ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 16 சிறுவா்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 321 views
-
-
வன்னி மக்களின் உடல்களிலும் மனங்களிளும் பரிசோதித்துப் பார்க்கப்படும் புதிய உலக ஒழுங்கு - தமிழ்நெட் மனித உடலும், மனமும் தாங்கிக்கொள்ளக்கூடிய அதியுச்ச துன்புறுத்தலின் அளவை அறிந்துகொள்ள ரெண்டாம் உலகப்போரின் போது ஜேர்மணிய நாசிகளின் விஞ்ஞானிகள் வதைமுகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு "செலவழிக்கப்படக்கூடிய" யூத மக்கள் மீது கடுமையான சித்திரவதைகளைப் பிரயோகித்து வந்தனர். அவ்வாறே ஈழத் தமிழர் மீதும் கொழும்பு இனவழிப்பு அரசும், அதன் இனவழிப்பின் நண்பர்களும் அரசியல் மற்றும் ராணுவ அடக்குமுறையின் சகிப்புத்தன்மையின் எல்லையை உள்நாட்டு அரங்கிலும், வெளிநாட்டு அரங்கிலும் எப்படியிருக்கும் என்று அறிந்துகொள்வதற்காக சாட்சிகளற்ற ஒரு முழுமையான இன்வழிப்பை நடத்தி வருகின்றன என்று கல்விமான்களும், நிபுண…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தோ னேஷிய வெளிவிவகார அமைச்சர் ஹஸன் விராஜுதா இன்று இலங்கை வருகிறார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் இவர், அமைச்சர் ரோஹித போகொல்லா கமவுடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரை நாளை 30 ஆம் திகதி இவர் சந்தித்துப் பேசவுள்ளார். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் விசா தவிர்ப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள். இதேவேளை, இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர், “இந்தோனேஷிய வெளிவிவகாரக் கொள்கையும் ஏசியானும், “எனும் தொனிப்பொருளில் விரிவுரை நிகழ்த்துவார். கொழும்பு, சர்வதேச உறவுகளுக்கான கதிர்காமர் நிலையத்தில் இந்த சொற்பொழிவு இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பரிந்துரைக்கப்பட்டபடி மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் செய்துகொள்வது குறித்துப் பரிசீலிக்கத் தயார் என இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல தெரிவித்தார். மோதல் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் செய்து, இலங்கை அரசாங்கம் பரிந்துரைக்கும் வழிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றி சர்வதேச நடவடிக்கை படையணியொன்று அங்கு நுழைவதற்கும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்கும் என்று பாதுகாப்புப் பேச்சாளர் தெரிவித்தார். "20 சதுர கிலோமீற்றர் பிரதேசத்துக்குள் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற வழிசெய்யும் என்றால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மற்றும் ஏனைய சர்வத…
-
- 3 replies
- 1.1k views
-
-
பூகோள அரசியல் மாற்றங்களும் தமிழ் மக்களின் போராட்டங்களும் - இதயச்சந்திரன் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. வன்னி அவலங்களுக்கும், புலம் பெயர் தமிழ் மக்கள் நிகழ்த்தும் இடைவிடாத போராட்டங்களும் ஐ.நா.வின் வாசல் கதவினை தட்ட ஆரம்பித்துள்ளதெனக் கருதலாம். இதனைத் தடுப்பதற்கு, தன்னாலான சகல முயற்சிகளையும் இலங்கை அரசு மேற்கொள்வதைக் காணலாம். ஆனாலும், புதிய உலக ஒழுங்கில், அதிலும் பொருளாதார வீழ்ச்சியினை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், வல்லரசுகளின் பார்வை, சொந்த வீட்டுப் பிரச்சினைகளில் நிலைகொண்டுள்ளது. அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டிருக்கும், சர்வதேசம் சார்ந்த இப்பொருளாதாரச் சீரழிவினை, புதிய ஒபாமா அரசாங்கம், எவ்வாறு எத…
-
- 0 replies
- 666 views
-
-
இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்குமாறு கோரி நாளை சுவிற்சர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 316 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் பிரதி ஆணையாளர் ஜோன் ஹோல்ம்ஸிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரதிநிதி குமரன் பத்மநாதனுக்கும் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசாங்கத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும், ஜோன் ஹோல்ம்ஸிற்கும், குமரன் பத்மநாதனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றமையை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். எனினும், இருவருக்கும் இடையில் தொலைபேசிப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அமெரிக்கத் தூதுவர் ரொபர் ஓ பிளெக் அண்மையில் இலங்கையின் ஊடகமொன்றுக்கு செய்தி வெளியிட்ட…
-
- 0 replies
- 921 views
-
-
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் இரு வேறு இடங்களில் சிங்கள ஊர்காவல் படையினரால் இரண்டு தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
கொழும்பில் கப்பம் பெற முயன்ற கருணாகுழு உறுப்பினர்கள் இருவர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதா வது. கொழும்பு கொட்டாஞ்சேனையிலுள்ள வர்த்தகர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டி 50 லட்சம் ரூபாவை கப்பமாக தமது வங்கிக் கணக்கில் வைப்பிலிட வேண்டுமென்றும் இல்லை யெனில் அவரை குடும்பத்துடன் கொல்லப் போவதாக கருணாகுழுவைச் சேர்ந்த இருவர் மிரட்டியுள்ளனர். தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்திய வர்த்தகர் கருணாகுழு உறுப்பினர்கள் இருவரையும் தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கில் 50 லட்சம் ரூபாவை வைப்பிலிடும்போது தான் வருமானவரி சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் பணத்தை நேரில் வந்து பெற்றுக் கொள்…
-
- 0 replies
- 641 views
-
-
வன்னிப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிச்சூட்டுத் தாக்குதலில் சிக்கி 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சாலை பகுதியால் நகர்வில் ஈடுபட்டு வரும் 55 ஆவது படையணியின் 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி விடுதலைப் புலிகளின் 10 அடி உயரமான மணல் அணை ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. இந்த மணல் அணையில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலை இடங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நோக்கத்துடள் பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லெப். சந்திரஜித் தலைமையில் 4 பேர் கொண்ட இராணுவ அணி ஒன்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. விடுதலைப் புலிக…
-
- 0 replies
- 948 views
-
-
-
உரிமை பேரெழுச்சி – 11 ஏப்ரல் 2009 வணக்கம்! v இலங்கை சிங்கள வெறி அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின சுத்திகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த, v பட்டினியால் தினம் தினம் செத்து கொண்டிருக்கும் எம் உறவுகளை காக்க, v போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உணவு மற்றும் மருந்து பொருட்கள் சென்றடைய, வேண்டும் என வழியுறுத்தி எதிர் வருகின்ற சனிக்கிழமை 11/04/2009 மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இலண்டனில் நடைபெற உள்ளது. மீண்டும் எம் ஒற்றுமையை, உலகிற்க்கும், பிரித்தானியாவிற்க்கும் பறை சாற்றுவோம்! எம் பக்கம் திரும்பும் உலகின் கண்களை மேலும் விழிக்க வைக்க!! எம்மை பற்றி சிறுக சிறுக சொல்லும் உலக ஊடகங்களை வன்னி மண் நோக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
திரு.டக்ளஸ் தேவானந்தா, திரு.கருணா, திரு.பிள்ளையான் ஆகியோருக்கு இலங்கையரசின் யதார்த்த நிலை என்ன என்பது பற்றிய பகிரங்கக்கடிதம். உனை நீ அறி இலங்கையின் வடக்கில் தமிழர்களை இலங்கையரசு அழித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் தமிழனாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனாகவாவது இலங்கையரசிடம் நேருக்கு நேர் நின்று கேட்க முடியாததிராணியற்றுப் போயிருக்கிறீர்கள். உங்களால் அது முடியாது. நீங்கள்தான் மானம் ரோசம் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்களே. உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா. ஜனாதிபதி உட்பட அனைத்து சிங்கள அமைச்சர்களும் முகத்துக்கு நேரே சிரிப்பார்கள், நாமட்டுச் சிரிப்புடன் கைலாகு கொடுப்பார்கள் அவரவர் உள் மனதில் பச்சைத் துரோகிகள் தங்களுடைய இன…
-
- 3 replies
- 1.2k views
-
-
புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது டாங்கி ஒன்று அழிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆனந்தபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் கவசப் போர் ஊர்திகள் சகிதம் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர தாக்குதலின் போது படையினருக்கு பெரும் எண்ணிக்கையிலான இழப்புக்கள் ஏற்பட்டுத்தப்பட்டு நகர்வும் முறியக்கப்பட்டது. இதில் படையினரின் டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிறு சிறு தாக்குதல்களில் மட்டும் 108 படையினர்…
-
- 5 replies
- 2.5k views
-
-
இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ‐ மக்கள் கோரிக்கை ‐ சர்வதேச நீதிமன்றத்தின் சட்டத்தரணி லுயிஸ் மொரேனோ ஒக்கம்பே தெரிவிப்பு: இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் இலங்கை மக்கள் தன்னிடம் கேட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றத்தின் சட்டத்தரணி லுயிஸ் மொரேனோ ஒக்கம்பே தெரிவித்துள்ளார். நியூஸ் வீக் இதழுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை எனவும் எனக் கூறியுள்ளார். சூடானின் டாபூரில் இனப்படுகொலை மேற்கொள்ளப்படுவது தொடர்பாக அந்த நாட்டு ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கு எதிரான வழக்கில் லுயிஸ் மொரேனோ ஒக்கம்பே, அவ…
-
- 4 replies
- 1.1k views
-
-
Amnesty International Renewed its calls for humanitarian truce in Sri Lanka Calls for a humanitarian truce between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan Armed Forces are growing as fighting intensifies and the number of casualties increases. On Thursday (26th March), Amnesty International reiterated its call for an immediate truce to allow aid to reach trapped civilians and ensure safe passage for all those that wish to leave. "The deliberate firing on civilians by either side constitutes a war crime," said Sam Zarifi, Director of the Asia Pacific region at Amnesty International. "We cannot stress enough the importance of an immediate p…
-
- 0 replies
- 551 views
-
-
-
- 0 replies
- 975 views
-
-
வன்னியில் போரில் சிக்குண்டுள்ள மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் இடைவெளி ஒன்றை நடை முறைப்படுத்த சம்மதம் தெரிவிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. அதனை அமெரிக்காவும் பிரிட்டனும் ஆதரித்துள்ளன. இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா வின் பாதுகாப்புச் சபையின் சம்பிரதாய பூர்வமற்ற, உத்தியோக பூர்வமற்ற விவாதம் மூடிய கதவுகளுடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி ஜோன் ஹோல்ம்ஸ் மனிதாபிமான போர் இடைவெளி ஒன்றுக்கு இரண்டு தரப்புகளும் சம்மதிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கையை அ…
-
- 3 replies
- 839 views
-
-
தவறான தகவலும், மதிப்பீடும் சிறிலங்கா இராணுவத்தால் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர முடியாமை குறித்துப்பலருக்கு தற்பொழுது ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சிறீலங்காவிலும் வெளியிலும் - குறிப்பாக இந்திய ஆய்வாளரல் பலருக்கும் யுத்தம் இதுவரையில் முடிவுகாணப்பட்டதொன்றாக இருத்தல்வேண்டும். அதாவது அவர்களின் காலநிர்ணயங்களையும் , எதிர்பார்க்கைகளையும் மீறியதாக நீண்டு செல்வதாகவுள்ளதோடு, சிறீலங்கா இராணுவத்தால் வெல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனப்பிரச்சனை ஒன்றிற்கு இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்று வரலாற்று நிருபணம் செய்திருந்தபோதும் அதனைச் சிறீலங்கா ஆட்சியாளர்களும் யுத்தத்தில் சிறீலங்காவிற்கு ஆதரவு அளித்தோரும் - நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர்கள் வரலாற்றை தம்மால…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்புக்குள் நுழைந்த விடுதலைப்புலிகளின் விமானத்தை வீழ்த்த ஒரு பில்லியன் ரூபா பந்துல குணவர்தன: கொழும்புக்குள் நுழைந்த விடுதலைப்புலிகளின் விமானத்தை வீழ்த்த ஒரு பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். புலிகளின் விமானங்கள் மீது ரூபாய்களை கொண்டு தாக்குதல் நடத்தவில்லை எனவும் டொலர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் டொலர் மழையில் புலிகளின் விமானங்கள் வீழ்த்தப்பட்டன எனவும் பந்துல கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டின் பாதுகாப்பு செலவுகள், கடந்த மூன்று வருடங்களுடன் ஒப்பிடும் போது, 587 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த பாரிய செலவின் பிரதிபலனாக படையினர் …
-
- 2 replies
- 1.8k views
-
-
இன்று போர்வெறி பிடித்து கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது சிங்கள அரசு. வெற்றிக்களிப்பில் திளைத்துப்போயிருக்கும் அதன் செயற்பாடுகள் பின்விளைவுகள், எதிர்விளைவுகளை பற்றி துளியெயேனும் சிந்திக்காத விதமாக அமைந்திருக்கிறது. "தானே உலகின் வல்லரசு" என்ற பாணியில் உலக நாடுகளின் கோரிக்கைகளையும் நிராகரித்து திமிருடன் பேசிவருகிறது. இந்நிலையில், இதுவரைகாலமும் சந்திக்காத சமர்க்களங்களை சந்திக்கப்போகிறது சிங்களதேசம். தமிழினம் மீது வில்லங்கமாகவே திணிக்கப்பட்ட போரில் தமிழினம் அதிகமாகவே இழந்துவிட்டது. "புலிகளை ஒழிக்கின்றோம்" என்று சொ ல்லிகொண்டு தமிழினத்தின் மீது இன அழிப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. அப்பாவித் தமிழர்களின் அழிவுகளை, இழப்புக்களை தமது மாபெரும் வெற்றிகளாக ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
சமாதான உடன்படிக்கையை ஒரு தலைப்பட்சமாக கிழித்தெறிந்து விட்டு அடக்குமுறை யுத்தத்தை தமிழ்மக்கள் மீது ஏவி விட்ட மகிந்த ராஜபக்சே தற்போது புலிகளுக்கு சவால் விட்டிருக்கிறார். "தைரியமிருந்தால் புலிகள் மக்களை விட்டு வெளியே வந்து,இராணுவத்தை நேரடியாக சந்திக்க வேண்டுமாம்!". மக்கள் புலிகளுடன் இல்லாவிட்டால் ஜெயித்து விடுவாராம். கடந்த 3 வார காலமாக இராணுவம் பெற்ற சேதத்தை சமாளிப்பதற்காக சப்பை கட்டு கட்டுகிறார். புலிகள் என்ன வானத்திலிருந்து குதித்தார்களா? மக்கள்தான் புலிகள். புலிகள்தான் மக்கள். போராளியாக இருக்கும் மகன், மகளை விட்டு அவர்களுடைய குடும்பத்தார் எப்படி வெளியே வருவார்கள்? அவர்கள் தங்களுடைய தாயக நிலத்தில் இருக்க விரும்புகிறார்கள். அது தீவிரவாதமாம்? இவருடைய இராணுவம்…
-
- 1 reply
- 820 views
-
-
"இன்றைய சூழ்நிலையில் விடுதலைப்புலிகளின் மௌனம் என்பது" என்ற தலைப்பில் மூன்று தெரிவுகள் தந்துள்ளார்கள். வாக்களியுங்கள் http://www.vimpankal.com/index.php?option=...23&Itemid=8
-
- 11 replies
- 3.5k views
-
-
நடுகற்களும் அவற்றினூடான விடுதலைக்கான யாத்திரையும் தமது நாடுகளின் விடுதலைக்காகவும், தம் நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டபோது அந்த ஆக்கிரமிப்பாளனை விரட்டி அடிப்பதற்காகவும் தம் இன்னுயிரை ஈந்தோரை அந்த நாடுகள் என்றும் மறப்பதில்லை. அவர்களின் நினைவாக தூண்கள், நடுகற்கள், மண்டபங்கள், பூங்காக்கள் என நிறுவி சந்ததி சந்ததியாக நினைவு கூர்வதை உலகெங்கும் காண்கின்றோம். ஆனால், உரிமைப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே அந்தப் போரில் வீரமரணம் எய்திய தம் தோழர்களை அந்த மண்ணிலேயே விதைத்து அவர்களுக்கு நடுகற்கள் எழுப்பி, அந்த நடுகற்களுக்கு உள்ளே உறங்கிக் கொண்டிருப்போர் வாழும் இடங்ளை துயிலும் இல்லங்களாக்கி, அவர்களை மதங்கள் கடந்த வழிபாட்டுக்கு உரியவர்களாக்கி, அவர்கள் பணியை அந்தத் தோழர்கள் …
-
- 0 replies
- 754 views
-
-
தமிழ் மக்களின் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன? கலாநிதி ஜேசுதாஸ்: சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து 1975வரை பலவித சாத்வீக, அகிம்சா, காந்தீய முறைப் போராட்டங்களை குறிப்பாக தமிழரசுக் கட்சி சார்ந்த தலைவர்கள் நடத்தினார்கள். அவை எதிர்பார்த்த பலனளிக்காது போகவே 1975இல் இருந்து இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை நாடினார்கள். அதில் முக்கிய அமைப்புக்களாக ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ, எல்ரிரிஈ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அவற்றில் எல்ரிரிஈ தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் காலப்போக்கில் இந்திய‐ இலங்கை ஒப்பந்தத்தோடு ஜனநாயகப் பாதைக்குப் போனார்கள். ஆனால் போராட்டம் தொடர்ந்ததால் 1990இலிருந்து இந்த ஜனநாயக அமைப்புக்கள் சரியான ஜனநாயகப் பாதையில் போகமுடியவில்லை. காரணம் அதற்கான சூழ்நிலை…
-
- 0 replies
- 1.1k views
-