ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேச்சல் சந்து நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருதரப்பு நலன்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் யஷ்வந்த்குமார் சின்ஹாவும் பங்கேற்றுள்ளார். எனினும், இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, இவர், முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளத…
-
- 0 replies
- 353 views
-
-
இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு சென்றுள்ள இந்திய கப்பல்கள் இரண்டையும் திரும்ப அழைக்குமாறு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கோரியுள்ளார். இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு டிதெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் நடக்கும் பயிற்சியில் இந்தியா பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு கூடாது என்று வலியுறுத்தி பல முறை கடிதம் எழுதியுள்ளேன். இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தமிழக …
-
- 0 replies
- 266 views
-
-
மாணிக்கக்கற்கள் பொறிக்கப்பட்ட பழைய விநாயகர் சிலையை மூன்றரை கோடி ரூபாவிற்கு விற்க முயன்ற நால்வரை அநுராதபுர பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். வர்த்தகர்கள் போன்று மாறுவேடத்தில் சென்ற பொலிஸாரே குறித்த நால்வரையும் கைது செய்துள்ளனர் என்று அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/93994-2013-12-21-05-47-22.html
-
- 0 replies
- 349 views
-
-
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் பணிப்பின் பேரினில் நெடுந்தீவில் இருந்த ஈ.பி.டி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களது வீடுகளில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளனவா என அறியும் நோக்குடன், விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.முன்னதாக சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை ஒப்படைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.அந்த கால எல்லை முடிவடைந்த நிலையிலேயே ஈ.பி.டி.பியினர், மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வீடுகளை இலக்கு வைத்து தேடுதல் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் றெக்சியன் அண்மையில் தீவகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைச் சந்தேகத்தின் பேரில் ஈ.பி.டி.பி. யாழ்.மாவட்…
-
- 0 replies
- 523 views
-
-
நாட்டின் அரசியல் அமைப்பில் உள்ள தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த நாட்டில் இருப்பதற்கு உரிமையில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது என்றால் தமக்கு தேசிய கீதம் தேவையில்லை என கூட்டமைப்பினர் தெரிவித்துள்ள நிலையிலேயே ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் எனவே நாட்டின் தேசிய கீதத்தை பாட முடியாது என சவால் விடுத்துள்ளதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்று அதன் முன் சத்தியப் பிரம…
-
- 0 replies
- 333 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ துபாயிலுள்ள மெரியட் ஹோட்டலில் முன்னணி ஆயுத முகவர்கள் சிலரை இரகசியமான முறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பை அடுத்து அன்றைய தினம் இரவே துபாயில் இருந்து பாதுகாப்புச் செயலாளர் இலங்கை திரும்பியுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு செல்லும் தேவை ஏற்படும் போது, ராஜபக்ஷ குடும்பத்தில் தமக்கு அழுத்தங்கள் இருப்பதாக கூறுவதும், இல்லை என்றால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பது அல்லது குடும்பத்தினருடன் உள்ள தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவது போன்ற மோசடியான தந்திரங்களை பயன்படுத்தி செல்லவிரும்பும் நாடுகளுக்குள் இலகுவாக செ…
-
- 1 reply
- 254 views
-
-
போதைப்பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் கொடுக்கும் நிலைக்கு முஸ்லிம் தீவிரவாதம் : பொதுபலசேனா போதைப்பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் கொடுக்கும் நிலைக்கு இன்று நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் பரவியுள்ளது. இதைக் கவனத்தில் கொள்ளாத அரசாங்கம் தாமும் இணைந்து குற்றம் செய்கின்றனர் என பொதுபலசேனா பெளத்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபலசேனா பெளத்த அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர். இது தொடர்பாக பொதுபலசேனா பெளத்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவிக்கையில், இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான செயற்பாட…
-
- 1 reply
- 382 views
-
-
இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையில் நடைபெறவுள்ள முத்தரப்பு பயிற்சி ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த 2 போர்க்கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். நேற்று முன்தினம் இலங்கை “விஷ்வாஸ்ட்” மற்றும் “ராஜ்கமல்” என்ற இந்திய கரையோர பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான இரு கப்பல்களுக்கும் திருகோணமலையில் கடற்படை சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டர் ஜெனரல் வாகீஷ் தலைமையில் வருகை தந்துள்ள “விஷ்வாஸ்ட்” என்ற கப்பல் 94 மீற்றர் நீளமும், 2400 தொன் எடையும் கொண்டது. இதில் 102 பேர் வருகை தந்துள்ளனர். இவர்களில் 10 அதிகாரிகளும், 2 பயிற்சி அதிகாரிகளும் 90 வீரர்க…
-
- 2 replies
- 497 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத முகவராக செயற்பட்ட நபர் ஒருவரை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களை கடத்த முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 51 வயதான பால்ராஜ் நாயுடு என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டில் பால்ராஜிற்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தது. பால்ராஜிற்கு அமெரிக்க நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் வரையில் தண்டனை விதித்திருந்தது. வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்;டின் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மேரிலாண்ட்டைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து புலிகளுக்காக பால்ராஜ் 900,000 டொலர் பெறுமதியான…
-
- 2 replies
- 728 views
-
-
ஆங்கிலப் படத்திரையுலகிற்குப் பரிச்சயமானவர்கள் பலரும் இவரை நன்கு அறிவர். மோகன் பிரீமன் என்னும் பெயர் கொண்ட இவர் நெல்சன் மண்டேலவாக நடித்திருக்கிறார். மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் உயிரோடு இருக்கும் இவரது படத்தைப் போட்டுத் தமிழகத்தில் பெரிய போஸ்டர் செய்து வைத்திருக்கிறார்கள். யாகூ அதனைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. தமிழனின் மானம் கப்பலேறுகிறது.
-
- 5 replies
- 1k views
-
-
வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். அத்துடன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை பதிலளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட அழைப்புக்களை விடுத்தார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/93952-2013-12-20-12-42-48.html
-
- 0 replies
- 467 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் ஏதேனும் விபரீத முடிவுகள் எடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் வைத்தியசாலை நிர்வாகம் இன்று பொலிஸ் பாதுகாப்பு கோரியுள்ளது. இதனால் இன்றைய தினம் தொண்டர்கள் போராட்டம் நடாத்தும் இடத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனினும் சாகும்வரையான உண்ணாவிரதம் எதனையும் தாங்கள் முன்னெடுக்கப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டதை அடுத்து அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும் போராட்டகாரர்கள் விபரீத முடிவுகளை எடுக்க முயற்சிக்கலாமென்ற அச்சத்தில் உயரமான கட்டிடங்களில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=788172524420…
-
- 0 replies
- 459 views
-
-
இலங்கை கடற்படையுடன் ஒரே அமைப்பின் கீழ் தற்போது இயங்கும் இலங்கை கரையோர காவற்படை இனி சுயாதீனமான ஒரு திணைக்களமாக இயங்குமென கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகே தெரிவித்தார். பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்;மையில் நடந்த 'கடல் பேணுதல் மாநாடு-2013' இல் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடற்படைத் தளபதி கரையோர காவற்படை கடல் மாசடைதலை தடுத்தல்இ கரையோரத்தை பேணுதல், கடலில் மனித உயிர்களை பாதுகாத்தல் போன்ற விடயங்களில் பிரதான கவனத்தை செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். கரையோர பாதுகாப்புப் படை மனித வள அதிகரிப்பு மற்றும் கூடுதல் பொறுப்பு ஏற்றல் என்பவற்றினூடாக பல அநுபவங்களை பெற்றுவருகின்றது என்றும் கூறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/…
-
- 0 replies
- 284 views
-
-
தெஹிவளை பள்ளிவாசல்கள் மூடுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த முயற்சிக்கு இடமளிக்கக் கூடாது எனவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் டி.எம். ஜயரட்னவிடம் கோரியுள்ளனர். அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசீ, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதீன், பிரதி அமைச்சர்களான பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ஆகியோர், சமய விவகார அமைச்சரும், பிரதமருமான டி.எம். ஜயரட்னவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தெஹிவளையில் அமைந்துள்ள சில பள்ளிவாசல்களை மூட முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தெஹிவளையில், மூன்று பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர். பள்ளிவாசல்களை மூடும் முனைப்புக்களின் பின்னணியில் கடும்போக்குடைய சக்திகள் இயங்கி …
-
- 0 replies
- 350 views
-
-
இலங்கையில் இந்திய அரசியல் தொடர்பான ஆய்வுகளில் பாரதீய ஜனதாவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி மேலிடத்தைப் பிடித்திருக்கிறார். பெரும்பான்மைச் சிங்களவர்கள் மற்றும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் மத்தியில் இந்திய அரசியல் தொடர்பான ஆய்வுகளில் மோடி மேலெழுந்திருக்கிறார்.அடுத்த பிரதமாராக மோடியே விளங்குவார்ரென்ற உணர்வு இலங்கையில் காணப்படுகின்றது இந்திய ஊடகங்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டதாக இந்த உணர்வு காணப்படுகின்றது. ஆனால் புதுடில்லியில் ஆட்சித்தலைமையில் மோடியிருப்பது தொடர்பான விருப்பத்தில் இலங்கையர்கள் வேறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் மெளமாக இருந்து வருகின்றது. புது டில்லியிலுள்ள அரசாங்கத்தில் கட்சி தங்கியிருப்பதை அடிப்படையா…
-
- 0 replies
- 410 views
-
-
திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பட்டிக்குடாவில் முஸ்லிம்களின் பயிர்ச்செய்கை காணிகள் கடற்படை முகாம் விஸ்தரிப்புக்காக தொடர்ந்தும் கையகப்படுத்தப்படுவதாக கிழக்கு மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் மொகமட் ரம்ழான் அன்வர் தெரிவிக்கின்றார். போர்க் காலத்தில் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், தற்போது அங்கு தற்காலிக கொட்டில்கள் அமைத்து பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். 'கடற்படையின் தேவைக்கு' என அடையாளமிடப்பட்டிருந்த காணியில் தற்போது 'கடற்படைக்குச் சொந்தமான காணி' என்ற அறிவிப்பு பலகைகள் தமிழிலும் சிங்களத்திலும் காணப்படுகின்றன.இப்போது, குறித்த காணியில் தானியச் செய்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை அவர்களின் எல்லை வேலிகளையும் கொட்டில்களையும் அகற…
-
- 0 replies
- 360 views
-
-
இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அரசின் உண்மை நிலை தெரியும் : ஜே.வி.பி. கூறுகிறது சர்வாதிகார இராணுவ ஆட்சியினை உருவாக்கும் நோக்கத்திலேயே ஜனாதிபதி மாகாண சபைகளையும் பிரதேச சபைகளையும் கட்டுப்படுத்துகின்றார். இராணுவ சப்பாத்துகளின் கீழ் நாட்டை அடக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரவு செலவுத்திட்டம் தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பினை நடத்தினால் அரசாங்கத்தின் உண்மை நிலைமை தெரியும். அமைச்சர்களே வரவு- செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பர் எனவும் ஜே.வி.பி.யினால் நேற்று பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்தி…
-
- 0 replies
- 233 views
-
-
அலரி மாளிகைக்கு வெள்ளையடிப்பதற்கா நீதியமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் இலங்கைக்குள் போதைப்பொருள் பரிமாற்றம் செய்வதில் அரசாங்கமே நேரடித் தொடர்பினை வைத்துள்ளது. அரசாங்கத்தை கைப்பொம்மைகளாக வைத்து கடத்தல்காரர்களும், சூதாட்டக்காரர்களுமே ஆட்சி நடத்துகின்றனர் என்று ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது. தண்டனை கொடுக்கும் நபர்களே அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டால் நாட்டில் குற்றங்களை யார் தடுப்பது? நீதியமைச்சர் அலரிமாளிகைக்கு வெள்ளையடிக்கவா நியமிக்கப்பட்டார் எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. ஜே.வி.பி. யினால் நேற்று பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் இக் கருத்து முன் வைக்கப்பட்…
-
- 0 replies
- 394 views
-
-
ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடிஞ்சா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம்.ஒருக்கா ஏசியன் டீமுல கப்டினாக கூட இருந்தன். ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினா இருந்தன். கப்டினா ஆக முடியேல்ல. பட் அதுக்கு வன் ரீசன் எனக்கு நல்லா சிங்களம் தெரியும். டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கோணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடனும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு , தமிழன் சிங்களத்திலயும் சிங்க…
-
- 0 replies
- 552 views
-
-
சர்வதேச சமூகத்திடம், தனக்கு சார்பாக இந்த அரசு இன்று எடுத்து காட்டிவரும் ஒரே சாதகம், வடமாகாணசபை தேர்தலை நடத்தி, வடக்கில் வட மாகாணசபையை நிறுவியது ஆகும். இன்று இந்த சாதகமும், பாதகமாகும் நிலைமை வடக்கில் தோன்றி வருகிறது. வடக்கில் தேர்தலை நடத்தி, மாகாணசபை அமைக்கப்பட்டாலும், தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட முதல்வரின் நிர்வாகத்துக்கு எந்த வித அதிகாரங்களும் 13ம் திருத்தத்தின்படி வழங்கப்படாமல், தொடர்ந்தும் ஆளுநர் ஆட்சியே நடக்கின்றது என்ற கருத்து இன்று மேலெழுந்து வருகிறது. அடுத்த மார்ச் மாதம் வரப்போகும் மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு முன்னர் இதுபற்றி திட்டவட்டமாக தெரிந்து கொள்ளும் தேவை உலகத்துக்கு இருக்கிறது. இது உண்மையா என்பதை பற்றி உலகம் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன…
-
- 0 replies
- 326 views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க செலவில் அழைத்து வந்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியிருந்தார். எனினும், இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சில பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் நிலைமைகளை நேரில் பார்வையிடும் நோக்கில் விஜயம் செய்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலிய பிரதிநிதிகள் பொதுநலவாய நாடுகள் வர்த்தக அமர்வுகளில் பங்கேற…
-
- 0 replies
- 207 views
-
-
வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் 24ஆம் திகதி வவுனியா நகரசபை மைதானத்தில் மாபெரும் கூட்டமொன்றினையும் நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு வியடங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. வரவு செலவுத் திட்டம் மீது இன்று நடைபெற்றவுள்ள இறுதி வாக்கெடுப்பில் எதிராக வாக்களிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைவரம…
-
- 0 replies
- 272 views
-
-
வடக்கிலிருந்து இன்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களையும் அவரவர் இருந்த இடங்களில் மீளக்குடியேற்றி அவர்களும் வாழ வழிசமைக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் அமைச்சருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பம்பலப்பிட்டியுள்ள ஹோட்டலொன்றில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "20 வருடங்களுக்கு முன் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் அவரவர் இடங்களுக்குச்சென்று மீள குடியேறி…
-
- 3 replies
- 347 views
-
-
வடக்கில் நடைபெறும் திட்டமிட்ட நிலஅபகரிப்பை தடுத்து நிறுத்தப்போராடுகின்ற அதேவேளை இருக்கின்ற நிலங்களில் விவசாய மற்றும் கால்நடை கூட்டுப்பண்ணைகளை நிறுவ புலம் பெயர்ந்திருக்கின்ற தமிழ்த்தொழில் அதிபர்கள், கூட்டுறவு அமைப்புக்கள் எமது நிலத்தில் முதலிட முன்வர வேண்டுமென வடமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இராணுவ நெருக்குவாரங்களாலும் நில அபகரிப்பினாலும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற எமது தேசத்தில் இத்தகைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான போராட்டங்களளும் நிகழ்கிறது. அதே வேளை அசுரவேகத்தில் பல முதலீட்டு வங்கிகளும் கடன் உதவு நிறுவனங்களும் எமது மக்களுடையபணத்தை எமது நிலத்தை விட்டு வெளியேற்று…
-
- 4 replies
- 815 views
-
-
கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் 324 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை அரச பொறியியற் கூட்டுத்தாபனம் நிர்மாணிப்பதுடன் 2014ம் ஆண்டு நடுப் பகுதியில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரின் மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டு கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல் என்ற தலைப்பின் கீழ் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் திகதி இதற்கு அங்கீகாரம் பெறப்பட்டது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கேட்டிருந்த வாய்மொழி மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் விதத்தில் நேற்று சபையில் சமர்ப…
-
- 1 reply
- 352 views
-