Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகள் மீதான தடையை நீக்கவே கூடாதென அடம் பிடித்து நிற்கும் இந்திய மத்திய அரசு: வெள்ளிக்கிழமை, 28 ஜனவரி 2011 13:08 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வைகோ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நிதிமன்றில் மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை விதித்து மத்திய அரசு கடந்த 14.5.10 அன்று அறிவிப்பாணை வெளியிட்டது. இதுதொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த…

  2. நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே அவர்கள் மரக்கறிய வியாபாரத்தை நடத்தி வருகின்றார்கள் thx http://www.newjaffna.com/

    • 2 replies
    • 1.1k views
  3. யாழ். நகரில் இயங்கிவரும் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி தீவுப் பகுதியில் பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் அல்லைப்பிட்டிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை அவர் இவ்வாறு மோசடி செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் என்று தன்னை மண்டைதீவு அல்லைப்பிட்டிப் பகுதிகளில் அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் அங்குள்ள மக்களிடம் இருந்து அந்த நிறுவனத்திற்குரிய காப்புறுதிக் கட்டுப்பணங்களைச் சேகரித்துள்ளார். பணம் கட்டிய போதும் அதற்கான பற்றுச் சீட்டுக்கள் தமக்குக் கிடைக்காததை அடுத்து மக்கள் குறித்த காப்புறுதி நிறுவன…

  4. கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்ப்பது வேதனை தருகின்றதுடன் இந்தியா உதவியளித்ததாக பெரும் விளம்பரம் செய்யப்பட் டபோதும் ஒரு சில குறைந்த பொருட்களே மக்களிடம் சென்றடைந்துள்ளன. எனவே பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் ன் வர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பி னர் சீ. யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர சாங்கத்தினால் வழங்கப்படும் உலர் உணவு உதவி மிகவும் குறைவாகவே மக்களுக்கு வழங்கப்படுகிறது. சில பிரதேசங்களுக்கு இன்னும் உலர் உணவு நிவாரணம் வழங்கப் படவில்லை. இதனால் பெரும்பாலான மக்கள் உணவு பொருள் உதவியை பாராளு மன்ற உறுப்பினர்களிடம் கோருகின்றது…

  5. வியாழக்கிழமை, 27, ஜனவரி 2011 (22:40 IST) விடுதலைப்புலிகள் 6 பேருக்கு பிடிவாரண்ட் இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப்போரின் போது தப்பியோடியுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 6 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதிகட்டப்போரின் போது இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 6 பேருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்யும் விஷயத்தில் சர்வதேச போலீஸான இன்டர்போலின் உதவியை நாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தீவிரவாத தடுப்புப் பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக இலங்கையில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன…

    • 8 replies
    • 1.3k views
  6. வெள்ளிக்கிழமை, 28, ஜனவரி 2011 (13:26 IST) நிருபமா ராவ் கொழும்பு பயணம் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், நாளை இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு செல்கிறார். இந்தப் பயணத்தின் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார். அண்மையில் ஜெகதாப்பட்டினம் மீனவர் பாண்டியன், புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். இதனை கண்டிக்குமாறும், மேற்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதேபோல் தமிழகத்தில் இருந்து பல்வேறு அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ரா…

  7. யாழ். மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல்களில் வேட்பாளர் தெரிவில் உள்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட பிரதம அமைப்பாளர் இ.அங்கஜன் தேர்தலில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்துள்ளார். உள்ளூராட்சிச்சபை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கான காரணத்தை விளக்கி அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: குடாநாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிசபை தேர்தல்களில் நாம் போட்டியி டுவதில்லை எனத் தீர்மானித் துள்ளது குறித்து எனதும் என்னைச் சார்ந்தவர்களினதும் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்துவது இச்சந்தர்ப்பத்தில் முக்கியமானது எனக் கருதுகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் …

  8. பிரபாகரனின் நண்பர் கொழும்பில் கைது? First Published : 28 Jan 2011 12:32:17 PM IST கொழும்பு, ஜன.28: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருங்கிய நண்பராக இருந்த ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கொழும்பில் கைது செய்ததாக இலங்கை இணையதளங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டுள்ளவர் கொழும்பின் மிகப் பெரும் வர்த்தகர்களில் ஒருவராக விளங்கும் கோடீஸ்வரர் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் சிறிதுகாலம் வெளிநாட்டில் வசித்துள்ளார். கொழும்பு மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் 2 ஹோட்டல்களை வைத்துள்ள அவர், 12-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு உரிமையாளராக இருந்துள்ளார். அவரது உதவியாளராக இருந்து வேலுப்பிள்ளை சந்திரகுமார் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் கைது …

  9. உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் நாமல் ராஜபக்ஸ! அடுத்த தலைமைத்துவத்துக்கு நாமல் ராஜபக்ஷவை ஆயத்தப்படுத்துகிறார் ராஜபக்ஷ. [Thursday, 2011-01-27 16:00:28] உள்ளூராட்சித் தேர்தலில் அரசின் தேர்தல் செயற்பாட்டை முழுமையாகவே நாமல் ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி முடிவு செய்துள்ளார். அதற்கமைய இந்தத் தினங்களில் லிபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் உள்ளூராட்சித் தேர்தல் செயற்பாட்டின் அனைத்துத் கருமங்களையும் பொறுப்பேற்பார் என்று தெரியவருகின்றது. தேர்தல் கருமங்கள் நாமல் ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் மேற்கொண்டு செயல்படும் "இளையோருக்கு நாளை" அமைப்பின் ஊடாக நாடளாவிய ரீதியில் நடத்திச் செல்வதற்கும் ஏற்கனவே திட்டங்கள் வக…

  10. வெள்ளிக்கிழமை, 28, ஜனவரி 2011 (10:10 IST) இலங்கை அகதி தீக்குளித்து தற்கொலை மதுரையில் இலங்கை அகதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை கூடல்புதூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர் செல்வராஜ் (38). கடந்த 24ம் தேதி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். குடும்ப பிரச்னையால் தீக்குளித்து தற்கொலை செய்து ‌கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். nakkheeran

  11. நிபுணர்குழு இலங்கையினால் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது குறித்து 28 ஜனவரி 2011 பான் கீ மூனின் பேச்சாளர் அலுவலகத்திடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது : ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு பான் கீ மூனின் பேச்சாளர் அலுவலகத்திடம் இன்னர்சிற்றி பிரஸ் மீளவும் மீளவும் வலியுறுத்திக் கேட்டிருந்தது. குறிப்பாக கடந்த டிசம்பர் 17இல் , எதிர்வரும் ஜனவரி 14 இல் நிபுணர்குழுவானது இலங்கைக்குச் செல்லுமென பான் கீ மூன் அறிவித்திருந்தார். எனவே அது தொடர்பாக அதனைக் கூறுவதற்கு முன்னர் பான் கீ மூன் யாருடன் உரையாடியிருந்தார் அதற்கு என்ன பதில் கூற…

  12. இலங்கையர் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மெக்ஸிக்கோவில் கைது 28 ஜனவரி 2011 இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கும்பலில் ஆறு இலங்கையர்களும் .. இலங்கையர் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மெக்ஸிக்கோவில் கைது இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மெக்ஸிக்கோவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ட்ரக் வண்டியொன்றில் 219 புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கும்பலில் ஆறு இலங்கையர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனிதர்கள் போக்குவரத்து செய்ய முடியாத ட்ரெய்லர் ட்ரக் வண்டியொன்றில் இரகசியமாக இவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். இந்தக் கும்பலில் 177 ஆண்கள…

  13. அப்பாவிப் பெண்ணை பாலியல் தொழிலாளியாக்கிய சிறீலங்கா காவல்துறையினர் * Friday, January 28, 2011, 3:01 சிறீலங்கா காவல்துறையினரின் வலனா பிரிவு எனப்படும் பிரிவினர் அம்பாந்தோட்டை பகுதியில் வசிக்கும் அப்பாவி பெண் ஒருவரை பாலியல் தொழிலாளியாக அறிவித்து மோசடிகளை மேற்கொள்ள முனைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பந்துலாமா பகுதியில் வசிக்கும் இமேசா கஜனி என்பவரை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்த சிறீலங்கா காவல்துறையினர் அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியதால் குறிப்பிட்ட பெண் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தேடுதலின் போது லிபேர்ட்டி பிளாசாவில் நடத்தப்பட்டு வந்த பாலியல் மைய…

  14. சுவிற்சர்லாந்தில் மரணமடைந்தவரின் உறவினர்களை கண்டுபிடிக்க உதவுங்கள் _ வீரகேசரி இணையம் 1/28/2011 9:03:15 AM சுவிற்சர்லாந்தில் அண்மையில் மரணமடைந்த சண்முகராஜா குறிஞ்சிக்குமரன் என்பவரின் உறவினர்களை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை நாடுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சுவிற்சர்லாந்தை வதிவிடமாகக் கொண்ட இலங்கையரான சண்முகராஜா குறிஞ்சிக்குமரன் என்பவர் சுவிற்சர்லாந்து சூரிச்சிலுள்ள அவரது வசிப்பிடத்தில் 08.12.2010 அன்று இறந்த நிலையில் காணப்பட்டார் என சூரிச் பொலிஸ் ஜெனீவாவிலுள்ள எமது தூதராலயத்துக்கு அறிவித்துள்ளது. இறந்தவர் பிறந்த திகதி: 20.07.1968 என்றும் கடவுச்சீட்ட…

  15. யாழ். உள்ளுராட்சித் தேர்தலில் ஈ.பி.டி.பி அவுட்! ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியால் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் இன்று நிராகரிக்கப்பட்டன. ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயருக்கு பதிலாக வேட்புமனுக்களில் சுதந்திரக் கூட்டமைப்பு என்று கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்றுதான் கடந்த காலங்களில் இக்கட்சியின் பெயர் பதியப்பட்டுள்ளது. இக்காரணத்தைக் காட்டியே அதிகாரிகள் இக்கட்சியின் வேட்பு மனுக்களை நிராகரித்துள்ளனர். http://www.tamilcnn.info/index.php?option=com_content&view=article&id=175…

    • 2 replies
    • 524 views
  16. உள்ளுராட்சி சபைத் தேர்தல் - வடக்கு - கிழக்கு - கள நிலவரம் ஒரே பார்வையில் பச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகிய சபைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியில்.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தின் நல்லூர், வலிகாமம் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, தென்மேற்கு, சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேசசபை, பருத்தித்துறை நகரசபை, பருத்தித்துறை பிரதேசசபை, வல்வெட்டித்துறை, வடமராட்சி வடக்கு, தெற்கு, காரைநகர், ஊர்காவற்துறை, வேலணை ஆகிய 16 சபைகளுக்கும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு (நெடுங்கேணி), வவுனியா தெற்கு (தமிழ் பிரதேசசபை), வெங்கல செட்டிகுளம் ஆகிய 03 சபைகளுக்கும், மன்னாரின் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேசசபை, நானாட்டான், முசலி…

  17. யாழ்ப்பாணத்தை சீர்குலைத்த எட்டுப் பேர் கைது .அண்மைய நாட்களில் யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த குற்றச் செயல்களுக்குப் பொறுப்பான காடையர் குழு ஒன்றை இராணுவம் மற்றும் பொலிஸார் கைது செய்து உள்ளனர். கோப்பாய் பகுதியில் வீடு ஒன்றை இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இவர்களில் எட்டுப் பேர் இராணுவம் மற்றும் பொலிஸார் ஆகியோரின் பிடியில் சிக்கி விட்டனர். யாழ். மக்கள் மேற்கொண்டு இருந்த முறைப்பாடுகளை அடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க இராணுவம் மற்றும் பொலிஸார் கூட்டாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 24 மணித்தியாலமும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை சீர் குலைக்கும் வகையில் கடத்தல்கள், கொ…

  18. தமிழ் கூட்டமைப்பில் போட்டியிட ஆட்கள் பயப்படுகின்றனர் என்கின்றார் முன்னாள் எம்.பி துரை! எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலுக்காக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை தெரிவு செய்கின்றமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு படாதபாடு பட்டு உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கூட்டமைப்பில் போட்டியிட அநேகமானோர் தயக்கம் காட்டினர். குறிப்பாக இளைஞர்கள் ஒதுங்கி நின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரட்ணசிங்கம் தலைமையில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது இவர் இந்நிலைமையை மிகுந்த மன வருத்தத்துடன் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார். கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடந்த காலங்களில் தாக்கப்பட்ட சம்பவங்கள…

  19. வைகோ ஒரு காகிதப் புலி! வெள்ளி, 28 ஜனவரி 2011 04:29 .தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இந்திய அரசின் தடை நீடிப்பு சரியானது என்கிற நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து சட்ட நடவடிக்கை எடுக்க மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு அருகதை கிடையாது என்று அந்த அரசின் சார்பில் மதுரை மேல் நீதிமன்றத்துக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. புலிகள் இயக்கம் மீதான மத்திய அரசின் தடை நீடிப்பு சட்ட வலு உடையது என்று டில்லி மேல் நீதிமன்ற நீதிபதி விக்கிரம ஜித் சென் தலைமையிலான ஆயம் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்து இருந்தது. இத்தீர்ப்பை ஆட்சேபித்து வைகோ வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் வைகோவின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசு எழ…

    • 0 replies
    • 1.2k views
  20. தமிழக மீனவர்களுக்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும் எத்தகைய தியாகமும் செய்வோம் -விடுதலை இராசேந்திரன் தமிழக மீனவர்களுக்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும் எத்தகைய தியாகமும் செய்வோம் என்று பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் நம் மீனகம் தளத்திடம் தெரிவித்துள்ளார். http://meenakam.com/ http://meenakam.com/

  21. சென்னை புத்த மடாலயத்தை தாக்கியதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் ஏழு பேர் கைது தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தொடர்ச்சியாக படுகொலை செய்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த இரு நாள் முன்னர் சென்னையிலுள்ள புத்த மடாலயத்தினை சிலர் தாக்கினர். இதில் அதிலிருந்த சிங்களவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக சிலோன் வங்கி முதற்கொண்டு சிங்களவர்களால் நடத்தப்படும் அலுவலகங்களுக்கும், அவர்களது இல்லங்களுக்கும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு வரவிருந்த சிங்கள கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா தான் பெங்கேற்பதை ரத்து செய்துள்ளார். தாக்குதல் நடந்த அன்றிரவு நாம் தமிழர் கட்சியினர் இருவர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுக்க…

  22. 27 ஜனவரி 2011 வெள்ளை வேன் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன:- எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை பின்தொடர்ந்து அவர்களைக் கட்டத்திச் சென்று கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தும் வெள்ளை வேன் தொடர்பான அனைத்து தகவல்களும் கண்டறியப்பட்டிருப்பதாக மிக நம்கரமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வேன் டொயோட்டா ரகத்திற்குரிய வெள்ளைநிற வேன் எனவும், அந்த வேனின் முன்புறத்தில் வேறு இலக்கத் தகடும், பின் புறத்தில் மற்றுமொரு இலக்கத் தகடும் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த இலக்கத் தகடுகள் ஒரு கடத்தலுக்குப் பின்னர் மாற்றம் செய்யப்படுகின்றன. வாகனத்திற்கான எரிபொருள் விநியோகம் மற்றும் பராமரிக்கும் பணிகளை…

  23. வியாழக்கிழமை, 27, ஜனவரி 2011 (22:33 IST) வவுனியா: 5 தமிழ் கைதிகளைக் காணவில்லை அனுராதபுர சிறையிலிருந்து வவுனியா நீதிமன்றம் சென்ற 5 தமிழ் அரசியல் கைதிகளைக் காணவில்லையென அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுராதபுரம் சிறையிலிருந்த பாஸ்கரன், சசிகுமார், இராஜேந்திரன், சந்திரபொஸ் (செல்வசந்திரன்), மரியதாஸ் என்ற 5 தமிழ் அரசியல் கைதிகளும் வழக்கு விசாரணைக்காக கடந்த 24.01.2011 அன்று காலை வவுனியா நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அன்று பிற்பகல் 4.00 மணியளவில் மீண்டும் அனுராதபுரம் சிறைக்கு கொண்டுவரப்பட்டனர். ஆனால் அப்போது அங்கு வன்முறைச் சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்து. அதனால் அந்த 5 கைதிகளும் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் …

  24. யாழ் மாநகர முதல்வரின் வாகனம் விபத்து : அவருக்கு பாதிப்பில்லை Thursday, January 27, 2011, 13:28 யாழ். மாநகர சபை முதல்வரின் வாகனம் இன்று அதிகாலையில் விபத்துக்குள்ளாகியது. விபத்து நடந்த போது வாகனத்தில் முதல்வர் இருக்கவில்லை. அவரது கணவரும் செயலாளருமான தலையில் காயமேற்பட்டது. உதவியாளரும் சாரதியும் சிறு காயத்திற்கு உள்ளாகினர். கொழும்பில் இருந்து யாழ். நகரை நோக்கி வந்து கொண்டிருந்த போதே வாகனம் விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. கைதடிப் பாலத்தில் பிரேக் கட்டுப்பாட்டை இழந்து மோதியது என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாகனத்தில் பயணித்த மேயரின் கணவரும் அவரது செயலாளருமான கு.பற்குணராஜா தலையில் காயமடைந்தார். அவரது உதவியாளரும், வாகனச் சாரதியும் சிறு காயங்களுக்குள்ளாகினர். …

  25. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பச்சைமிளகாய்,சின்ன வெங்காயம் என்பனவற்றின் விலை என்றுமில்லாதவாறு உயர்வடைந்துள்ளது. பச்சை மிளகாய் கிலோ 500 ரூபாவாகவும் சின்ன வெங்காயம் கிலோ 380 ரூபாவாகவும் சந்தைகளில் விற்கப்படுகிறது. குடாநாட்டில் தற்போது தோட்டப் பயிர்ச்செய்கையிலும் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிகமானவர்கள் சின்ன வெங்காயச் செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாண வெங்காயத்துக்கு தெற்கில் நல்ல கிராக்கி காணப்படுகிறது. கடந்த 50 வருடகாலத்தில் குடாநாட்டில் வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றில் இந்தளவுக்கு விலை ஏற்றம் ஏற்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மரக்கறிகளின் விலை முக்கிய சந்தைகளில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.