Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணத்தில் புலனாய்வுப் பிரிவினரின் கைதுகள் தொடர்கின்றன! [saturday 2015-06-06 08:00] புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை யாழ். நாயன்மார் கட்டுப்பகுதி இளைஞர்கள் சிலரை ஸ்ரீலங்காவின் புலனாய்வு பிரிவினர் வீடுகளுக்குள் சென்று கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் அனுராதபுரம் அனுப்பப்படுகின்றனர். வீடியோ ஆவணம் ஒன்றின் மூலம் இவர்கள் அடையாள காணப்பட்டு கைது செய்யப்படுகின்றனர் என புலனாய்வு அதிகாரி ஒருவர் குறித்த பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளார். http://w…

  2. வலி. தெற்கில் உள்ள ஆலயமொன்றின் பூங்காவனத் திருவிழாவன்று இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் எண்மர் படுகாயங்களுக்குள்ளாகி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது மதுபோதையில் அங்குவந்த இளைஞர்கள் சிலர் இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு கோரிக் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கூடிய இளைஞர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். இதனையடுத்து இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, அங்கு வந்த பொலிஸார், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்தனர். ஒலிப…

    • 0 replies
    • 506 views
  3. பொதுத்தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைப்புக் குழுவை கூட்டுமாறு அதன் தலைவர் இரா. சம்பந்தனிடம், அதில் அங்கம் வகிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (சுரேஸ் அணி), டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்கள் கோரியுள்ளன. இந்த விடயம் குறித்து தமக்கிடையே கூடி ஆராந்த இந்தக் கட்சியினர் அது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தேர்தல் வேலைகளை ஐக்கியதேசியக் கட்சி போன்றவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. ஆனால் தேர்தல் தொடர்பாகவே இப்போதுள்ள நிலைகுறித்தோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூடி எதனையும் பேசவில்லை. எனவே இந்த அசமந…

    • 0 replies
    • 319 views
  4. வடக்கு - கிழக்கில்; போதைபொருள் பயன்பாட்டை அதிகரிப்பது இலங்கை பாதுகாப்;பு அமைச்சினால் வகுக்கப்பட்ட திட்டமென அம்பலப்படுத்தி உள்ளார் முன்னணி வைத்திய நிபுணர் ஒருவர். முன்னைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய தலைமையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை எனும் பேரில் சுகாதார அமைச்சுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்திருந்த வேலை திட்டமொன்றின் போது இதனை அறிவித்திருந்ததாக அவர் மேலும் தெரிவத்தார். வடக்கு-கிழக்கில் மீPண்டும் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்காதிருக்க போதைபொருள்களை பயன்பாட்டில் விடுவது அவசியமானதென அப்போது கூறப்பட்டுள்ளது. எனினும் அங்கு பிரசன்னமாகியிருந்த சுகாதார அமைச்சினை சேர்ந்த பெரும்பான்மையின வைத்தியர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் அது தமது தொழில்முறைமைக்கு ஒப்பில்ல…

    • 0 replies
    • 316 views
  5. ஜெனிவாவில் தீக்குளிப்பேன்! - அனந்தி எச்சரிக்கை. [saturday 2015-06-06 09:00] எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நியாயம் வழங்க இந்த அரசாங்கம் தவறினால் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் தீக்குளிப்பேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலியே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். "நான் இறந்து போனால் எப்படி வாழ வேண்டும் என்பதை என்னுடைய 3 பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளேன்." என்றும் அந்த நேர்காணலில் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=133456&category=TamilNews&language=tamil

    • 16 replies
    • 1.3k views
  6. யுத்த கால­கட்­டத்தில் நாட்­டை­விட்டு வெளி­யே­றிய தமிழ் மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைக்க வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்கே உள்­ளது. இன­வாதக் கருத்­துக்­களை பரப்­பு­வது அர­சாங்­கத்­துக்கு நல்­ல­தல்ல என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். சிறி­மா-­சாஸ்திரி ஒப்­பந்­தத்­துக்கும் யுத்­தத்தில் தமிழ் மக்கள் வெளி­யே­றி­ய­மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனைத் தொடர்­பு­ப­டுத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார். யுத்த கால­கட்­டத்தில் வெளி­யே­றிய தமிழ் மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைக்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்­கண்…

  7. வடக்கில் சமூக விரோத கும்பல்களுக்குத் துணைபோகிறது பொலிஸ்! - மாவை குற்றச்சாட்டு. [saturday 2015-06-06 20:00] பொலிஸார் தமது கடமைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திருந்தால் வித்தியா போன்றவர்களின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். விரோதக் கும்பல்களுக்கு பொலிஸார் துணைபோவதாலேயே யாழ்ப்பணத்தில் மிகமோசமான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் நல்லூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 13 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று மாலை வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைம…

  8. நாடாளுமன்றத் தேர்தல் குறித்து திருகோணமலையில் சம்பந்தன் தலைமையில் ஆலோசனை! [saturday 2015-06-06 20:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு சில்வர்ஸ்டார் மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் ஆரம்பமான இக்கூட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் பற்றியும் அதற்கான தமிழ் மக்களின் நிலைப்பாடு பற்றியும் பேசப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்பட…

  9. வடமராட்சி விபத்தில் இளைஞர் பலி! [saturday 2015-06-06 20:00] பருத்தித்துறை- யாழ்ப்பாணம் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்தார். பருத்தித்துறை பிரதான வீதியில் புறாப்பொறுக்கி ஆலடிப் பகுதியில் மோட்டார் சைக்களில் சென்ற இளைஞர் மினிபஸ்ஸுடன் பின் பக்கமாக மோதியதில் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்தார். புலோலி தெற்கு பெருந்தெருவைச் சேர்ந்த செல்வராஜா பிரசன்னா (வயது 37) என்பவரே உயிரிழந்தவராவார். மினிபஸ் சாரதியைக் கைது செய…

  10. ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியாகும்! [saturday 2015-06-06 20:00] காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்து வருவதாக அதன் செயலாளர் ஹோ வாசலகே குணதாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதி அறிக்கையை வெளியிட ஜனாதிபதி ஆணைக்குழு எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க முன்னாள் ஜனாதிபதி நியமித்த வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆணைக்குழுவின் பணிகளை செம்மையாக மேற்கொள்ள ஆணையாளர்களின் எண்ணிக்கை மூன்றில் இருந்து 5 ஆக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு மேலதிக ஆணையாளர்கள…

  11. இண்டைக்கு தென்னிலங்கை அரசியலின் உள்பக்கங்களை அலசும் பொலிடிக்ஸ் என்ற சீங்கள நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வழமையாக சிங்கள அரசியலைப் பற்றியே பேசுகின்ற இந்த நிகழ்ச்சியில் திடீரேன தமிழ் அரசியல் பற்றீ ஒரு விடயம் பேசப்பட்டது. தென்னிலங்கை தமிழ் மக்களை இணைக்கும் தமிழ் கூட்டணிக்கு தமிழர்களிடமிருந்து வந்த ஒரு எச்சரிக்கை என்ற தலைப்பில் கூறப்பட்ட செய்தி இதுதான் இவ்வாறு மனோ கணேசன் உள்ளிட்டவர்களால் புதிய கூட்டணி அமைக்கப்படுவது குறித்து அறிந்த சுமந்திரன் தொலைபேசியில் மனே கணேசனுடன் தொடர்பு கொண்டதாகவும் இது போன்ற கூட்டணி ஒன்று அவசியமற்றது எனக் கூறியதாகவும் ஒரு கட்டத்தில் இவ்வாறு நீங்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட…

    • 5 replies
    • 1k views
  12. செப்டெம்பருக்கு முன் புதிய அரசு – ஜனாதிபதி ஐ.நா செயலரிடம் உறுதி தனது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே நிலவும் உட்கட்சி அரசியல் பிணக்குக் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மையை நிவர்த்திசெய்யும் நோக்கில், எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதிக்கு முன்னர் புதிய அரசொன்று தெரிவுசெய்யப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா செயலர் பான் கீ மூனுக்கு உறுதியளித்திருக்கிறார். நேற்று வியாழக்கிழமை ஐ.நா செயலாளருடனான தொலைபேசி உரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி சிறிசேன இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஐ.நா வின் 70வது பொதுச் சபை செப்டெம்பர் 15 ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா கட்டிடத்தில் கூடவுள்ளது. இதில் தான் பங்கேற்க ஆவலாக இருப…

  13. முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவிராஜ் கொலை செய்­யப்­படுவதற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் முச்­சக்­க­ர­வண்­டி­யொன்றை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் கைப்­பற்­றி­யுள்­ளனர். ரவிராஜ் கொலை தொடர்பில் கடற்­ப­டை­யினர் உள்­ளிட்ட ஐவரை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­துள்ள நிலையில் அவர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த விசா­ர­ணை­களின் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த முச்­சக்­கர வண்டி கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. நேற்­றய தினம் அது தொடர்பில் கொழும்பு மேல­திக நீதவான் நிரோஷா பெர­ணான்­டோ­விடம் மேல­திக விசா­ரணை அறிக்­கையை தாக்கல் செய்த குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் முச்­சக்­க­ர­வண்டி தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் மற்றும் சோத­னை­களை முன்­னெ­டுக்க அனு­மதி…

  14. எரிந்த நிலையில் சடலம் மீட்பு மட்டுவில் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது. மட்டுவில் பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகிலுள்ள பற்றைக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிஸாரிடம் தெரிவியப்படுத்தினர். குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர் அதேஇடத்தைச் சேர்ந்த சதாசிவம் சபாரட்ணம் (வயது 58 ) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=601654071406452677#sthash.eJABqxFZ.dpuf

  15. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் நடைமுறைக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015 ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் 29 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பாவனையில் உள்ளன. இவற்றில் 53 சதவீதமானவை தினமும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால், மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படும் விபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2014.01.01 திகதி முதல் 20…

  16. கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு சுழிபுரம் மத்தி குடாக்கனைப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை சங்கானை மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி கிருபாகரன் தலைமையிலான குழுவினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் தப்பி சென்றுள்ள நிலையில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் குறிப்பிட்டளவு கசிப்பு என்பவற்றை இவர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவரள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சங்கானை மதுவரி திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த சுற்றி வளைப்புக்கு சங்கானை பிரதேச செயலகத்தினரும் வலிமேற்கு பிரதேச சபையினரும் தமது உதவிகள…

  17. பிரதான வீதிகளில் சைக்கிளுக்கு விசேட பாதை வலுச் சக்தியை சேமிக்கும் வகையில் நாட்டின் பிரதான வீதிகளில் சைக்கிளுக்காக விசேடமான பாதையொன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிபொருள் வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வலுசக்தி சேமிப்பானது இன்று உலகத்தின் தேவையாக மாறியுள்ளது. அதிகப்படியான எரிசக்தி பாவனையால் இன்று உலக மக்கள் பல்வேறு பிரச்சினைகள் எதிர் நோக்கி வருகின்றனர். இயற்கை அனர்த்தங்களால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து செல்வதால் சக்தி விரயத்தினை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகக் கருதப்படுகின்றது. அந்தவகையில் எரிபொருள் பாவனையைக் குறைப்பதற்காக சைக்கிளின் பாவனை ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையில் கடந்த காலங்களில் சைக்கிள்களின் பா…

  18. மகேஸ்வரிநிதியம் ஒரு கோடியே 98 இலட்சம் ரூபாவை வழங்க வேண்டும்; பாரவூர்தி சங்கம் மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பாரவூர்தி சங்கத்தினர் இலஞ்ச ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் அங்கத்துவர்களுக்கான பணத்தினை வழங்குவதாக மகேஸ்வரிநிதியத்தினர் அழைப்பு விடுத்தால் அங்கத்தவர்கள் பணத்தினை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தலைவர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கோண்டாவிலில் அமைந்துள்ள பாரவூர்தி சங்கத்தின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1143 அங்கத்துவர்களைக் கொண்ட பாரவூர்தி சங்கத்தில் 700ற்கும் மேற்பட்டவர்கள் அங்கத்துவ பணம் 5ஆயிரம் ரூபாவையும் கூலிக்காசாக 300 ரூபாவினையும் செ…

  19. புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி எங்கே? - சர்ச்சையைக் கிளப்பும் கொழும்பு ஊடகம் [saturday 2015-06-06 09:00] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியை மாயமாகியுள்ளது. பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி எங்குள்ளது என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்று சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி நந்திக்கடலில் பிரபாகரன் கொல்லப்பட்ட போது, அவரது பிரத்தியேக ஆயுதங்களுக்கு என்னவாயிற்று என்பது பற்றிய விபரங்கள் இல்லை. GLOCK 17 ரக 9 மில்லிமீற்றர் ரக கைத் துப்பாக்கியை பிரபாகரன் விரும்பி பயன்படுத்தினார் எனவும் அதனை அநேக சந்தர்ப்பங்களில் இடுப…

  20. செப்ரெம்பர் கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெனிவா செல்கிறார் மைத்திரி! [saturday 2015-06-06 09:00] எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் தாம் பங்கேற்க விருப்பம் கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் நேற்று முன்தினம் மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். இதன்போதே மைத்திரிபால தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக கடுமையான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் செப்டம்பரில் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டவுடன் தாம் ஜெனீவாவுக்கு செல்லவுள்ளதாக …

  21. இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் நியூஸிலாந்திடம் உதவிகோரியுள்ளனர்: [saturday 2015-06-06 09:00] இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகழிடக் கோரிக்கையாளர்கள் தமக்கு உதவுமாறு நியூஸிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோதமாக நியூஸிலாந்துக்கு கடல் மார்க்கமாக செல்ல முற்பட்ட நிலையில் கடலில் தத்தளித்த இவர்களில் இலங்கை, மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்குவதாக தெரியவந்துள்ளது. தாம் தமது நாட்டுக்கு திரும்புவது பாதுகாப்பற்றது எனவும், தமக்கு புகலிடம் வழங்குமாறும் இவர்கள் நியூஸிலாந்து அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தமக்கு அமைதியான வாழ…

  22. மகிந்தவுக்கு ஆதரவு திரட்ட புதிய பத்திரிகை! [saturday 2015-06-06 09:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் நோக்கில் புதிய பத்திரிகையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பத்திரிகை ‘நிஜபிம’ என்னும் பெயரில் வெளியிடப்பட உள்ளதாகவும், இதற்கு முன்னாள் அமைச்சர் டலஸ் அழப்பெரும வெளியிடப்படவுள்ளதாகவும் லங்கா ஈ நியூஸ் ஊடகம் தெரிவிக்கின்றது. இது தொடர்பிலான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை அபயாராமயவில் நடைபெற்றுள்ளது. இதில், ரவி விஜேரட்ன, ருவன் பெர்டினான்டஸ், பந்துல பத்மகுமார, ஜனக பிரியந்த பண்டார, டிரான் அலஸ், மனுஸ நாணயக்கார போன்றவர்கள் இந்த பேச்சு பங்கேற்றதாக குறிப்பிடபட்டுள்ளது. http://www.seithy.…

  23. ரணிலுக்கு எதிரதான நம்பிக்கையில்லா பிரேரணை - முடிந்தால் வாக்கெடுப்பு நடத்துமாறு ஐதேக சவால்! [saturday 2015-06-06 08:00] பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முடிந்தால் வாக்கெடுப்பு நடத்தவும் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினருக்கு சவால் விடுத்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தி, முடியுமென்றால் வாக்கெடுப்பு நடத்தவும். இவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானங்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆவிகள், ஜனாதிபதியையும் பிரதமரையும் மஹிந்தவிடம் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றன. பிரபல்யம் அடைவதற்காக இ…

  24. நாடாளுமன்றத்தைக் கலைக்க முன்னர் கரையோர முஸ்லிம் மாவட்டத்தை உருவாக்க கோருகிறார் பசீர்! [saturday 2015-06-06 08:00] பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக முஸ்லிம்களின் கரையோர மாவட்டத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வர வேண்டுமென ஸ்ரீல.மு.கா. தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு நீண்ட கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். இதனை நீங்கள் நிறைவேற்ற தாமதமானால் குறைந்த பட்சம் தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளை உள்ளடக்கிய முழு அதிகாரம் கொண்ட மேலதிக அரச அதிபர் பணிமனையாவது நிறுவித்தருமாறும் பசீர் சேகுதாவூத் கோரிக்க…

  25. அடுத்த சில நாட்களி்ல் நாடாளுமன்றம் கலைப்பு! - விஜேதாஸ ராஜபக்ச [saturday 2015-06-06 08:00] பிரதமருக்கு எதிராக பயனற்ற வகையில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாட்களில் நாடாளுமன்றத்தை கலைப்பார் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினால் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. எனினும் நடைமுறை நாடாளுமன்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சபாநாயகரும் நாடாளுமன்ற கலைப்புக்கு பரிந்துரைத்திருப்பதால் நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்று அமைச்சர் குறிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.