ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
த.தே.தொலைக்காட்சியின் இன்றைய செய்திகள்- 06.08.08 http://www.nettamil.tv/play/News/NTT_Tamil_News_06082008
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் தரவையில் செவ்வாய் பி.ப 6.30 மணிக்கு விடுதலை புலிகளின் கிளைமோர் தாக்குதலில் வாகனத்தில் பயணம் செய்த சிங்கள படையனர் 23 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 4 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 வருடத்தின் பின் புலிகள் நடத்திய பெரிய தாக்குதல் இதுவாகும். காயமடைந்தவர்கள் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பாதுகாப்பு தரப்பினர் 1 படையினர் கொல்லப்படதாகவும் மேலும் 3 பேர் காயங்களுக்குள்ளானதாகவும் அறிவித்துள்ளனர் ஆதாரம் தமிழ் நெற் 23 Sri Lankan soldiers killed in Claymore ambush in Batticaloa [TamilNet, Wednesday, 06 August 2008, 10:29 GMT] 23 Sri Lanka Army (SLA) soldiers were killed and four wounded in a…
-
- 16 replies
- 3.7k views
-
-
த.தே.தொலைக்காட்சியின் அம்பலம் http://www.nettamil.tv/play/Eelam_Videos/Ambalam இதை மகிந்தருக்கு போட்டு காட்டணும். நன்றி- நெற் தமிழ்
-
- 0 replies
- 2k views
-
-
மாங்குளத்துக்கு அண்மித்த பகுதியில் கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் "உள்ளக பாதுகாப்பு அணியினர்" நடத்திய தாக்குதலில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர் என்று சிறிலங்கா படைத்துறை சார் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நான்கில் ஒரு குழந்தை போசாக்கின்மையால் பாதிக்கப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. போசாக்கின்மையைப் போக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளபோதும் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலுள்ள சிறுவர்கள் போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்படுவதாக அரசாங்கத்தின் அண்மைய கணக்கெடுப்புகளின் மூலம் அறிந்துகொள்ள முடிவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள சிறுவர்களில் 22 வீதமானவர்கள் சராசரி எடையைவிட குறைவான எடையைக் கொண்டவர்கள் என சுகாதார மற்றும் போசாக்கு அமைப்பும், குடிசன மதிப்பீட்டுத் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 18 வீதமான சிறுவர்கள் வளர்ச்சி குன்றியவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. “நான்கில் ஒரு குழந்தை போசாக்கின்மையால…
-
- 0 replies
- 645 views
-
-
விடுதலைப் புலிகளை ஜேர்மனில் தடை செய்யுமாறு கோரிக்கை [புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2008, 07:14 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அந்த இயக்கத்துக்கு ஆதரவான அமைப்புக்களையும் தடை செய்யுமாறு கோரி விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா அமைப்பு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சிடம் மனு ஒன்றை கையளித்துள்ளது. அந்நாட்டு வெளிவிவகார கொள்கை ஆலோசகர் ஹன்றிச் க்ரெவ்ட்டை அவரது அலுவலகத்தில் கடந்த 30 ஆம் நாள் சந்தித்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த நான்கு பக்க மனுவை கையளித்துள்ளனர். - விடுதலைப் புலிகளை ஜேர்மனியில் தடை செய்யவேண்டும். - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் தமிழ்ர் புனர்வாழ்வு கழகம், தமிழ…
-
- 1 reply
- 846 views
-
-
படையினர் மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் உட்பட 106 பேரும் 24 பொதுமக்களும் ஆடி மாதத்தில் மாத்திரம் உயிரிழந்துள்ளனர் என இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரத்னசிரி விக்ரமனாயக்க தெரிவித்துள்ளார். தக்குதல்களின் போது படையினர் பொலிசார் உட்பட 664 பேரும் 31 பொதுமக்களும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் தமிழ் நெற் 106 forces killed, 664 wounded in July - Sri Lankan PM [TamilNet, Wednesday, 06 August 2008, 04:12 GMT] Sri Lankan Prime Minister Ratnasiri Wickramanayake who opened the debate on extending the State of Emergency in the Sri Lankan Parliament on Wednesday said 106 Sri Lankan military and police personnel were killed and 664 wounded during the month of July…
-
- 7 replies
- 1.8k views
-
-
கலைஞரின் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, தமிழகம் மதுரையில் ஈழத்தமிழர்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளையும், வியாழக்கிழமையும், மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி, அங்கு இடம்பெறும் இரண்டு நிகழ்வுகளில் பங்கேற்கின்றார். இதனை முன்னிட்டு, மதுரை ஆனையூர், திருவாதவூர், உச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் நலன்புரி நிலையங்களில், ஏதிலிகளாக தங்கியுள்ள ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பது ஈழத்தமிழர்கள், இரண்டு நாட்களுக்கு வெளியில் நடமாடுவதற்கு மாநில காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆத்துடன் மூன்று பகுதிகளிலும் உள்ள நலன்புரி நிலையங்களிலும் தமிழக காவல்துறையினரும், ‘கியூ| புலனா…
-
- 7 replies
- 1.9k views
-
-
வீரகேசரி நாளேடு - இந்தியாவிலிருந்து கேபிள் மூலம் மின்சாரத்தினை பெற்றுக்கொள்வதென்பது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். இதன் மூலம் எந்த நேரமும் எமது நாட்டை இருளில் மூழ்கடிக்கும் அதிகாரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விடும் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். எமது நாட்டின் அரசியல், பொருளாதார பிரச்சினையில் நேரடியாக இந்தியா தலையிடும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் கலை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி.யின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு, மதுரை மாவட்டத்தில…
-
- 0 replies
- 1k views
-
-
வீரகேசரி நாளேடு - வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலி;ருந்து வெளிமாவட்டங்களுக்கும் பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கான புதிய பாதுகுக்ப்பு நடைமுறைகள் கைக்கொள்ளப்படுவதாக இராணுவம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த நடைமுறைகள் குறித்து யாழ் பிராந்திய ஆயுதப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி விளக்கமளித்துள்ளார். இந்தத் தகவலை பாதுகாப்பு அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அரச திணைக்களங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள், சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள், வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய 200க்கும் மேற…
-
- 0 replies
- 937 views
-
-
முல்லைத்தீவின் நாயாறு மற்றும் உடுப்புக்குளம் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் வீடுகளும் கடைகளும் அழிந்துள்ளதுடன் பொதுநோக்கு மண்டபம் ஒன்றும் சேதமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 637 views
-
-
கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டுள்ளதாக கூறப்படுவது பொய்யான தகவல் என கல்முனை காவற்துறை பொறுப்பதிகாரியாக இருந்த டப்ளியூ.சீ.விஜயதிலக்க துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் காவற்துறை பதவிவேட்டில் எழுதிய குறிப்பில் தெரிவித்துள்ளார். கடந்த 29ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விஜயதிலக்கவின் மரணம் தொடர்பாக நடைபெற்ற விசாரணைகளின் போது, இந்த பதிவேடு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது. விசாரணை கல்முனை நீதவான் எஸ்.எம் அப்துல்லா முன்னிலையில் நடைபெற்றது. காவற்துறை அதிகாரி என்ற வகையில் தான் எந்த தவறுகளையும் செய்யவில்லை. சட்டத்தை மதிக்கும் சிறந்த காவற்துறை அதிகாரிகளை உருவாக்கவே தாம் எப்பொழுதும் முயற்சித்து வந்ததாகவும் அத்து…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வான்வழித் தாக்குதல்களைக் கண்டிக்க மாட்டேன் என, T.M.V.P துணைப்படைக் குழுவின் துணைத்தலைவரும், கிழக்கின் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தெற்கிலும், சிறீலங்காவின் ஏனைய பாகங்களிலும் இவ்வாறான குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் அவர் நியாயம் கற்பித்திருக்கின்றார். சார்க் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியாளர்கள் சந்திரகாந்தனைச் சந்தித்தபோதே, அவர் இந்தக் கருத்தினைக் கூறியிருக்கின்றார். விடுதலைப் புலிகளை அழித்து, வன்னியை மீட்கும் சிறீலங்கா படையினரது தாக்குதல்களில் அகப்பட்டுள்ள மக்களிற்கு ஒன்றும் செய்ய முடியாது எனவும், இது அவர்களின் நிர்ப்பந்தம் எனவும் அவர் கூறினார். htt…
-
- 0 replies
- 1.7k views
-
-
வீரகேசரி இணையம் 8/5/2008 11:11:47 AM - உலக சுகாதார அமைப்பின் கணிப்பீட்டின் படி இலங்கை மக்களின் ஆயுட்கால எல்லை 10 சதவீதம் வளர்ச்சி யடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2004 ஆண்டில் 69 ஆக காணப்பட்ட பெண் ஒருவருன் ஆயுட் காலம் தற்போது 79 ஆகவும் ஆண் ஒருவரின் ஆயுட்கால எல்லை 60 வதுலிருந்து 69 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் 2005 ஆம் ஆண்டில் 16.5 சதவீதமாக காணப்பட்ட மதுபானம் அருந்துவோரின் சதவீதம் தற்போது 7.1 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
-
- 12 replies
- 1.8k views
-
-
மன்னார் வவுனியா போர் அரங்குகளில் தற்போது படையினரின் முன்னகர்வு அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 16ஆம் திகதி விடத்தல்தீவைக் கைப்பற்றிய படையினர், அங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள இலுப்பைக்கடவையை 20ஆம் திகதி காலையில் கைப்பற்றியிருக்கின்றனர்.இன்
-
- 7 replies
- 2.2k views
-
-
வாடகை வாகனத்தில் செல்லும் அளவிற்கு 15ஆவது சார்க் மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் எமக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். சார்க் மாநாட்டின் பாதுகாப்பு, ஆசன ஒதுக்கீடுகள் மற்றும் செலவுகள் தொடர்பில் சபையில் இன்று எழுந்த சர்ச்சையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச மாநாடுகளை நடத்துகின்ற போது சிறு சிறு தவறுகள் இடம்பெறும். எனினும், 15 ஆவது சார்க் மாநாட்டிற்காக வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாரா…
-
- 8 replies
- 1.9k views
-
-
சிறீலங்காவின் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாமல் வெளிநாடுகளில் பட்டம் பெறுபவர்களின் பட்டங்கள் சிறீலங்காவில் எனிமேல் அங்கீகரிக்கப்படமாட்டாது என்று சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. பல மேற்குலகப் பல்கலைக்கழகங்கள் கணணி சார் மற்றும் வர்த்தகம், முகாமைத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்களை எந்தவித உயர்தர பரீட்சைப் பெறுபேறையும் அடிப்படைத் தகுதியாகக் கோராமல் வழங்கி வருவதுடன்.. ரஷ்சியா போன்ற நாடுகளில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாமலே மருத்துவப் படிப்பைக் கூட தொடரக் கூடிய நிலை இன்றிருக்கிறது. A/Level qualification imperative - Warnapala The Ministry of Higher Education will never recognize the foreign degrees obtained by students who do not have the basic Advance …
-
- 10 replies
- 2k views
-
-
வெளிவிவகார அமைச்சிடம் இந்திய தூதரகம் கவலை தெரிவிப்பு 05.08.2008 / நிருபர் வானதி கொழும்பில் நடைபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுக்குனின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது கவலையை வெளிவிவகார அமைச்சிடம் தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணனுக்கு சார்க் மாநாட்டின் போது விசேட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை வெளிவிவகார அமைச்சை கேட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற எம். கே.நார…
-
- 10 replies
- 2.2k views
-
-
வெற்றிலைக்கேணியில் படையினர் எறிகணைத்தாக்குதல்: பொதுமக்கள் இருவர் படுகொலை [புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2008, 01:27 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் வாடிகளை இலக்குவைத்து நாகர்கோவில் பின்தளத்திலிருந்து படையினர் இன்று புதன்கிழமை காலை 8:45 மணியளவில் செறிவான எறிகணைத்தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் மக்களின் வீடுகள், படகுகள் மற்றும் வலைகள் என்பனவற்றுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் ஒரு பிள்ளையின் தந்தையான தங்கவேலு குணேந்திரராசா (வயது 29), முள்ளியானைச் சேர்ந்த மூன்று ப…
-
- 0 replies
- 554 views
-
-
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர்நிறுத்தம் -பலவீனத்தின் வெளிப்பாடா? இராசதந்திர நகர்வா? புலிகளின் இவ் அறிவிப்பானது சிங்களம் கூறுவதைப் போன்று விடுதலைப் புலிகளின் பலவீனத்தின் வெளிப்பாடு அல்ல. மாறாக தம்மிடம் இருக்கும் பலத்தைத் தக்க வைத்துக் கொண்டு மேலும் அசுர பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டின் ஒரு அங்கமே சுவிசில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் நிலவரம் பத்திரிகை கடந்த வாரம்(01.08.08) தனது ஆசிரியர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிறி லங்கா தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டை ஒட்டி பத்து நாள் போர் நிறுத்தம் ஒன்றை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள். மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் விடுதலைப் பு…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாராளுமன்ற முறைமையை பலப்படுத்துவதற்கு 17வது திருத்தச்சட்டமூலம் அவசியம் என்பதால் அதனை அமுல்படுத்தவேண்டும் என சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்துள்ளார். 17வது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழு, திருத்தச்சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து அதற்கான மாற்றுவழிகளைப் பரிந்துரை செய்யவேண்டும் எனவும், அதனை அடிப்படையாகக் கொண்டு 17வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவத்தினால் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகள் பாராளுமன்றத்தின் ஊடாக அமுல்படுத்தப்படுவதில்லையென
-
- 0 replies
- 545 views
-
-
இலங்கையின் தென்பகுதியான தங்காலையில் இன்று காலை நில அதிர்வு ஒன்று உணரப்பட்டதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் தெரிவித்துள்ளது.தங்கல்ல, பெலியத்த, ரன்ன, மற்றும் குடாவெல ஆகிய பிரதேசங்களில் இன்று காலை 5.45 மணிக்கு இந்த இலேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக உடமைகளுக்கோ உயிர்களுக்கே எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilseythi.com/srilanka/lanka-2008-08-06.html
-
- 0 replies
- 672 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைத் தமிழீழ எம்.பி.க்களாகக் கருதி சார்க் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காததையிட்டு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய, இலங்கை அரசுக்கிடையிலான சீபா உடன்படிக்கை தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் புறக்கணிக்கப்பட்டதுடன், அவமதிக்கப்பட்டுள்ளனர். இது வெளிநாட்டு அமைச்சின் திட்டமிட்ட செயலாகும். சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் எந்தவொரு நன்மை…
-
- 0 replies
- 718 views
-
-
(2ம் இணைப்பு)கோத்தபாய - பசில் - பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு [திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 08:51 பி.ப ஈழம்] [க.நித்தியா] தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசின் முக்கிய நபர்களாகக் கருதப்படும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய அமெரிக்க குடிமகன்கள் மூவருக்கும் எதிராக இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு (Tamils Against Genocide [TAG]) அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்…
-
- 5 replies
- 1.6k views
-
-
தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்தல் என்று ஒன்று கூடி "சார்க்' தலைவர்கள் விடுத்த அறிவிப்பு எள்ளி நகையாடத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது. நோயின் மூலகாரணியைத் தேடிக் கண்டு பிடித்து, அதற்கு வைத்தியம் செய்வதை விடுத்து, நோய் வெளிப்படுத்தும் குணங்குறிக்கு மருத்துவம் பார்க்கும் "அரைகுறை' வைத்தியர்களாகவே அவர்கள் செயற்பட்டிருக்கின்றார்கள். அது மாத்திரமல்ல, அந்த நோயின் விளைவாக வெளிப்படும் "பயங்கரவாதம்' என்ற பிரச்சினை மட்டுமே இந்த எட்டு நாட்டுத் தலைவர்களின் கண்களில் பட்டிருக்கின்றது. அதுபோன்ற மிக மோசமான இந்நோயின் மற்றொரு வெளிப்பாடு அவர்களின் கவனத்தை ஈர்க்காமை அவர்களை "அரைகுறை' வைத்தியர்களாகவே அடையாளம் காட்டி நிற்கின்றது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் நியாயம…
-
- 0 replies
- 530 views
-