Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வரவுசெலவுத் திட்ட பாதுகாப்பு நிதி மூலம் வடக்கை மீட்டு. 2009ஐ அமைதியின் வருடமாக மாற்ற அரசாங்கம் உத்தேசம். தேசிய பாதுகாப்பு செலவினங்களுக்கு மேலதிகமாக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில, சுகாதாரம், பெருந்தெருக்கள், விவசாய அபிவிருத்தி, கமத்தொழில்சேவை, தேசத்தை கட்டியெழுப்புதல், தோட்ட உட்கட்டமைப்பு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பிரதிநிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 2009 ஆண்டுக்கான துண்டு விழும் தொகையில் 5.8 வீதத்தை தேசிய உற்பத்திகள் மூலம் ஈடுசெய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளார். பெருத் தெருக்கள் மற்றும் அபிவிருத…

  2. தமிழக அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளனர் – கோதபாய: தமிழக அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு குறித்த அரசியல்வாதிகளுக்கு புலிகள் லஞ்சம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தமிழக அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோதப…

  3. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் பாரிய பொருளாதார பின்னடைவு ஏற்படும் - ஜீ.எல்.பீரிஸ்: ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் பாரிய பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆடைத் தொழில் உற்பத்தியில் மட்டும் சுமார் 100,000 பேர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் எனவும், மீன்பிடி, தோல் உற்பத்தி, மரக்கறி மற்றும் பழவகை ஏற்றுமதி வருமானத்திலும் பாரிய பின்னடைவு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 வீதம் குறைவடையக் கூடும் என தெரிவித்துள்ளார். 2007ம் ஆண்டில் …

  4. "அல் ஜசிரா" தொலைக்காட்சி செய்தியாளர் பேர்ட்லி அண்மையில் வன்னி யுத்தகளத்திற்குச் சென்று சேகரித்த தகவலின்படி இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியை அடைவதற்கு இன்னும் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் படையினரின் எந்த முனையில் இருந்து இந்த தூரம் என்ற விடயத்தை அவர் குறிப்பிடவில்லை. எனினும் இராணுவ பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல படையினர் கிளிநொச்சியை கைப்பற்ற இன்னமும் ஒன்றரை கிலோமீற்றரே இருப்பதாக குறிப்பிட்டுள்ளதை சண்டே டைம்ஸின் பாதுகாப்பு களத்தி;ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் யுத்தக்களம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பு தகவலை தம்மால் பெறமுடியவில்லை என பேர்ட்லி குறிப்பிட்டுள்ளார். அமை…

  5. கதிர்காமத்தில் சிறிலங்கா படையினரின் காவலரண் தாக்கியழிப்பு: ஒருவர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 19 ஒக்ரோபர் 2008, 09:20 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள கதிர்காமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் ஒன்று அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கதிர்காமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் ஒன்று அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதல் அணியினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அக்காவலரணில் இருந்து ஆயுதங்களும் அடையாளம்…

    • 0 replies
    • 635 views
  6. "போரில் எந்தவொரு பிரதேசத்தையும் கைப்பற்றுவதை விட அதைப் பாதுகாப்பதே முக்கியமானது. ஏனென்றால் அந்தப் போரின் வெற்றியை தக்க வைப்பதில் தான் தங்கியிருக் கிறது' என்று போரியல் வல்லுனர்களால் கூறப் படுவதுண்டு. இப்போது வன்னியல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் படைத்தரப்பு பெரும் பிரதேசத்தை கைப்பற்றியிருக்கின்ற போதும் அதைத் தக்கவைப்பதில் வெற்றி பெறுமாஎன்பது முக்கிய கேள்வியாக உள்ளது. காரணம், தக்கவைப்பதென்பது சுலபமான தல்ல. அதற்கென தனியான படைப்பிரிவுகள் தேவை. பாதுகாப்புக் கொள்கைகள் தேவை. தக்கவைத்ததை உறுதிப்படுத்துவதற்கு எதிர்த் தரப்பின் ஊடுருவல்களை முற்றாகக் கட்டுப் படுத்த வேண்டியது அவசியம். இந்தவிடயத்தில் அரசபடைகள் திணறுவதையே அண்மைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. வன்ன…

  7. இலங்கை யுத்தம் உறுமுகிறது இந்தியா * ஆனால் முடிவு என்ன? விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையை தடுத்துநிறுத்துவதற்கான இந்தியாவின் அரசியல் அழுத்தம் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தில் அதிகளவு மாற்றத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், ஆசியாவின் நீண்டகாலக் கிளர்ச்சிகளிலொன்றான இந்தப் பிரச்சினையை தன்னால் முடிவுக்கு கொண்டுவர முடியுமென்று இலங்கை அரசு அதிகளவுக்கு நம்புகின்றது. உள்நாட்டில் தமிழ் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் 1980 களில் மேற்கொண்ட அனர்த்தத்தை ஏற்படுத்திய தலையீட்டை திரும்பவும் மேற்கொள்ள இந்தியா தயங்குவதுடன் இராணுவ நடவடிக்கையை இலங்கை சுதந்திரமாக முன்னெடுக்க விட்டுள்ளது. இந்த இராணுவ நடவடிக்கையானது ஜனாதிபதி மகிந்த ராஜப…

    • 0 replies
    • 884 views
  8. http://img264.imageshack.us/my.php?image=vannimakkalpl1.jpg நன்றி : தினக்குரல்

  9. மஹிந்தவின் விசேட பிரதிநிதியாக இந்தியாவிற்குச் செல்லும் குழுவில் நான் இடம் பெற மாட்டேன். என சங்கரி தெரிவித்துள்ளார். இலங்கை விடயங்கள் குறித்த உண்மைகளைத் தெளிவு படுத்துவதற்காவும், இலங்கை தொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள கவலைகளைப் போக்குவதற்காகவும், தமது விசேட பிரதிநிதி ஒருவரை விரைவில் புதுடில்லிக்கு அனுப்பவுள்ளதாக மஹிந்த இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். எனினும் தற்போது ஏழு பேர் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தற்போதைய நிலவரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கிய குழுவொன்றை அடுத்த சில தினங்களில் இந்தியாவிற்கு அனுப்புவதற்காக நடவடிக்கைகளை …

  10. 'த.தே.கூட்டமைப்பு நாhடளுன்று உறுப்பனர்கள் துப்பாக்கிப் பலத்தில் நடாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவில்லை. மக்கள் பலத்தினால் தமிழ் தேசியப்பற்றினால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டோம்.' என்று மட்டு. மாவட்ட பா.உ பாக்கியசெல்வம் அரியநேத்திரன் குறிப்பிட்டார் ஜாதிக ஹெல உறுமையவின் சம்பிக்க ரணவக்க, த.தே.கூட்டமைப்பு பா.உக்கள் துப்பாக்கி பலத்தின் மூலம் நாடாளுன்று உறுப்பினர்களாக வந்தனர் என்ற கூற்றிற்கு பதிலளிக்கு முகமாகவே அரியநேத்திரன் மேற்கண்டவாறு கூறினார். த.தே.கூட்டமைப்பு பா.உக்களை கைது செய்யப்படுவதை இட்டு கவலை அடையவோ, அச்சம் அடையவோ போவதில்லை. சம்பிகவின் சலசலப்பிற்கு அடங்கி விட நாம் மண் பொம்மைகள் அல்ல. இனப்பற்றுடனும், மொழிப்பற்றுடனும், மண்பற்று…

  11. தமிழகத்து மக்கள் எல்லோருமே எழுச்சி கொள்ளும் வகையில் நீங்கள் எழுந்து நிற்பதை நன்றியோடு பார்க்கின்றோம் என தமிழக மாணவ உறவுகளுக்கு தாயகத்தில் உள்ள தமிழ் மாணவர் ஒன்றியம் நன்றி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 655 views
  12. பூநகரியில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணி கிளைமோர் தாக்குதல்: அப்பாவி பொதுமகன் பலி; இருவர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 19 ஒக்ரோபர் 2008, 06:14 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் உள்ள வலைப்பாட்டில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். வலைப்பாட்டு பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் உழுவூர்தியில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களை இலக்கு வைத்து ஆழ ஊடுருவும் அணி இக்கிளைமோர் தாக்குதலை நடத்தியது. இதில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிறுவனும் பெண்ணும் ஆவர். கிளிநொச்சி நகரில்…

    • 0 replies
    • 556 views
  13. 42 நாடுகளிலே கிளை பரப்பிப் பணி செய்யும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தினர் ஈழத்தமிழரின் விடுதலைக்காக உழைக்கும் வைகோவிற்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றார்கள். பேரன்பிற்குரிய மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் உயர்திரு வை. கோபாலசாமி அவர்கள் தமிழ்நாடு இந்தியா. வணக்கம். நலமுடன் வாழ்க பல்லாண்டு. ஈழத்தவரின் நல்வாழ்வே தங்கள் வாழ்வின் இலட்சியம் என வாழும் தங்களுக்கு இன்றைய எமது நிலைபற்றி விபரமாக எழுத வேண்டியதில்லை. தமிழீழம் மலரவுள்ள நேரம். எதிரிகளும் முழுமூச்சாக இயங்குகின்றனர். இந்தியா உட்படப் பல உலக நாடுகள் கபட நாடகம் ஆடுகின்றனர். இரட்டை வேடம் போட்டு நடிக்கின்றனர். இந்திய நடுவண் அரசினருடைய இரட்டை வேடத்தைக் கலைக்கவும் அவர்களை நெறிப்ப…

  14. பிரதமர் மன்மோகன் சிங்குடன் சிறீலங்கா அதிபர் தொலைபேசியில் பேச்சு திகதி: 18.10.2008 // தமிழீழம் // [சோழன்] சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சனிக்கிழமை மாலை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இத்தகவலை இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக கொங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுக்களின் போது தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்போது இந்தியாவில் குறிப்பாக தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பைக் குறிப்பிட்டு, உடனடியாக இராணுவத் தாக்குதலை நிறுத்தும…

  15. இன்னொரு நாட்டின் பிரச்சனையில் நாம் தலையிட முடியாது என்றால் வங்காளதேசம் எப்படி உருவானது என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி கேள்வி: எம்பிக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்கள். இதை மத்திய அரசு எப்படி எடுத்துக் கொள்ளும் என்று நினைக்கிறீர்கள்? கருணாநிதி: நாங்கள் எதிர்பார்த்ததைத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றினோம். அந்தத் தீர்மானத்தைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். கேள்வி: வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியை அழைத்து தனது கவலையை தெரிவித்திருக்கிறாரே? பிரதமரும் தனது கவலையை சொல்லி இருக்கிறாரே? கருணாநிதி: அது சரியானது…

    • 0 replies
    • 1.5k views
  16. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பூரண ஆதரவு – ரஸ்யா பயங்கரவாத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டும் போராட்டத்திற்கு ரஸ்ய அரசாங்கம் பூரண ஆதரவு வழங்கும் என உறுதியளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அண்மையில் ரஸ்யாவிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் அன்டோலி செர்டிக்யொவ் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் ரஸ்யாவிற்கு விஜயம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை படையினருக்கு இராணுவ தொழில்நுட்பம் உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்க ரஸ்ய அரசாங்கம் உற…

    • 0 replies
    • 1.4k views
  17. விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அராங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க மத்தியஸ்தம் வகிக்க தாம் தயாராக உள்ளதாக வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தாபகரும், உலகின் முன்னணி ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ ரீதியான முன்நகர்வுகளினால் ஒருபோதும் இலங்கைப் பிரச்சினையை தீர்க்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேச்சுவர்hத்தைகளை மேற்கொள்வது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த மூன்று வருட காலமாக அழைப்பு விடுப்பதகாவும் அதற்கு உரிய பதில் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு…

    • 1 reply
    • 1.6k views
  18. தாயக நிகழ்வுகள் தாங்கி வெளிவந்துவிட்டது "களத்தில்..." இறுவட்டு [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 10:17 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தாயகத்தில் நிகழ்கின்ற போரியல், அரசியல், மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தாங்கிய "களத்தில்..." காணொளி இறுவட்டு வெளிவந்துள்ளது. வெளிவந்திருக்கும் முதலாவது இறுவட்டில் இருவார நிகழ்வுகள் அடங்கிய காணொளி காட்சிகளுடன் கடந்த செப்ரெம்பர் மாதம் 9 ஆம் நாள் வவுனியா சிறிலங்கா படைத்தளம் மீது கரும்புலிகள் நடத்திய தாக்குதல் சிறப்பு பார்வையாக இடம்பெற்றுள்ளது. இந்த இறுவட்டு அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவின் வெளியீடாகும். இறுவட்டுக்களைப் பெற விரும்புவோர் அந்த அந்த நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனைக…

    • 0 replies
    • 1.2k views
  19. ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் கொடூர தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 901 views
  20. எமக்காக தொடர்ந்து உரத்து குரல் கொடுங்கள்: அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்திடம் நோர்வே தமிழ் கல்விக்கூடங்கள் வேண்டுகோள் [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 07:15 பி.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] எமக்காக தொடர்ந்து உரத்து குரல் கொடுங்கள் என்று அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு பிரிவிடம் நோர்வேயில் உள்ள அனைத்து அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட வளாகங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பில் நோர்வேயில் உள்ள அனைத்து அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட வளாகங்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திரு.திருமலை தமிழ்நாடு மாநில தலைவர் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் 16.10.2008 அன்புடையீர்! கடந்த புதன்கிழமை தாங்…

    • 0 replies
    • 588 views
  21. விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் மோதல்களை நிறுத்துமாறு தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் கொடுத்துவரும் அழுத்தம் தொடர்பாக விளிப்புணர்வு ஏற்படுத்தும் பௌத்தர்கள் மாநாடொன்றை நடத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. தேசப்பற்றாளர்கள் அனைவரையும் இணைத்து இந்த மாநாட்டை நடத்த அக்கட்சி தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகிறது. சுதந்திர நாடொன்றின் இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தமிழ் நாடு செயற்படுவது குறித்து கவனம் செலுத்தியிரு;பதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்களுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பது பற்றியும் தமது கட்சி ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார். அ…

  22. இலங்கையில் போர் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழகத்தில் அது தொடர்பாக பற்பல சரேல் திருப்பங்கள். முதலில் சி.பி.ஐ. கட்சி நடத்திய உண்ணாவிரதம். அதில் அ.தி.மு.க. தவிர்த்து பல முக்கிய கட்சிகள் முகம் காட்டின. அதைத் தொடர்ந்து மயிலை மாங்கொல்லையில் தி.மு.க. சார்பில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டம். அதன்பின் ம.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம். அதையடுத்து தி.மு.க. அரசு சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என ஏகப்பட்ட திடீர்த் திருப்பங்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இருபத்தேழு கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தும், அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. போன்றவை அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ``இலங்கையில் இன…

  23. ஜேர்மனியப் படைகளுக்கு ரஷ்யாவில் நேர்ந்த நிலை வன்னியில் சிறீலங்காப் படைக்கு நேரலாம் திகதி: 18.10.2008 // தமிழீழம் // [] ஜேர்மனின் சர்வாதிகாரி கிட்லரது படையினரால் 872 நாட்கள் சிறைவைக்கப்பட்டிருந்த ரஷ்ய படைகள் திடீரென தாக்குதல்களை மேற்கொண்டு வெற்றி கண்டதனைப் போன்று, தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறீலங்கா இராணுவத்தின் மீது அதிர்ச்சித் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். கேணல் ஹரிஹரன் இலங்கையில் இந்திய இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த காலத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கிளிநொச்சி நகரிலும் பணியாற்றியிருந்த இவர், கிளிநொச்சியில் விமான மூலம் தாக்குதல் நடத்தி அந்நகரைக் கைப்பற்றுவதென்பது…

  24. களமுனைக்கு வெளியே நகரும் போர்.-லண்டனிலிருந்து வன்னியன் சனி, 18 அக்டோபர் 2008, 05:40 மணி தமிழீழம் [] தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் போராட்டம் ஒரு இராணுவ நெருக்கடி மிகுந்த காலகட்டத்தினுள் பிரவேசிக்கின்ற போதோ அல்லது இனப்படுகொலை மிகத்தீவிரமடைகின்ற போதெல்லாம் ஈழத்தமிழினத்தையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தினையும் பாதுகாப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான வெகுஜனப் போராட்டங்களை நிகழ்த்தி ஒரு தற்காலிக சர்வதேச அழுத்தத்தினை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தி இனப்படுகொலையின் தீரத்தை தணிப்பதும் அது பின்னர் மறக்கப்படுவதும் வழக்கமாகியிருந்தது. ஆனால் கடந்தகாலங்களில் நிகழ்ந்த வெகுஜனப் போராட்டங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்ததைவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.