ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
உடம்பில் எந்த இடத்தில் கல்லடி பட்டாலும் வழமைபோல ஒரு காலை தூக்கிக் கொண்டு ஓடும் நாயைப்போல, தமக்கு தோல்வி என்று தெரிந்தவுடன் எதற்கெடுத்தாலும் இனவாதத்தைத் தூக்கிப்பிடிக்கும் அரசாங்கம், அதன் மூலம் சிங்கள மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அவர்களது வாக்குகளை தம்வசப்படுத்திக் கொள்ளலாம் என்ற வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து திங்கட்கிழமை இரவு நிந்தவூரிலும் பாலமுனையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
தங்களை அகதிகளாக அங்கீகரிக்கக் கோரி மேரக் கப்பலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 250க்கும் மேற்பட்ட தமிழர்கள். கடும் நோய்களால் சிறார்களும், பெண்களும் பாதிக்கப்பட்டு, மாபெரும் அவலத்தில் தவிக்கும் நிலையில் உலக சமுதாயம் ஒட்டுமொத்தமாக மெளனித்துக் கிடப்பதை உலகத் தமிழர்கள் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் இனியும் வாழ முடியாது என்று முடிவெடுத்து சிறிய கப்பலில் ஆஸ்திரேலியா நோக்கி பயணித்த அந்தத் தமிழர்களை, ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டின் உத்தரவுக்கிணங்க இந்தோனேசிய கடற்படையினர் கடந்த 11-10-2009 அன்று நடுக் கடலில் மடக்கி, மேரக் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர். அன்று முதல் இன்று வரை அந்த அப்பாவித் தமிழர்கள் கப்பலிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களி…
-
- 0 replies
- 355 views
-
-
கிளிநொச்சி நகரம் தற்போது இராணுவ முகாம்களினால் நிரம்பிய நகரமாகவே காட்சி தருகிறது அங்கு மக்களை காணமுடியவில்லை. சில நூறுமீற்றர் தூரங்களுக்கு ஒரு முகாம் என கிளிநொச்சி இராணுவத்தினரால் நிரம்பியுள்ளது. படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும் அங்கு அதிகம் என த அசோசியட் பிரஸ் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் முழு வடிவம் வருமாறு, கிளிநொச்சியில் பெருமளவான நெல்வயல்கள் களைகள் மூடி கிடக்கின்றன. ஆடுகளும் மாடுகளும் காணாமல் போயுள்ளன. உழவு இயந்திரங்களையும் மோட்டார் சைக்கிள்களையும் அங்கு காணமுடியவில்லை. கட்டிடங்களும் வீடுகளும் குண்டுவீச்சுக்களால் நிர்மூலமாகி கற்குவியல்களாக கிடக்கின்றன. போர் நிறைவுபெற்று 8 மாதங்கள் கடந்த நிலையில் முன்னர் விடுதலைப் புலிகளின்…
-
- 0 replies
- 530 views
-
-
அரசியல் தீர்வை உடனடியாக வெளியிடுங்கள்: முதன்மை வேட்பாளர் இருவரிடமும் இலங்கையின் உயர் கல்விமான்கள் வேண்டுகோள் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு முதன்மை வேட்பாளர்களும் காலம் தாழ்த்தாமல் அரசியல் தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் உயர் கல்விமான்கள் கூட்டாக வேண்டியுள்ளனர். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே கல்விமான்கள் குழுவான ‘வெள்ளிக்கிழமை மன்றம்’ இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்தக் கடிதத்தில், அக்கறை கொண்ட குடிமக்கள் குழுவின் சார்பில் ஜயந்த தனபால கைச்சாத்திட்டுள்ளார். மேலும் - வண.பெலன…
-
- 1 reply
- 519 views
-
-
கொழும்பை நோக்கி இராணுவ டாக்கிகள் - நாசகார வேலைகளுக்கு திட்டம்: பொன்சேகா கடந்த திங்கட்கிழமை சிறீலங்கா அரசு ஓரு தொகுதி இராணுவ டாங்கிகளை கொழும்புக்கு நகர்த்தியுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா அரசு 20 இராணுவ டாங்கிகளை கொழும்புக்கு நகர்த்தியுள்ளது. எதற்காக இராணுவ டாங்கிகளை இராணுவம் கொழும்புக்கு கொண்டுவந்துள்ளது என்பது தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் நாள் தேர்தல் முடிவடைந்ததும், கொழும்பில் நாசகார வேலைகளை மேற்கொள்ள அரசு திட்டமிடுவதையே இது உணர்த்துகின்றது. நான் இராணுவத்தளபதியாக இருந்த …
-
- 0 replies
- 1.2k views
-
-
நன்றி மறந்தவராக ஜெனரல் பொன்சேகா செயற்பட்டு வருகிறார் : ஜனாதிபதி "எனக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவை நானே முன்னேற்றினேன் ஆனால் அவர் தற்பொழுது நன்றி மறந்தவராக செயல்பட்டு வருகின்றார். மலையக மக்களின் மறுமலர்ச்சிக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். அரச ஊழியர்களைப் போன்று தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராகலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் சி.வி. ரட்ணாயக்க தலைமையில் நடைபெற்ற …
-
- 0 replies
- 809 views
-
-
முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஒரு சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா? பேராசிரியர் தீரன் -இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டள்ளார். கடந்த வருடம் தமிழினத்திற்கெதிராக இலங்கை, இந்தியா மற்றும் பல உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தொடுத்த முள்ளிவாய்க்கால் போரில் எற்பட்ட மனித அவலங்களாலும் அதன் தாக்கத்தாலும் ஏற்பட்ட அதிர்ச்சி, சோகம், மனத்…
-
- 2 replies
- 857 views
-
-
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழல் அற்றுப்போயுள்ளது . பதவியில் நீடித்திருப்பதில் பயனில்லை என்கிறார் ஆணையாளர் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலாக நடத்துவதற்கு ஏற்ற சூழல் அற்றுப்போயுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்ததும் தொடர்ந்தும் இப்பதவியில் நீடித்திருப்பதற்கு விரும்பவில்லை. எனவே, எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை ஒப்படைத்துவிடுவதற்கும் அதன் பிறகு தேர்தல்கள் செயலகத்துக்கு சமூகமளிப்பதை தவிர்த்துக்கொள்வதற்கும் தீர்மானித்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அரச ஊடகங்களை கண்காணிப்பதற்கென நியமிக்கப்பட்டிருந்த சுயாதீன அதிகாரியையும் அவரது பதவ…
-
- 1 reply
- 394 views
-
-
சிறீலங்காவில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் பான் கீ மூன் கவலை! சிறீலங்காவில் எதிர்வரும் 26 ம் திகதி இடம்பெறவுள்ள ஐனாதிபதி தேர்தலை அடுத்து பெருமளவு வன்முறை சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளன. இதனையடுத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அனைத்து கட்சிகளையும் அவர்களது ஆதரவாளரடகளையும் தேர்தல் சட்ட விதி முறைகளை பேணி அதனை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொண்டள்ளார். இதேவேளை இத்தேர்தல் வன்முறைகள் குறித்து அறிக்கைவிட்டிருக்கும் இவர் பல்லாயிரக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்களை சிறீலங்கா அரசாங்கம் யுத்தத்தின்போது கொன்று குவித்தபோதும் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளை…
-
- 4 replies
- 618 views
-
-
எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தல் ஆச்சரியமான முடிவுகளை தரும் - யப்பான் ரைம்ஸ் எதிர்வரும் ஐனாபதித் தேர்தல் ஆச்சரியமான முடிவுகளை வெளிப்படுத்தவுள்ளது என யப்பானில் இருந்து வெளிவரும் யாப்பான் ரைம் கூறியுள்ளது. ஐனாதியாக உள்ள ராஜபக்சவின் வெற்றி என்பது விளிம்பில் உள்ளது எனவும், சிதைவடைந்த ஐக்கிய தேசியக் கட்சியும், மிதவாத தமிழ்க் கட்சிகளும் பொன்சேகாவுக்கு ஆதரவாக இருப்பதால் எதிர்வரும் ஐனாபதித் தேர்தல் ஆச்சரியமான முடிகளைத் தரும் என அதில் குறிப்பிட்டுள்ளது. தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் நாட்டின் சமாதானத்தையும், நாட்டின் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டுமென்றால் உண்மையாக போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்பதுடன் அ…
-
- 2 replies
- 982 views
-
-
மகிந்த ராஜபக்ச குடும்பம் தப்பியோட பிரத்தியேக விமானம் தயார் சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குடும்பம் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு பிரத்தியேக விமானம் ஒன்று தயார்படுத்தப்படுகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன. தோல்வி குறித்து உணர ஆரம்பித்துள்ள ராஜபக்சா குடும்ப உறுப்பினர்கள் அவசரமான நிலை ஏற்பட்டால் எதிர்வரும் 27ம் திகதி முற்பகல் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக சிறீலங்கன் விமானமொன்றை முன்பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் கொழும்பிலிருந்து தெரிவிக்கின்றன. டாக்காவில் நடைபெறும் சார்க் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிடச் செல்வதாகக் கூறி சிறீலங்கன் விமானம் ஒன்றை தனிப்பட்ட ரீதியாக ஒதுக்கும் முயற்சிகளை சிறீலங்கன் வி…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறீலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குக: பன்னாட்டு மன்னிப்புச்சபை சிறீலங்காவில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு பன்னாட்டு மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. சிறீலங்காவில் அரச தலைவலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் மனிதஉரிமை மீறல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பத்து கோரிக்கைகள் உள்ளடங்கிய திட்டம்ஒன்றினை பன்னாட்டு மனித உரிமைககள் அமைப்பு முன்வைத்துள்ளது. சிறீலங்காவில் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் பிடியில் இருந்து விலக்களிக்கப்படுபவர்களுக்கு முடிவு கட்டப்படவேண்டும், மனித உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க…
-
- 0 replies
- 504 views
-
-
எதிர்வரும் அதிபர் தேர்தல் 27ம் திகதி சம்பந்தன் மற்றும் பொன்சேகாவுக்கிடையிலான ஒப்பந்தம் கிழித்தெறியப்படும் எதிர்வரும் அதிபர் தேர்தல் 27ம் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் சம்பந்தன் மற்றும் பொன்சேகாவுக்கிடையிலான ஒப்பந்தம் கிழித்தெறியப்படும் என சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராசபக்ச தெரிவித்துள்ளார். கண்டி செங்கடகல பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.அதேபோல எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மனோ கணேசன் மற்றும் ரவூவ் கக்கீம் ஆகியோரின் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்படும் என அவர் தெரிவித்தார். கடந்த அதிபர் தேர்தல் யாழ். மக்கள் தனக்கே வாக்களிக்க இருந்ததாகவும் அதனை விடுதலைப் புலிகள் தடுத்ததாக…
-
- 1 reply
- 571 views
-
-
நளினியை விடுதலை செய்யலாம்: ஆலோசனைக்குழு பரிந்துரை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான நளினி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் இவருக்கு முதலில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. சோனியாகாந்திக்கு இவர் எழுதிய மனுவின் காரணமாக சோனியா பரிந்துரையின் பேரில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை நன்னடத்தையின் பேரில் தலைவர்களின் பிறந்தநாளி விடுதலை செய்து வருகிறது அரசு. அந்த வகையில் 10 ஆண்டுகளூக்கும் மேல் சிறையில் இருந்துவரும் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி கோரி வருகிறார். இது தொடர்பாக அவர் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இரண்டு ம…
-
- 0 replies
- 651 views
-
-
தேர்தல் முடிபடைந்ததும் பதவி விலக ஆணையாளர் முடிபு ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி நிறைவடைந்ததும் பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அரசியல் கட்சிகளிடம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவ தாவது, தேர்தல் ஆணையாளர் பதவியிலிருந்து தான் ஒதுங்கப்போவதாகவும் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள தேர்தலை தொடர்ந்து தான் பதவி விலக தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த போது தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் பரிந்துரை செய்யப்பட்ட எந்த நடைமுறைகளையும் அரசியல் கட்சிகள் பின்பற்றவில்லை. அரச ஊடகங்களைக் கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்ட குழுவையும் தான் மீளப்பெற்றுக் கொள்ளத் திட…
-
- 0 replies
- 488 views
-
-
வன்னியில் இருந்து புலம்பெயர்ந்து வல்வை வந்துள்ளோர் விபரப்பட்டியல்.. 1133 அங்கத்தவர்கள் கொண்ட 396 குடும்பங்களின் விபரத்தை வல்வை ஒன்றியம் – வல்வெட்டித்துறை வெளியீடு செய்துள்ளது.. அடுத்து என்ன செய்யப் போகிறோம்… புலம் பெயர் சமூக ஆர்வலரின் முன் பாரிய கேள்வி… வன்னியில் இருந்து வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வல்வெட்டித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ள 396 குடும்பங்களின் விபரப்பட்டியலை இன்று வல்வை ஒன்றியம் – வல்வெட்டித்துறை வெளியீடு செய்துள்ளது. வல்வெட்டித்துறையின் சகல பகுதிகளிலும் இவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு அரசால் வழங்கப்படும் 5000 ரூபா மாதாந்த உதவி கூட கிடைப்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குடும்பங்கள் பற்றிய விபரம் அப்பகுதி …
-
- 0 replies
- 624 views
-
-
ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தொடர் மூடுவிழா; ஆனால், ஆடை தயாரிப்பு துறையே சிறிலங்காவை உயர்த்தும் என்கிறது அரசு சிறிலங்காவின் சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் கடந்த வெள்ளிக் கிழமை வெண்ணிற உடை அணிந்து பணிக்கு வந்தனர். சம்பளக் குறைப்பு மற்றும் பணயாளர்கள் முறையற்ற விதத்தில் நடத்தப்படுவது என்பவற்றுக்குத் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதேசமயம், நாட்டின் ஆடைத் துறை தொழிலாளர்களின் நிலைமை தொடர்பாக அவர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவைச் சந்தித்துக் கலந்துரையாட உள்ளார்கள் என்றும் அறிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் ஆடைத் தொழிற் துறையில் சும…
-
- 0 replies
- 366 views
-
-
தீவுப் பகுதியிலிருந்து தென்பகுதிக்கு மாடுகள் கடத்தப்படுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இரவு வேளைகளில் தீவுப் பகுதிக்குள் நுழையும் தென்பகுதி லொறிகள் அப்பகுதியில் உள்ளவர்களின் உதவியுடன் மாடுகளை ஏற்றிக் கொண்டு செல்ல முயற்சிப்பதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இவ்வாறான சம்பவம் ஒன்று நேற்று முனதினம் இரவு மண்டைதீவுப் பகுதியில் முறியடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு 9மணியளவில் வவுனியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட லொறி ஒன்றில் 20ற்கும் மேற்பட்ட மாடுகள் ஏற்றப்பட்டு வவுனியாவுக்குக் கடத்தப்பட இருந்தது.இத் தகவலினை அறிந்த அவ் ஊர் மக்கள் கிராம அலுவலர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடத்தல் சம்பவம் தொடர்பாக முறையிட்டுள்ளனர்.இச்சம்பவத்…
-
- 1 reply
- 699 views
-
-
லண்டனில் ராஜபக்சே மகன் போதையில் குத்தாட்டம்! லண்டன்: மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே லண்டன் சென்று அங்கு இலங்கைத் தூதரகம் சார்பில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டு தூதரகப் பெண்மணியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார். மேலும், மெட்ரோ ரயில் நிலையப் பகுதியிலும் அவர் குடிபோதையில் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டதாம். சில தினங்களுக்கு முன்னர் நமல் ராஜபக்சே லண்டன் சென்றிருந்தார். இளைஞர்களுக்கான அமைப்பு ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் திடீரென லண்டன் சென்றதை ஒட்டி பெரும் சந்தேகங்கள் எழுந்தன. ஏற்கனவே கோத்தபயாவின் மனைவி பெரும் பணத்துடன் வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாக இலங்கையில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் நமலின் லண்டன் பயணத்தின்போதும் பல முக்கிய விவ…
-
- 13 replies
- 2.1k views
-
-
நாட்டைக்காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினால் யாழ் பல்கலைக்கலைக்கழக விரிவுரையாளர்கள் நான்கு பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் நேற்றய தினம் இரவு பல்கலைக்கழக ஆண்மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் வீசப்பட்டிருந்ததாக பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த நால்வரும் கடந்த காலங்களில் பொங்குதழமிழ் நிகழ்வுகளில் முன்னின்று செயற்பட்டவர்கள் என்றும் கடந்த இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிச் சென்றிருந்த இவர்கள் மீண்டு;ம் யாழ்பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர் என்றும். இவர்கள் கடந்தகாலங்களை போன்று தமது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என்றும். அவர்களது செயற்பாடுகள் தொடர்நதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
-
- 0 replies
- 580 views
-
-
கிளிநொச்சி: கிளிநொச்சியின் நெல்வயல்கள் புதர் மண்டி க்கிடக்கின்றன. மாடுகள், ஆடுகளைக் காணவில்லை. உழவு இயந்திரங்கள், மோட்டார் சைக்கிள்களும் மாயமாகிவிட்டன. கட்டிடங்கள், வீடுகள் இடிந்து கற்குவியல்களே காணப்படுகின்றன.முன்னாள் தமிழ்ப் புலிகளின் பலம் வாய்ந்த கோட்டையாக இருந்த கிளிநொச்சிக்கு புலிகளைப் படையினர் அழித்த 8 மாதங்களுக்குப் பின்னர் திரும்பிச் சென்றுள்ள யுத்த அகதிகளுக்கு அவர்கள் விட்டுச் சென்ற பழைய வாழ்க்கை இல்லாத நிலைமையை கண்டுகொள்ள முடிந்தது. திரும்பி வந்தது சந்தோசம். ஆனால் அடுத்து என்ன செய்வது என்பதே குழப்பமாகவுள்ளது என்று சுப்பிரமணியம் முத்துராசு (66 வயது) என்பவர் ஏ.பி. செய்திச்சேவைக்குக் கூறியுள்ளார். விவசாயத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. ஆனால் எம்மிடம் எந்த வள…
-
- 3 replies
- 1.9k views
-
-
PDF கோப்பு
-
- 2 replies
- 957 views
-
-
புங்குடுதீவு பிரதான வீதி சேதமடைந்துள்ளதால் அப்பாதையூடாக வாகனப் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அண்மையில் பெய்த கடும் மழையினையடுத்து புங்குடுதீவு பெருங்காட்டிலிருந்து குறிகாட்டுவான் வரையான பிரதான வீதி சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றது. இதனால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை காணப்படுவதாக சாரதிகள் தெரிவித்தனர்.நயினாதீவு,நெடுந்தீவு ஆகிய இடங்களுக்குச் செல்வோர் குறிகாட்டுவானுக்கு இப்பிரதான வீதியூடாகவே செல்லமுடியும் என்பதுடன் தற்போது தென்னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் பெரு மளவான வாகனங்கள் குறிகாட்டுவானுக்குப் பயணிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வீதியை உடனடியாகத் திருத்தாவிடின் அப்பாதையூடான போக்கு…
-
- 0 replies
- 792 views
-
-
யாழ். குடாநாடெங்கும் தீவிரமடைந்துவரும் டெங்கு நோயினால் நேற்று மாலை வரை 18 பேர் மரணடைந் துள்ளனர். அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு, கே. சகானா (7 மாதம்) இராச வீதி கல்வியன்காடு, நல்லூர், எஸ். பெரினியல் (வயது - 4) கோண்டாவில் கிழக்கு, ஆர். நிஷாமி (வயது - 8) கோவில் வீதித யாழ்ப்பாணம்,எ. கஸ்தூரி (வயது - 11) ஜமுனா வீதி,கல்வியங்காடு, நல்லூர், கே. சங்கீர்த்தனா (வயது - 13) கன்னாதிட்டி வீதி, யாழ்ப்பாணம், எம். கிருபாந்தி (வயது-40) கண்டி வீதி, அரியாலைத சுலோசனா (வயது -41) கச்சேரி நல்லூர் வீதி, சுண்டுக்குளி, வி. கோபிராஜ் (வயது - 7) சுதுமலைத மானிப்பாய், எ. தர்சன் (வயது - 16) அரசடி நவாலி தெற்கு, எஸ். ஞானசீலி (வயது - 25) விநாயர் வீதி, அரசடி கட்டுடை, ஆர். சந்தியா (வயது - 4) சாவற்கா…
-
- 0 replies
- 539 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு பின்னடிப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், தங்கேஸ்வரி, சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் கனகரத்தினம் ஆகியோர் முன்வந்தனர்.இவர்களைக் கொண்டு தமிழ்ப் பிரதேசங்களில் தனக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபடுத்த ஜனாதிபதி மகிந்த எண்ணியிருந்தார். இந் நிலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்பாத சிவநாதன் கிஷோர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.சந்திரநேரு சந்திரகாந்தன் தன்னைத் தானே சுட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகி…
-
- 0 replies
- 565 views
-