies
- 472 views
-
-
தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி; அரசாங்கம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு [ Sunday,29 November 2015, 02:52:02 ] வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் துறை அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதிக்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக ஆராய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தேயிலைத் தோட்டங்களில் தேயிலை பறிப்பதில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் ஆனால் தேயிலை செடிகளுக்கு உரம் போடுதல், களைகளை அகற்றுதல் போன்ற விடயங்களிலும் தொழிலாளர்களின் நலன்களிலும் கவனம் செலுத்தப்படுவதில்லை என சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் பெரியசாமி பிரதீபன் குற்றம் சுமத்தியுள்ளார். மலையகத்தின் சில பிரதேசங்களில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைகள்…
-
- 0 replies
- 518 views
-
-
மட்டக்களப்பில் நாகர் ஆட்சியை உறுதிப்படுத்தும் தொல்பொருள்கள் மீட்பு! [Sunday 2015-11-29 09:00] மட்டக்களப்பு வந்தாறுமூலை, பாற்சேத்துகுடாப் பகுதியில் நாகர் ஆட்சி இருந்தமைக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்.பல்கலைக்கழக வேந்தருமான சி.பத்மநாதன் உட்பட தொல்லியல் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசிரியருமான செ.பத்மநாதன் ஆகியோர் குறித்த பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் 03 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். மட்டக்களப்பு வந்தாறுமூலை, பாற்சேத்துகுடாப் பகுதியில் நாகர் ஆட்சி இருந்தமைக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்.பல்கலைக்கழக வேந்தருமான சி.பத்மநாதன் உட்பட தொல்லியல் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசிரியரு…
-
- 0 replies
- 650 views
-
-
திருமண விழாவில் தொலைந்து போன மகிந்தவின் கைராசி மோதிரம்! [Sunday 2015-11-29 09:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணிந்திருந்த- அவருக்கு ராசியான மோதிரம் ஒன்று நேற்றுமுன்தினம் காணாமல்போனது. கொழும்பின் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றிலேயே இந்த மோதிரம் காணாமல் போனது. இந்தநிலையில் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தெரியாத வகையில் முழுமையாக தேடுதல்கள் நடத்தப்பட்டன. மஹிந்தவின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் அனைத்து இடங்களிலும் தேடிபார்த்த பின்னர் பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதன்போதே விடயம் அனைவருக்கும் தெரியவந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணிந்திருந்த- அவருக்கு ராசியான மோதிரம் ஒன்று நேற்றுமுன்தினம் காணாமல்போனது. கொழும்பின் ஹோட்டல் ஒன்றில் இடம்…
-
- 0 replies
- 939 views
-
-
பான் கீ மூன், செய்ட் ராட் ஹூசைன் பெப்ரவரியில் இலங்கைக்கு வருகின்றனர்! [Sunday 2015-11-29 09:00] ஐ.நாவின் உயர் அதிகாரங்களை கொண்ட குழு ஒன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைன் ஆகியோர் 2016 பெப்ரவரியில் இலங்கைக்கு வரவுள்ளனர். எனினும் திகதிகள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ஐ.நாவின் உயர் அதிகாரங்களை கொண்ட குழு ஒன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைன் ஆகியோர் 2016 பெப்ரவரியி…
-
- 0 replies
- 403 views
-
-
கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் செய்யப்பட்டோர் குறித்த தகவல்களை அரசு உடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, யாழ் நகரில் கொட்டும் மழையின் மத்தியிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. முன்னிலை சோஷலிசக் கட்சி, சம உரிமை இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் வடக்கு, தெற்கைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். ‘இப்போதாவது காணாமல்போன சகலரினதும் தகவல்களை வெளியிடு’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதன்போது காணாமல் போனோரின் தகவல்களை உடனடியாக வெளியிடவேண்டும் வெளியிடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் க…
-
- 0 replies
- 449 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத் துணைப்படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். முன்பள்ளி செல்லும் தமிழ்க் குழந்தைகள் இராணுவச் சின்னம் பொறித்த சீருடையுடனேயே செல்கின்றனர். இது சரியானதா எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்தச் செயற்பாடானது தமிழ்க் குழந்தைகளிடத்தில் இராணுவ வாதத்தையே ஏற்படுத்தும் என்றும் விசனம் வெளியிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்ட அவர் மேலும் த…
-
- 0 replies
- 599 views
-
-
தமிழ்க் கைதிகளின் விடுதலைக்கு சட்டமா அதிபர் விரைந்து செயற்பட வேண்டும்' தமிழ்க் கைதிகள் அண்மையில் தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டபோது இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும் அவசரகால சட்டவிதிமுறைகளின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் உரிமைகள் தொடர்பில் 'ஆழ்ந்த' கவலையடைந்துள்ளதாக கூறியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு சட்டமா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் இன்றியும், நம்பகமான ஆதாரங்கள் இன்றியும் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடன…
-
- 0 replies
- 562 views
-
-
வீடு கட்டும்போதெல்லாம் விக்னேஸ்வரன் ஐயாவின் முகமே கல்லில் தெரிந்தது: போரால் பாதிக்கப்பட்ட உறவு [ சனிக்கிழமை, 28 நவம்பர் 2015, 12:07.10 PM GMT ] வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் நிதி உதவியுடன் வடக்கின் 5 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 14 வீடுகளில் நவாலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடொன்றை முதலமைச்சர் நேற்றைய தினம் மாலை திறந்து வைத்துள்ளார். முதலமைச்சர் அமைச்சினால் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், போரில் இழப்புக்களை சந்தித்தவர்களுக்கான வீட்டுத்திட்டத்தில் வடக்கில் 5 மாவட்டங்களிலும் 14 வீடுகள் தலா 6 லட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி யாழ்.நவாலி பகுதியில் போரில் படுகாயமடைந்து வாழ்வாதார ரீதியாக பாதி…
-
- 2 replies
- 832 views
-
-
பட்ஜெட்டை விமர்சித்து யாழில் சுவரொட்டிகள் சொர்ணகுமார் சொரூபன் புதிய அரசின் வரவு- செலவுத்திட்டத்திலுள்ள விடயங்களை விமர்சித்து யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'கூட்டரசாங்கம் பென்ஷனுக்கு வேட்டு' 'EPF - ETF கொள்ளையடிக்கிறது', 'உர மாணியம் நாசம் அரசாங்கத்தின் குண்டுக்கு சிக்காதிருப்போம்', 'பைக்- த்ரீ வீல் வாகனங்களுக்கு விதித்த வரியை சுருட்டிக்கொள்' ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டபட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/160158/%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9C-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%A4-…
-
- 0 replies
- 460 views
-
-
திருமலை மாணவர்கள் படுகொலைச் சம்பவம் : குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமானதல்ல 2006ஆம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகெலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை வரை கடினமான விடயம் அல்லவென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நீதி மற்றும் கொள்கை வகுப்பு பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் இலங்கையின் உள்ளூர் ஊடகமொன்றிற்கு இந்த கருத்தினைத் வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், இந்தச் சம்பவம் இடம்பெற்று 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அதன் குற்றவாளிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவும் இல்லை,…
-
- 0 replies
- 592 views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் சிலரின் பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் வடமாகாண சபையின் சில உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீள வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னறிவித்தல்கள் எதுவும் விடுக்கப்படாத நிலையிலேயே சில உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்புகள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் இது தொடர்பாக தாம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் மீண்டும் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு கோரி கடி…
-
- 0 replies
- 468 views
-
-
பிரதமர் ரணில் மற்றும் உயர் மட்ட அமைச்சர்களை பவர் சந்தித்த போது… சுமந்திரனும் காணப்படுகின்றார் இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இரண்டு தடவை சந்தித்துப் பேசியிருக்கின்றார். இது தமிழ் அரசியல் வட்டாரங்களில் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தமழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கொழும்பில் அவரைச் சந்தித்த போது கூட்டமைப்பின் ஒரு பிரதிநிதியாக சுமந்திரன் கலந்துகொண்டிருந்தார். சமந்தா பவர் தனது விஜயத்தின் இறுதி நிகழ்வாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார். பிரதமர் ரணிலுடன் உயர் மட்ட அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, சுவ…
-
- 1 reply
- 650 views
-
-
06 கைகுண்டுகளை வைத்திருந்த ஐந்து பேர் மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த நாட்டில் தாயாரிக்கப்பட்டுள்ள 6 கைகுண்டுகளுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. சந்தேக நபர்களை இன்று மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilwin.com/show-RUmtzBRcSWmp0G.html
-
- 0 replies
- 498 views
-
-
வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்னோட்டம், இன்று சபை அமர்வின்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டது. மத்திய அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதியின் அடிப்படையில், 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்னோட்டம் முதலமைச்சரினால் முன்மொழியப்பட்டது. இரண்டாம் இணைப்பு வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக்கூற்று அறிக்i க இன்றைய தினம் மாகாணசபையின் விசேட அமர்வில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 2015ம் ஆண்டை விடவும் 2016ம் ஆண்டுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாகாண சபையின் விசேட அமர்வு காலை 9.30 மணிக்கு தொடங…
-
- 0 replies
- 717 views
-
-
குளோபல் தமிழச் செய்தியாளர் கொழும்பு:- இலங்கையின் பாதுகாப்பு உபகரணங்களை தரமுயர்த்துவதற்கு உதவுமாறு அரசாங்கம் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோள் குறித்து ஆராய்வதற்காக இந்திய இராணுவதளபதி ஜெனரல் டல்பீர் சிங் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்திய இராணுவதளபதி தனது ஐந்துநாள் விஜயத்தின்போது இலங்கையின் போர்விமானங்கள், டாங்கிகள் போன்ற யுத்த தளபாடங்களை தரமுயர்த்துவது குறித்த பேச்சுக்களை மேற்கொள்வார் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை மீது அதிகரித்து வந்த சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் ஓரு முயற்சியாகவே இது இடம்பெறுவதாக இந்திய செய்தித் தாளொன்று தெரிவித்துள்ளது. தனது போர்தளபாடங்களை தரமுயர்த்துமாறு இலங்க…
-
- 1 reply
- 519 views
-
-
முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும்போது, தங்களுக்கு தேவையானவற்றை பேரம் பேசிப் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், நாங்கள் அரசாங்கத்திடம் எவ்வித பேரம் பேசலையும் செய்யவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், மாவட்;டம் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் மற்றும் மாவட்டத்தில் அதிக வாக்குப் பெற்ற கட்சியின் பிரதிநிதி ஆகியோர் இணைத் தலைவர்களாக இருப்பார்கள் என அரசாங்கத்தால் கூறப்பட்டது. ஆனால், மன்னார் மாவட்டத்தில் அவ்வாறானதொரு முறையில்லாமல் இணைத் தலைவராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இருக்கின்றார். இது தொடர்பில் முதலமைச்சரிடம் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'இது ஒரு அரசியல் ரீத…
-
- 3 replies
- 862 views
-
-
வடக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் சட்டத்தை மீறியமைக்காக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். நல்லூர் கோவிலில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக சிலர் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இது அவர்களின் தனிப்பட்ட விடயமாதலால் பொலிஸார் இதில் தலையிடவில்லை. மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. என்ற போதும் எல். ரீ. ரீ. ஈ. அமைப்பினை முன்னிலைப்படுத்தி எவ்வித ஆர்ப்பாட்டங்களோ ஊர்வலங்களோ நிகழ்ச்சிகளோ பிரசித்தமான முறையில் முன்னெடுக்கப்படாமையில் பதற்றமான சூழ்நிலை காணப்படாததுடன் எவரையும் கைதுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 639 views
-