Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரை மணிநேரச் சந்திப்பில் ஈழத்தமிழர் விவகாரம், தமிழ்நாடு கரையோரப் பாதுகாப்பு, மும்பை தாக்குதல், மற்றும் பொருண்மிய விடயங்கள் பற்றி பேசப்பட்டதாக அரச தரப்பு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலைப் பொறுத்தளவில் வெளிநாட்டு தூதுவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் மட்டத்திலும், ஏனைய மத்திய அரசு மட்டத்திலும் மட்டுமே பேச்சு நடத்துவது வழக்கமாகும்.இந்த விதிமுறையைத் தவிர்த்து தமிழ்நாடு முதலமைச்சரை இந்தியாவிற்கான பிரித்தானியத் தூதுவர் சந்தித்துள்ளமை பல்வேறு சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு மக்கள் மற்றும் கட்சிகளின் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், சிறீலங்கா அரச தரப்பில…

  2. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது மனித உரிமைகள் நாளான நேற்று முன்நாள் புதன்கிழமை சிறிலங்காவில் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் டென்மார்க் தமிழ் மக்களின் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது. டென்மார்கின் சமூக லிபறல் கட்சியின் பிரமுகர் த. தர்மகுலசிங்கம் மற்றும் டென்மார்க்கின் லுங்பி பங்குத்தந்தை அல்றின் சூசைப்பிள்ளை ஆகியோர் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறகம் வற்சனை புரூசல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து இந்த விண்ணப்பத்தை கையளித்தனர். கிறகம் வற்சன் பிரித்தானியாவின் மேற்கு லண்டன் லிபறல் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற …

    • 0 replies
    • 686 views
  3. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்யலாம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்தார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேர்தல் கொள்கையான " எம்மால் முடியும்" எனும் வாசகத்தை இலங்கையிலும் முயற்சித்து, பயங்கரவாதத்தால் ஏற்படும் சவால்களை தோற்கடிக்க முடியும் என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் கூறினார். இலங்கையின் இனப்பிரச்சினையை அரசியல் தீPர்வின் மூலமே முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், இதன் மூலம் வன்னியில் அடைபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரமாக தென்பகுதிக்கு வந்துசெல்லக்கூடிய வழி தோன்றும் எனவும் பிளேக் தெரிவித்தார். â…

  4. தமிழக அரசியல் தலைவர்களைக் கோமாளிகளாகச் சித்திரித்து, இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பேசியது, ஒட்டுமொத்தத் தமிழகத் தையும் கொதிக்க வைத்திருக்கிறது! பல அரசியல் கட்சிகளும் பொன்சேகாவின் பேச்சைக் கண்டித்துப் போராட்டங்களை அறிவித்திருக்க, நாம் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோ விடம் இதுகுறித்த கேள்விகளை வைத்தோம். ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தார் வைகோ... பொன்சேகா, இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதில் இந்தியாவுக்கே விருப்பம் இல்லை எனச் சொல்லி இருக்கிறாரே! அப்படியென்றால், மத்திய அரசு இரட்டை நாடகம் போடுகிறதா? இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துவதே நம் இந்திய அரசுதான் என நான் அடித்துச் சொன்னபோது, பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நான் சொன்னது உண்மைதான் என இன்றை…

    • 2 replies
    • 2.6k views
  5. தமிழ்நாட்டில் அண்ணா பெயரிலான கட்சியை (அதிமுக) "ஆரிய மாயை'' (ஜெயலலிதா) அபகரித்துவிட்டது. சிங்களர்களின் குரலைத்தானே இவர் சதா ஒலிக்கிறார். காரணம் என்ன? தமிழரல்லர் என்பதுதானே. என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி உரையாற்றிய போது, மிகுந்த கவலையோடு தமிழ்நாட்டு மக்கள் சிந்தனைக்காக, தமிழ் இன உணர்வாளர்கள், முற்போக்குவாதிகள் சிந்தனைக்காக ஒரு கருத்தை முன்வைத்தார். இன உணர்வற்று மரத் தமிழர்களாகி, கூட்டணி சீட்டுகளுக்காக இன எதிரிகளிடம் (அதிமுக) சரண் அடைந்துவிட்ட தமிழர்களும் (கம்யூனிஸ்டுகள்) கூட அந்த 'ஆரிய மாயை'…

  6. புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. இதனால் தான் படைத்தரப்பு இழப்புக்களை சந்தித்து வருகின்றது என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் "பிஸ்னஸ் டுடே' நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது நான் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தேன். போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம். இராணுவத் தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். இராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்…

  7. யாழ். குடாநாட்டில் அடுத்து வரும் சில தினங்களில் விடுதலைப் புலிகளின் வசமுள்ள முகமாலை மற்றும் கிளாலி முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை இராணுவத்தினர் கைப்பற்றி விடுவார்களென யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண இராணுவ தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். விடுதலைப் புலிகள் கடந்த நான்கு மாதங்களாக யாழ். மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகள் அனைத்தும் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது; இந்த நான்கு மாத காலப்பகுதியில் இந்து ஆலயங்களில் விடுதலைப் புலிகளால் …

    • 4 replies
    • 2.7k views
  8. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் கருணாநிதி தொலைபேசியில் இன்றுவாழ்த்து தெரிவித்தார். ரஜினிகாந்துக்கு இன்று 59வது பிறந்த நாள். ஆனால் இம்முறை அவர் பிறந்த நாளை கொண்டாடவில்லை. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதால் தனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்றும் எவ்வித கொண்டாட்டங்களிலும் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பிறந்த நாளில் ரசிகர்கள் வீட்டுக்கு வருவார்கள் என்பதால் கேளம்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் ரஜினி இன்று ஓய்வு எடுத்தார். தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களும் திரையுலகினரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். 18ம் தேதி முதல் எந்திரன் பட ஷ¨ட்டிங்கில் அவர் பங்கேற்…

  9. பிபிஸி உலகசேவையும், சண்டேலீடர் பத்திரிகையும் இலங்கையில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது BBC World Service and Sunday Leader newspaper censored Reporters Without Borders deplores the latest cases of government censorship of international and local news media. In the past few days, the BBC World Service has been jammed by the state-owned Sri Lanka Broadcasting Cooperation (SLBC) and one of the country’s most outspoken newspapers, the Sunday Leader, has been forbidden to refer to the president’s brother. "We are worried by the increase in direct and indirect censorship in Sri Lanka," Reporters Without Borders said. "Coming after a broadcast media bill reintroduc…

  10. Started by nunavilan,

    தாயக செய்திகள் 11 -- 12 -- 2008

    • 0 replies
    • 1.3k views
  11. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கும் அனுபவமுள்ள படையணிகளால்தான் படைத்தரப்பினர் அதிக இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் 'பிஸ்னஸ் ருடே' இதழுக்கு வழங்கிய நேர்காணலில் சரத் பொன்சேகா தெரிவித்த முக்கிய பகுதிகள் வருமாறு: போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது நான் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்தேன். போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம். இராணுவத்தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். இராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவ…

    • 7 replies
    • 2.6k views
  12. வன்னியில் இரு களமுனையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்கா படையினர் 90 பேர் கொல்லப்பட்டு, 12 உடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. நேற்று புதன்கிழமை காலை 9:00 மணிக்கு கிளிநொச்சிக்கு மேற்கே ஓட்டுப்புலத்தில் இருந்து புதுமுறிப்பு நோக்கி முன்னேற முற்பட்ட படையினருக்கு எதிரான தாக்குதலில் படையினர் 60 பேர் கொல்லப்பட்டதுடன், 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த மோதலில் 120 வரையிலான படையினர் காயமடைந்து களமுனையைவிட்டு அகற்றப்பட்டுள்ளனர். புதுமுறிப்பில் ஏகேஎல்எம்ஜி – 04, பிகே எல்எம்ஜி – 02, ஆர்பிஜி – 02, ரி-56-2 ரக துப்பாக்கிகள் – 11, இரவு பார்வை காட்டி – 01, லோ - 01 உள்ளிட்ட படையப்பொருள்களும் கைப்பற…

  13. இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும், பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாகவும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியை பிரித்தானிய உயர்ஸ்தானியர் சேர்.றிச்சட் ஸ்ரெக் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து சிநேக பூர்வமாக ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அண்மையில் மும்பாயில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் மாறிவரும் உலக பொருளாதாரத்தை எவ்வாறு முகம் கொடும்பது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது. http://www.pathivu.com/ _____________________________ http://vaththirayan.blogspot.com/

  14. சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி நகரின் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து சிங்கள இனவெறியன் மகிந்த இராஜபக்சே, சரத் பொன்சேகாவா ஆகியோரின் உருவ பொம்மைகளை பாடைகட்டி, பறை முழங்க ஊர்வலமாக எடுத்துவந்து எரித்தனர். இதில் பெண்கள் சிறுவர்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர். ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள் இந்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கின்றனர். 'இந்திய பிரதமர்' மன்மோகன் சிங்கிடம் நேரடியாகவும் மக்கள் போராட்டங்கள் வாயிலாகவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையை க…

  15. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 434 views
  16. "இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு வந்தாலும் அரசு புலிகளுடனான போரை நிறுத்தாது. இந்த விடயத்தில் இந்தியா அழுத்தம் கொடுத்தால் அதனை இலங்கை அரசு கிஞ்சித்தும் கணக்கில் எடுக்காது" - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பு மகாவலி நிலையத்தில்நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து கூறியவை வருமாறு:- இலங்கையில் இடம் பெறும் யுத்தம் என்பது நிறுத்தப்பட முடியாத ஒன்று. பயங்கரவாதம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டதன் பின்புதான் இந்த யுத்தம் நிறுத்தப்படும். இன்று நாம் யுத்தத்தில் அபார வெற்றிகளைக் குவித்து வருகிறோம். பல தியாகங்க…

  17. சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நாடுகள் உதவி புரிந்து வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 474 views
  18. சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரியில் சிங்கள இனவெறி அரச தலைவரான மகிந்த ராஜபக்ச மற்றும் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் உருவப் பொம்மைகளை பாடை கட்டி, பறை முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 440 views
  19. 16 தமிழ் இளைஞர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி மூன்று மாதங்களாக தடுத்து வைப்பு. வெள்ளி, 12 டிசம்பர் 2008, 10:01 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] வடபகுதிலிருந்து வெளிநாடு செல்வதற்கும் மற்றம் பல்வேறு தேவைகளுக்காக கொழும்பு வந்த இளைஞர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணையும், அடிப்படை வசதிகளுமின்றி கொழும்பு கடற்கரை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தொழில், தொழில்நுட்பப்பயிற்சி பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கு வெளிநாடு செல்வதற்காக கிடைக்பெற்ற வீசா காலாவதியாகியுள்ளதாகவும் தெரிவித்தனர். தாம் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் தான் எவ்வித விசாரணையுமின்றி கடந்த மூன்று ம…

  20. ‘மனிதாபிமான நடவடிக்கை’யால் உருவாகும் மனிதப் பேரவலம் [12 டிசம்பர் 2008, வெள்ளிக்கிழமை 9:45 மு.ப இலங்கை] ஈழத் தமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்திருக்கும் கொழும்பு அரசு, அதனை யுத்தம் அல்ல என்றும், மனிதாபிமான நடவடிக்கை என்றும் சித்திரித்து உலகை ஏமாற்றுகின்றது. கொழும்பு அரசு தொடுத்திருக்கும் யுத்தத்தின் கொடூரத்தாலும், நாச செயற்பாடுகளினாலுமே வன்னிப் பெருநிலப் பரப்பில் சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு இன்று மனிதப் பேரவலம் உருவாகியிருக்கின்றது என்பது வெளிப்படை. யுத்தத்தினாலும், அதைத் தொடர்ந்து நேர்ந்த வெள்ளப் பேரழிவு என்ற அனர்த்தத்தினாலும் பல லட்சக்கணக்கில் அங்கு இடம்பெயர்ந்து பேரவலப்படும் மக்களின் தற்போதைய நிலைமையை நேரில் கண்ட உலக உணவுத்திட்ட அதிகாரி …

  21. போர் நடவடிக்கையினால் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மீண்டும் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 389 views
  22. வீரகேசரி நாளேடு - கிளிநொச்சிஇ திருமுறிகண்டிப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதலில் 20 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இந்த மோதலில் கொல்லப்பட்ட படையினரது சடலங்களும் இதுவரையில் மீட்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இம்மோதல்களின் போது 27க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அவர்களது தகவல் பரிமாற்றங்களின் போது தெரியவந்துள்ளதாகவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை கிளிநொச்சி மேற்கு மற்றும் தெற்கு ஆகிய இரு முனைகளிலிருந்து முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்ட படையினர் திருமுறிகண்டி சந்தியைக் கைப்பற்றியுள்ளதாக இராணுவ பே…

  23. அம்பாறை மாட்டத்தில் உள்ள திருக்கோவில் பிரதேசத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த சில நாட்களில் நடத்திய தேடுதலில் 28 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 454 views
  24. சிங்களவர்களின் குரலாக தமிழ்நாட்டிலிருந்து பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சதா ஒலித்துக் கொண்டிருக்கின்றார் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 789 views
  25. முள்ளியவளையை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 478 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.