ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத இராணுவம் உலக இராணுவத்துக்கு எப்படி பயிற்சியளிக்கும்? யாழ். குடாநாட்டில் நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றவர்களை உரிய முறையில் கைது செய்யத் தவறும் இராணுவம், பயங்கரவாதத்தினை எவ்வாறு ஒழிப்பது என்பது குறித்து வெளிநாட்டு படையினருக்கு பயிற்சியளிப்பது எந்தவகையில் சாத்தியமாகுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடந்த இவ்வருட இறுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு யாழ். மாநகர சபை உதவி மேயர் து. இளங்கோ முன்வைத்த பிரேரனையை முன்மொழியும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர். அங்கு அவர் மேலும் கூறுகையில். முள்ளிவாய்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் சலுகைகளை விட உரிமைகளுக்கே முன்னுரிமையளிப்பதாக யாழ் மாநகர முன்னாள் பிரதி மேயர் எம்.பஷீர் தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புத்தளம் மாவட்ட அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்: வட மாகாணத்தில் வாழும் மற்றும் வாழவுள்ள மக்களின் புரிந்துணர்வு செயற்பாடுகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவற்றையும் உள்ளீர்த்து சமாதான பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டிய அவசியத்ததையும் அங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத்தமிழ் மக்களின் துயரங்களைக் களைந்திட மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு மீண்டும் வலிறுத்தியுள்ளது. அத்துடன், ஈழத்தமிழ் மக்களின் அபிரதசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் சிறிலங்கா அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது குறித்தும் தமிழக அரசு கவலை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் புதிய சட்டசபையின் தலைமை செயலக வளாகத்தில் இன்று 13வது சட்டப்பேரவையின் 15வது கூட்டத்தொடரின் கூட்டம் ஆரம்பமாகியது. இக் கூட்டத்தொடர் 2011ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாள் கூட்டத்தில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றினார். தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள…
-
- 0 replies
- 905 views
-
-
பாராளுமன்றில் அமலிதுமலி 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு [ பிரசுரித்த திகதி : 2011-01-07 11:07:00 AM GMT ] பாராளுமன்றம் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட அமைச்சர்கள் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின் போது ஏற்பட்ட அமலித்துமலியை அடுத்தே பிரதி சபாநாயகர் பாராளுமன்றை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துள்ளார். tamilulakam.com
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐ.தே.க, புலிகளுக்காக வானொலி உபகரணங்களை கோரியுள்ளது – விக்கிலீக்ஸ்:- 07 ஜனவரி 2011 ஐக்கிய தேசியக் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக வானொலி உபகரணங்களை நோர்வேயிடம் கோரியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. நோர்வே அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி இந்த உதவியைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் 'புலிகளின் குரல்' வானொலிக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த முனைப்புக்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, நோர்வே தூதரகத்திடம் இந்த உதவியைக் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2002ம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை…
-
- 0 replies
- 904 views
-
-
கே.பி. சால்வையைப் போட்டுக் கொண்டு மஹிந்த சிந்தனையை பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்! வெள்ளி, 07 ஜனவரி 2011 18:11 கே.பி. எனும் குமரன் பத்மநாதன் தற்போது சால்வையைப் போட்டுக் கொண்டு மஹிந்த சிந்தனையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய இவரை என்ன செய்ய வேண்டும்....என்ன செய்ய வேண்டும்..... இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். நான் என்றால் அதையே செய்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார். இந்த வருடத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது கட்சிக் கூட்டம் நீர்க்கொழும்பில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்றது இதன்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். அங்கு மேலும் கருத்து த…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழின் தொடர் படுகொலைகள்; சிங்களத்தின் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பா? யாழ் குடாநாட்டில் மீண்டும் தீவிரமாகியுள்ள கொலைகள், கடத்தல்கள் தொடர்பாக கடந்த காலங்களில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், காணாமல்போயுமுள்ளனர். அவ்வாறான நிகழ்வுகளால் தமிழ் மக்கள் மரண பயத்தில் உறைந்து போயுள்ளனர். அதிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. இந்நிலையில் யாழ் குடாநாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ள கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் குடாநாட்டு மக்கள் தொடர்ந்தும் மரண பயத்துடனேயே வாழ் வேண்டிய நிலைக்குள் தள்ளியுள்ளது. � கடந்த 11-12-2010 அன்று மாலை 6.00 மணியளவில் யாழ் சங்கானை முருகமூர்த்தி ஆ…
-
- 0 replies
- 925 views
-
-
நம்மவர்களின் தகாத நடத்தை நாடு கடந்தும் உரசிப் பார்க்கிறது! வெள்ளி, 07 ஜனவரி 2011 00:02 .சர்வதேச நிறுவனம் ஒன்றின் இலங்கைக்கான பிரதிநிதி ஒருவரின் உறவினருடன் தகாத முறையில் நடக்க முயற்சித்த இலங்கையர் ஒருவர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பை அண்மித்த நகரான ராஜகிரியவிலுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவரது உறவினரிடமே குறிப்பிட்ட இலங்கையர் தகாத முறையில் நடக்க முயற்சித்தார் எனக் கூறி வெலிக்கடைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்தேக நபரைக் கைது செய்த பொலிஸார், கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டீ அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தியதனையடுத்து சந்தேக நபர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்…
-
- 3 replies
- 2.4k views
-
-
ஒலிப்பதிவு http://www.yarl.com/forum3/uploads/monthly_01_2011/pongal2011.mp3 காணொலி: http://dai.ly/gp15en
-
- 0 replies
- 693 views
-
-
2010 ஆம் ஆண்டு மாத்திரம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நாடு திரும்பியுள்ளனர்: யுனிசெப் அமைப்பு. [Friday, 2011-01-07 04:07:11] யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியில் பிற நாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு மாத்திரம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நாடு திரும்பியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இதனிடையே இந்திய உட்பட சர்வதேச நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்காக ஏராளமான விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும் யுனிசெப் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. seithy.com
-
- 0 replies
- 630 views
-
-
சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் காத்திரமான உரைகளுடன் முன்னகர்ந்து கொண்டிருந்ததுடன் அதன் அடுத்தகட்டமாக பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையுரை நிகழ்த்தினார். புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மற்றும் அடையாளத்தை மீள்நினைவூட்டும் விதமாக அவருடைய உரை அமைந்திருந்தது. சில வார்த்தைப் பிரயோகங்கள் எமது தனித்துவத்தின் அவசியத்தை உணர்த்துவனவாக இருந்தன. “உலகமயமாதல், புலச்சிதறல் (Diaspora) அடையாள நெருக்கடி (Identity Cricis) முதலியவற்றின் எழுபுலத்தில் இம்மாநாடு கூட்டப்பட்டுள்ளது. மத்திய தர வகுப்பின் ஆக்கம் அல்லது எழுகுழாத்தினரது ஆக்கம் (Elite Formation) ஆகியவற்றில் எழுத்தாளர் என்ற துணைப்பண்பாட்டினரும் ஒன்றிணைகின்றனர் அல்லது உள்ளடக்கப்படுகின்றனர்” என அவர் ஆரம்…
-
- 0 replies
- 4.8k views
-
-
மலேசிய பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்ள புலிகள் முயற்சி – மலேசியா 07 ஜனவரி 2011 மலேசிய பல்கலைக்கழக மாணவர்களை தமது அமைப்பில் இணைத்துக் கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், தமிழ் பிரிவினைவாதிகளும் பல்கலைக்கழக மாணவர்களிடையே தமது கருத்துக்களை விதைப்பதற்கு முனைப்பு காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தற்போது பயங்கரவாதம் தலைதூக்கக் கூடிய சாத்தியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களிலும் வேறும் இடங்களிலும் தீவிரவாத கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்கள் …
-
- 1 reply
- 615 views
-
-
வடக்கிலிருந்து பொலிஸ் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் 336 பேர் இன்று பயிற்சியை முடித்துக் கொண்டு செல்லவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 30 வருடங்களின் பின்னர் வடக்கில் தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பும் முகமாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. Eelanatham
-
- 0 replies
- 531 views
-
-
புனர்வாழ்வு முகாம்களுக்குள் என்ன நடக்கிறது? jதமிழில் GTN. 07 ஜனவரி 2011 இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆயிரம் வரை உயர்ந்தது. புனர்வாழ்வு முகாம்களுக்குள் என்ன நடக்கிறது? தமிழில் GTN. அண்மையில் இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழ் கைதிகள் பலரையும், இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் பலரையும் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு தாம் எதிர் கொண்ட ஒடுக்குமுறைகள் பற்றி அவர்கள் தெரிவித்தது மட்டுமல்லாது தமது தடுத்து வைப்பு எவ்வளவு தூரம் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு முரணானது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். 2009 மேயில…
-
- 0 replies
- 568 views
-
-
திருக்கோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் தேசியத்தலைவர் முகமுடைய நாட்காட்டி! Friday, January 7, 2011, 4:15 திருக்கோணமலை உப்புவெலி கன்னியா வெந்நீர் ஊற்று வனப் பகுதியில் இருந்து தமிழ் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகைப்படம் அடங்கிய நாட்காட்டி ஒன்றினை சிறிலங்கா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். திருக்கோணமலை உப்புவெலி பொலிஸ் நிலையப் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த நாட்காட்டி கைப்பற்றப்பட்டுள்ளது. tamilthai.com
-
- 1 reply
- 819 views
-
-
யாழ்.நகர் கண்ணாதிட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று நேற்றிரவு இனந்தெரியாத விசமிகளால் தீயூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த யாழ் பொலிஸார், மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் தீயினை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். யாழ். பொலிஸார் சம்பவம் குறித்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் Eelanatham
-
- 0 replies
- 646 views
-
-
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த 300 முஸ்லிம் குடும்பங்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். யாழ். மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து தற்போது புத்தளம் பகுதியில் வசிப்பவர்களே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இவர்கள் மீள்குடியேற்றப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதுடன் இதற்கென ஏழு பஸ்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. Eelanatham
-
- 0 replies
- 439 views
-
-
ஐ.நா. நிபுணர்கள் குழு நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க இலங்கை வருவதாகவிருந்தால் மாத்திரமே அக்குழுவுக்கு விஸா வழங்கப்படும். விசாரணை நடத்த வருவதாகவிருந்தால் விஸா வழங்கப்படமாட்டாது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலியரம்புக்வெல நேற்றுக் கூறினார். அரச தகவல் திணைக்களத் தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப் பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:ஐ.நா. நிபுணர் குழு தொடர்பான எமது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமுமில்லை.அக்குழு எமது நாடு தொடர்பாக விசாரணை நடத்த நாம் அனு மதிக்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். அதே நிலைப்பாட்டில்தான் நாம் தொடர்ந்தும் இருக்கின்றோம். அந்த நிலைப்பாட்டில் எதுவித மாற்றமுமில…
-
- 0 replies
- 500 views
-
-
இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் அரசு இப்போது ஈடுபட்டு வருகிறது. தேசிய கீதம் தொடர்பான பிரச்சினை இதற்குச் சிறந்த உதாரணமாகும் என ஜே.வி.பி.நேற்று குற்றம்சாட்டியது.ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை பத்தரமுல்ல, பெலவத்தையிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின்சில்வா தொடர்ந்து கூறியவை வருமாறு: வடக்கு, கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கும் முகாம்களிலுள்ள மக்களுக்கும் அரசு எதுவும் செய்யவில்லை. அவர்களது தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. மாறாக அரசு இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளிலேயே இப்போது ஈடுபட்டு வருகின்றது.ஜே.வி.பி. இம்முறை வடக்கு, கிழக்கிலுள்ள உள்ளூராட்சித் தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தும். செய்த…
-
- 0 replies
- 454 views
-
-
சஜித் பாட ரணில் அசைந்தாட சீதுவையில் சுதி! Friday, January 7, 2011, 6:09 ஐக்கிய தேசிய கட்சியின் 2011ம் ஆண்டுக்கான முதலாவது கூட்டம் நேற்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியஸ்த்தர்களின் பங்குபற்றலில் நடைபெற்றது. நீர்கொழும்பு சீதுவை பகுதியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியாதென எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, இக்கூட்டத்தின் மற்றுமொரு விசேட அம்சம்தான் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ பாடல் ஒன்றை பாடியதுடன், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாடல் ஒன்றின் இசைக்கு மேடையில…
-
- 0 replies
- 503 views
-
-
Friday, January 7th, 2011 | Posted by நிலா இலங்கைக் குறித்து தமிழக மக்களுக்கு எச்சரிக்கை! இலங்கையில் தற்போது பன்றிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்திய தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டைப்புண் உள்ளிட்ட பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் இலங்கை பயணத்தை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். பயணத்தின்போது பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுகி ஏஎச்1என்1 நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இலங்கையில் பயணம் செ…
-
- 0 replies
- 378 views
-
-
இராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் இஸ்ரேல் பயணமாகிறார் கோத்தபாய [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-07 08:51:37| யாழ்ப்பாணம்] இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நோக்கத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அந்த நாட்டிற்கான ஒரு வாரகால விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்களை ஆதாரம் காட்டிச் சிங்கள இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. படையினருக்கு நவீன இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்யும் நோக்கத்துடனேயே அவர் இஸ்ரேலுக்கான ஒருவார கால விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். valampurii.com
-
- 0 replies
- 281 views
-
-
புலிகளின் வாலை மட்டுமே நாம் வெட்டியுள்ளோம் தலை-நோர்டிக் நாடுகளில்; கால்-கனடாவில் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-07 09:14:26| யாழ்ப்பாணம்] விடுதலைப் புலிகளின் வாலை மட்டுமே நாம் வெட்டியுள்ளோம். புலியின் தலை நோர்டிக் நாட்டிலும் முன்கால்கள் கனடாவிலும் பின்கால்கள் தென்னாபிரிக்காவிலும் உள்ளன. பிரிவினைவாதம் நவீன முறையில் உருவாகலாம். இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் ஆலோசகரும் மேல் மாகாண சபையின் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் அளித்த சாட்சியத்தில் மேலும் தெரிவித்ததாவது, ஈழத் தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமையையோ அல்லது சு…
-
- 0 replies
- 328 views
-
-
இது போட்டிப்பரீட்சை நடாத்தும் நேரமல்ல, உயிரும் மானமும் கலந்த போராட்டம் - சிறீதரன் MP விவகாரம் காலத்துக்கு காலம் ஊடகங்களினால் பரபாக்கப்படும் செய்திகள் வெளிவந்துகொண்டே இருக்கும். அதில் நன்மை பயப்பனவும் உண்டு. தீமையும் உண்டு. யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் செயற்பாட்டை முடக்கும் அல்லது தடுக்கும் ஒரு வேலைத்திட்டம் ஊடகங்களினூடாக பரப்புரை செய்து வரவது அனைவரும் அறிந்ததே. செய்யத்தகாத வேலையை செய்ததாக சிறீதரன் அவர்களை ஊடகங்கள் விமர்சித்திருப்பதை அவதானிக்கும் போது, மக்களுக்கு கிட்டும் உடனடித்தேவைகளை செய்ய முன்வருபவர்களை தடுத்து முடக்கும் முயற்சியாக இதை கருத வேண்டியுள்ளது. இந்த விடயத்தை வெளிப்படுத்தி மக்கள் தீர்ப்புக்கு விடவேண்டிய தேவை ஒரு பொறுப்புள்ள தமிழனுக்கு உண்…
-
- 0 replies
- 995 views
-
-
நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது - பாகம் 7 நான் ஆடி அசைந்தால் அவன்(ஆமி) கண்டுவிடுவான். அருவியின் மறுபக்கம் நான் எதிர்ப்பக்கம் அவன். எறும்புகள் நிறைய காயப்பட்ட கையை மொய்த்துவிட்டது. உள்ளுக்குள்ளே புகுந்து கடித்தது. தாங்க முடியாத வேதனையாக இருந்தது. ஒன்றும் செய்யமுடியவில்லை. முன்னாலே ஆமி நிற்கிறான். வாயை இறுக்கிப் பொத்தியபடியே அழுதேன். அன்றைய பொழுதும் ஒருவாறாகக் கழிந்தது. நன்றாக இருண்டு நிலவு மறையும் வரைக்கும் இருந்தேன். பிறகு எழும்பிப்போய் கிளிநொச்சிப் பக்கமாக விலத்திப் பார்த்தேன். விடியப்போகுது ஓர் இடத்தில் கிணறு இருந்தது. அதைச்சுற்றிப் பற்றைகள் இருந்தது அதற்குள்ளேயே இருந்துவிட்டேன். விடிந்த பின்பு காயத்துக்கு கட்டிய துண்டை அவிழ்த்து காயத்தைச் ச…
-
- 0 replies
- 1k views
-