ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
செவ்வாய்க்கிழமை, மார்ச் 15, 2011 எஸ் 11 என்ற தொடரூந்து பெட்டிகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளது இலங்கை. அனால் அந்த இரையில் பெட்டிகள் தரம் இல்லையென்றும் அதனால் இந்தியாவில் இருந்து இரயில் பெட்டிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறபப்டுகின்றது. இனிமேல் சீனா அல்லது வேறு நாடுகளில் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யலாம் என இலங்கை போக்குவரத்து அமைச்சு கூறுகின்றது. இதனால் இந்தியா கம்பனிகள் ஆத்திரமடைந்துள்ளனவாம். http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%…
-
- 0 replies
- 1k views
-
-
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலையங்களில் சித்திரவதைக் கூடங்கள் - 15 மார்ச் 2011 வலிகாமம் வடக்கில் மக்கள் மீளக் குடியமர அல்லது மீள இயங்க அனுமதிக்கப்பட்ட பாடசாலைச் சூழலில் பாரிய மனித புதைகுழிகள் இருக்கலாம் என்ற அச்சம் பலரிடையேயும் ஏற்பட்டுள்ளதாக ஜீரீஎன்னின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்தப் பகுதிகளில் பாரிய சித்திரவதை முகாம்கள் இருந்திருக்கலாம் எனவும் அவர்கள் நம்புகின்றனர். உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீளக்குடியமர்வு தாமதமாவதற்கு இந்தப் பின்னணியும் காரணமாக இருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகின்றது. மேலும் பல தடுப்பு முகாம்கள் அல்லது சித்திரவதை முகாம்கள் உள்ளே இருப்பதாகவே பொதுமக்கள் பலரும் சந்தேகம் கொண்டுள்ளனர். அண்மையில் மீள இயங்க அனுமதிக…
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியாவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியேற்றம் [Tuesday, 2011-03-15 02:44:37] கடந்த 13 வருட காலம் வவுனியாவில் மனிதாபிமான சேவையாற்றிய சர்வதேச செஞ்சிலுவைச்சங்க குழு இந்த மாத இறுதியுடன் தனது வவுனியா அலுவலகத்தை மூடிக்கொண்டு வெளியேறவுள்ளது.கடுமையாக போர் நடைபெற்ற காலத்தில் இவர்கள் ஆற்றிய சேவையை பலரும் நினைவு கூர்ந்தனர். சர்வதேச செஞ்சிலுவைச்சங்க குழு போர் நடைபெறும் பகுதிகளில்தான் சேவைகளை ஆற்றுவது நியதியாகும். சர்வதேச செஞ்சிலுவைச்சங்க குழு வினர் வவுனியாவிலிருந்து வெளியேறிய போதிலும் இவர்களில் உள்ளூர் பணியாளர்கள் நால்வர் சில கடமைகளுக்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு அங்கிருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். தமது…
-
- 0 replies
- 1.1k views
-
-
1000 மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை [Tuesday, 2011-03-15 02:31:24] உலகில் மிகப் பெரிய புத்தர் சிலை வவுனியாவில் அமைக்கப்படவுள்ளது. சமாதி நிலையில் அமையவுள்ள இந்தப் புத்தர் சிலையை கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் உதவியுடன் அரசாங்கம் நிறுவவுள்ளது. தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் சேனாரத் திசநாயக்கவின் துணையுடன் இந்தப் பாரிய புத்தர் சிலையை அமைக்கவுள்ளதாக கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் நிறுவுனர் பிலப்பிட்டிய பஞ்ஞதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்ற படைவீரர்களைப் போற்றி கௌரவிக்கும் வகையிலேயே இந்தப் புத்தர்சிலை அமைக்…
-
- 0 replies
- 921 views
-
-
உழவியந்திரத்தின் ரயர் வெடித்ததில் ஒருவர் மரணம்! ஒருவர் படுகாயம்! முள்ளியவளையில் சம்பவம்! Posted by admin On March 15th, 2011 at 6:46 am / No Comments உழவு இயந்திரத்திற்கு காற்று அடித்த போது ரயர் மற்றும் றிம் வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானார், மற்றொருவர் காயமடைந்தார். இச்சம்பவம் முல்லைத்தீவு முள்ளியவளையில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த நற்குணம் சுப்பிரமணியம் (வயது 68) என்பவரே மரணமடைந்த வராவார். சம்பவத்தில் த.இரத்தினலிங்கம் (வயது 33) என்பவர் காயமடைந்தார். saritham.com
-
- 0 replies
- 738 views
-
-
முல்லை. மாவட்டத்தின் முக்கிய இடங்களை கையகப்படுத்த அரசாங்கம் முயற்சி - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு யுத்தம் முடிபடைந்து 22 மாதங்களாகியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீள் குடியமர்த்தப்படவில்லை.இதில் ஒன்பது (9) பிரிவுகளில் கண்ணி வெடியகற்றுவதற்காக அனுமதி தொடர்ந் தும் மறுக்கப்பட்டு வருகிறது.ஏனைய 18 கிராம அலுவலர் பிரிவுகளில் கண்ணி வெடி அகற்றும் வேலைகள் மிகமிக மந்தகதியில் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளி வாய்க்கால் மேற்கு, அம்பலவன்பொக் கணை, புதுக்குடியிருப்பு, புதுக்…
-
- 0 replies
- 634 views
-
-
இலங்கையின் பொருளாதாரத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்பு வீரகேசரி இணையம் எண்ணெய் வள நாடுகளில் இடம்பெறும் அரசியல் கிளர்ச்சிகள் மற்றும் ஜப்பானில் எற்பட்ட சுனாமி என்பவற்றால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடுமையான பாதிப்பை எதிர்நோக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதரா ரீதியாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அது பாரிய பாதிப்பாக இல்லை என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். லிபியாவின் திரிபொலி உள்ளிட்ட துறைமுகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. "எகிப்தின் அரசியல் க…
-
- 0 replies
- 966 views
-
-
புதைக்கப்படும் புன்னகைகள் அந்த வீட்டின் முன்னால் விடுப்புப் பார்க்கக் கூடியிருந்தவர்களை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றனர் பொலிஸார். அவர்களுக்குக் கிடைத்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்த இடத்தைத் தேடி, இறுதியில் கண்டுபிடித்தும் விட்டனர். அது ஒரு சமையலறை. மண்ணாலானது. சமையலறை தோண்டப்பட்டது. வழமையாகப் பொலிஸாரின் இத்தகைய தேடுதல்களின்போது மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் கசிப்பு மற்றும் சட்டவிரோத மதுபான வகைகளே அகப்படுவதுண்டு. ஆனால் இங்கு பொலிஸாரின் அகழ்வின் இறுதியில் கிடைத்தவையோ, கூடிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளின் உடலங்கள். எந்தப் பாவமும் அறியாத, தாய்ப்பாலின் முதற்துளியைக்கூட உணராமல், உயிரோடு அந்தச் சிசுக்கள் பெற்ற தாயால் புதைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. பல …
-
- 0 replies
- 449 views
-
-
வலி. வடக்கில் மக்கள் மீள்குடியமர்வுக்கு இராணுவம் அனுமதி – யாழ்.அரச அதிபர் யாழ். வலிகாமம் வடக்குப் பிரதேச மக்கள் மீளக்குடியமர்வதற்கான அனுமதியைப் பாதுகாப்புத்தரப்பினர் வழங்கியுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். யாழ். வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருக்கும் வசாவிளான் வடக்கு, கட்டுவன் தெற்கு, கொல்லங்கலட்டி, குரும்பசிட்டி கிழக்குப் பிரதேச மக்களுக்கே மீளக்குடியமர்வதற்கான அனுமதியைப் பாதுகாப்புத் தரப்பினர் வழங்கியுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். அப்பகுதியில் மீளக்குடியமரவென சுமார் நான்காயிரம் மக்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கான வசதிகள் படிப்படியாகச் செய்து கொடுக்கப்படும் வகையில் மீள் குடியேற்றம் நடைபெறும் என…
-
- 0 replies
- 527 views
-
-
சிறீதரன் எம்.பி யின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சந்தேகம்! லக்பிம பத்திரிகையில் தெரிவிப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் மீது அண்மையில் அநுராதபுரம் உளுக்குளம் பகுதியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தின் நம்பகத் தன்மையில் சந்தேகங்கள் தோன்றியுள்ளதாக அரசாங்க மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி லக்பிம பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அப்பத்திரிகையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் கிளிநொச்சியில் இருந்து கொழும்புத் திரும்பும் வழியில் இவரது வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கைக் குண்டுத் தாக்குதல் என்பன நடத்தப்பட்டதாக முறைப…
-
- 0 replies
- 486 views
-
-
யாழ். உடுவிலில் மாணவி ஒருத்தி சடலமாக மீட்பு! யாழ். உடுவில் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டடுள்ளது. கைதடி நுணாவில் சாவகச்சேரியைச் சேர்ந்த 17வயதுடைய மனோகரன் கலைவாணி என்ற பாடசாலை மாணவியே மர்மமான முறையில் மரணமாகி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கைதடி நுணாவில் சாவகச்சேரியைச் சேர்ந்த இந்த மாணவி தான் கல்வி பயிலும் பாடசாலைக்கு சாவகச்சேரியில் இருந்து தினமும் சென்று வருவது சிரமம் என்பதால் தாயாருடன் உடுவிலில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார். சனிக்கிழமை மாணவியின் தாயார் சாவகச்சேரியில் மரண வீடொன்றுக்கு சென்ற சமயமே இந்த மாணவி மர்மமான முறையில் மரணமாகி உள்ளார். பின்னர…
-
- 0 replies
- 677 views
-
-
'தீவிரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள் கருத்தரங்கிற்கான அரசின் அழைப்பை அமெரிக்காவும் ஜப்பானும் நிராகரித்துள்ளன இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கைப் புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும் ஜப்பானும் முடிவு செய்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள் என்ற பொருளில் இலங்கை இராணுவம் இந்தக் கருத்தரங்கை எதிர்வரும் மே 31ஆம் திகதி முதல் ஜுன் 2ஆம் திகதி வரை கொழும்பில் நடத்தவுள்ளது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 54 நாடுகளுக்கு இலங்கை பாதுகாப்புச் செயலர் அழைப்பு அனுப்பியுள்ளார். ஆனால் ஜப்பானின் அரசியலமைப்பு இந்தக் கருத்தரங்கி…
-
- 0 replies
- 493 views
-
-
இலங்கைக்கான சுவிஸ் தூதர் மற்றும் அதிகாரிகள் யாழ் விஜயம் குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கைக்கான சுவிஸ் தூதர் தோமஸ் லிச்சர் மற்றும் அவரது அதிகாரிகள் சென்றுள்ளனர். யாழ்க்குடாநாட்டில் சுவிஸ் அபிவிருத்தி நிலையம் எனப்படுகின்ற அமைப்பு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. எனினும் இந்த அமைப்பு வன்னி உள்ளிட்ட யுத்த நடவடிக்கைளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் சிலவற்றை செய்ய முன்வந்த போதிலும் அதற்கு அனுமதி வழங்க அரச தரப்பு மறுத்து வருகின்றது. இந்த நிலையில் பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சில பாடசாலைகளையும் வீடமைப்புத் திட்டங்களையும் முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்…
-
- 0 replies
- 267 views
-
-
செவ்வாய்க்கிழமை, மார்ச் 15, 2011 போர் அனுபவத்தை பகிரும் மாநாட்டை ( “Defeating Terrorism Sri Lankan Experience” )புறக்கணிக்க அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான காட்டு மிராண்டித்தனமான போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் நோக்கில் சுமார் 50 இற்கு மேற்பட்ட நாடுகளை அழைத்து மா நாடு ஒன்றினை நடத்துகின்றமை அனைவருக்கும் தெரியும். இந்த மா நாடு மே மாதம் 31 இல் இருந்து ஜூன் 2 வரை கொழும்பில் நடக்கவிருக்கின்றது. . இந்த மா நாட்டை புறக்கணிக்குமாறு அனைத்துலக மனித உரிமைகள் ஸ்தாபனம் அறிவித்துள்ளது. தற்போது இன்ரனஷ்னல் வாட்ச்டோக் எனும் அமைப்பும் இந்த மா நாட்டை புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. சட்டத்த…
-
- 3 replies
- 712 views
-
-
நேசக்கரத்தை முடக்க தொடர்ந்தும் சதி நேசக்கரமும் வேண்டாம் மக்கள் பணியும் வேண்டாமென்று ஒதுங்கிப்போகும் முடிவை 06.01.2011 அன்று அறிவித்துவிட்டு ஒதுங்கிய எங்களை மீண்டும் வெள்ள அனர்த்தமும் நேசக்கரம் பயனாளர்களின் வேண்டுகைகளும் எல்லாச் சவால்களையும் அரசியல் தலையீடுகளையும் உதைத்துக் கொண்டு எழ வேண்டுமென்ற சக்தியைத் தந்தது. இனி எந்தக் கொம்பனுடனும் நேரில் நின்று போராடுவதென்று முடிவெடுக்க வைத்தது. அதன்படி மீளவும் எழுந்தோம். எந்த அரசியல்வாதியின் தலையீடு எம்மை நிறுத்தியதோ எந்த அரசியல்வாதியின் குடும்பத்தின் அச்சுறுத்தல் எங்களை பின்தள்ள எண்ணியதோ அத்தடைகளாக நின்ற தலைகளின் அறியாமைகளையும் மன்னித்து மெளனமாக மீண்டும் எங்களது பணியை ஆரம்பித்தோம். ஆனால் புதியகாளானாக வன்னிமைந்தன…
-
- 25 replies
- 3.4k views
-
-
பயண முகவர்களாக இராணுவம் இலங்கையில் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விமான டிக்கெட்டுகளை வழங்கும் சுற்றுலா நிறுவனம் ஒன்றை இராணுவம் ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து சுமார் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் , இராணுவம் இத்தகைய புதிய துறைகளில், அதுவும் சிவில் சமூகம் ஈடுபடும் துறைகளில், பங்கேற்க ஆரம்பித்திருக்கிறது. இலங்கை இராணுவ அதிகாரிகளில் பலர் வெளிநாட்டு வேலைகளுக்காக செல்வதனால் இலங்கை இராணுவத்தின் சார்பில் விமான பயணச்சீட்டு பதிவு அலுவலகம் துவங்க வேண்டும் என்று திட்டமிட்ட இலங்கையின் இராணுவ தளபதி, கடந்த ஆண்டே இந்த சேவையை துவங்கியதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை இலங்கை விமானப்படையின் தலைமை அலுவலகத…
-
- 0 replies
- 928 views
-
-
Monday, March 14th, 2011 | Posted by thaynilam லேக்கவுஸ் படப்பிடிப்பாளரின் படங்கள் மகிந்தவின் பாதுகாப்பு பிரிவால் பறிப்பு திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச பொதுமக்களை நோக்கி கை அசைத்த போது அதனை படம்பிடித்த லேக்கவுஸ் படப்பிடிப்பாளரின் படங்களை மகிந்த ராசபக்சவின் பாதுகாப்பு பிரிவினர் பறித்தெடுத்துள்ளனர். அவரின் படப்பிடிப்பு கருவியை பறித்தெடுத்த பாதுகாப்பு பிரிவினர் மகிந்த கை அசைத்த படத்தை அழித்து விட்டதாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். மகிந்த ராசபக்ச அணிந்திருந்த மாந்தீரிய தாயத்தை அவர் படம் பிடித்து விட்டார் என்று கூறியே அவரின் படங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சோதிடர்களின் ஆலோசனைப்படி மாந்தீர…
-
- 0 replies
- 791 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் 74.5 சதவீதம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கச் செய்யும் வகையிலும், சிங்கள பிரதிநிதித்துவத்தை இம்மாவட்டத்தில் உருவாக்கும் வகையிலும் அரசாங்கம் பல திட்டங்களை தீட்டி செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க முடியாது என ஊத்துச்சேனை, வடமுனை ஆகிய கிராமங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில், அரசாங்கம் ஊத்துச்சேனை, வடமுனை ஆகிய பகுதிகளில் மதுருஓயா நீர்த்…
-
- 0 replies
- 852 views
-
-
முல்லையில் கால் பதிக்க அமைச்சர் றிஷாத்துக்குத் தடை விதிப்பு: ஸ்ரீரங்காவுக்குக் கடை விரிப்பு அரசின் மேலிடம் உத்தரவு [Monday, 2011-03-14 04:29:57] முல்லைத்தீவ மாவட்டத்தில் அரசியல் நடவடிக்கைகளையோ அல்லது வேறு எந்தவிமான செயற்பாடுகளையோ முன்னெடுக்கக் கூடாதென அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு அரச மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் எமது செய்தி இணையத்தளத்துக்குத் தெரிவித்தன. இதனையடுத்து முல்லை மாவட்டத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் பாராளுமன்ற உறுப்பினரான ஜே. ஸ்ரீரங்காவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.. இதேவேளை, அமைச்சர் றிஷாத் பதியுதீன் மன்னார் மாவட்ட விவகாரங்களுக்கு மட்டுமே பொறுப்பாகச் செயற்படவுள்ளார். மேலும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்…
-
- 0 replies
- 1k views
-
-
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை:சந்தேகத்தில் இலங்கையர் கைது [Monday, 2011-03-14 10:36:20] ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவின் பின்னர் இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் அவரது உடலை சூட்கேசில் வைத்து கால்வாயில் வீசியுள்ளனர்.தோஷா தாக்கர் (24) என்னும் இந்திய பெண் சிட்னி காலேஜ் ஆப் பிசினஸ் அன்ட் ஐடியில் படித்து வந்தார். அவர் ஆஸ்திரேலிய குடியிருப்பு பெற்றவர். கடந்த 9-ம் தேதி திடீர் என்று மாயமானார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி காலை கட்டுமானப் பணியாளர்கள் சிலர் மெடோபாங்க் பார்க் அருகில் உள்ள கால்வாயில் ஒரு சூகேஸ் கிடப்பதைப் பார்த்தனர். அதை திற…
-
- 1 reply
- 1.5k views
-
-
வவுனியா தமிழ் வர்த்தகரின் வீட்டுக்குள் நுழைந்தோர் அடாவடித்தனம்: மனைவியை கழுத்து நெரித்துக் கொல்ல முயற்சி! [Monday, 2011-03-14 10:25:02] தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று வர்த்தகப் பிரமுகரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தருமாகிய செல்லத்துரைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தெரிய வந்துள்ளதாவது, வவுனியா சமயபுரத்தில் உள்ள செல்லத்துரையின் வீட்டிற்கு வான் ஒன்றில் சென்ற பத்து பேர் அடங்கிய கோஷ்டி ஒன்று அவரது வீட்டினுள் அட்டகாசமாகப் புகுந்து செல்லத்துரை இருக்கின்றாரா என த…
-
- 0 replies
- 754 views
-
-
Mar 14, 2011 / பகுதி: செய்தி / மன்னார் கடலில் ஜூலையில் எண்ணெய் அகழ்வு ஆரம்பம் மன்னார் கடற்பரப்பில் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் எண்ணெய் அகழ்வை ஆரம்பிக்கவுள்ளதாக பிரித்தானியாவின் கரின் எனோர்ஜி நிறுவனத்தின் இந்தியக் கிளையான கரின் இந்தியா அறிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு இலங்கையின் வடமேற்குக் கடற்பிராந்தியத்தில் எண்ணெய்வள ஆய்வுகளை நடத்துவதற்காகவும் அந்தப் பிராந்தியத்தில் மூன்று எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதற்காகவுமென கரின் நிறுவனம் 10 கோடி டொலர்களை முதலிட்டிருந்தது. எண்ணெய் அகழ்வுப்பணிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன என அந்த நிறுவனம் விடுத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக் பட்டுள்ளத…
-
- 0 replies
- 457 views
-
-
தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் 75000 பேர்! Posted by admin On March 14th, 2011 at 2:17 pm தேர்தல் இடம் பெறும் எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.குழப்பங்கள் அல்லது கலவரங்கள் ஏற்படும் பிரதேசத்தில் பொலிஸாருக்கு புறம்பாக இராணுவத்தினரும் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்காக வரவழைக்கப்படும் என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். பாதுகாப்புக்காக 75 ஆயிரம் பேரைக் கொண்ட விசேட படையணியொன்று ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார். 50 ஆயிரம் பொலிஸார் 20 ஆயிரம் முப்படையினர் மற்றும் 5 ஆயிரம் விசேட அதிரடிப்படையினர் என 75 ஆ…
-
- 0 replies
- 548 views
-
-
Mar 14, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / ஐ.நா. குழுவின் அறிக்கை: பகிரங்கப்படுத்த முன் தம்மிடம் ஒப்படைக்க இலங்கை கோரிக்கை விடுதலைப் புலிகளுக்கு அரச படைகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள்சபை செயலாளர் நாயகம் பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்து முன்னர் தம்மிடம் கையளிக்குமாறு இலங்கை அரசாங்கம் ஐ.நா. சபையைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி இம்மாத இறுதியில் இலங்கை அரசிடம் குறிப்பிட்ட அறிக்கை கையளிக்கப்பட உள்ளது என அரசின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வெளிவிவகாரச் செயலர் ரொமேஷ் ஜயசிங்க, சட்டமா அதிபர் …
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்கள் சிலர் சிறீலங்கா புலனாய்வுடன் இணைப்பு... ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011 07:16 சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கத்தினால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் புலனாய்வு சேவையில் இணைக்கப்படவுள்ளதாக லங்கா காடியன் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாப்பா, பொருளாதாரத்துறை பொறுப்பாளர் கரிகாலன், முன்னாள் பேச்சாளர் யோகரட்ணம் யோகி, மூத்த உறுப்பினர் பாலகுமார், முன்னாள் பேச்சாளர் லோரன்ஸ் திலகர், யாழ்ப்பாண பொறுப்பாளர் இளம்பரிதி, திருகோணமலை பொறுப்பாளர் எழிலன், நிர்வாகப்பொறுப்பாளர் பூவன்னன், சர்வதேச உதவிபொறுப்பாளர் ஞ…
-
- 7 replies
- 1.7k views
-