ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
தமிழக முதல்வர் கருணாநிதி மீது உலகத் தமிழர்கள் அதிருப்தி – பழ.நெடுமாறன் ஈழத் தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடுவாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். “இலங்கையில் தமிழின அழிப்பு” என்னும் தலைப்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் அவர் பேசியது: 6.5 கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தில் இருந்து 18 மைல் தொலைவில் ஈழத் தமிழர்கள் துயருற்று வருகின்றனர். 3.50 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் உணவு, மருந்து, சுகாதார வசதியின்றி வாடுகின்றனர். [url="http://www.meenagam.org/?p=10773"]அவர்களுக்கு உதவிட முடியாத நிலையில் நாம் உள்ளோம். இது வேதனைக்குரி…
-
- 1 reply
- 568 views
-
-
பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி சார்பில் `இலங்கை தமிழரின் உரிமையை காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. தமிழ் தேசிய கட்சி பொதுச் செயலாளர் பரந்தாமன் பேசுகையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை கூறி பேசினார். இலங்கை தமிழர்கள் படும் அவல நிலைகளை நேரில் கண்டு அதை படமாக எடுத்து வந்து உள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டாக்டர் எலைன்சான்டர், இந்தியா வருவதற்கு தடை விதித்ததால், அவர் இங்கு கருத்தரங்கில் பேச இருந்ததை வீடியோ படமாக எடுத்து அனுப்பி இருந்தார். அதை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
-
- 4 replies
- 1.8k views
-
-
இலங்கையின் சதிவலை! – தினமணி ஆசிரியர் தலையங்கம் கடந்த புதன்கிழமை ஆழ்கடலில் மீன் பிடிக்கக் கிளம்பிய 543 மீன்பிடிக்கும் விசைப் படகுகளில் 538-தான் வியாழனன்று ராமேஸ்வரம் திரும்பி இருக்கிறது. ஐந்து படகுகளை இலங்கையில் கடற்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்ததுடன் நில்லாமல் அதிலிருந்த மீனவர்களையும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள். தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி மீனவர்களைத் தாக்குவதும், தங்களது எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறிக் கைது செய்வதும் இலங்கைக் கடற்படையினருக்குப் புதிய விஷயமொன்றும் அல்ல. கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் நான்கு பேர் மட்டுமே மன்னாரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டுள்ளனர். ஏனைய 17 பேரின் கதி என்ன எ…
-
- 0 replies
- 1.1k views
-
-
“கருணை கொலை செய்திடுங்கள்” – ராஜீவ் கொலை குற்றவாளி கருணாநிதிக்கு கோரிக்கை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளி ராபர்ட் பயஸ், “”தன்னை கருணை கொலை செய்ய உத்தரவிடுமாறு” தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மனு அனுப்பியுள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 18 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பயஸ். 14 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் நபர்களை, ஆலோசனைக்குழு கூடி விடுதலை செய்வது வழக்கம்.ஆனால், ராபர்ட் பயஸ் வழக்கில் 15 ஆண்டுகள் கழித்துதான் ஆலோசனைக் குழு கூடியது. 26.12.2006-ல் கூடிய ஆலோசனைக் குழுவில் சிறைக் கண்காணிப்பாளர் நன்னடத்தை சான்றிதழும், உளவியல் மருத்துவர் தகுதியான சான்றிதழும் அளித்திருந்தனர். ஆனால் இலங்கையில் போர…
-
- 0 replies
- 1.1k views
-
-
போர் காரணமாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தி அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் உடனடி கவனம் செலுத்துமாறு சிறிலங்கா அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் லைன் பாஸ்கோவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அரசுக்கு உதவியளிக்கும் எனவும் லைன் பாஸ்கோவே தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5:00 மணிக்கு இடம்பெற்ற இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுப் பிரதி தலைவர்…
-
- 0 replies
- 493 views
-
-
பிரபாகரன் கட்டளைப்படி செயல்படுகிறார் சீமான்:போலீஸ் கமிசனரிடம் காங்கிரஸ் புகார் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனுடன் இயக்குநர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில் வெளியானது. மேலும் சீமான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுக்கப்போவதாக கூறி இருந்தார். இதற்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் இளையான்குடி சபீர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு கொடுத்தார். அம்மனுவில் இயக்குனர் சீமான், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கட்டளைப்படி செயல்படுவதாக ஒரு பேட்டியில் கூறி உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்…
-
- 0 replies
- 672 views
-
-
இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் லீன் பஸ்கோ யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ராணுவ உயரதிகாரிகள் சகிதம் அங்கு சென்ற அவர் கைதடி மற்றும் கோப்பாயிலுள்ள இடம்பெயர்ந்த வன்னி மக்களது முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ் அரச அதிபர் கே. கணேசுடன் யாழ் மாவட்ட ராணுவத் தளபதியாக புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் மார்க்கும் அவர் சகிதம் சென்றிருந்தார். இன்று காலை 10.30 மணியளவில் விமானம் மூலம் பலாலியை சென்றடைந்த அவர் பின்னர் இந்த முகாம்களுக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தார். இதனிடையே அண்மையில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து பொதுமக்களின் விவசாய நடவடிக்கைக்கு அனுமதிக்கப்பட்ட மற…
-
- 2 replies
- 451 views
-
-
தமிழீழ தேசியத்தலைவர் படத்தினை வைத்த பெரியார் திக நிர்வாகி கைது தந்தை பெரியாரின் பிறந்தநாளான நேற்று அவரது படத்துடன் தமிழீழ தேசியத்தலைவரின் படத்தினை சேர்த்து பதாகை வைத்த பெரியார் திராவிடர் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பெரியார் பிறந்த நாள் விழா நேற்று ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. பெரியார் சிலை அமைந்துள்ள பன்னீர்ச்செல்வம் பூங்காவில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ் தேச பொதுவுடைமை இயக்கம் சார்பில் பெரியாருடன் தமிழீழ தேசியத்தலைவர் இருப்பது போன்ற பதாகை வைக்கப்பட்டிருந்தது . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், எம்எல்ஏ விடியல் சேகர் உட்பட காங்கிரசார் மறியல் செய்தனர். இதையடுத்து பதாகை அகற்றப்பட்டது. இதுதொடர்பாக பெரியார் திராவி…
-
- 0 replies
- 868 views
-
-
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கும் அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார் ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன்ன. இலங்கை விவகாரங்கள் குறித்து, குறிப்பாக வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தொடர்பாக, ஐ.நா.உட்பட சர்வதேச சமூகம் இலங்கை அரசை விமர்சித்து வருகின்ற நிலையிலேயே பாலித கோஹன்ன இந்தக் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றார். கனடாவின் சி.பி.சி. வானொலிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர், இதுபற்றி மேலும் தெரிவித்தவை வருமாறு: இலங்கையில் தமிழர்களை அரசு நடத்த…
-
- 0 replies
- 621 views
-
-
சிறிலங்கா போரில் வென்றாலும் சமாதானத்தை தொலைத்து விட்டது: த எக்ஸாமினர் இணையத்தளம் 1945ம் ஆண்டு ஜேர்மனி, ஏலியஸ் படையினரிடம் சரணடைந்தன் பின்னர், ‘யுத்தத்தில் வெற்றி பெற்றாலும், சமாதானத்தை தோற்றுவிட்டோம்” என்ற வின்சனட் சேர்ச்சிலின் கருத்துப்படியே சிறிலங்கா அரசாங்கத்துக்கும் நிகழ்ந்திருப்பதாக த எக்ஸாமினர் என்ற ஆங்கில இணையத்தளம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் 26 வருடங்கள் இடம்பெற்ற பாரிய தொடர் யுத்தத்தில் வெற்றி கண்டுவிட்டதாக அறிவித்தாலும், அது உண்மையான சமாதானத்தை முழுமையாக தொலைத்து விட்டதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்களும் அல்லாதவர்களும், நாட்டின் அடிப்படை கைதிகளாகவே அரசாங்கத்தினால் நடத்தப்படுவதாக அதில் தெ…
-
- 1 reply
- 600 views
-
-
வன்னியில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் இன்னும் நான்கு மாதங்களுக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையிடம் மீண்டும் ஒருமுறை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருக்கின்றார். சிறிலங்காவிற்கு மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐ.நா.வின் அரசியல் பொதுச் செயலாளர் லைன் பாஸ்கோவே இன்று வெள்ளிக்கிழமை காலை மகிந்தவை சந்தித்துப் பேசினார். வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு நேற்று சென்ற பாஸ்கோவே அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டார். வடபகுதியில் இடம்பெற்றுவரும் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்,…
-
- 1 reply
- 361 views
-
-
வெலிக்கடை சிறையில் உண்ணாநிலைப்போராட்டம் மேற்கொள்ளும் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் வெலிக்கடை சிறையில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட முப்பத்தாறு தமிழ் அரசியல் கைதிகள் சிறீலங்கா சிறைக்காவலர்களால் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். எவ்விதமான நீதி விசாரணைகளும் இன்றி கடந்த பல ஆண்டுகளாக வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் நேற்றுப் பட்டினிப் போராட்டம் தொடங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று அதிகாலை வேளையில் சிறைக்கூடங்களில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை இழுத்துச் சென்ற சிறீலங்கா சிறைக்காவலர்கள், அவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இதில் முப்பத்தாறு தமிழ் அரசியல் கைதிகள் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக நம்பகமான தகவல்…
-
- 2 replies
- 598 views
-
-
நண்பர்களே ஒரு சிங்கள இனதுவசவாதி Face book இல் இருந்து பல தவறான கருத்துக்களை பரப்பிவருகிறான்...தயவு செய்து அவனை நண்பணாக்கிக்கொண்டு அவனுடய Post இற்கு தகுந்த பதில் அளியுங்கள்... தயவு செய்து இதை செய்யுங்கள்... முடியாவிடின் அவனை Report ஆவது பண்ணுங்கள் Profile : http://www.facebook.com/profile.php?id=1644414889&ref=nf அவனுடய சில பதிவுகள் : http://www.facebook.com/group.php?gid=1492...6659&ref=mf
-
- 0 replies
- 790 views
-
-
Can we send letter/email to UN and other countries giving the link to the video and transcript of the interview of Dr. Tamilvany? Is there anyone/any website where it is already done? As a president, Rajapaksa told that there were no civilians killed. But Dr. Tamilvany can be an eyewitness in the war crime court. There are videos showing children wounded and killed. So, as a president, MR has lied. We can ask UN to interview and ask as panel of UN and other country's representatives to travel with Dr. Tamilvany and show the places she mentions in her interview, so that UN can collect evidene of war crimes. Please let me know if there is some website where …
-
- 0 replies
- 812 views
-
-
தமிழீழ தேசியத்தலைவருடன் இயக்குனர் சீமான் இருக்கும் படம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரசார் காவற்துறையிடம் மனு தமிழீழ தேசியத்தலைவருடன் இயக்குனர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில் ஒரு வார இதழில் வெளியானது. இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர் சபீர் காவற்துறை ஆணையாளரிடம் இன்று மனு கொடுத்துள்ளார். இது பற்றி தெரியவருவதாவது:- விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இயக்குநர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில் ஒரு வார இதழில் வெளியானது. அண்மையில் இயக்குனர் சீமான் அளித்துள்ள பேட்டியில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுக்கப் போவதாக கூறி இருந்தார். அப்போது சீமான், “தமிழின விடுதலைக்காக தன் உயிரையே கொடு…
-
- 0 replies
- 1.2k views
-
-
மக்கள் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த பெரு நெருப்பு, காணொளி காட்சிப் பதிவு ஒன்றினுாடாக வெடித்துக் கிளம்பியுள்ளது. கால நீட்சியில், அவையாவும் மறக்கப்பட்டு விடுமென்று பேரினவாதம் எண்ணத் தலைப்படலாம். ஆனாலும் இனப்படுகொலைகள் ஏற்படுத்திய கொடூர வடுக்கள், விடுதலை உணர்வினை உயிர்ப்புடன் வாழவைக்கிறது. தேசிய நல்லிணக்கமானது, இனத்துவ அடையாளங்களையும், பூர்வீக இனமொன்றின் அரசியல் பிறப்புரிமையினையும் சரணாகதியடையச் செய்து உருவாக முடியாது. ஜனநாயகப் பூச்சுக்களால், தேசிய இனத்தின் அடியழித்தல் நிகழ்த்தப்படுவதை, கண்டும் காணாதது போல் நாடகமாடுபவர்கள், தேசியமென்பதும் அதற்கான விடுதலைப் போராட்டமென்பதும், மறுபார்வையற்ற போக்கில், ஸ்தாபிதம் உருவாக்கிய குருட்டுத்தனமென்று விளக்கமளிக்கிறார்கள். இந…
-
- 0 replies
- 540 views
-
-
இந்திய பிரதமர் தமிழக முதல்வர் கருணா நிதிக்கு பதில் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தாம் தமிழ் மக்களிற்கு பெரிதாக எதனையோ செய்வதாக கூறியுள்ளார். இந்தியா தமிழீழ தமிழர்களின் விடயத்தில் தாம் ஏதோ கரிசனை கொண்டவர்கள் போல் அடிக்கடிகாட்டிக்கொண்டு தமிழ் நாட்டு தமிழர்களை ஏமாற்றுவது வழமை. இதுவரை இந்தியா ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை என்பதே தெளிவு. அதே நேரம் அவர்கள் செய்த அநியாயங்களை அனைவரும் அறிவர். இது இவ்வாறு இருக்க காங்கிரஸ் அரசும் தமிழக அரசும் அடிக்கடி கடித பரிமாற்றங்களை செய்து மக்க|ளை ஏமாற்றுவது தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. அந்த கடித்தத்தில் இதுவரை 34,000 மக்களிற்கு சிகிச்சை அளித்தத்தனை பெருமையாக கூறும் இந்திய பிரதமர் தாம் தொடர்ந்தும் செய்ய வேண்டியது பற்ற…
-
- 0 replies
- 793 views
-
-
இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இலங்கையில் நடைபெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்பு குழுவின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, ’’விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பணியாற்றிய தயா மாஸ்டர் மற்றும் ஜார்ஜ் மாஸ்டர் ஆகியோர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அவ்வியக்கத்துடன் தொடர்பில்லாதவர்கள் இன்று வன்னி அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு பிரபாகரனையே தெரியாது. பிரபாகரனுடன் நெருங்கிப் பழகிய இருவரும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென்றால் இந்த மக்கள் மட்டும் எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்? விடுதலைப் புலிகளுடனான…
-
- 0 replies
- 822 views
-
-
-
காவற்துறையினர் மூளையற்றவர்கள்: சிறிலங்கா ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன காவற்துறையினர் மூளையற்றவர்கள் என்பது என்னைவிடவும் உங்களுக்கு நன்றாகத் தெரியும் என சிறிலங்கா ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தெனியாய பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் போது சிறிலங்கா காவற்துறையினர் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். லங்கா இரிதா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் செய்து செய்யப்பட்டார்கள் என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஊடக சுதந்திரம் மீறப்படவில்லை என்பதனை அனை…
-
- 0 replies
- 430 views
-
-
மிருகத்தனமான ராணுவ வெற்றியும், மனிதத்தன்மையற்ற தடுத்து வைத்தல்களும் ஈழத் தமிழர்கள் தமது தேசிய அபிலாஷைகளை மறக்கச் செய்துவிடும் என்பது கொழும்பினதும், அதிகாரங்களினதும் நம்பிக்கை. இதுவே இவர்களின் போர் மார்க்கத்துக்கான தூண்டுதலாகவும் அமைந்தது. ஆனால் போரும் அதற்குப் பின்னாலான போக்கும் ஈழத்தமிழர்களுக்கு தமது நாட்டின் விடுதலையானது முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அவசியம் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டுள்ளது என்பதை அவர்கள் ஒருவரும் இன்னும் அறியவில்லை. ஆனால் ஆணவமும், பேராசையும் காரணத்தை ஒருபோதுமே பார்க்காது. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடகத்தில் சில அதிகாரவர்க்கத்தினர் மிகவும் நேர்மையாக உள்ளார்கள். அவர்கள் சர்வதேசத்தின் அனைத்து தலையீடுகளுக்கும் செவிமடுத்து …
-
- 0 replies
- 761 views
-
-
அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் கடமையாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். karu-300சென்னையில் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு இன்று ஆரம்பமானது. மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய குறைகளைக்களைய மத்திய அரசோடு நேரில் விவாதித்தும், மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்கள் மூலமாக எடுத்துச் சொல்லியும், கடிதங்களின் வாயிலாக வலியுறுத்தியும், மத்திய அரசோடு இணைந்து தமிழக அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் செயறிப…
-
- 0 replies
- 606 views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 18/09/2009, 11:41 தடுப்பு முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டோர் மீண்டும் தடுத்து வைப்பு - மாவை சிறீலங்கா அரசாங்கத்தினால் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட ஏதிலிகள் விடுதலை செய்யப்பட்ட போதும் அவர்கள் மாற்றப்பட்ட இடங்களில் உள்ள ஏதிலிகள் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்: வவுனியாத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏதிலிகள் விடுதலை செய்யப்பட்ட போதும் அவர்கள் மாற்றப்பட்ட இடங்களில் உள்ள ஏதிலிகள் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண ஏதிலிகள் முகா…
-
- 0 replies
- 280 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் இந்தியா அமைக்க உள்ள அனல் மின் நிலையம் தொடர்பிலான இருதரப்பு ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் கையெழுத்திடப்படும் என மின் மற்றும் சக்தித்துறை அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியா ஈழத் தமிழர் விவாகரத்தில் தமிழக மக்களோடு கபடியாடிக் கொண்டிருக்கிறது. வன்னி மீதான போர் உச்சத்தில் இருந்த போது போர் நிறுத்தம் கோரி தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்தார்கள் தமிழக மக்கள். ஆனால் இலங்கை விவாகரத்தில் தலையிட முடியாது என்றும் இலங்கை ஒரு இறையாண்மை உள்ள தேசம் என்றும் போரில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்த வில்லை என்றும். போர் பகுதிக்குள் எழுபதாயிரம் மக்களே சிக்கியிருக்கிறார்கள் என்றும் தொடர்ந்து பொய் சொல்லி வந்தது மத்திய காங்கிரஸ் அரசு. இந்த பொய்யர் கூட்டத்தின் தலைவனான மன்மோகன் சிங்கோ இந்தியா ஈழத் தமிழர்களுக்காக பாடு படும் என்று பாவனை செய்து கொண்டிருக்கிறார். இந்தியா 500 கோடி ரூபாய் நிபாரணம் வழங்கியதா? அந்த நிவாரண யார் மூலமாக எப்போது வழங்கப்ப…
-
- 1 reply
- 726 views
-