ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
எவராலும் என்னைக் கைது செய்ய முடியாது – கருணா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு எவரினாலும் தம்மைக் கைது செய்ய முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தம்மைக் கைது செய்யும் என்ற அச்சம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் அண்மையில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தமக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் கிடையாது எனவும் கருணா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறி…
-
- 18 replies
- 2.9k views
-
-
இந்த நான்கு கொலைகளையும் கிண்டி எடுக்கவும்: பிரதமருக்கு சங்கரி கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், ரி.மகேஸ்வரன், ரி.எம்.தசநாயக்கா ஆகியோரின் படுகொலைகள் சம்பந்தமான விபரங்களை தந்து உதவுமாறு சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் தங்களை வேண்டியுள்ளதாக அறிகின்றேன். இதே காலத்தில்தான் தங்கத்துரை, கிங்ஸ்லி ராஜநாயகம், லக்ஸ்மன் கதிர்காமர் மற்றும் ஆகியோரின் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. தயவு செய்து இவர்களின் விபரங்களையும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றிய செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கவும் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்ப…
-
- 0 replies
- 677 views
-
-
முல்லை. மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டுக்குள் மின்சாரம் முல்லைத்தீவு மாவட்டம் உட்பட இதுவரை மின்சாரம் வழங்கப்படாத அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் மின்விநியோகம் வழங்கப்படும். இவ்வாறு வடக்கின் வசந்த மின்விநியோக திட்ட முகாமையாளர் தம்பிப்பிள்ளை குணசீலன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட கற்சிலைமடு, கனகரத்தினபுரம், பேராறு, பண்டாரவன்னி, வித்தியாபுரம், மன்னாகண்டல் ஆகிய கிராம மக்கள் போரின் பின்னர் 2010ஆம் ஆண்டு மீளக்குடியமர்த்தப்பட்டனர். மீள்குடியமர்த்தப்பட்டு 15 வருடங்கள் ஆகிய நிலையில் தமக்கு இன்னமும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வினவியபோதே குணசீலன் இவ்வாறு தெரிவித்தார். வீதிகளுக்கான மின்விநியோகம்…
-
- 0 replies
- 389 views
-
-
முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம் வடக்கு முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஜனநாயக முறையிலான கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அனைத்து மக்களையும் இதில் பங்குகொள்ளுமாறும் தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு அறிவித்தள்ளது. குறித்த கவனவீர்ப்பு போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை யைத் தொடர்ந்து அமைதியான முறையில் நாடு முழுவதிலும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கரிசனை காட்டப்படவில்லை. இந்த நிலையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கவன…
-
- 0 replies
- 312 views
-
-
போரின் பின் காணாமல் ஆக்கப்பட்டோர் பிள்ளையானால் கொல்லப்பட்டிருக்கக்கூடும் பாரின் பின்னரான காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பலர் பிள்ளையானால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன். தீவுச்சேனை பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட வேண்டும் அப்போது தான் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்னர் குற்றபுலனாய்வு பிரிவனரால் சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் நிறை…
-
- 0 replies
- 308 views
-
-
மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்லும் கொண்டயா சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான கொண்டயா என அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். பொலிஸார், தன்னை அடித்து துன்புறுத்தி, பலாத்காரமாக பொய்யான வாக்குமூலமொன்றை பெற்றதாக குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதியாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட மரபணு மற்றும் ஏனைய சாட்சிகளுடன் ஒப்பிடுகையில் கொண்டயா குற்றமற்றவர் என நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொண்டயாவின் மூத்த சகோதரனான சமன் ஜயலத்தின் மரப…
-
- 0 replies
- 183 views
-
-
மட்டக்களப்பு, நெல்லிக்காடுக் கிராமத்தில் திங்கட்கிழமை (19) நள்ளிரவு யானை தாக்கியதில், கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்தக் கிராமத்தினுள் புகுந்த யானை, இவர்கள் வசித்துவந்த குடிசையைத் தாக்கியுள்ளது. இதன்போது கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ரி.மோகனதாஸ் (வயது 30), சுயமலர் (வயது 17) ஆகியோரே யானையின் தாக்குதலுக்குள்ளாகினர். இவர்கள் இருவரும் திருமணமாகி சுமார் 10 மாதங்களாக குடிசையில் வசித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.tamilmirror.lk/157015/ய-ன-த-க-க-இளம-தம-பத-உய-ர-ழப-ப-#sthash.59cWRrZ9.dpuf
-
- 0 replies
- 208 views
-
-
போர்க்குற்றம் சாட்டப்படும் படையினரைக் காப்பாற்ற கருணைச்சபை! [Tuesday 2015-10-20 07:00] போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்தினரைக் காப்பாற்ற கருணைச் சபையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின் முக்கிய மதகுருமார்களை உள்ளடக்கி இந்த கருணைச் சபை உருவாக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் படையினருக்கு மன்னிப்பு வழங்குவதே இந்த கருணைச் சபை உருவாக்கப்படுவதன் நோக்கமாகும். போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்தினரைக் காப்பாற்ற கருணைச் சபையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின் முக்கிய மதகுருமார்களை உள்ளடக்கி இந்த கருணைச் சபை உர…
-
- 0 replies
- 585 views
-
-
முன்னாள் பெண்போராளி திடீர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பம்: குளோபல் தமிழ் செய்தியாளர்:- 20 அக்டோபர் 2015 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளி ஒருவர் திடீரெ மரணித்துள்ளமை குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தயாரான 29 வயதான சசிதரன் தாரிகா என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மருத்துப் பிரிவு முன்னாள் போராளியாவார். இறுதி யுத்தத்தில் பலத்த காயமடைந்த நிலையில் வாழ்ந்து வந்த இவர் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியை அடுத்து மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் உள்ள புலிகளின் மருத்துவ நிலையத்தில் யுத்த காலத்தில் போராளி மருத்துவராக கடமையாற்றிய இவர் போரில் காயமடைந்த மக்க…
-
- 0 replies
- 493 views
-
-
ரவிராஜ் படுகொலை சரண் என்ற சந்தேகநபரை கைதுசெய்ய சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவி நாடப்பட்டுள்ளது:- 20 அக்டோபர் 2015 ரவிராஜ் படுகொலை சரண் என்ற சந்தேகநபரை கைதுசெய்ய சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவி நாடப்பட்டுள்ளது:- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு பிரிவினர்,சரண் என்ற சந்தேகநபரை கைதுசெய்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர். சுவிட்சர்லாந்திற்கு தப்பிச்சென்ற சரண் கிழக்குமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் நெருங்கி நண்பர் என தெரிவித்துள்ள பொலிஸ் வட்டாரங்கள் ரவிராஜை படுகொலை செய்வதற்கான துப்பாக்கி இராணுவ அதிகாரியொருவரால் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட அதி…
-
- 0 replies
- 326 views
-
-
மஹிந்த ஆதரவு அணியினர் தனி கூட்டணி! - உடைகிறது சுதந்திரக் கட்சி [Tuesday 2015-10-20 09:00] ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து புதிய முன்னணி உருவாக்கப்படவுள்ளது. இந்த முன்னணி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தனித்துக் களமிறங்கவிருப்பதாக அறியமுடிகின்றது. இது தொடர்பிலான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தை, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தலைமையில் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து புதிய முன்னணி உருவாக்கப்படவுள்ளது. இந்த முன்னணி, எதிர்வரும் உள்ளூராட்சி…
-
- 0 replies
- 282 views
-
-
நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை, நம்பிக்கை, புரிந்துணர்வு என்பவற்றை நாங் கள் பரந்தளவில் பலப்படுத்திக் கொள்ளவேண்டும். மீண்டும் யுத்தமொன்று ஏற்படாதவகையில் இந்த நாட்டை எவ்வாறு சீர்படுத்துவது. யுத்தம் இடம்பெற்றமைக்கான காரணங்கள் போன்றவற்றைக் கண்டறிந்து அவை மீண்டும் இடம்பெறாதவாறு செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டை முன்னேற்றவும், மாற்றத்தை ஏற்படுத்தவும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்பவும் தேசிய ஒற்றுமை அவசியம் என்பதுடன் சர்வதேச உதவியும் தேவையாகும். இன்று உலகில் எந்தவொரு நாடும் எந்தவொரு தலைவரும் எந்தவொரு சர்வதேச அமைப்பும் எ…
-
- 0 replies
- 520 views
-
-
ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக விகாரமா தேவி பூங்காவில் நடத்தப்பட்ட முதலாவது கூட்டம் இது என்று மகிந்தானந்த அலுத்கமகே தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இலங்கை தொடர்பான ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிக்குமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சில நடத்திவரும் கூட்டமொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துக் கொண்டுள்ளனர். ஜெனீவா தீர்மானம் தொடர்பில், ஆளுங்கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இந்த நிலையில் அந்தக் கட்சியை சேர்ந்த குமார் வெல்கம, பந்துல குணவர்தன, விதுர விக்ரமநாயக்க, நாமல் ராஜபக்ஷ, ரஞ்சித் சொய்சா, டலஸ் அழஹப்பெரும, மகிந்தானந்த அலுத்கமகே உள்ளி…
-
- 0 replies
- 413 views
-
-
புலிகளை இல்லதொழிப்பதில் விமானப்படையினரின் பங்களிப்பு அளப்பெரியது : ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிக்கும் முயற்சிகளின் போது விமானப்படையினரின் பங்களிப்பு அளப்பெரியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது விமானப்படையினரின் பங்களிப்பினை குறைத்து மதிப்பீடு செய்துவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை சீனன்குடா விமானப் படை முகாமில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று இதனைத் தெரிவித்துள்ளார். விமானப்படையினரின் வழங்கி வரும் சேவையில் காணப்படும் திறன் மற்றும் தரம் குறித்து திருப்தி அடைவதாகத் தெரிவித்துள்ளார். தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் மற்றும் உடல் உறுப்புக்களையும் ஏனைய வகையிலும் தியாகங்ளை…
-
- 0 replies
- 487 views
-
-
தந்தையை நாய் கூட்டில் சிறை வைத்த மகளுக்கு விளக்கமறியல் கண்டி - பலகொல்லை பகுதியில் தனது உயர் ரக நாயையும் அதன் குட்டிகளையும் வீட்டின் உள்ளே கட்டிலில் உறங்க வைத்து தனது தந்தையை நாய் கூட்டில் பல வருடங்களாக சிறை வைத்த பெண்ணை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது தந்தை வீட்டின் உள்ளே மலம், சிறு நீர் கழிப்பதனால் அவரை நாய் கூட்டில் சிறை வைத்ததாக கைது செய்யப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் 73 வயதுடைய குறித்த தந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/1524
-
- 0 replies
- 388 views
-
-
இராணுவ தளபதி, புலனாய்வு பணிப்பாளரை ஆஜராக உத்தரவு இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் ஆகிய இருவரையும் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்யா எக்னலிகொடவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிமன்றம், இவ்வுத்தரவை வழங்கியுள்ளது. கேலிச்சித்திரக் கலைஞரும் அரசியல் செயற்பாட்டாளருமான பிரகீத் எக்னலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி, 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/1505
-
- 0 replies
- 386 views
-
-
இந்திய இலங்கை மீனவர்கள் ஜெயலலிதாவை சந்திக்கத் திட்டம் - குளோபல் தமிழ் செய்தியாளர் கொழும்பு:- 19 அக்டோபர் 2015 இந்திய இலங்கை மீனவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். மீனவர்கள் எதிர்நோக்கி வரும் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த சந்திப்பினை நடாத்த திட்டமிட்டுள்ளனர். சந்திப்பு ஒன்றை நடாத்த திகதியொன்றை ஒதுக்கித் தருமாறு கோரி முதலமைச்சரின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இலங்கை இந்திய மீனவர் பேரவையின் ஆலோசகர் எஸ்.பி. அந்தோனிமுத்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு இடையில் நடைபெறவுள்ள நான்காம் சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த விரும்புவதாக மீ…
-
- 2 replies
- 322 views
-
-
இலங்கை விவகாரத்தில் நோர்வேயின் பங்களிப்பு- சொல்ஹெய்ம், விடார்கெல்கிசன் ஆகியோர் வெளிப்படுத்த உள்ளனர் 19 அக்டோபர் 2015 இலங்கை விவகாரத்தில் நோர்வேயின் பங்களிப்பு- சொல்ஹெய்ம், விடார்கெல்கிசன் ஆகியோர் வெளிப்படுத்த உள்ளனர் இலங்கை விவகாரத்தில் நோர்வேயின் பங்களிப்பு குறித்து நூல் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நோர்வேயின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கசன் ஆகியோர் இந்த நூலின் ஊடாக இலங்கையில், நோர்வே வழங்கிய பங்களிப்பு குறித்து தெளிவுபடுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நூலை மார்ச் சால்டர் எழுதியுள்ளார், இந்த நூலில் சொல்ஹெய்ம் மற்றும் விடார் ஆகியோரே ம…
-
- 0 replies
- 604 views
-
-
தொலைக்காட்சியில் காட்டப்பட்டது பிரபாகரனின் உடல் அல்ல! [ திங்கட்கிழமை, 19 ஒக்ரோபர் 2015, 06:35.58 AM GMT ] கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அவரோடதாக இருக்க வாய்ப்பில்லை என ஓய்வு பெற்ற, பேராசிரியரும் இந்திய இரகசிய நடவடிக்கைகளில் தொடர்புடைய முன்னாள் இந்திய கடற்படை மரைன் கமாண்டோ, கார்கில் என அழைக்கப்படும் எம்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் எம்.சுப்ரமணியம் ஆங்கில இணையத்தளமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அச் செவ்வியின் விபரம் வருமாறு, ரோ புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய பேராசிரியர் எம்.சுப்ரமணியம் இந்தியா அல்லது இலங்கை இதுவரையிலும் பிரபாகரனின் சரியான ஒரு இறப்பு சான்றிதழ் மற…
-
- 1 reply
- 1k views
-
-
விஜயன் காலத்துக்கு முற்பட்ட மயானத்தை பார்க்கலாம் -காஞ்னா குமார அரலியதாச தம்புள்ள, இப்பன்கட்டுவையில் அமைந்துள்ள புராதன மயானத்தில் விஜயன் காலத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய மேலும் சில எச்சங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியமும் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவகமும் வெளிப்படுத்தியுள்ளன. விஜயனது காலத்துக்கு முற்பட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது குறிப்பிடத்தக்கதொன்று என தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கண்டுபிடிக்கப்பட்டவற்றில் இறந்தவர்களால் பயன்படுத்தப்பட்ட களிமண் பானைகளும் சிறிய கப்பல்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் 2,600 வருடங்கள்…
-
- 0 replies
- 751 views
-
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய மீனவர் விடுவிப்பு பருத்தித்துறை கடல் பரப்பில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் புற்று நோயால் அவதிப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்திடம் பாரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளார் என்று கடற்றொழில் நீரியல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. தென்னிந்தியாவின் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த வீரமணி என்ற மீனவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த மீனவர் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்…
-
- 0 replies
- 354 views
-
-
கலப்பு நீதிமன்ற யோசனையும் அதற்கான எதிர்ப்பும் போரின் இறுதிக் கட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய விசாரணைக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென அண்மையில் நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் சபை மாநாட்டில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து சிங்கள மற்றும் தமிழ்த் தரப்புக்களின் இனவாதத் தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். குறித்த விசாரணைக் கட்டமைப்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் உள்ளடக்கப்பட்டு அதுவோர் சர்வதேச கலப்பு நீதிமன்றமாக உருவாக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர், தாம் மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் குறித்துச் சமர்ப…
-
- 0 replies
- 568 views
-
-
.ரி.எம். அட்டையை பயன்படுத்தி கையாடியவர் நீதிமன்றில் சரண் ஒருவரின் தன்னியக்க பணபரிவர்த்தனை (ஏ.ரி.எம்.) அட்டையைப் பயன்படுத்தி 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாவைச் சுருட்டிய சங்கத்தானைவாசி நேற்றுமுன்தினம் சட்டத்தரணி மூலம் நீதிமன்றில் சரணடைந்தார். குறித்த நபர் சாவகச்சேரியில் உள்ள தனியார் வங்கியயான்றில் அயலவர் ஒருவரின் தன்னியக்க பணப்பரிவர்த் தனஅட்டைத் திருடி அதன் இரகசிய இலக்கத்தைத் தெரிந்து கொண்டு வங்கியிலிருந்து 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாவை கையாடியுள்ளார். பணத்தை வங்கியில் வைப்பிலிட்டவர் வங்கிக் கணக்கில் உள்ள தொகை பெருமளவில் குறைந்திருந்ததை அவதானித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பாக பொலிஸார் நேற்று நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து வ…
-
- 0 replies
- 514 views
-
-
கொண்டயா விடுதலை கம்பஹா கொட்டதெனியா பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சேயா கொலை வழக்கு இன்று (திங்கட்கிழமை) மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார். அத்துடன், கொலையுடன் தொடர்புடைய கொண்டயாவின் அண்ணனை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சேயா கொலை தொடர்பில் ஏற்கனவே மாணவன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பொருந்தாத நிலையில் விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் கைதுசெய்யப்பட்ட கொண்டயாவின் மரபணுவும் பொருந்தவில்லையென கடந்த வழக்கு விசாரணையின்போது குற்ற…
-
- 0 replies
- 1.1k views
-
-
அறுபது அரசியல் கைதிகளுக்கு நவ.7க்கு முன் பொதுமன்னிப்பு :அரசு உறுதிபடத் தெரிவிப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவிக்கும் சுமார் 60 அரசியல் கைதிகள் அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்று அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது. சிறைகளில் நீண்டகாலமா கத்தடுத்து வைக்கப்பட்டுள்ள 201 தமிழ் அரசியல் கைதிகள், தம்மைப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று கோரி, கடந்த திங்கட்கிழமையில் இருந்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.ஆறு நாள்களாக போராட்டம் நடத்திய அவர்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதி அளித்த உறுதிமொழியை அடுத்து தமது போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர். அடுத்த மாதம் 7ஆம் திகதிக் குள் அரச…
-
- 0 replies
- 327 views
-