ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
புதன், மார்ச் 10, 2010 08:54 | பொட்டு அம்மானுடன் தொடர்புகளை பேணிய சுங்க உத்தியோகத்தர்கள் கைது தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். யுத்த நிறுத்த உடன்படிக்கை காலப் பகுதியில் குறித்த இரு சந்தேக நபர்களும் பொட்டு அம்மானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை அனுப்பி வைத்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பொருட்களை வன்னிக்கு எடுத்துச் செல்ல விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றில் முகவர்களை புலிகள் பயன்படுத…
-
- 1 reply
- 689 views
-
-
ஜி.ரி.எவ் கூட்டத்தில் மில்லிபாண்ட் - சர்ச்சையினை தீர்க்க பிரித்தானிய குழு கொழும்பில் கொழும்பு நிருபர் புதன்கிழமை, மார்ச் 10, 2010 பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி பீட்டர் ரெக்கட்ஸ் நேற்று தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். உலகத் தமிழ் பேரவை மாநாடு தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தீர்த்து கொள்வதே இவரது விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E…
-
- 4 replies
- 717 views
-
-
தேசியத் தலைவர் வே.பிரபாகரனை பன்நாடுகளில் உள்ள சில அமைப்புக்கள் தேடிவருவதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம இந்திய வெளியுறவுச் செயலரிடம் கவலை வெளியிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் சில அமைப்புக்கள் வே.பிரபாகரன் எங்கு இருக்கிறார் எனக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளன. இந்த சர்ச்சைக்குரிய கருத்தை போகொல்லாகம இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவிடம் தெரிவித்திருப்பதன் உள்நோக்கம் என்ன என்பதே பலத்த சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தேசியத்தலைவர் இறந்ததாகக் கூறும் சிறீலங்கா அரசு அண்மையில் தலைவர் வே.பிரபாகரனின் மரண அத்தாட்சிப் பத்திரத்தை இந்தியாவுக்கு கையளித்ததாகக் கூறியதும் அதை சிதம்பரம் ஒத்துக் கொண்டார். ஆனால்…
-
- 4 replies
- 893 views
-
-
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி - ஊடக அறிக்கை திகதி: 09.03.2010 // தமிழீழம் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி நேற்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதன் முழு வடிவம் கீழே தரப்படுகின்றது. 08.03.2010 த.தே.கூ இனுள் எதேச்சாதிகாரம் கடந்த 28-02-2010 அன்று தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கு முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) வெளியிட்ட பதிலறிக்கை 04-03-2010 அன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சில கருத்துக்களை தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி முன்வைக்க விரும்புகின்றது. திரு.இரா சம்பந்தன், திரு.சுரேஸ்பிறேமச்சந்திரன், திரு.மாவைசேனாத…
-
- 6 replies
- 609 views
-
-
புதன், மார்ச் 10, 2010 08:46 | போர்க் குற்ற விசாரணைகளை நடத்துமாறு இன்னர் சிற்றி பிரஸ் ஊடகமே ஐ.நா.வை வலியுறுத்தியுள்ளது: சிங்கள ஊடகம் இலங்கையில் போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்னர் சிற்றி பிரஸ் நிறுவனம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக இயங்கி வருவதாக ஊடகத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புலிகளின் பணம் பெற்றுக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு, இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் அழுத்தங்களை செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்னர் சிற்றி பிரஸ் என்ற அமெரிக்க அரச சர்hபற்ற நிறுவனத்திற்கு புலி ஆதரவு அமைப்ப…
-
- 0 replies
- 584 views
-
-
லியன்பொஸ்கோ சென்றுவந்த பின்னரே குழு அமைப்பு - பான் கி மூன் கொழும்பு நிருபர் புதன்கிழமை, மார்ச் 10, 2010 ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லியான் பொஸ்கோவின் இலங்கை விஜயத்தின் பின்னர்தான் நிபுணர்கள் குழு அமைக்கப்படவுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லியான் பெஸ்கோ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையானது குழு அமைக்கும் முயற்சியினை பான்கி மூன் இழுத்தடிப்பதாகவே அமைகின்றது. லியான் பெஸ்கோவின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் தகவல்களை திரட்டிவருவதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். லியான் பெஸ்கோவின் இலங்கை விஜயத்திற…
-
- 0 replies
- 498 views
-
-
செவ்வாய், மார்ச் 9, 2010 22:44 | இரண்டு ஊடகவியலாளர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் நேசன் பத்திரிகைகளின் பாதுகாப்புச் செய்தியாளரான ருவான் வீரகோன் மற்றும் சியத்த பத்திரிகையின் ஆசிரியர் பிரசன்ன பொன்சேக்கா ஆகியோரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு வந்து வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் வெகு நீண்டகாலமாக ஜெனரல் சரத் பொன்சேக்காவுடன் நெருக்கமாக செயற்பட்டுள்ளதால் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளனர் என பயங்கரவாத விசாரணைப் பிரிவின் மூத்த அதிகாரியொருவர் கூறியுள்ளார். ருவன் வீரகோன் மாத்திரமல்லாது பிரசன்ன பொன்சேக்காவும் மாவிலாற்றில் …
-
- 0 replies
- 413 views
-
-
மூன்றில் இரண்டு பெரும்பான்மை குறித்து கூறி வருகின்ற அர சாங்கம் தற்போதே அதற்கான மோசடி முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதன் முதற் கட்டமாகவே இம் முறை தேர்தல் வாக்குச் சீட்டுக்கான கடதாசிகளை இந்தியாவிலிருந்து தருவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐக்கிய தேசிய ன் னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் குற்றம் சாட்டினார். ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் எமது உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்ததே அரசாங்கம்தான். இப்படி இருக்கையில் வெறுமனே எமது விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கூறுவதெல்லாம் பம்மாத்து வேலையாகும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடை…
-
- 2 replies
- 819 views
-
-
ATBC செய்தியலைகள் நிகழ்ச்சியில் கனடா படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு.நக்கீரன் அவர்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு உதவுவது தொடர்பாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பு தொடர்பான விபரங்களைப் பகிர்கின்றார். http://www.yarl.com//articles/files/100309_canada_nakeeran.mp3
-
- 1 reply
- 477 views
-
-
Father Paul Natchathiram "வன்னி மக்கள் மனித முகத்தை தொலைத்து, வேடுவர் போல் காட்சி அளிக்கின்றார்கள்" அருட்திரு போல் நட்சத்திரம் அடிகளார் ATBC செய்தி அலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல். - பகுதி 2 http://www.yarl.com//articles/files/100303_Father_Pol_Natchathiram_part_2.mp3 பகுதி 1 http://www.yarl.com//articles/files/100302_father_pol_natchathiram_part1.mp3
-
- 0 replies
- 890 views
-
-
"நிருபமாராவின் இலங்கை விஜயம் தேர்தல் கால பிரசாரம் ஆகத்தான் பார்க்கமுடியும்" ATBC செய்தி அலைகள் நிகழ்ச்சியின் கொழும்பு நிருபர். http://www.yarl.com//articles/files/100309_Colombo_reporter.mp3
-
- 0 replies
- 572 views
-
-
அண்மையில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவ் அவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சந்திப்பு பற்றிய விடயங்கள் http://www.yarl.com//articles/files/100303_suresh_peremachandran.mp3
-
- 0 replies
- 461 views
-
-
ATBC செய்தியலைகள் நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரவை பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் - பகுதி 1 கடந்த 24ம் திகதி நடைபெற்ற மாநாடு தொடர்பாகவும், உலகத் தமிழர் பேரவை பேரவையின் நோக்கங்கள் பற்றிய விடயங்கள் http://www.yarl.com//articles/files/100303_Global_tamil_forum_Suren_surendran_part_1.mp3
-
- 0 replies
- 744 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில், அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான மீள் வாக்களிப்பு தொடர்பான விபரம் http://www.yarl.com//articles/files/100303_vaddu_koddai.mp3
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனைக் குழு நியமிக்கப் போவதாக ஐ.நா. தலைமைச் செயலர் வலியுறுத்தல் ஐ.நா. தலைமைச் செயலர் இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனைகளை கூறுவதற்காக நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இதனை தான் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களின் நடமாட்டம் மற்றும் அவர்களது நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காணுவது, ஒரு அரசியல் நல்லிணக்கத்தை காணுவது மற்றும் நடந்த நிகழ்வுகளுக்கான பொறுப்புக்கூ…
-
- 0 replies
- 498 views
-
-
சிறிலங்காவிற்கு எதிராக பன்னாட்டு குற்றத் தீர்ப்பாயம்: பேராசிரியர் பாய்ல் கோரிக்கை செவ்வாய், 9 மார்ச் 2010( 16:40 IST ) FILE இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கப் படையினர் இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க மனித உரிமை நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்க ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் எடுத்துள்ள முடிவை வரவேற்றுள்ள பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல், சிறிலங்காவிற்கு எதிராக பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயம் அமைக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். “இலங்கையில் நடந்ததை விட பெரிய அளவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு நிபுணர்கள் குழுவை அமைக்காத ஐ.நா. பொதுச் செயலர் பான் கி ம…
-
- 0 replies
- 338 views
-
-
பொன்சேகாவை விசாரிக்கும் இராணுவ நீதிமன்றினை மஹிந்த அமைப்பார்! வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010 mahinda class பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நீதிமன்ற குழுவை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி நியமிப்பார் அல்லது அவரது ஆலோசனையின் பிரகாரம் இராணுவ தளபதி நியமிப்பார் என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் முப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் ஐந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் 22 பேர், ஆறு பொலிஸார் மற்றும…
-
- 0 replies
- 328 views
-
-
. மஹிந்த தந்த வாக்குறுதியில் முன்னேற்றமில்லை - பான் கி மூன் கடந்த ஆண்டு போர் முடிந்த கையோடு இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கூறிய வாக்குறுதிகளை மட்டும் ஏற்றுக்கொண்டு எதுவும் பேசாமல் திரும்பியிருந்தது தெரிந்ததே. இப்போது அந்த வாக்குறுதிகள் கொடுத்து ஒரு ஆண்டு ஆகும் நிலையில், தமக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முன்னேற்றம் ஏதுமில்லை என பான் கி மூன் விசனம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை குறித்து தாம் ஜனாதிபதி மஹிந்தவுடன் பேசியுள்ளதாகவும், தாம் அமைக்கவுள்ள வல்லுநர் குழுவானது இவ்விடயங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்கவுள்ளதை மஹிந்தவுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பான் கி மூன் தெரிவித்துள்ளார். அரசியல…
-
- 2 replies
- 508 views
-
-
பிள்ளையானுக்கு இந்தியா அழைப்பு வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010 Pillaiyaan இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் நேற்று பிள்ளையானை கொழும்பில் வைத்துச் சந்தித்தார்.இதன் போதே இவ் அழைப்பை அவர் விடுத்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார். இச்சந்திப்புத் தொடர்பில் அவர் எமக்கு மேலும் தெரிவிக்கையில், "இந்திய வெளிவகார செயலாளர் நிருபமா ராவ் என்னைச் சந்திக்க வேண்டுமென கோரியிருந்தார்.இதனையடுத்து அவரை நான் இன்று சந்தித்தேன். இதன் போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, பிரச்சினைகள், நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் விதவைகளுக்கான உதவிகள் தொடர்பாகவும் கலந்…
-
- 0 replies
- 407 views
-
-
தமிழீழக் கோரிக்கை தோல்வியடைந்தால் இந்தியாவின் பூகோள அரசியல் ஓர் துக்க சாகரமாக மாறலாம் நாராயணன் ‘டில்லி மூவர் அணி’ புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் கயல்விழி சிங்கள சிறிலங்கா நடத்திய, தமிழினப் படுகொலையையும், தமிழரின் போராட்டத்திற்கு எதிரான போருக்கும் முற்று முழுவதுமாக டில்லியின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்த நாரணயனின் “டில்லி மூவர் அணி”, டில்லிக்கு சீனாவையே காரணம் காண்பித்தனர். ஆனால், இந்தியாவிற்கெதிரான தன்னுடைய யுத்த தந்திரத் திட்டத்தில் இந்தியாவைச் சுற்றி வளைக்க வெளிப்படையாக முயற்சிகளை மேற்கொண்டதும் மட்டுமன்றிப் பகிங்கரமாக அறிவிக்கவும் செய்த சீனாவின் பக்கம் செல்லும் இலங்கையை, தன்பக்கம் இழுக்கும் டெல்லியின் முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போனது மனவருத்தத்திற்கு…
-
- 5 replies
- 1.4k views
-
-
திங்கட்கிழமை, 8, மார்ச் 2010 (21:1 IST) யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க விரும்பும் இந்தியா இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கை சென்றார். அங்கே அவர் அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலக செய்தி தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ், ’’இலங்கையில் தற்போது கொழும்பு நகரில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. மேலும் கண்டியில் ஒரு துணைத் தூதரகமும் உள்ளது. வடக்கு பகுதியில் நடைபெற்று வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதால் யாழ்ப்பாணத்தில் துணைத்தூதரகம் அமைப்பதற்கு இந்தியா விரும்புவதாக அதிபர் ராஜபக்சேவிடம் நிருபமா கூறினார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் புனரமைப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உத…
-
- 3 replies
- 755 views
-
-
வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு அதிகாரத்தைப் பகிர்வது குறித்து ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் நேற்று இலங்கை வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும் இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களின் ஒப்பந்தங்களை இந்தியாவிற்கு பெற்றுக்கொள்வதே இந்த விஜயத்தின் அடிப்படை நோக்கமென வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். இதுகுறித்து மிகவும் தெளிவாக இருந்த ஜனாதிபதி, தமிழர்களுக்கான அதிகாரத்தைப் பகிர்வு யோசனை குறித்த கலந்துரையாடலை சில வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டு சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளதைப் போன்றே இந்தியாவிற்கும் இலங்கையில் பல ஒப்பந்தங்களை வழங்குவதாகக் கூறி, அதுதொடர்பான பேச்சுவார்த்தைக்கு அதிக முக்கியத்தும் வ…
-
- 4 replies
- 715 views
-
-
மேற்குலக நாடுகள் எம்மீது என்ன தான் அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அவற்றை எதிர்கொள்வதற்கான சக்தி எம்மிடம் இருக்கிறது. குறிப்பாக தமிழக முதல்வரும் இந்திய அரசும் எமது நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவு வழங்கி வருகின்றனர். ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்தும் தமிழகத்திலிருந்துமே எமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. அந்த நிலைமையை எவ்வாறு மாற்றி அமைத்தோமோ அதே போல மேற்குலக அழுத்தங்களையும் நாம் சமாளிப்போம் என சுற்றாடல் வளத்துறை அமைச்சரும் இனவாத ஹெல உறுமயவின் முக்கியஸ்தருமான சம்பிக ரணவக தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மாகவலி கேந்திர நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட…
-
- 6 replies
- 1.1k views
-
-
http://www.dailymirror.lk/index.php/news/2229-ltte-proxies-searching-for-prabha.html The government is concerned that some umbrella organizations of the LTTE are still trying to trace their leader LTTE Chief Velupillai Prabhakaran and the matter has been discussed with India, the government said. Foreign Minister Rohitha Bogollagama conveyed these concerns at a meeting held with Indian Foreign Secretary Nirupama Rao today. Minister Bogollagama also informed Rao that Sri Lanka would continue to be vigilant and engage in countering measures against terrorism to protect the territorial integrity and sovereignty of the country. “We discussed terrorism and…
-
- 1 reply
- 1.4k views
-
-
-------------------------------------------------------------------------------------------------------------- காலத்தின் தேவை - இரா.சிவச்சந்திரன் பல்கலைக்கழக சமூகத்தினர் வெளியிட்ட அறிக்கையை தரவிறக்க.... Download PDF
-
- 9 replies
- 1.2k views
-