ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
சிறிலங்காப் படையின் 57 ஆவது டிவிசன் படையணி மீது பாரிய தாக்குதலினை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சிறப்பு படையணிகளை கிளிநொச்சியில் குவித்திருப்பதாக படைத்துறை ஆய்வு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்காப் படையின் சகல படையிணிகள் மீதும் தாக்குதல் நடத்த முடியாவிட்டாலும், வலிந்த தாக்குதலை மேற்கொண்டு வரும் முக்கிய படையணியான 57 ஆவது டிவிசன் மீது பாரிய தாக்குதலினை நடத்தி, சிறிலங்காப் படையணிகளின் மத்தியில் தற்போது அதிகரித்துள்ள மன உறுதியை உடைக்கும் வகையில் விடுதலைப் புலிகள் தமது காய்களை நகர்த்தி வருகின்றனர். இதற்காக, மணலாறு பகுதியிலிருந்து தமது மோட்டார் படையணியை கிளிநொச்சிக்கு கொண்டு…
-
- 10 replies
- 3.1k views
-
-
அம்பாறை, கல்முனையில் தாயும் மகனும் வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனை வீதியிலுள்ள இவர்களது வீட்டிற்கு நேற்று அதிகாலை 1:30 அளவில் சென்ற ஆயுத நபர்கள் இவர்களைக் கடத்திச் சென்றனர். 40 அகவையுடைய நவரத்தினம் மஞ்சுளா, உயர்தரப் பரீட்சையில் தோற்றும் அவரது மகனான 18 அகவையுடைய நவரத்தினம் கலைவாணன் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்திச் செல்லப்பட்ட வீட்டில் இருந்து 75 மீற்றர் தொலைவில் துணைப்படைக் குழு ஒன்றின் முகாம் அமைந்திருக்கின்றது. nitharsanam: கல்முனையில் சார்க் அமைப்பின் தலைவரின் அம்பாறை இணைப்பாளரால் தாயும் மகனும் கடத்தல்!!
-
- 0 replies
- 989 views
-
-
பாரிய வியாபாரமாக யுத்தம் இன்று நாட்டில் மாறியுள்ளது - எதிர்க்கட்சி தலைவர் ரணில் கவலை வீரகேசரி நாளேடு 8/20/2008 11:06:24 PM - யுத்தம் இன்று பாரிய வியாபாரமாக இலங்கையில் மாறியுள்ளது. யுத்தத்தை தொடர்வதற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த கோருகிறார். யுத்தம் வியாபாரமாக பரிணமிக்கும் பட்சத்தில் மக்களின் நலன் குறித்து எவரும் சிந்திக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யுத்தத்துக்காக அரசாங்கமும் பசி பட்டினியின்றி மீண்டும் நிம்மதியான சூழ்நிலையை ஏற்படுத்த நாமும் வாக்குக் கோருகிறோம். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இரத்தினபுரி நகரில் இன்று நடைபெற்ற ஐ.தே.க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போ…
-
- 3 replies
- 946 views
-
-
தேர்தல் கடமைகளுக்காக 21000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களுக்காக சுமார் 21000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் 23ம் திகதி இரு மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறவுள்ளது. நன்றி தமிழ் வின்
-
- 0 replies
- 587 views
-
-
பனாகொடை இராணுவ முகாமில் படைவீரர் தற்கொலை பனாகொடை இராணுவ முகாமின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த லான்ஸ் கோப்ரல் ஒருவர் கடமை நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த படைவீரர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும்இ அண்மைக்காலமாக இராணுவ முகாம்களில் கடமையில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நன்றி தமிழ் வின்
-
- 0 replies
- 981 views
-
-
படைவீரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமானால் ஐ.தே.க விற்கு வாக்களிக்கவும் - ஜானக பெரேரா வடக்கில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படைவீரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கவும் என மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மாத்திரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நன்றி தமிழ் வின்
-
- 0 replies
- 713 views
-
-
மக்கள் பலத்தின் ஊடாகத்தான் நாங்கள் ஒரு பலமான தேசிய விடுதலை இயக்கமாக வளர்த்துள்ளோம். சிங்களப்பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதைமுகம்கொடுத்து வெற்றிகொள்ள மக்கள் எங்களுக்குப் பலமாக இருப்பார்கள். கடந்த போராட்ட காலத்தை பின்நோக்கிப்பார்த்தால் இது தெரியும் என தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற தேசிய போரெழுச்சிக்குழுவின் பேராளர்களின் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்போராட்டத்தின் முக்கிய காலகட்டங்களில் மக்கள் பலமாகஇ கவசமாக இருந்தமையால்தான் எங்களுடைய விடுதலை இயக்கம் உலகம் முழுக்கப் பேசப்படுகின்ற தேசி யவிடுதலை இயக்கமாக வளர்ந்ததிருக்கின்றது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
அதிகாரத்துக்கு வர உதவிய ஜனநாயகத்தை மீறலாமா? 21.08.2008 மரணங்கள் மலிந்த பூமியாகி விட்டது இலங்கைத் தீவு. ஆட்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், படுகொலைகள், கப்பம் அறவிடல், காணாமற் போகச் செய்தல் என்று மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெறும் அராஜக தேசம் என்ற பெருமையை இலங்கை ஈட்டிக் கொண்டுள்ளது. தலைநகர் கொழும்பில் இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற "சார்க்' உச்சிமாநாட்டை ஒட்டி சர்வதேசத்தின் முழுக் கவனமும் இலங்கை பக்கம் திரும்பியிருந்தது. அக் காரணத்தினால் இலங்கையில் வெகுவாகக் குறைந்திருந்த ஆட்கடத்தல்கள், வெள்ளைவான் அட்டகாசங்கள், காணாமற் போகச் செய்தல் போன்ற பிரச்சினைகள் இப்போது, "சார்க்' மாநாடு முடிவடைந்தமையை அடுத்து, மீண்டும் தலைநகரிலும், பிற இடங்களிலும் பரவலாகத் தலைதூக்க ஆரம…
-
- 0 replies
- 669 views
-
-
இலங்கை விமானப்படையினரின் MI-24 ரக வானூர்திகள் வவுனியா ஓமந்தைப்பகுதியிலுள்ள விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இன்று காலை விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6.30 மனியளவில் விமானப்படையினரின் MI-24 ரக வானூர்திகள் விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடத்தை நோக்கி விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. http://www.virakesari.lk http://puspaviji13.net84.net/
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலை பாலம்போட்டாறு பகுதியில் வயோதிப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்..இளஞ்செழியன் 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கி புதன்கிழமை தீர்ப்பளி்ததுள்ளார். சீருடையில் - ஆயுதத்துடன் ரோந்து நடவடி்க்கையில் ஈடுபட்டிருந்த வேளை - பாலம்போட்டாறு பத்தினிபுரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபப் பெண்ணைக் கையில் பிடித்து இழுத்து தூக்கிச் சென்று பற்றையில் வைத்து பாலியல் வல்லுறவு கொண்டதாக இராணுவ லான்ஸ் கோப்ரல் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சிங்ககந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இந்த இராணுவ உத்தி…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பு, அம்பாறை பகுதிகளில் ஏற்பட்டுள்ள படை வெற்றிடத்தை நிரப்ப காவல்துறை கொமாண்டோ அணி [வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 10:32 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] வடபோர்முனைக்கு பெருமளவான சிறிலங்காப் படையினர் நகர்த்தப்பட்டிருப்பதால் சிறிலங்காவின் தென்பகுதியில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலையும் அம்பாறையில் ஏற்பட்டுள்ள புலிகளின் அதிரடி தாக்குதல்களையும் முறியடிப்பதற்கு சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு செயலணிப்படையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கொமாண்டோக்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று தெரியவருகிறது. இது பற்றி தெரியவருவதாவது: சிறிலங்கா இராணுவத்தின் களுத்துறை பயிற்சி பள்ளியில் தமது பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு வெளியேறியுள்ள இந்த சிறப்பு செயலணிப்படை கொமாண்ட…
-
- 0 replies
- 705 views
-
-
முன்னாள் இந்தியப;பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்ததோடு விரைவாக பதில் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஏ.நாகமுத்து முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி இவ்வழக்கில் தலைமை வழக்கறிஞர் இன்று வரவில்லை என்பதால் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி 2 ஆண்டுகள…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவில் நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதனை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 553 views
-
-
ஐ.தே.க. அநுராதபுர அலுவலகம் தீவைத்து எரிப்பு Wednesday, 20 August 2008 மாகாண சபைத் தேர்தல்களுக்கான பிரச்சாரங்கள் இன்றிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில் வட மத்திய மாகாண சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுர அலுவலகம் இன்று புதன்கிழமை இரவு இனந்தெரியாத குழு ஒன்றினால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 7.30 மணியளவில் வாகனங்களில் வந்திறங்கிய ஆயுதந்தாங்கிய குழு ஒன்றே கட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு அலுவலகத்துக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு அநுராதபுரம் நகரில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய இச்சம்பவத்தின் போது தொடர்ச்சியான துப்பாக்கிச்…
-
- 0 replies
- 756 views
-
-
ஒஸ்ஸேத்திய போரின் பின்புலத்தின் இருக்கும் அரசியலை எல்லாம் தள்ளி வைத்து விடுவோம்..... ஜான் மெக்கெயினை ஜெயிக்க வைக்க நடக்கும் சூழ்ச்சி என்ற சொல்லாடலையும் தள்ளி வைத்து விடுவோம்... இந்தப்போர் மூலம் உலகிற்கு ரஷியா சொல்லவிரும்பும் சேதி என்ன என்ற ஆராய்ச்சியையும் கொஞ்சம் தள்ளி வைத்து விடுவோம்!!! இந்த சூழலையும் , நமது நாட்டிற்கும் , நமது தமிழினத்திற்குமான சூழலையும் தொடர்புபடுத்தி ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.......ஜார்ஜியாவை சிங்களமாகவும் , ஈழத்தை ஒஸ்ஸேத்தியாவகவும் , ருஷ்யாவை இந்தியாவாகவும் நாம் கற்பனை செய்து கொள்வோம்....... ஒஸ்ஸேத்திய பிரச்சினையும் , ஈழப்பிரச்சினையும் கால அளவில் வித்தியாசப்பட்டிருந்தாலும் , மிகப்பெரிய அளவில் பிரச்சினைகளின் தாக்கம் வே…
-
- 3 replies
- 1.9k views
-
-
யாழ் மருத்துவமனையும் படை மயமாக்கல் புதன், 20 ஆகஸ்ட் 2008 [தாயகன்] யாழ் மருத்துவமனையையும் படை மயமாக்கல் முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதால், நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் பெருமளவிலான சிறீலங்கா படையினர் காயமடைந்துவருவதால், அவர்களைப் பராமரிக்க யாழ் மருத்துவமனையில் தனியான பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதார அமைச்சர், மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதற்கான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என, யாழ் மருத்துவ அதிகாரி ஒருவர் பதிவுக்க…
-
- 0 replies
- 950 views
-
-
வீரகேசரி இணையம் 8/20/2008 6:34:32 PM - ""ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை நாங்கள் ஒரு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்." ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். ஆனால் அவர்களின் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை '' என்கிறார் பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் திருமதி தமிழிசை சவுந்தரராசன். இவர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் அவர்களின் வாரிசு. மருத்துவத்தை பயின்று, நோயாளிகளின் துயரை துடைத்துக் கொண்டே, தந்தையிடம் அரசியலையும் கற்றவர். பாரதீய ஜனதா கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அதில் தன்னை இணைத்துக்கொண்டவர். தமிழ் மொழிப் பற்றும், இன உணர்வும் மிக்கவர். அவர் கேசரிக்கு வழங்கிய விசேட பேட்டி...< << * சமீபத்தில் கொழும்புவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில்…
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பு புதுச்செட்டித்தெரு 70/27ஆம் இலக்கத்தில் வசித்து வந்த யாழ்.நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராஜா பாலகுமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு கடற்படையினரால் இழுத்துச் செல்லப்பட்டு பின் இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் சென்ற தமிழ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார் என அவரது மனைவியான ரோகினி பாலகுமார் முறைப்பாடு செய்துள்ளார். வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டில் கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வீட்டுச் சோதனைக்காக பிரவேசித்த கடற்படைச் சிப்பாய்கள் தனது கணவரை தாக்கி இழுத்துச்ச…
-
- 1 reply
- 1.6k views
-
-
காட்டு பலம் காட்டி சம்பூரை பிடித்தவர்கள் வீரியங்கள் தாம் பேசி விரைந்தனர் வன்னி நோக்கி காரியங்கள் கைமீறி போகுதென்றே - சம்பூரை விட்டு பிரிகின்றார்; வீரியங்கள் என்னாச்சு அடர்ந்த கானகத்தின் எல்லையோர கிராமத்தின் ஒரு மாலை பொழுதில் இளைஞ்சன் ஒருவன் அங்கிருந்த குடிசை நோக்கி வருகிறான். பசி வந்தால் பத்தும் பறந்துபோவும் என்பார்களே அதனால் தானவோ என்னவோ அங்கிருந்த மூதாட்டியிடம் உணவு கேட்கின்றான். அடுக்களைக்கு செல்கிறால் பாட்டி, அங்கேயோ அனைத்தும் கழுவி கவிழ்திருக்கிறது மெல்ல திரும்பியவள், திருப்பி அனுப்பாமல், தின்பதற்க்கு சில பழம் கொடுத்து, சிறிது காத்திரு தம்பி, சூடான உணவை சுவையுடன் தருகிறேன் என்றே அகன்றாள் அவ்விடம் விட்டு அவன் பதில் மொழி கேளாமல். காத்திருந்தான் இளைஞன்…
-
- 7 replies
- 3k views
-
-
போராளிக் கலைஞர் லெப். நிலவன் வீரச்சாவு [புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2008, 06:21 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் போராளிக் கலைஞர் லெப். நிலவன் வீரச்சாவடைந்துள்ளார். புலிகளின் குரல் நிறுவனத்துடன் இணைந்து கலைப்பங்கு உள்ளிட்ட செயற்பாடுகளை முனைப்பாக மேற்கொண்டவர் லெப். நிலவன். சிறிலங்காப் படையினருக்கு எதிரான களங்களில் எதிரிக்கு எதிராக முனைப்பான தாக்குதல்களை இவர் நடத்தியிருந்தார். படையினரின் வலிந்த தாக்குதல்களுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்களில் இவர் முனைப்பான பங்கை ஆற்றியிருந்தார். புதினம்
-
- 11 replies
- 2k views
-
-
மக்கள் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பின் நிலை மஹிந்தவிற்கும் ஏற்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் வாக்குரிமையை ஜனாதிபதி பலவந்தமாகப் பறிக்க முற்பட்டால் முழு இலங்கை வாழ் மக்களதும் எதிர்ப்பலையைச் சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென அவர் தெரிவித்துள்ளார். படைவீரர்களுக்காக வாக்களிக்க வேணடுமாயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். புலிகளுடன் இரு…
-
- 0 replies
- 866 views
-
-
சிங்களப் பேரினவாதிகளுக்கு ஆளும் வர்க்கம் தொடர்ந்து வளைந்து கொடுப்பது தேசத் துரோகம் [20 - August - 2008] வ.திருநாவுக்கரசு கடந்த 10 ஆம் திகதி வெளிவந்த ""சன்டே லீடர்' ஆங்கில வார இதழுக்கு நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கிய விலாவாரியான செவ்வியில் ""பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு சிங்கள தீவிரவாதிகளே காரணம்' எனும் விடயத்தினை பிரதானமாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவரால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான இரண்டொரு அபிப்பிராயங்களை மேற்கோள்காட்டுவது அவசியமாகிறது. அதில் முதலாவது அம்சம் வருமாறு; "" நாம் 25 வருட காலமாக நடைபெற்று வந்த போராட்டத்தைப் பற்றிப் பேசுகின்றோம். இதனை நாம் இராணுவ அணுகுமுறையினூடாக வென்று விடக்கூடும். பயங்கரவா…
-
- 1 reply
- 923 views
-
-
எந்தவொரு தருணத்திலும் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கியுள்ள முக்கிய தளத்தின்மீது விமானப் படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் இவ்வாறு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் கூறினார் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது. விமானப்படைத் தளபதி மேலும் கூறியிருப்பவை வருமாறு:- தரைப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இத் தாக்குதல்கள் காரணமாகச் சிவிலியன்களுக்குப் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன எனப் பயங்கரவாதிகள் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். ஆனால் சிவிலியன்களுக்கு இழப்புகள் ஏற்படாமல் விமானப் படையினர் …
-
- 1 reply
- 1.5k views
-
-
சென்னை: தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியவில்லை என்றும் மத்தியில் 40 தமிழக எம்பிக்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறினார். அக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நடந்துது. அதில் டி.ராஜேந்தர் பேசியதாவது: லட்சிய திமுக தொடங்கி 5வது ஆண்டில் அஞ்சாமல் நடைபோடுகிறோம். இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் திமுகவில் இணைந்தேன். தமிழன் என்ற உணர்வு என்னிடம் உள்ளதால் இதை நான் செய்தேன். கன்னடர்களுக்கு இருக்கும் இன உணர்வு தமிழர்களுக்கு இல்லை. குலேசன் படத்தை கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்றால் ரஜினிகாந்த் ம…
-
- 0 replies
- 2k views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்க கிழக்கு மாகாணசபை தீர்மானம் [ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2008, 07:14.37 AM GMT +05:30 ] வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்க நேற்றைய கிழக்கு மாகாணசபை மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபை மாதாந்த அமர்வு நேற்று முதலமைச்சர் ச.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றபோது உறுப்பினர் இரா.துரைரட்ணம் இப்பிரேரணையைக் கொண்டு வந்தார். அதற்கு அமோக ஆதரவு கிடைத்தது. அதேவேளை 2006.12.31 க்குமுன் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த சகல பட்டதாரிகளுக்கும் ஆசிரியரல்லாத நியமனம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 பேருக்கு ஆசிரியரல்லாத வேறு பதவிகளுக்கு நியமனம் வழங்க கிழக்கு ம…
-
- 0 replies
- 1k views
-