ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கொழும்பில் இன்று தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 903 views
-
-
5 ஆம் வகுப்பு புலமைப் பரிசில் தேர்வில் 200 பேர் "0" மதிப்பெண்கள் [சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2008, 08:01 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவில் 5 ஆம் வகுப்பு புலமைப் பரிசில் தேர்வில் 200 பேர் சுழியம் (ஜீரோ) மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக பரிட்சை ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அனுர எதிரசிங்க கூறுகையில், மொத்தம் 2,65,000 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் 32 ஆயிரம் பேர் மேற்படிப்புக்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்றார் அவர். புதினம்
-
- 2 replies
- 1.3k views
-
-
வரலாற்றில் வடக்கு எதிர்கொள்ளாத பேரவலத்தை எதிர்கொள்ளும் வன்னி மக்கள்: மணலாறில் நிலைகொண்டுள்ள படையினர் மேற்கொண்டு வரும் தொடர் எறிகணை வீச்சினால் குமுழமுனை கிராம மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயரும் அப்பகுதி மக்கள் தற்போது முள்ளியவளை, முல்லைத்தீவு சிலாவத்தை, வற்றாப்பளைப், பகுதிகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். குமுழமுனை மகாவித்தியாலயம் தற்போது நீராவிப்பிட்டி கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரம், விசுவமடு, கண்டாவளை, புளியம்பொக்கணை, உடையார்கட்டு முதலான பகுதிகள் இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பி வழிகின்றன. மக்கள் வீதியோரங்களிலும், வயல்வெளிகளிலும், மரங்களின் கீழு…
-
- 5 replies
- 1.6k views
-
-
வவுனியாவில் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 610 views
-
-
டெய்லி மிறர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் சாரம்- வன்னியில் மோதல்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்குள்ள இடங்கள் மற்றும் அனைத்து விடயங்கள் பற்றியும் தகவல்கள் திரட்டப்பட்டு நன்கு திட்டமிடப்பட்டே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த இராணுவ நடவடிக்கைகள் திடீரென அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும் அவர் கூறினார். கிழக்கில் நடைபெற்றதைப் போன்று, வடக்கை நாம் முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் யாழ் குடாநாடு வலுவிழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாக டெய்லி மிறர் பத்திரிகையின் சகுந்தலா பெரேராவுடனான விசேட நேர்காணலின்போது கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கின் ஏனைய பகுதிகளும் விடுவிக…
-
- 3 replies
- 2.1k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திற்கான உணவுப் பொருள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உணவுப் பொருட்கள் எதுவும் வவுனியாவிலிருந்து அனுப்பப்படாததால் அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வன்னியிலிருந்து சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களும் அரசினால் வெளியேற்றப்பட்ட நிலையில், அங்கு அவற்றினால் மேற்கொள்ளப்பட்டுவந்த உணவுப் பொருள் விநியோகமும் நின்றுவிட்டது. இந்த நிலையில், சர்வதேச மற்றும் உள்நாட்டு தொண்டர் அமைப்புகள் மேற்கொண்டு வந்த உணவு விநியோகத்தையும் சேர்த்து அரசு மேற்கொள்ளுமென அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தபோத
-
- 3 replies
- 1.1k views
-
-
ஏறாவூர் தளவாய்யில் துணை இராணுவக்குழு மீது நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியனதுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நேற்று வெள்ளி இரவு 8.45 மணியளவில் தளவாயில் அமைந்துள்ள ஒட்டுக்குழுவினரின் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிலில் சென்ற ஆயுததாரியினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அலுவலக பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு உறுப்பினர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் 25 அகவையுடைய கோரகல்லிமடு கிரான் பகுதியைச் சேர்ந்த பி.உதயன், காயமடைந்தவர் 23 அகவையுடைய கிஸ்ணராசு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சடலம் செங்கலடி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. காயப்பட்டவர்கள மேலதி…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கை தொடர்பான அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டுக்கான அமெரிக்க காங்கிரஸ் பாதீட்டுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி உதவிகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. சர்வதேச விவகாரங்களுக்கான அமெரிக்க காங்கிரஸின் வரவு செலவுத் திட்டத்தில் வழமைக்கு மாறாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கான நிதி உதவிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சர்வதேச விவகாரங்களுக்கான அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் 2007ம் ஆண்டு 23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இம்முறை பாதீட்டுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி உதவி வெறும் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. 2007ம…
-
- 5 replies
- 2.1k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்திற்கென தற்போதுள்ள கொடியில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தனக்கு தேவையான வகையில் அவர் இந்த மாற்றத்தினை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் வரலாற்று ரீதியான கொடியில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் மாகாண மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிள்ளையானின் இந்த நடவடிக்கை ஈழ ராஜ்ஜியத்தை உருவாக்கும் ஒரு நடவடிக்கையே என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கொடியில் திருகோணமலை, அம்பாறை. மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களை குறிக்கும் …
-
- 8 replies
- 2.9k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஆஸ்ட்ரேலியாவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆர்ப்பாட்டம்! சிறிலங்கப் படையின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு சிறிலங்க அரசிற்கு ஆஸ்ட்ரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு முன்பும், அதற்கு அருகிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆஸ்ட்ரேலியாவில் உள்ள தமிழ் அமைப்புகளின் சார்பில் கான்பராவில் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பும், அதற்கு அருகிலுள்ள இந்தியத் தூதரகத்திற…
-
- 0 replies
- 717 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி மண்டான் பிரதேசத்தில் மனித எலும்புக் கூட்டுத் தொகுதியொன்று நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பிரதேசத்தில் ஆடு மாடுகளை மேய்த்த சிலர் எலும்புக் கூட்டைக் கண்டதாகவும் பின்னர் அது குறித்து நெல்லியடிப் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக் கூடு ஓர் ஆணின் எலும்புக் கூடாக இருக்கக் கூடும் எனவும்இ குறித்த நபர் 30 – 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கக் கூடும் எனவும் யாழ் போதனா வைத்திசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். பொலிஸார் மற்றும் மற்றும் சட்ட…
-
- 0 replies
- 722 views
-
-
ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23.09.08) திராவிடர் கழகத்தின் சார்பில் தொடரூந்து மறியல் போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 711 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கை வெளியீடு [சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2008, 05:57 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] தென் சுவீடனில் நடைபெற்று வரும் ஐரோப்பிய ஒன்றிய சமூகக் கூட்டமைப்பு - 2008 மாநாட்டில் சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான அறிக்கையை பிரான்ஸ் தமிழர் மையம் வெளியிட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் இம்மாநாடு கடந்த செப்ரெம்பர் 17 ஆம் நாள் தொடங்கியது. இம்மாநாட்டில் நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள், கலைநிகழ்வுகள், கலந்துரையாடல்கள், செயற்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் 21 ஆம் நாள் வரை இம்மாநாடு நடைபெற உள்ளது. ஸ்காண்டிநேவிய நாடுகள் உள…
-
- 0 replies
- 869 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கான உணவு விநியோகம் சிறிலங்கா அரசால் இடைநிறுத்தம் [சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2008, 04:26 மு.ப ஈழம்] [க.நித்தியா] வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்திற்கான உணவுப்பொருள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உணவுப்பொருட்கள் எதுவும் வவுனியாவிலிருந்து அனுப்பப்படாததால் அங்கு அத்தியாவசிய உணவுப் பொரட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களும் சிறிலங்கா அரசினால் வெளியேற்றப்பட்ட நிலையில், அங்கு அவற்றினால் மேற்கொள்ளப்பட்டு …
-
- 0 replies
- 699 views
-
-
சிங்கள உல்லாச பயணத்துறை அமைச்சர் மிலிந்த மொறகொட, உல்லாச பயணத்துறை பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா ஆகியோர் சகிதம் ஜப்பானுக்கு விஜயம் செய்திருக்கும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்ஸின் வருகையை டோக்கியோ நிர்வாகம் அரசு முறைப் பயணமாகக் கருதவில்லை என்று விடயமறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. இது, ஜப்பானைப் பார்ப்பதற்கு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் மேற்கொண்ட உல்லாச தனிப்பட்ட பயணம் என்றே ஜப்பான் நிர்வாகம் கருதுகின்றது என்று தெரிகின்றது. இந்த விஜயத்தின்போது, இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஷியைச் சந்திப்பதற்கு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்ஸுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க, சிங்கள அமைச்சர் மொறகொடவும், பிரதி அமைச்சர் முஸ்தபாவும் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை எ…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா இந்திய உணவுப்பொருட்களை வாங்குவோரின் கவனத்திர்கு Danish authorities strengthen quality control on South Asian groceries [TamilNet, Friday, 19 September 2008, 09:09 GMT] Danish food inspection authorities, on inspecting groceries selling oriental food products mainly from Sri Lanka and India, recently ordered a shop in Herning city to destroy all its food items and in the ensuing inspection on 5 September of two other shops in Grindsted where a large quantity of food items from Sri Lanka were seized on the assumption of illegal sales. A news release issued by the Danish Ministry of Food, Agriculture and Fisheries, said that the inspection on 5 Se…
-
- 0 replies
- 1.7k views
-
-
கொழும்பில் இரவு நேரம் காரில் சென்ற 3 தமிழ் மாணவர் உட்பட 5 பேரை காணவில்லை [சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2008, 01:16 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள பம்பலப்பிட்டிக்கு காரில் சென்ற மூன்று தமிழ் மாணவர்கள் உட்பட ஐந்து பேர் காருடன் காணாமல் போய் உள்ளதாக பெற்றோர் மருதானை, கொட்டாஞ்சேனை காவல் நிலையங்களிலும், பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடமும் முறையிட்டுள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த என்.ரஜீவ் (வயது 21), விஸ்வநாதன் பிரதீப் (வயது 17, இராமலிங்கம் திலகேஸ் (வயது 17), மருதானையைச் சேர்ந்த மொகமட் டிலான் (வயது 24), மொகமட் சஜித் (வயது 24) ஆகிய ஐந்து பேர…
-
- 0 replies
- 879 views
-
-
அமெரிக்காவுக்கு வருகை தரும் மகிந்தவை எதிர்த்து ஐ.நா. முன்பாக கண்டனப் பேரணி [வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2008, 11:54 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவதற்காக எதிர்வரும் புதன்கிழமை (24.09.08) நியூயோர்க் நகருக்கு வருகை தரவுள்ளார். இது தொடர்பில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை: தமிழர் தாயகத்தில் கொடிய தமிழின அழிப்பை நிகழ்த்தி வரும் முதன்மைப் போர்க்குற்றவாளி, உலக மனச்சாட்சியை ஏமாற்றுவதற்காகவே ஐக்கிய நாடுகள் சபைக்கு வரவுள்ளார். அமெரிக்காவில் உள்ள "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்" அமைப்பு தமிழர்கள் நியூயோர்க் நகரில் மாபெரும் க…
-
- 1 reply
- 928 views
-
-
வன்னி மீது விஸவாயு தாக்குதலை மேற்கொள்வதற்கு இலங்கை படையினர் தயாராகி வருவதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து நம்பகரமான தகவல்;கள் முரசுக்கு தெரிவித்தன. இதனை அடிப்படையாகவைத்தே விடுதலைப்புலிகள் வன்னேரி தாக்குதல் நடவடிக்கையின் போது விஸவாயு தாக்குதலை நடத்தியதாக தெரிவித்து பிரசாரங்களை மேற்கொண்டுவருவதாகவும் அந்த தகவல் தெரிவித்தன. இதன் முதற்கட்டமாக படையினருக்கு இந்த விஸவாயுதாக்குதலில் சேதமேற்படாமல் இருக்க கவச அணிகள் கொள்வனவுசெய்யப்பட்டுள்ளதாக
-
- 0 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா கடற்படையின் கொமாண்டோ தாக்குதல் படகு அணி மீது கடற்புலிகள் தாக்குதல்! [வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2008, 08:12 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா கடற்படையின் புதிய கொமாண்டோ தாக்குதல் படகுஅணிகளின் நடவடிக்கை கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் கடற்படையினரின் இரண்டு படகுகள் சேதமாகியுள்ளன. கடற்படையினருக்கும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பத்து நீருந்துவிசைப்படகுகளும் இருபது கூகர் படகுகளுமாக சிறிலங்கா கடற்படையின் முப்பது படகுகள் கொண்ட புதிய சிறப்புத்தாக்குதல் அணியை கடற்புலிகள் அணி வழிமறித்து கடும் எதிர்த்தாக்குதலை நடத்தியது. நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கியது. விடுதலைப்புலிகளின் சிறிய படகுகளைக்கொண்…
-
- 0 replies
- 1.8k views
-
-
வடக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை என்பன குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு அதிகமாக கள நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சில ஆலோசனைகளை முன்வைத்ததாகவும் கருணா பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால அரசியல் தொடர்பாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களுடனும் கருணா அம்மான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட முக்கிய அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை எனவும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறி…
-
- 5 replies
- 3.3k views
-
-
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வன்னிப் பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.வன்னிப் பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் விசேட படைப்பிரிவின் வீரர்கள் ஆகியோருடன் இராணுவத் தளபதி விசேட கலந்துரையாடலொன்றை இவ் விஜயத்தின்போது நடத்தினார். வன்னி கூட்டுப்படைத் தலையகத்தின் மீது கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலை முறியடித்த விசேட படைப்பிரிவுடன் இராணுவத் தளபதி மேற்கொள்ளும் இரண்டாவது கலந்துரையாடல் இதுவாகும். கரும்புலிகளின் தாக்குதலுக்குள்ளான படைத் தலைமையகத்தின் கட்டிடங்கள், தாக்குதல் இடம்பெற்ற பிரதேசங்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடித்த விசேட படையணியின் முகாம் என்பவற்றையும் அவர் பார்வையிட்டார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களின் துயர் நீக்க தம்மால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஒரு தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 776 views
-
-
ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்கள் பிரதமராக இருந்த போது விடுதலைப்புலிகளுக்கு பணம் வழங்கியமை, விடுதலைப்புலிகளின் பயன்பாட்டுக்காக சில ஆயுதங்களை கிளிநொச்சிக்கு அனுப்பியமை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிதியுதவியாகக் கிடைத்த பணம் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு அணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவினர் காமினி அபேரத்னவிடம் (டெக்சிஅபே) கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, தலதா அத்துகோரள, மங்கள சமரவீர, மேல் மாகாண சபை உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் கண்காஸ்பத்திரி சந்தியில் உள்ள ஒடேல் ஆடை விற்பனை நிலையத்தில் உள்ள டொலி பிரான்ஸ் உ…
-
- 1 reply
- 2k views
-
-
சிறிலங்கா படைகளின் இராணுவ நெருக்குவாரங்களினால் பாரிய மனித பேரவலத்தை எதிர்நோக்கியிருக்கும் வன்னி மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும் படியும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படியும் கோரி அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தலைநகர் கன்பராவில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 552 views
-