ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
தனியார் மயப்படுத்தப்பட்ட 40 அரச நிறுவனங்களை அரசாங்கம் மீண்டும் பொறுபேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட இலங்கை மா உற்பத்தி கூட்டுத்தாபனம் போன்ற தனியார்மயப்படுத்தப்பட்ட 40 அரச நிறுவனங்களை அரசாங்கம் பொறுபேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களை பொறுபேற்றால் அரசாங்கம் அதிக வருமானத்தை ஈட்டமுடியும் என இது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவொன்று அரசாங்கத்திடம் அறிக்கை ஒன்றின் மூலம் பரிந்துரை செய்துள்ளது. தனியார்மயப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் இந்த அறிக்கை விரைவில் கையளிக்கப்படும் என அரச உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். http://isoorya.blogspot.com/ htt…
-
- 1 reply
- 929 views
-
-
நூல் வெளியீட்டுத் திணைக்களம் தேவைக்கு மேலதிகமாக அச்சிடப்பட்ட 25 இலட்சம் இலவச பாடநூல்கள் மீண்டும் அரைத்து கடதாசியாக்கும் பொருட்டு கடதாசி ஆலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன. இந்தப் பாடநூல் தொகையின் பெறுமதி ஐந்து கோடி ரூபாவென தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களை சேமிப்பதற்காக களஞ்சியசாலையில் இடத்தை ஒதுக்கும் பொருட்டு இந்த மேலதிக புத்தகத் தொகையை அடுத்த வாரத்தில் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார். பாடநூல்களை அச்சிடுவதற்கு பொறுப்பான அதிகாரிகளின் பொறுப்பற்றதும் தூரநோக்கற்றதுமான செயற்பாடுகளால் ஐந்து கோடி ரூபா வீண் விரயமா…
-
- 3 replies
- 976 views
-
-
பலவீனமா? தந்திரோபாயமா? வன்னிக் களமுனை குறித்துக் குழப்பம்! - ஜெயராஜ் - விடுதலைப் புலிகள் விரைவில் தோற்கடிக்கப்பட்டு விடுவர்; அடுத்த மாவீரர் தினத்தில் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளிடம் எதுவும் இருக்காது பதுங்குகுழிகளிலேயே மாவீரர் நாளைக் கொண்டாட வேண்டும்; கிளிநொச்சி மீதான தாக்குதலுக்கு இராணுவம் தயாராகிவிட்டது என்பது போன்ற பிரகடனங்கள் சிறிலங்கா அரச தரப்பில் இருந்து வெளிவந்த வண்ணமுள்ளன. இவ்வாறாகப் பிரகடனங்கள் வெளிவருகின்றபோதும் - சிறிலங்காப் படைத்தரப்பில் தற்பொழுது சில கேள்விகள் தவிர்க்கப்பட முடியாதவையாகவும், உடனடியாகப் பதில் தேடப்பட வேண்டியவையாகவும் உள்ளன. சற்று, ஆழமாக நோக்கினால் படைத்தரப்பு சில குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளதை நிராகரித்துவிட முடி…
-
- 7 replies
- 1.5k views
-
-
சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவின் பகை நாடுகள். ஆனால் இலங்கை? சாயங்கால வேளை.அதனால்தான் இலங்கை பாகிஸ்தான் சீனா என இந்தியாவின் இடது வலது எல்லைப்புற நாடுகளை வைத்து நம்மிடம் சீட்டாடிக் கொண்டியில் காஸ்மோபாலிட்டன் கிளப்புக்குப் போய் மது அருந்திய படி சீட்டாடுவார்கள் இல்லையா? அப்படி ஒரு கிளப்தான் இலங்கைக்கு இந்தியாருக்கிறது. இந்த சீட்டாட்டத்தில் மொத்தமாக அழிந்து போகும் ஆபத்தில் சிக்கியிருப்பவர்கள் ஈழத்தமிழர்கள். தமிழக மீனவர்களும் கூட, இந்தியாவின் அந்தப்புறத்தில் நடைபெறும் இம்மாதிரி விளையாட்டுக்கள் ஈழத்தமிழரின் உயிரையும் இந்தியத் தமிழரின் உயிர்களையும் சேர்த்தே குடித்துக் கொண்டிருக்கிறது. 1980_ பதுகளில் கொழுந்து விட்டெறிந்த தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரத்தின் விளைவாய் இந்திய…
-
- 0 replies
- 3.7k views
-
-
வடக்கு களமுனைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவரும் வலிந்த தாக்குதல்கள் காரணமாக படையினர் கடும் இழப்புகளை சந்தித்துவருவதாக ‘லக்பிம’தனது வாராந்த ஆய்வில் தெரிவித்துள்ளது. படையினரின் வலிந்த தாக்குதலுக்கு தமது கடும் எதிர்ப்பை காட்டிவந்த விடுதலைப்புலிகள் கடந்த முதலாம் திகதி முதல் தமது வலிந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக லக்பிமவின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்லாவிக்கு தென்புறமான பகுதியூடாக முன்னேரிய 57டிவிசன் படையினர் தமது நிலைகளை பலப்படுத்திக்கொண்டிருந்த வேளையில் விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணிகளான இம்ரான் பாண்டியன் படையணி மற்றும் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவின் கடும் தாக்குதலுக்கு முகம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 1.2k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு 8/10/2008 9:11:32 AM - விடுமுறையின்றி வீட்டில் நின்ற, சேவையின்போது தப்பிச் சென்ற 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கைது செய்து சிறைத் தண்டனை வழங்கப்போவதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். படையினருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்தகால யுத்த சூழ்நிலையின் போது இராணுவ சேவையில் இணைந்து கொண்ட இராணுவ வீரர்களுள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எந்தவித அறிவித்தலுமின்றி இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்களுள் தற்போது 1600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களை கைது செய்யும் பணியில் பாதுகாப்பு படையினர் தேடுதலை மேற்கொண்டு வருக…
-
- 0 replies
- 820 views
-
-
தூத்துக்குடி: சென்னை திருமங்கலத்தில் சில தினங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த வெடிபொருளுக்கான மூலப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் வழியாக அவர்கள் இலங்கைக்கு வெடி பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை கடலோர பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். வனத்துறையினரும், கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து தூத்துக்குடி முதல் இராமேஸ்வரம் வரை உள்ள 21 தீவுகளை கண்காணித்து வருகின்றனர். இதுதவிர நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அகதிகள் முகாம்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அகதிகள் பயன்படுத்தும் வாகனங்களும் தீவிர …
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியின் போர்முனை மோதல்கள் தற்போது வெள்ளாங்குளம், தென் மல்லாவி மற்றும் துணுக்காய் ஆகிய இடங்களில் இடம்பெற்று வருவதாக “லக்பிம” செய்தித்தாள் தமது பாதுகாப்புக் கட்டுரையில் தெரிவித்துள்ளது. பிந்திக்கிடைத்த செய்திகளின்படி போர் முன்னரங்குகளில் இருந்த பெண் போராளிகளுக்குப் பதிலாக சார்ள்ஸ் அன்ரனி படையணியும் இம்ரான் பாண்டியன் படையணியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் “லக்பிம” குறிப்பிட்டுள்ளது. அத்துடன் மல்லாவியிலும் துணுக்காயிலும் 700 க்கு மேற்பட்ட போராளிகள் மோதல் களத்தில் பிரவேசித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் களமுனையில் பாரிய எதிர்ப்புகளைப் படையினர் சந்தித்து வருவதாகவும்,அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை படையினர் பூநக…
-
- 0 replies
- 908 views
-
-
பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையின் இறுதி கட்டத்தில் படையினர் இருப்பதாகப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். பயங்கரவாதம் தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பத
-
- 3 replies
- 1.3k views
-
-
கட்சி நிதி என்ற போர்வையில் தெரிவு செய்யப்பட்ட பிரபல வர்த்தர்களை அலரி மாளிகைக்கு அழைத்து ஜனாதிபதியினால் நிதி திரட்டப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள ஞாயிறு இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர்களில் ஒருவரான சஜித் வாஸ் குணவர்தன ஆகியோரே இந்தத் திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வர்த்தகர்களுக்கு விருந்துபசாரத்தை வழங்குவதற்காக பெருமளவிலான நிதி செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வர்த்தகர்களுடான இணைப்பை ஏற்படுத்துவதற்கு 20 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்ததாகவும
-
- 0 replies
- 446 views
-
-
தமிழக மீனவர்கள் தினந்தோறும் கொல்லப்படும்போது, இந்திய இலங்கையின் நூற்றாண்டு கால ஆழமான உறவினை, பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படுத்தியுள்ளார். சார்க் மாநாட்டில். இது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போலிருந்தது. கச்சதீவை மீளப் பெற்றால், இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தடுக்கப்படுமென தப்புக் கணக்குப் போடப்படுகிறது. இந்த கச்சதீவு கைமாறிய வரலாற்றை சிறிது பார்க்கலாம். கச்சம் என்றால் ஆமை என்றும் பொருள்படும். பச்சை நிற ஆமைகள் நிறைந்த இடமாக அத்தீவு விளங்கியதால், அதனை பச்சைத்தீவென்றே முன்பு அழைத்தார்கள். பின்னர் கச்சதீவாக மாறிவிட்டது.1882 ஆம் ஆண்டு முதல் இராமநாதபுரம் சேதுபதியின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சதீவு, பின்னர் கிழக்கிந்திய கம்பனியால் குத்தகைக்கு எடு…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னேரியில் சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி [சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 08:04 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி வன்னேரிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வன்னேரி சுற்றயல் பகுதியை நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து வன்னேரியில் தங்கியிருந்த சின்னத்தம்பி அருளானந்தம் (வயது 48) என்பவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் பின்னர் உயிரிழந்துள்ளார். புதினம்
-
- 25 replies
- 2.9k views
-
-
முல்லை வைத்தியசாலை பகுதியை அமைதிவலயமாக்க கோரிக்கை 10.08.2008 / நிருபர் வானதி முல்லைத்தீவு வைத்தியசாலையிலிருந்து 300 மீற்றர் சுற்றுவட்ட பிரதேசத்தை மோதலற்ற அமைதிவலயமாக பேணுமாறு இராணுவத்தை அரசாங்கம் அறிவுறுத்த வேண்டும் என தாம் கோருவதாக முல்லைத்தீவு வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வி.சண்முகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சகல தரப்பினரிடமிருந்தும் மீள் உத்தரவாதத்தை நான் எதிர்பார்க்கிறேன். வைத்தியசாலை பாதுகாப்பாக இயங்குவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு வைத்தியசாலையை அண்டிய பகுதியில் இடம் பெற்ற ஷெல் தாக்குதல்களைத் தொடர்ந்தே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதலில் …
-
- 1 reply
- 535 views
-
-
30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செப்.9 ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் குதிக்க உள்ளதாக அக்கூட்டிணைவில் உள்ள சுகாதார தொழிற்சங்கத்தின் செயலாளர் சமன் ரட்ணபிரிய தெரிவித்துள்ளார். 30 தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஆகஸ்ட் 4 இயக்கம் என்ற கூட்டமைப்பின் கீழேயே போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவகையிலான சம்பள உயர்வு, வாக்குறுதி அளித்ததன்படி வாழ்க்கைச் செலவுப்படி வழங்கப்படல், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எரிபொருட்களுக்கான மானியம் வழங்குதல், தொழிலாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதிக்கும் அதேவேளை தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நடாத்தும் போராட்டங்கள் மீது அராஜகத்தைப் பாவிக்காதிருக்க உத்தரவாதம் வழங்குதல், தோட்ட மக்கள் முதல் குறைந்த வருமானம் பெறுப…
-
- 2 replies
- 787 views
-
-
இலங்கைக்கு ஆயுத விநியோகங்களை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதற்கு இஸ்ரேல் முயன்று வருகையில் இஸ்ரேலிய தயாரிப்பான கிபீர் தாக்குதல் விமானங்களை பராமரிக்கும் பணிகளை இந்தியா மேற்கொள்ள தீர்மானித்துள்ளது பாகிஸ்தான், சீனா என தனது ஆயுத தேவைகளை நிறைவு செய்துவந்த இலங்கை அரசாங்கம் இந்தியாவை தனக்கு சாதகமான ஒரு நிலைக்கு மீண்டும் இழுத்துள்ளது போரை நோக்கி வளர்த்துவிடப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு தொடர்ச்சியான வெற்றி செய்திகளை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது. எனவே வன்னி மீது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கை தொடர்பாக வெளிவரும் அறிக்கைகளில் விடுதலைப்புலிகள் பெருமளவில் கொல்லப்படுவதாகவும், அவர்களின் பதுங்குகுழிகள் தொடர்ச்சியாக கைப்பற்றப்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்து வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகளுக்கு எதிராக எதிர்த்தாக்குதல்களை நடத்திவந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தற்போது வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இது படையினருக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 904 views
-
-
இலங்கையில் டசின் கணக்காண தமிழர் ஒருவருடங்களுக்கு மேலாக எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நியுயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமை அமைப்பான கியூமன் ரைட்ஸ் வோச் சுட்டிக்காட்டியுள்ளது. இதனை முடிவுக்கு கொண்டு வருமாறு அந்த அமைப்பு அதிகாரத்தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டில் முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டது முதல் இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுதியது. அமைச்சரின் இந்த கொலை குற்றச்சாட்டை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் மேல் சுமத்தியது. தற்போது அவசரகால சட்டத்தின்மூலம் இலங்கை படையினருக்கு அதிகளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சோதனை, கைதுகள், சொத்துக்களை பறிமுதல் செய…
-
- 1 reply
- 771 views
-
-
ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவங்களுக்கு எதிராக விசேடமாக சிரச ஊடகம் மீது மேர்வின் சில்வா தொடர்ந்தும் மேற்கொள்ளும் தாக்குதல்களையும் இடையூறுகளையும் சமூகம் என்ற வகையில் தொடர்ந்தும் பொறுத்து கொள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. மேர்வின் எதிராக காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அந்த கட்சி அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஸாந்த வர்ணசிங்க அமைச்சரின் நடவடிக்கை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரை எச்சரிப்பதன் மூலமமோ அறிவுரை கூறுவதன் மூலமோ எந்த பலனும் இல்லை. ஆண்டவன் அவரை தண்டிக்கும் வரை சமூ…
-
- 2 replies
- 827 views
-
-
சிறிலங்காப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களில் 12 ஆயிரம் பேரை உடனடியாக கைது செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 513 views
-
-
உடனடியாக யுத்த நிறுத்தமொன்றைப் பெற்றுத்தருமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 7 ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகள் சபையிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு நேற்றைய தினம் இது தொடர்பாக அறிவித்துள்ளதாகவும் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் விடுக்கப்பட்ட அவசரக் கோரிக்கையின் பிரதியொன்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹனவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. …
-
- 5 replies
- 2.1k views
-
-
http://www.tamilnaatham.com/articles/2008/...aka20080809.htm
-
- 2 replies
- 1.1k views
-
-
வன்னிமீதான படை நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதா?. - லண்டனிலிருந்து வன்னியன் திங்கள், 04 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவு கடந்த வராங்களில் படையினர் வசம் கைநழுவிச் சென்றுவிட்டது. இப்பிரதேசத்தின் அடர்த்தியான குடிப்பரம்பலும் புலிகளின் கடல்வழி விநியோக ஓடத்துறையையும் கொண்ட விடத்தல்தீவு. படைத்துறையின் மிகப்பெரும் இலக்காக நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு தற்போது அடையப்பட்டுவிட்டது. இதன்மூலம் மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் கிராமம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் முழுமையாக படைகளால் விழுங்கப்பட்டு விட்டது. “யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்” என இதை சிங்களப் படைத்தளபதி லெப்.ஜென்ரல். சரத்பொன்சேகா. பெருமைடயுடன் குறிப்…
-
- 13 replies
- 3.5k views
-
-
மடு தேவாலயத்தில் மாதா திருச்சொரூபம் திரும்பவும் கொலுவேற்றப்பட்டுள்ளது. [ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 04:11.38 PM GMT +05:30 ] இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலுக்கு, மன்னார் ஆயர் இல்லத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்த மடு மாதாவின் திருச்சொரூபம், சனிக்கிழமை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுக் கொலுவேற்றப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். கடந்த நான்கு மாதங்களாக உரிய பராமரிப்பின்றி இருந்த மடுக்கோவிலின் திருத்த வேலைகள் முடிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, மடுக்கோவிலை பூஜை வழிபாட்டுக்குரிய புனிதமாக்கும் சமய வைபவங்களை மேற்கொள்வதற்காகக் கத்தோலிக்க மதகுருமார்கள் திங்கட்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
திசநாயக்க மீதான தீர்ப்புக்கு எந்தவொரு சர்வதேச நீதிமன்றனும் தீர்ப்புக் கூறவில்லை ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான எஸ்.பி. திசாநாயக்காவின் குடியியல் உரிமையை உரிய காலத்துக்கு முன்னர் வழங்குவதற்கு அரசுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாதெனத் தெரிவித்த அமைச்சரவைப்பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா உயர் நீதிமன்றத் தீர்ப்பை எவராலும் மீற முடியாதெனவும் சுட்டிக்காட்டினார். திசாநாயக்கா மீதான தீர்ப்புக்கெதிராக எந்தவொரு சர்வதேச நீதிமன்றமும் தீர்ப்புக்கூறவில்லையெனவும், ஜெனீவாவில் இயங்கும் பாராளுமன்றங்களுக்கிடையிலான சங்கம் ஒரு நீதிமன்ற உரிமை கொண்டதல்லவெனவும் அமைச்சர் யாப்பா தெரிவித்…
-
- 0 replies
- 568 views
-
-
கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அடியாட்களை கலாவௌ மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அரச விடுமுறை விடுதிகளில் தங்கவைத்து அவர்களை, அரசாங்கம் அனுராதபுரத்தில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுத்தி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஜனக்க பெரேரா தெரிவித்துள்ளார். அரசாங்கம் மேற்கொண்டு வரும் வன்முறைகளுக்கு எதிராக அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனுராதபுரம் மஹாவீதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகம் மீது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். காவற்துறையினரின் சீருடையை அணிந்த 5 பேர் ஐக்கிய தேசிய கட்சி…
-
- 0 replies
- 1k views
-