Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியிலிருந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெயர்ந்த மக்கள் நடத்திய தொடர் வீதிமறியல் போராட்டங்களைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வெளியேறும் முயற்சிகளை அரசசார்பற்ற நிறுவனங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன. மோதல்கள் உக்கிரமடைந்திருப்பதால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கமுடியாதெனக் கூறி வன்னியில் செயற்பட்டுவரும் அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை ஏற்று ஐ.நா. மனித உரிமை ஸ்தாபனங்கள் உட்பட பல அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேற ஆரம்பித்தன. எனினும், ஐ.நா. ஸ்தாபனங்கள் உள்ளிட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேறவிடாது வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பொதுமக்கள் வீதி மறியல் போரா…

  2. வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ள டக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. கடந்த செவ்வாயன்று (09) அதிகாலை வேளையில் புலிகளின் கரும்புலிக் கொமாண்டோக்கள் வன்னிப் படைத்தலைமையகத்தினுள் புகுந்து நடத்திய தாக்குதல், அதற்குத் துணையாக புலிகளின் வான்படை நடத்திய குண்டுவீச்சு, கிட்டு பீரங்கிப் படையணி நடத்திய அகோர ஆட்டிலறித் தாக்குதல் என்பன வவுனியாவையே கிலிகொள்ள வைத்தது. திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிலவு மறைந்துவிட இருள் கவ்விக் கொண்டது. அந்த இருளோடு இருளாக கரும்புலிக் கொமாண்டோ அணியொன்று வவுனியா நகருக்குத் தென…

  3. காரணம் எதுவுமின்றி தலைநகர் கொழும்பில் தங்கியிருக்கும் பெரும் எண்ணிக்கையிலானோரினால் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எவ்வித காரணமுமின்றி கொழும்பு காவற்துறைப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலானோர் தங்கியிருந்ததாகத் பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 6950 பேர் எவ்வித காரணமும் இன்றி கொழும்பில் உள்ள தற்காலிக விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை வழமைக்கு மாறானது, உண்மையில் இவ்வாறான சூழ்நிலைகளின் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்…

  4. பிரி"கேடி"யன் உதய நாணயக்காரனின் மிரட்டல்....... ஆதாரம் வீரகேசரி

  5. கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படுகிற பிள்ளையான் தனது மூத்த ஆலோசகர் டொக்ரர் விக்கினேஸ்வரனின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கலாநிதி விக்னேஸ்வரன் முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளராகப் பதவி வகித்தவர். கிழக்கிற்கான மாகாண சபை அமைக்கப்பட்டவுடன் முதல் மூன்று மாதங்களுக்கு அதன் செயலாராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது விக்னேஸ்வரன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் சார்பில் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்க்pறார். கலாநிதி; விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுடன் உள்ள நெருங்கிய தொடர்பு காரணமாக அவருடைய பதவிக்காலம் நீடிக்கப்படக் கூடாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா எனப்படு…

  6. வன்னியிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை உடனடியாக வெளியேற்றுவது இனக்குரூரத்தின் இன்னுமொரு உச்ச வெளிப்பாடாகும். சர்வதேச தொண்டு நிறுவனங்கள், தமிழ் மக்களை இடைநடுவில் கைவிட்டுச் சென்றால் அது பொறுப்பற்ற செயலாகும். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; இலங்கையில் தமிழர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் சிங்கள அரசினால் கட்டவிழ்க்கப்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணப்பணி செய்துவந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னிப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு சிங்கள அரசு கட்டளை விடுத்துள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இக்கட்டளையானது தமிழ் ம…

    • 6 replies
    • 1.3k views
  7. இலங்கைப் போரில் இந்தியப் படை? இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான யுத்தம், புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. 'இலங்கை ராணுவம் தமிழர் பகுதி களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்தத் தமிழர் பகுதிகளும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். விடுதலைப்புலிகள் முற்றாக அழித்தொழிக்கப் படுவார்கள்' என்று தொடர்ந்து இலங்கை அரசு பிரசாரம் செய்து வருகிறது. இங்கே கிடைக்கின்ற செய்திகளும் ஒருதலைப் பட்சமானவையாகவே இருப்பதால், உண்மை நிலவரம் எதுவென்று நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால் இலங்கை அரசின் பிரசாரத்தை உண்மையென்று நாமும் நம்புகிற சூழல்! இதற்கிடையே, இலங்கையின் தலைநகரான கொழும்ப…

  8. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இந்தியாவுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் உயிரிழ்ந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  10. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி பகுதியில் சிறிலங்கா வான்படை இடம்பெயர்ந்த மக்கள் மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  11. யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா கடற்படையினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதில் மீன்பிடிப்படகு முற்றாக நீரில் மூழ்கடிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  12. சிறிலங்கா அரச படைகள் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வன்னிப்பிரதேசத்தின் மீது பெருமெடுப்பிலான படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அனைத்துலக நிறுவனங்களின் வெளியேற்றம் மோசமான செயல் என்று முல்லைத்தீவு மேற்கு பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  13. இந்தியக் கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதன் பின்னர் இவர்கள் காசி மேடு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த 7 மீனவர்களும் மாவட்ட ஆட்சியாளரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியாளர், இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டதன் பின்னர், இன்று காலை இவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/view.php?2aIWnfe0d...d436QV2b02ZLu3e

  14. படை நடவடிக்கை காரணமாக தென் தமிழீழத்தின் மூதூர் கிழக்கில் உள்ள கட்டைப்பறிச்சான்இ சேனையூர் கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளை உடைத்து ஜன்னல்கள்இ கதவுகள்இ ஓடுகள் போன்ற பொருட்களை சிறிலங்கா இராணுவத்தினர் எடுத்துச்செல்வதாக மக்கள் முறையிட்டுள்ளனர். குறித்த கிராம சேகவர் பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக திருகோணமலை செயலக அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன்இ துரைரட்ணசிங்கம் ஆகியோருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதுஇ வீடுகள் …

  15. நா‌‌ங்க‌ள் ஆட்சிக்கு வந்தால் ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் தமிழ் ஈழம் மலரும்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். பா.ம.க. சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை ‌வியாச‌ர்பாடி‌யி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த பொது‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து ராமதா‌ஸ் பேசுகை‌யி‌ல், பா.ம.க. 7 ஆண்டுகளாக பொறுப்புள்ள எதிர்‌க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ‌எ‌ங்களை போ‌ல் எந்த கட்சியும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது இல்லை. தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி வரு‌கிறோ‌ம். அதை அவ‌ர்க‌ளா‌ல் ஏ‌ற்று‌க் கொ‌ள்ள முடிய‌வி‌ல்லை. இலவச பொருட்களை கொடுப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்ல கல்வியை கொடுங்கள். நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். வன்முறை கலாசாரம், கட் அவுட் கலாசாரம், காலில் விழும் கலாச…

  16. விடுதலைப் புலிகள் தலைவரின் வல்வெட்டித்துறை வீடு சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதம் [வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2008, 04:57 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு நேற்று முன்நாள் நண்பகல் சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டுக்கு நேற்று முன்நாள் புதன்கிழமை நண்பகல் சென்ற சிறிலங்கா இராணுவ அணியொன்றே வீ…

  17. கஸ்டத்தை எதிர்நோக்கி உள்ள மிஹின் லங்கா விமான சேவையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் இம்முறை வரவுசெலவு திட்டத்தில் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவை கோரியுள்ளதாக விமான சேவை அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். அதேவேளை மிஹின் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக ஹேமலால் தல்கஸ்வத்த, இலங்கை பூமிபுத்ர அபிவிருத்தி வங்கியின் தலைவர் சரத் சில்வா, விமானப்படைத் தளபதி ரொஸான் குணதிலக்க, ஸந்தன லியபட்டபெந்தி, நிதியமைச்சின் சார்பில் கலாநிதி சமரதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்…

  18. மட்டக்களப்பில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் 4 பொலிஸார் காயம் 9/13/2008 10:28:50 AM - மட்டக்களப்பு வெலாவெளிப்பகுதியில் பொலிஸ் வாகனத்தை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை காலை 9.40 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் காயமடைந்த பொலிஸார் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

  19. யாழ் குடாநாட்டில் நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீடி.எம்.ஏ.தொலைபேசிச் சேவைகள் பகுதி பகுதியாக வழமைக்குத் திரும்பியிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதி பெற்ற சீ.டி.எம்.ஏ.தொலைபேசிப் பாவனையாளர்களின் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டிருப்பதுடன், சில பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் இழுபறிநிலை காணப்படுவதாக குடாநாட்டு மக்கள் கூறுகின்றனர். பொலிஸ் நிலையங்களில் அனுமதி பெறச் செல்லும்போது பொலிஸார் நாட்களை இழுத்தடிப்பதாக சீ.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர் ஒருவர் கூறினார். எந்தவித முன்னறிவுப்புக்களும் இன்றி யாழ் குடாநாடு மற்றும் மன்னார் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுவந்த சீ.டி.எம்.ஏ.தொலைபேசிகள் யாவும் துண்டிக்…

  20. தமிழனத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னியிலிருந்து ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனங்கள் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளியேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியின் மூலம் இது தெளிவாகியுள்ளதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வெளியேற்றத்திற்கு எதிராக வன்னிச் சிவிலியன்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்னிச் சிவிலியன்கள் பல்வ…

  21. யாழ் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனு விரைவில் கோரப்படும் - டலஸ் அழகப்பெரும யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் மாநகரசபை உள்ளிட்ட சகல உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை நடத்த இம்மாதம் வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களைப் பகுதி பகுதியாக நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகப் பிரச்சார பிரிவுத் தலைவர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான புதிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது நன்றி தமிழ் வின்

  22. யுத்தம் காரணமாகப் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸார் மக்கள் தொடர்பைப் பேண வேண்டியது மிகவும் முக்கியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டில் கௌரவமான பொலிஸ் சேவை என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக ஆயுதங்களுடன் மக்கள் மத்தியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகப் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/view.php?2aIWnfe0d...d436QV2b02ZLu3e

  23. மொனராகலை காட்டுப் பகுதிகளுக்குச் செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளார் தெரிவித்துள்ளார். மொனராகலை கொட்டியாகலை பிரதேசத்தைச் சேர்ந்த சில பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதுள்ள பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பொதுமக்கள் மொனராகலைக் காட்டுப் பகுதிக்குச் செல்லக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். tamilwin.com

  24. இலங்கையின் தென் பகுதிகளில் நாணயமாற்று சேவைகளை நடத்தி வருவோர் விடுதலைப்புலிகளின் பணத்தை பெருமளவில் மாற்றம் செய்துள்ளதாக புலனாய்வுதுறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் நாணயமாற்றுனர்கள் ஊடாகவே தமக்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது. கொழும்புக்கு வரும் விடுதலைப்புலிகள் தமக்குப் பணம் தேவையென கிளிநொச்சியில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு அறிவிப்பதுடன், கிளிநொச்சியில் உள்ள புலிகள் வெளிநாட்டில் உள்ள பிரதிநிதி ஊடாக நாணயமாற்றுனர்களுக்கு பணத்தை அனுப்பி, அதனுடாக பெற்றுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பில் உள்ள முஸ்லீம் பதாள உல…

  25. அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னிப் பகுதியிலிருந்து வெளியேறியிருப்பதானது மனிதாபிமான நடவடிக்கைகளைப் பாதிக்கும் அதேவேளை, தாக்குதல்களிலிருந்து தப்பிக் கொள்வதற்கான பாதுகாப்பு இடங்களையும் இல்லாமல் செய்திருப்பதாக வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேறக்கூடாதெனக் கூறி அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திப் பகுதியிலுள்ள யு.என்.எச்.சீ.ஆர். அலுவலகத்துக்கு முன்னால் ஒன்றுதிரண்ட மக்கள் வாகனங்கள் எதுவும் வெளியில் செல்லமுடியாதவாறு நுழைவாயிலில் மறியல்களையிட்டு வீதியில் அமர்ந்திருந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, வன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.