Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்திப் பணிகள் முஸ்லிம் அமைச்சர்களின் அழுத்தங்களுக்கு அமைய முன்னெடுக்கப்படுவதால், அந்த பிரதேசத்தை சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது என கல்முனை சிவில் சமூகங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனவும் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள போதும் இதுவரை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவில்லை. முஸ்லிம் அமைச்சர்களின் அழுத்தங்கள் காரணமாக அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் வடக்கு பிரதேச செயலகத்திற்கு வழங்கப்படுவதில்லை. இந்த பிரதேசத்தின் அரச காணிகள் திட்டமிட்ட வகையில் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படுகி…

  2. சிறிலங்கா காவல்துறையினர் குற்றவாளிகளை எப்படிப் பிடிக்கின்றார்கள் என்பது தொடர்பில் ஐ.தே.க. எம்.பி. பாலித தேவரப்பெரும அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறிய கரடி முயல் கதையால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது. சிறிலங்கா காவல்துறையினர் தமிழ் மக்களை அடக்கியாண்டு வருகின்ற நிலையிலும் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் என்ற பெயரில் தமிழ் இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதை செய்கின்ற நிலையிலும் பாலித தேவப்பெரும கூறிய கதை கரடி முயல் கதையானது பெரும் நகைச்சுவை கலந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர் கூறிய கதை இதுதான், "சகல நாடுகளையும் சேர்ந்த காவல்துறையினருக்கு பிரிட்டனில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. ஒரு முயலைக் காட்டுக்குள் விட்டு விட்டு அதனை உயிருடனோ அல்லது உயிரில்லாமலோ பிடிப்பது …

  3. 4 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த கடற்படைச் சிப்பாய்! - பாம்புக்குப் பால்வார்த்த பெற்றோரால் வந்த வினை. [Monday, 2013-12-30 08:22:51] News Service திருகோணமலை - திரியாய் 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி ஒருவர் கடற்படை சிப்பாய் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடற்படை சிப்பாய் ஒருவர் குச்சவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட 4 வயது சிறுமியும் அவரது சகோதரியும் நேற்றுக்காலை தனியாக வீட்டில் இருந்தபோதே இந்த பாலியல் துஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட கடற்படைச் சிப்பாய் வழமையாக சிறுமியின் வீட்டிற்கு செல்பவர் என பெற்றோர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி திருகோணமலை பொது வைத்த…

  4. போதைப்­பொருள் வியா­பா­ரத்தின் கேந்­தி­ர­ நிலையமாக இலங்கை மாறி விட்­டது. இதன் பின்­ன­ணியில் அர­சாங்க தரப்­பி­னரே உள்­ளனர் என பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது. பௌத்த நாட்டில் போதைப்­பொருள் வியா­பா­ரத்தை மேற்­கொள்­வது யாராக இருப்­பினும் அவர்­களை தண்­டிக்க வேண்டும் மற்றும் காலம் கடந்தால் குற்­றத்தை கண்­டு­பி­டிக்க முடி­யா­தெ­னவும் அவ் அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­பொட அத்தே ஞான­சார தேரர் கருத்துத் தெரி­விக்­கையில், "ஆசி­யாவின் போதைப்­பொருள் வியா­பா­ரத்தின் முக்­கிய இட­மாக இலங்கை மாறி விட்­டது. தினமும் அதிக தொகை­யி­லான போதைப்­பொருள் கைப்­பற்­றப்­ப­டு­கின்­றது. குறைந்த அள­வி­லான மக்கள் தொக…

  5. இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதால், சிறிலங்காவில் உள்ள தமது தூதரகங்கள் மற்றும் இராஜதந்திர மையங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 26ம் நாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் இதுதொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேசின் இஸ்லாமிய அரசியல் அமைப்பான ஜமாயத் இஸ்லாமி அமைப்பின் தலைவரான அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும், ஏனைய பகுதிகளில் உள்ள தூதரகப் பணியகங்கள் மீது இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இந்…

  6. இலங்கையில் காப்புறுதி மற்றும் உயிர்ப்பாதுகாப்பு அங்கியின்றி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது எனும் நடைமுறை ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த நடைமுறையை கடுமையாக அமல்படுத்தும்படி மாவட்ட கடற்தொழில் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்னரே இது குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டு, மீனவர்கள் அமைப்புடன் கலந்துரையாடல்களும் நடைபெற்றுள்ளதாக மீன்பிடித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காப்புறுதி செய்யப்படாத படகுகளுக்கு 2014 ஆம் ஆண்டுகான கடற்தொழில் அனுமதிப் பத்திரம் வழங்கப்படமாட்டாது எனும் அறிவித்தல் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். அரசின் இந்த முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது என்றும், சீரற்ற காலநி…

  7. -எம்.எஸ்.எம்.நூர்தீன் திட்டமிட்ட இன அழிப்பு நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசப்பரராஜசிங்கத்தின் 08ஆவது வருட நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசப்பரராஜசிங்கத்தின் 08ஆவது வருட நினைவுதின நிகழ்வு மட்டக்களப்பு கோப் இன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது. இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட இன அழிப்பு மேற்கொள்ளப்பட…

  8. கடமையில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்ட பிரிவுபசார விழாவில் விழா நாயகரான கிராம அலுவலர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. சண்டிலிப்பாய், கல்வளையைச் சேர்ந்த இராசையா நித்தியானந்தன் (வயது 60) என்ற கிராம அலுவலரே உயிரிழந்தவர் ஆவார். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஆண்டு நிறைவு நிகழ்வும் சண்டிலிப்பாய் வடக்கு (ஜே/141) கிராம சேவகர் இராசையா நித்தியானந்தனின் பிரிவு உபசார நிகழ்வும் சனிக்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விழா நாயகரான ஒய்வுபெறும் கிராம அலுவலர் இராசையா நித்தியானந்தனின் பிரிவுபசார நிகழ்வு இடம்பெற்றபோது அ…

  9. ஒரு இனத்தினைப் பூண்டோடு அழிக்க வேண்டுமாயின் அந்த இனத்தினை உருவாக்கிப் பெருக்கக்கூடிய பெண்களைச் சீரழித்து இனத்தின் கலாசாரக் கட்டமைப்புக்களையும் முற்றாக அழக்க இன்று சிங்களம், தமிழ் இனத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. போரால் முழுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட தமிழ் மக்களின் கலாசாரக் கட்டமைப்புக்களை முற்றாக அழிக்கும் நோக்குடன் தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து சிங்களம் தாயகத்தில் பல்வேறு கங்கரியங்களை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக வன்னிப் பகுதியில் சிங்களக் காடையர்கள் போரால் கணவனை இழந்த தமிழ்ப் பெண்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்போராளிகளையும் இலக்குவைத்து நவின வடிவிலான இனச்சுத்திகரிப்பினைச் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். சிங்களத்தின் நயவஞ்சக வலையில் எமது தமிழ் உறவுகள் வ…

  10. சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்க தூதுவர் ஜொப்ரி டொய்ட்ஜ், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர் நல்லூர் கந்தசாமி கோவில், வல்லிபுர ஆழ்வார் கோவில், மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். யாழ்.கோட்டை, பொது நூலகம் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வந்துள்ள தென்னாபிரிக்கத் தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்…

  11. தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யி­னரும் அமைச்சர் திஸ்ஸ விதா­ர­ணவும் சர்­வ­தே­சத்­துடன் இணைந்து இலங்­கையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு துணை போகின்­றனர் எனக் குற்றம் சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் எமக்­கெ­தி­ரான பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தோடு சர்­வ­தேச விசா­ர­ணையும் நிச்­சயம் இடம்­பெறும் என்றும் அவ்­வி­யக்கம் தெரி­வித்­தது. இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில், அர­சாங்க அதி­கா­ரிகள் அதுவும் தமிழ் அதி­கா­ரிகள் மூல­மாக வடக்கில் குடி­சன மதிப்­பீடு மேற்­கொள்­ளப்­பட்­டது. எனவே அதன் புள்ளி விப­ரங்கள் பிழை­யாக இரு…

  12. மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தோண்டும் பணிகள் நேற்று இரண்டாவது தடவையாகவும் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் மூன்றாம் ஆம் திகதி வரையில் புதை குழியைத் தோண்டும் பணி இடம் பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி குறித்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் மன்னார் நீதிவான் மற்றும் மன்னார் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் குறித்த இடத்தைத் தோண்டும் பணிகள் கடந்த 22 ஆம் திகதி வரை நடைபெற்றன. அங்கு 11 மனிதச் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொழும்பிலிருந்து விசேட நிபுணர் குழுவினர் வருகை தந்து, அவர்க…

  13. "மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் மனிதப் புதைகுழியைத் தோண்டி அதை ஆய்வுசெய்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவை இலங்கை அரசு உடன் அழைக்க வேண்டும். அப்போது தான் உண்மை கண்டறியப்படும். உள்நாட்டு நிபுணர் குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் மன்னார் புதைகுழியின் உண்மை நிலைவரத்தை வெளிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், இலங்கை அரசுக்குத்தான் அது ஆபத்தாக அமையும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி மன்னார் - திருக்கேதீஸ்வரம்…

  14. மிக அக்கறையுடன் முன்னதாகவே பரிசீலித்திருக்க வேண்டிய சில விடயங்களை மிக ஆதங்கத்துடன் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன். இப்போதே சில விடயங்களைக் கட்டுப்படுத்த தவறுவீர்களேயானால் அவை தமிழர்களினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது ஒற்றுமைக்கும் பெரும் பங்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, பெரும் தேசிய அனர்த்தத்துக்கும் வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன்’ என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘நாம் இருவரும் வாழ்வின் எல்லையை கிட்டியுள்ள வேளையில், மிக மூத்த அரசியல் தலைவர்கள் என்ற கோ…

  15. + கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் நேற்று முன்தினம் (28.13.12) இலங்கை சென்று இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்புக்களை மேற்கொள்கின்றார். யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்; மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து பல பொது அமைப்புக்களையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்களின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்து மக்கள் வாழும் சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் சென்று மக்களுடன் உரையாடியுள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இந்த முகாமிற்கு சென்று மக்களைச் சந்தித்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கி இருந்த…

  16. ஆனையிறவு ரயில் நிலையத்துக்கு சிங்களப் பெயர் சூட்ட முயற்சி! [Monday, 2013-12-30 08:36:04] ஆனையிறவு ரயில் நிலையத்துக்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். ஆனையிறவு ரயில் நிலையம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து திரட்டும், 15.5 மில்லியன் ரூபாவைக் கொண்டு, புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த புனரமைப்புத் திட்டத்துக்கான யோசனைக்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் உதவியைப் பெறுவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன. கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படும் போது, ஆனையிறவு தொட…

  17. ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றொரு பிரேரணை கொண்டு வரப்படும் ஆபத்து ; ஜே.வி.பி. எதிர்­வரும் மார்ச் மாதம் ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­படும் ஆபத்து உள்­ளது. இந்­நி­லையில் அர­சாங்­கமோ யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை ஆற்­றாமல் மேலும் காயங்­களை உரு­வாக்­கவே முயற்­சித்­து­வ­ரு­கின்­றது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் (ஜே.வி.பி. ) பிர­சாரச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித்த ஹேரத் தெரி­வித்தார். நாட்டில் ஜன­நா­யகம் நிலை­நாட்­டப்­பட்­டு­வ­ரு­கின்­றது என்­ப­தனை அர­சாங்கம் எதிர்­வரும் மார்ச் மாதத்­துக்கு முன்­ன­ரா­வது செயலில் க…

  18. விஷமற்ற தேசிய உணவு வேளையை இலங்கை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கு நாட்டில் அனைத்து விவசாயிகளின் அர்ப்பணிப்பு அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு சிறி சம்போதி விகாரை ஆரம்பித்துள்ள விஷமற்ற உணவு மத்திய நிலையத்தை (29) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஒவ்வொரு ஞாயிறன்றும் திறந்திருக்கும் இந்த உணவு மத்திய நிலையத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து உணவுகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதோடு, தொற்றாத நோய்கள் குறித்த நடமாடும் சேவையும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=100195&category=TamilNews&lan…

  19. விடுதலைப் புலிகள் போன்றதொரு இயக்கத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஒருதரப்பு இறங்கியுள்ளதாக அண்மைக்காலமாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த கேர்ணல் பதுமன் தலைமையில் இந்தப் புதிய ஆயுதக் குழுவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த கேர்ணல் பதுமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்களை அரசதரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால் திருகோணமலை மேல்நீதிமன்றத்தினால் அவர் அண்மையில் விடுவிக்கப்பட்டார். புலிகளின் மூத்த தளபதிகளில் பலர் சரணடைந்த பின்னர் காணாமல் போன போதிலும் கேர்ணல் பதுமனுக்கு அத்தகைய நிலை ஏற்ப…

    • 2 replies
    • 385 views
  20. துலங்காத உண்மைகளும். குளோபல் தமிழ்ச் செய்திகள்:- வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் சூரியகுமாரனின் மகன் தமிழமுதன் கடத்தப்பட்டதும் அதனைத் தொடர்ந்து இன்று பொலிசார் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கைகளும் பல சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளன. இந்த நிலையில் சூரிய குமாரனின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள குளோபல் தமிழ்ச் செய்திகள் பல முயற்சிகளை எடுத்தது. முடியவில்லை. அனைவரது தொலைபேசிகளும் செயலிழந்துள்ளன. அதனைத் தொடர்ந்து எமது செய்தியாளர்களுடன் இது குறித்து பேச முற்பட்ட வேளை தமக்கு எதுவுமே தெரியாது என அவர்கள் மௌனித்து விட்டனர். முதலில் கடத்தல் தொடர்பான செய்தியை வெளிக்கொணர்ந்த ஊடகம் என்ற வகையில் குறிப்பாக அவர் காணாமல் போய் சில மணிநேரங்களிலேயே குளோபல் தமிழ்ச் …

  21. ஊடகவியலாளர்களால் கேட்டகப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத கூட்டiமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் ஏ.சுமந்திரன் ஆகியோர் தப்பியோடிய சம்பவம் ஊடகவியலாளர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்குமான விசேட சந்திப்பு நேற்று(24) காலை 10.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வவுனியா நகரசபை கலாசார மண்டப்தில் நடைபெற்றது. மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்ற இச் சந்தின் போது கூட்டமைப்பு தலைவர்களை சந்திப்பதற்கு ஊடகவியலாளர்கள் முயன்ற போதும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் காலையில் இருந்து கூட்டம் நிறைவு பெறும் வரை ஊடகவியலாளர்கள் மண்டப வாயிலில் காத்திருந்தனர். மாலை 6 மணிக்கு…

  22. தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம் - சிம்ரஞ்ஜித்சிங் மாண் சீக்கியர்களின் கோரிக்கையான காலிஸ்தான் விடுதலை ஆதரவாளரும் சிரோன்மணி அகாலிதள் அம்ரிஸ்டர் கட்சியின் தலைவருமான தோழர் திரு. சிம்ரஞ்ஜித்சிங் மாண் அவர்கள் மே பதினேழு இயக்கத்துடன் நடத்திய உரையாடல்... தமிழீழ போராட்டம் மற்றும் தமிழர்கள் பற்றிய உங்களின் புரிதல் பற்றி கூறுங்கள். நாங்கள் இலங்கையில் நடக்கும் போராட்டம் குறித்தும், தமிழ் மக்கள், பிரபாகரன் மற்றும் தனிநாடு கோரி நடக்கும் ஒருங்கினைப்புக்களை மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறோம். எங்கள் இயக்கம் இந்நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருகிறது. நீங்கள் எங்களின் இணையத்தளத்தை பார்த்தல், இலங்கை மற்றும் தமிழர்கள் குறித்து அவப்போது நாங்கள் வெளியிடும் செய்திகள…

  23. இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 13 ஆபிரிக்க நாடுகளையும் தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. இதன்படி, உலகத் தமிழர் பேரவையின் உயர்மட்டப் பிரமுகர்கள், ஜனவரி நடுப்பகுதியில் ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளனர் என்றும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன என்றும் அறியமுடிகின்றது. இதுதொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இம்மானுவேல் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். இதற்காக ஆபிரிக்க நாடுகளுடனும் தனித்தனியே பேச்சு நடத்துவோம். குறிப்பாக மேற்குலக நாடுகளில்த…

  24. இலங்கையின் போக்கு தொடர அனுமதித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்த நிலையில், இலங்கை கடற்படையினர் மீண்டும் 22 மீனவர்களை கைது செய்துள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை சிங்களப் படை நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளது. இலங்கை நீத…

  25. Started by Athavan CH,

    (ஏற்கனவே வெளிவந்த செய்தி, மேலதிக படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.) -சி.சிவகருணாகரன் இயக்கச்சியின் கிழக்கே சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்தை அண்மித்த பகுதியில் புதிய சுற்றுலா விடுதி ஒன்று வனவளப் பாதுகாப்பு அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வனவள பாதுகாப்பு அமைச்சின் நிதியீட்டத்தில் சுமார் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டடுள்ள இந்த விடுதி இயற்கைச் சூழலையும் பறவைகள் விலங்குகள் சரணாலயத்தினையும் கொண்ட அமைவிடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இயக்கச்சி சந்தியிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் இந்தச் சுற்றுலா விடுதி சுண்டிக்குளம் கடற்கரை மற்றும் காட்டு மரங்கள், பனங்கூடல்கள், நீர்நிலைகள் ஆகியவற்றின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.