ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்! தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 9-வது உலகத் தமிழ் மாநாடு எதிர்வரும் ஜனவரி 21 முதல் 24 வரை கோவையில் நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். முதலாவது ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ 1966 ஏப்ரல் மாதத்தில் ஈழத்துத் தமிழரான வணக்கத்திற்குரிய தனிநாயகம் அடிகளாரால் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968-ம் வருடத்தில் அன்றைய தமிழக முதல்வரான அண்ணா அவர்களால் நடாத்தப்பட்டது. மூன்றாவது ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970-ம் ஆணடு பாரிஸ் நகரில் நடாத்தப்பட்டது. அதன் பின்னர் 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி ஈழத் தமிழினத்தின் மாநாட…
-
- 25 replies
- 2.3k views
-
-
சிறிலங்காப் படையினரால் கட்டுப்படுத்தப்படும் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போரால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்தும்மாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 416 views
-
-
சிறிலங்காப் படையினரால் கட்டுப்படுத்தப்படும் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போரால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்தும்படி சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என உலக நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 426 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முற்றி மோதல்கள் ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு பிரச்சினைகள் நடைபெற்றுள்ளன என்பதை கொழும்பில் உள்ள காவல்துறைப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 346 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முற்றி மோதல்கள் ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு பிரச்சினைகள் நடைபெற்றுள்ளன என்பதை கொழும்பில் உள்ள காவல்துறைப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 526 views
-
-
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எம்.எம்.கிருஷ்ணா மற்றும் சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம ஆகியோர் நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
அடுத்த ஆண்டுக்கான நிதித் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்குப் பதிலாக நாட்டின் கணக்கு அறிக்கையை வாக்கெடுப்புக்கு விட சிறிலங்கா அரசு முயற்சிப்பதாக வெளியான செய்திகளை மறுத்திருக்கும் அரசு, எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் நாள் நிதித் திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 447 views
-
-
அயர்லாந்தில் நடைபெறவுள்ள உலக படைத்துறையினரின் விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்கான விசாவிற்கு விண்ணப்பித்திருந்த சிறிலங்கா அணிக்கு இந்தியாவில் உள்ள அயர்லாந்து தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசா மறுப்புக்கு அயர்லாந்து தூதரகம் பல காரணங்களை தெரிவித்துள்ளது. ஐந்து ஈருருளி அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் ஜந்து பேர் அடங்கிய 13 குழுவிற்கு இந்தியாவில் உள்ள அயர்லாந்து தூதரகத்தின் ஊடாக விசாவிற்கு விண்ணப்பித்தபோதும் அவர்கள் விசா வழங்க மறுத்துள்ளதுடன் கடந்த காலங்களில் சிறிலங்காவின் படை அணி வெளிநாடுகளில் போட்டிகளில் கலந்துகொள்ளாத அணி என்றும் விசா வழங்குவதற்கான விண்ணப்பங்கள் காலம் தாழ்த்தியே கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து விசா வழங்…
-
- 0 replies
- 707 views
-
-
இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேசம் சதி செய்தால் அதை ஐ.நாவில் சொல்ல ஏன் தயங்குகிறார் மஹிந்த – லக்ஷ்மன் கிரியெல்ல இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேசம் சதி செய்கிறது என்று கூறுகின்ற ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, அதனை ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று அம்பலப் படுத்த ஏன் தயங்குகிறார்? இந்தக் குற்றச் சாட்டுகளை அவர் அலரி மாளிகையில் இருந்தபடி புலம்புவதில் என்ன பலன் கிட்டப்போகிறது?இப்படிக் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல. யுத்தத்திற்குப் பின்னர் ஜனாதிபதி தன்னை சர்வதேச சண்டியராகக் காட்ட முயல்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: யுத…
-
- 0 replies
- 702 views
-
-
வன்னி முகாம்களில் நாளாந்தம் 30-40 பேர் கைதாகின்றனர் அல்லது கடத்தப்படுகின்றனர் – மங்கள சமரவீர வவுனியா அகதி முகாம்களில் 20 ஆயிரம் புலிகள் உள்ளனர் என கூறிக்கொண்டு நாளாந்தம் 30 – 40 பேர் காணாமல் போகின்றனர், கைது செய்யப்படுகின்றனர் அல்லது கடத்தப்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வேளை இதனைத் தெரிவித்த அவர், இது தொடர்பாக அங்கு மேலும் கூறியவை வருமாறு: 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆயிரம் புலிகளே இருக்கின்றனர் என்று அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சொன்னார். பின்னர் அந்த வருடம் செப்டெம்பரில் 16 ஆயிரம் புலி கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்றும் மேலும் 4 ஆயி…
-
- 0 replies
- 571 views
-
-
தமிழர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் உட்பட பல நாட்டவர்களின் போராட்டங்களுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் 64 ஆவது பொதுக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. பல நாடுகளின் தலைவர்களும் இதற்காக நியூயோர்க்கில் கூடுகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக சதி இடம்பெறுவதாக அரச தலைவரும் அரசும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இந்த அனைத்துலக சதியை முறியடிக்க வேண்டுமானால் உள்நாட்டிலிருந்து கொண்டு பேசுவதால் பயனில்லை. இது தொடர்பாக ஐ.நா. சபையிலேயே பேச வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்காவின் நிலைப்பாட்டை ஐ.நா. சென்று அரச தலைவர் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அனைத்துலக சமூகத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக பாரதூ…
-
- 0 replies
- 510 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்நின்று நடத்தியவர்களைப் போல சிறிலங்காவின் வெளிநாட்டு உறவுகளைக் கையாள்பவர்களும் தகுதியானவர்களாக இருக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் தயான் ஜயதிலக்க தெரிவித்தார். தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை அந்தப் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்பதையே இவ்வாறு மறைமுகமான வார்த்தைகளில் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டிருக்கின்றார் என இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. கொழும்பிலிருந்து வெளிவரும் 'டெய்லி மிரர்' நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், "எமது படைத்துறை வெற்றியைப் பலப்படுத்துவதற்குத் தேவையாகவுள்ள வெளிநாட்டுப் போரை நடத்தக்கூடிய தகுதியைக் கொண்டுள்ளவர்கள் எம்மிட…
-
- 0 replies
- 575 views
-
-
Thirteen prospective competitors from Sri Lanka for the cycling event at the World Military Games 2009 in Ireland have been refused visas by the Ireland embassy in India. Ireland had cited a number of reasons for not processing the applications of the Sri Lankan team. According to reports received by the Defense Forces Cycling Committee, a cycling team consisting of thirteen members, including 8 players and 5 officers from Sri Lanka had sent in their applications to the Ireland embassy in India for processing, to be sent for the World Military Games to be held in Ireland this year. The visa applications however had been refused by the Ireland embassy, which had …
-
- 1 reply
- 905 views
-
-
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் [^], தகவல்-தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா, கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், மற்றும் டி.ஆர்.பாலு, கனிமொழி, பழனிமாணிக்கம், டி.கே.எஸ்.இளங்கோவன், சுகவனம், வசந்தி ஸ்டாலின், ஹெலன் டேவிட் உள்ளிட்ட திமுக எம்பிக்களும், ஜெயந்தி நடராஜன், சித்தன், மாணிக்தாகூர், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி உள்ளி்ட்ட காங்கிரஸ் எம்பி்க்களும், விடுதலைச் சிறுத்தை எம்பியான திருமாவளவன் ஆகியோர் காலை 10.15 மணி முதல் 10.45 மணி வரை பிரதமரை சந்தித்துப் பேசினர். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் உடனிருந்தார். ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த …
-
- 0 replies
- 599 views
-
-
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை அமெரிக்க காங்கிரஸில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான அறிக்கையை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான விசேட பிரதிநிதி ஸ்டீவன் ரெப் சமர்ப்பித்துள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் ஊடகப் பேச்சாளர் இயன் கெலி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக அமெரிக்க க…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்கள் மீதான அவலங்கள் நீடித்தால் இலங்கையில் தொழில் முதலீடு செய்யமாட்டோம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்'' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலக தமிழர்களின் ஓர் அங்கமான ஈழத் தமிழர்களின் அவலங்கள் அங்கே போர் முடிந்ததற்கு பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கள பேரினவாத அரசு நடத்திய இனஅழிப்பு போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று ஒழிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக முள் கம்பி வேலிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சிறுக சிறுக கொல்லப்பட்டு வருகிறார்கள். அங்கிருந்து சிறை முகாம்களுக்கு மாற்றப்பட்டவர்களும் சித்ரவதை …
-
- 0 replies
- 961 views
-
-
இராணுவ வலிமையில்லாமல் எதையும் சாதிக்க இயலாது. இராணுவ வலிமையினால் மட்டுமே எத்தகையஎதிரிகளையும் ஒழித்துக் கட்டிவிடலாம் என்றும் அரசு இயல் அறிந்தோர் நம்புவதில்லை. பேச்சுவார்த்தைகளில் இழுக்கடித்து வெற்றி வெறுவது என்ற ஒரு வகையான அரசியல் தந்திரமும் உண்டு. இராணுவ வலிமையால் வெல்ல முடியாத நிலையில் இதைப் பயன் படுத்துவார்கள்; அதிக இழப்பு இல்லாமல் வெற்றி பெற வேண்டியும் இதைப் பயன் படுத்துவார்கள்; களத்தில் நேரடியாக மோதிக்கொள்ளாத ஆதிக்க வல்லரசுகளாலும் இந்த அரசியல் தந்திரம் கையாளப்படும். அவர்களின் எதிர்கால நன்மைக்கான சூதாட்டமாக இது அமையும். அவ்வாறு பேச்சுவார்த்தைகளில் இழுக்கடித்து, விடுதலைப் போராட்ட இயக்கங்களை வீழ்த்திய நிகழ்ச்சி, அண்மைக் கால வரலாற்றில் இரண்டு முறை நடந்துள்ளது. யாச…
-
- 0 replies
- 1.1k views
-
-
போர் முடிவடைந்து விட்டது, விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். விடுதலைப்புலிகளும், அவர்களுடன் இடம்பெறும் போரும் தான் தமிழீழத்தையும் சிங்கள தேசத்தினையும் பிரித்து வைத்தது என்ற தோற்றப்பாட்டினை தாயக தமிழ் மக்களுக்கு சிங்கள அரசியல் வாதிகளும், மேதைகளும் இப்போ புகட்ட ஆரம்பித்து விட்டார்கள். பாடசாலை நிகழ்சிகள், தேர்தல் விஞ்ஞாபனங்கள்,அபிவிருத்தி திட்டங்கள் , பாதுகாப்பு கெடுபிடிகளில் இருந்து தளர்வு, மக்களை மீழ் குடியமர செய்தல் என்ற பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் ஊடாக இந்த கருத்தூட்டல்கள் இடம்பெறுகின்றன. நொந்து போன மக்களில் சிலரும் பாடசாலை குழந்தைகளும் இந்த கருத்தூட்டல்களுக்கு எடுபட்டாலும் பரவாயில்லை ஆனால் போராட்டம் பற்றியும் தேசியம் பற்றியும் பாடசாலைகளிலும், பல்கலைகழக…
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னியின் தொல்பொருள் தளங்களிலிருந்து ராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதிமிக்க பண்டைக்காலப் பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், பெறுமதிவாய்ந்த சிலைகள் ஆகியவை கொழும்பு தொல்பொருள் சந்தையில் வைத்து விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. போர் நடைபெறுவதற்கு முன்னர் இவ்வாறான பொருட்களை விடுதலைப்புலிகள் மதித்து பேணி, காத்தும் வந்தனர். இதற்கென புத்த சிலைகள் உட்பட பெருந்தொகையான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வன்னி மியூசியம் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. 1990 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ராணுவத்தினர் அங்கிருந்த பண்டைக்கால பொருட்களைத் திருடி விற்றுள்ளனர். போரிற்கு அடுத்தபடியாக தமிழ் மக்களின் தொன்மைக்காலச் சின்னங்களை அழிப்பதும் கொள்ளையிடுவதும் கூட நீண்ட காலமாக நடந்து வர…
-
- 0 replies
- 1.2k views
-
-
முப்பதாண்டுகால தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை, எல்லாவகை நியாயங்களுக்கும் அப்பால் நின்று, தனியொரு இயக்கத்தை அழிப்பதாகப் பிரச்சாரப்படுத்தி, மே மாத நடுப்பகுதியில் வன்னி மண்ணில் முடித்தது சிறிலங்கா அரசு. மூன்றான்டு காலப் போர்திட்டடம், அதற்கும் மேலான செயற்திட்டம், ஆதரவான பல திட்டம், என்பவற்றுடன் அன்டைநாடுகள் அனைத்துடனும் கைகோர்த்து நின்று, சொந்த நாட்டு மக்களின் சுய உரிமையை, வாழ்வுரிமையை, போரியல் நீதிகள், புறவியல் நீதிகள், என அனைத்தையும் அலட்சியம் செய்து, அராஜகப் போராகவே நடத்தி வெற்றிகண்டது. வெற்றியின் பின்னால் வீழ்த்தப்பட்டனர் புலிகள் என அறிவித்து வெற்றி நாதம் பாடியவர்கள், இப்போ அங்கொன்று இங்கொன்றாக புலி உயிர்ப்புச் செய்கின்றார்கள். புலியெதிர்ப்புக்கும்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களை சிறிலங்காப் படையினர் கோரமாக சுட்டுக்கொல்லும் 'சனல் - 4' ஒளிபரப்பிய காணொலிக்கு சிறிலங்கா அரசுக்கு இந்திய, தமிழ்நாட்டு அரசுகள் தமது எதிர்ப்பை தெரிவிக்காதது வியப்பை தருகிறது என்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கைத் தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா, அயல் நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. இளைஞர்களின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அவர்களுடைய கைகளாலேயே கண்களை மூடி விட்டு …
-
- 3 replies
- 853 views
-
-
தெரிவு செய்யப்பட்ட சில தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மட்டும் பிணை வழங்கும் நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதனை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்ற சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை, சாதாரண விடுதலைப் புலி சந்தேக நபர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். முன்ளாள் போராளிகளுக்கு அளிக்கப்படவுள்ள மறுவாழ்வு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 666 views
-
-
கேள்வியும் நானே பதிலும் நானே பாணியில் தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக நான் கடிதம் எழுதினேன். இதோடு நிற்காமல் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்து நமது கோரிக்கையை விளக்க உள்ளனர். மத்திய மாநில அரசுகள் இந்த அளவுக்கு இலங்கைத் தமிழர் பிரச்னையில் செயல்பட்டு வந்த போதிலும் இங்கேயுள்ள ஒரு சிலர் திரும்பத் திரும்ப மத்திய மாநில அரசுகளை குறை சொல்லிக் கொண்டே காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைப் பிரச்னை தொடர்பாக நான் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. தினமணி நாளேடு முதல் பக்கத்திலேயே விரிவாக ச…
-
- 0 replies
- 890 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் அடைத்து வைத்திருப்பதன் மூலம் நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடும் நிலையை சிறிலங்கா அரசு ஏற்படுத்தி வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி குற்றம் சாட்டி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 460 views
-