ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
இலங்கையின் வன்முறை கலாசாரம் [ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2008, 11:16 மு.ப ஈழம்] [க.நித்தியா] இலங்கையில் நிகழ்ந்த- நிகழ்ந்து வரும் வன்முறை கலாச்சாரத்தின் தன்மை குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் தமிழ் வடிவம்: இலங்கை வன்முறைகள் பற்றி ஆராய்வதற்கு கறுப்பு ஜூலை இனக்கலவர அவலம் நேர்ந்த 25 ஆவது ஆண்டு பூர்த்தி நாளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இலங்கை இனப்பிரச்சினையின் வரலாற்றில் ஓர் கறைபடிந்த அத்தியாயமாக கறுப்பு ஜூலை கருதப்படுகிறது. கொழும்பிலும் வேறு பிரதேசங்களிலும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், பெரும் எண்ணிக்கையிலாள வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. 95 விழுக்காடு தமிழர்களின் வர்த…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் வன்னி மேற்குபகுதியை இம்முறை கைப்பற்றுவதே தற்போது நடந்துவரும் ராணூவ நடவடிக்கையின் நோக்கமென நமபகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.புலிகள் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடக்கூடிய ஆனையிறவு, முல்லைத்தீவு நோக்கிய படை நடவடிக்கைகளை மட்டுப்படுத்தப்பட்டளவிலும் புலிகளுக்குப்போக்கு காட்டிகொண்டு மன்னாரூடான நடவடிக்கையில் பெரும் ஆரவாரமெதுவுமின்றி புளியங்குளத்துக்கு ஊடறுக்க கூடியபடி நவ்வி என்றா பிரதேசத்துக்கும்,இன்னொரு தொகுதி படையினர் விடத்தல் தீவிற்கும் முன்னகர்ந்து விட்டதாகவும்,இந்த நகர்வு அடுத்தகட்டமாக நாச்சிகுடா கடலை தக்கவைப்பதற்காக நடக்குமென உயர் ராணூவ அதிகாரி தெரிவித்தார். இதேவேளை நவ்வியிலுள்ள் ராணூவமும் நிலைமைக்கு ஏற்ப தம்மைப்பலப்படுத்தி கொண்டு துணூக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணத்தை முழுமையாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட வெற்றியை கிழக்கின் உதயம் எனும் பெயரில் இலங்கை அரசாங்கம் கொண்டாடி ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள போதும், கிழக்கு மாகாணம் இன்னமும் வழமைநிலைக்குத் திரும்பவில்லை என பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கின் வெற்றியை இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம் திகதி பெரும் விமரிசையாக சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடியிருந்தது. இதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்ற குழுவைச் சேர்ந்த ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் அரசாங்கம் நியமித்திருப்பதாக பி.பி.சி. செய்தி குறிப்பிடுகிறது. கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாக மீட…
-
- 0 replies
- 493 views
-
-
கருணாநிதியின் அரசியல் நாடகம் தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சரும் சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவுமான மு.கருணாநிதியின் நெறியாள்கை மற்றும் திரைக்கதை வசனம், இயகத்தில் 'தமிழக மீனவருக்கான உண்ணாவிரதப் போராட்டம்' என்னும் திரைப்படமொன்று தமிழகமெங்கும நேற்று சனிக்கிழமை திரையிடப்பட்டது. இதன் மூலம் தமிழக மக்களை முட்டாள்களாக்கும் வல்லமை தற்போதும் கருணாநிதிக்கு உண்டென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கெதிராகவும் தமிழக மீனவர் பிரச்சினையை டில்லிக்கு உணர்த்தும் வகையிலுமே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தபட்டததாக தனது கதைக்கு கருணாநிதி முன்னுரை வழங்கியுள்ளார் இந்தக் கதையில் அமைச்சர்களான ஆற்காடு வீரசாமி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மூன்று மீனவர்கள் படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். 20.07.2008 / நிருபர் எல்லாளன் யாழ் குடாக்கடலில் உள்ள பாசையூர்பகுதியில் மூன்று மீனவர்கள் சிறிலங்காப் படையினரால் நேற்று தாக்கப்பட்டுள்ளனர். அ.ஜெலின் (27) மு.நிக்சன் (22), க.ஜெனிபேட் (20) ஆகிய மூன்று மீனவர்களுமே தாக்கப்பட்டவர்களாவர் இவர்கள் மூவரும்இரண்டு வாரத்திற்கு தொழிலில் ஈடுபடமுடியாது எனவும் படையினர் தடைவிதித்துள்ளனர். http://www.sankathi.com
-
- 0 replies
- 618 views
-
-
கெஹலியவின் வீட்டை வீடியோ படம் எடுத்தாராம்: வங்கி ஊழியர் கண்டியில் கைது Sunday, 20 July 2008 கண்டி நகரிலுள்ள அரசாங்க வங்கி ஒன்றின் கிளையில் பணிபுரியும் தமிழ் ஊழியர் ஒருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கண்டியிலுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் இல்லத்தை வீடியோ படம் எடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டே இவர் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியே இவர் கைத செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கொழும்பில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். நவீன டிஜிற்றல் கமரா ஒன்றைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அமைச்சர…
-
- 0 replies
- 801 views
-
-
சிறீலங்காவில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பை மூடுவதற்குத் தீர்மானம் ஞாயிறு, 20 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] சிறீலங்காவின் அமைந்துள்ள பிரித்தானியா உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு பிரிவு இந்த வருட இறுதிக்குள் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளது. பிரித்தானியத் தூதரகம் மூடுவதற்கான காரணம் உத்தியோகபூர்வமாகக் தெரிவிக்காத போதும், மறைமுகமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்கா அரசாங்கத்திற்கு பிரித்தானியத் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு பிரிவினரால் வழங்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைள் தொடர்பான ஆலோசனைகளை சிறீலங்கா அரசாங்கம் உசாதீனம் செய்து வந்தமையாலேயே இந்த முடிவை பிரித்தானியா மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?…
-
- 0 replies
- 571 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிமுகாமில் உள்ளவர்களுக்கு கடந்த இருமாதமாக போதுமான உணவு வழங்கப்படவில்லை இதனால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் குழந்தைகளுக்கு பால்மா வழங்கப்படவில்லை கடந்த 3வருடங்களாக இவர்கள் அங்கு தங்கியுள்ளனர் தற்போது உணவுத் தட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தகரக்கொட்டிலுள்ள தங்களை விரைவாக குடியேற்றுங்கள் என அவர்கள் மன்றாட்டமாக கேட்டுள்ளனர் இதேவேளை சாய்ந்தமருது அகதிமுகாமில் உள்ளவர்களுக்கு கடந்த 4வருடங்களாக வீடமைத்துக் கொடுக்கவில்லை இதனால் அவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் அவர்கள் சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களென்றும் தெரிவிக்கப்படுகிறது http://puspaviji.blogspot.com/
-
- 0 replies
- 633 views
-
-
கியூபெக் தமிழ் சமூகம் நடாத்திய பொங்குதழிழ், மொன்றியல். 19.07.2008 Image 1 Image 2 Image 3 Image 4 Image 5
-
- 4 replies
- 1k views
-
-
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசே பொறுப்பு: முன்னாள் இராணுவத் தளபதி [ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2008, 06:01 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] எனக்கு உயிராபத்து எற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாணத்திற்கான முதலமைச்சர் வேட்பாளருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வடமத்திய மகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அரசே முழுப் பொறுப்பாகும். எனக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என அரசிடம் நான் விடுத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே பல குழுக்…
-
- 1 reply
- 602 views
-
-
யாழ். குடாவில் செல்லிடப்பேசி பயன்படுத்த படையினரின் அனுமதி தேவை [ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2008, 06:09 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] யாழ்ப்பாண குடாநாட்டில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு சிறிலங்காப் படையினரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தில் சிடிஎம்ஏ தொலைபேசிகள் மற்றும் செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவதற்கு படையினரின் அனுமதிகள் பெறப்படல் வேண்டும். இந்நடைமுறை இம் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு மாதங்களாக சிடிஎம்ஏ தொலைபேசிகளுக்கான இணைப்புக்கள் யாழ். குடாநாட்டில் தடுக்கப்பட்டதுடன், செல்லிடப்பேசிகளுக்கான இணைப்புக்களும் சில மணிநேரங்…
-
- 0 replies
- 483 views
-
-
சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்கள், நில ஆக்கிரமிப்புக்கள், எறிகணைத் தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக வன்னியின் மேற்குப் பகுதியில் பாரிய மக்கள் அவலம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.3k views
-
-
அன்னை துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்று காலை தெல்லிப்பளை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன் ஆலய தெற்க்கு வீதியில் அமைந்துள்ள யாத்திரிகர் விடுதியில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் செஞ்சொற்சேல்வர் ஆறு திருமுரகன் தலைமையில் இடம் பெற்றது. காலையில் அன்னையின் இறுதிக் கிரியைகள் இடம் பெற்ற தெல்லிப்பளை கட்டுப்பெட்டி மாயானத்தில் நிர்மானிக்கப்பட்ட வைரவர் ஆலயம் திறக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து பகல் 9.00 மணிக்கு அன்னையின் பூர்வீக இல்லத்தில் இருந்து திருவுருவப்படம் ஊர்வலமாக யாத்திரிகர் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது. திருவுருவப் படத்திற்க்கு வீதியின் இருமருங்கிலும் …
-
- 0 replies
- 638 views
-
-
சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு. கிளிநொச்சியை முழுமையாகக் கைப்பற்றி அதனைக் கொண்டாடும் நாள் வெகு விரைவில் இல்லை. விடுதலைப் புலிகள் தற்போது பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளனர். விடத்தல் தீவை விடுதலைப் புலிகள் கைப்பற்றியது கடற்புலிகளினது தளபதி சூசைக்கு இது பாரிய தோல்வி என அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல மேலும்
-
- 35 replies
- 3.6k views
-
-
சிறீலங்காப் படையினர் கடந்த 20 வருடங்களாக யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே யுத்தத்தை முன்னெடுக்கும் படையினருக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என சிறீலங்காத் தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி அஸ்கிரி மாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் சிறீலங்கா அதிபரின் சரியான வழிகாட்டலின் படி சிறீலங்காப் படையினர் விரைவில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பர் அஸ்கிரி மாநாயக்க தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யுத்த முன்னெடுப்புகளில் முன்னாள் தளபதிகள் கொழும்பிலிருந்தே படையினரை வழிநடத்துவார்கள் எனவும் தற்போது படைத்தளபதிகள் எதிரிகளுக்கு எதிராக யுத்த முனைகளில் போரிட்டு வருவதாகவும் அஸ்கிரி மாநாயக்க தே…
-
- 3 replies
- 1k views
-
-
சார்க் மாநாட்டில் கலந்துக்கொள்ளும் சர்வதேச தலைவர்களின் பாதுகாப்புகளுக்காக வெளிநாட்டுப் படைகள் கொழும்புக்கு வருவது இந்நாட்டுக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்துவதோடு இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் எம்பியுமான அநுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஜே.வி.பி நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக தெரிவித்தமை வருமாறு சார்க் மாநாடு கொழும்பி;ல் நடைபெறுவதன் மூலம் இலங்கைக்கு நன்மைகள் ஏற்படலாம் அதனால் அதில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்களின் பாதுகாப்புக்காக வெளிநாட்டுப் படைகள் வருவது எமது நாட்டுக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தியே தீரும். எமது நாட்டுப் பட…
-
- 0 replies
- 620 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் அரசிற்கு ஆதரவாக செயற்பட்டு ஐக்கிய தேசிய கட்சியினரையும் மக்களையும் கொடுமைப் படுத்துபவர்கள் எதிர்கால ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் போது கடுமையக தண்டிக்கப்படுவர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷட எம்.பி லக்ஷமன் கிரியல்ல நேற்று தெரிவித்திருந்தார் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இவர் இதுதொடர்பாக கூறியவை வருமாறு வடமத்திய மாகாணசபைக்கு எமது கட்சிகள் சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளரான ஜெனரல் ஜானக பெரேராவிற்கு இன்னும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை அவருக்கு புலிகளின் கொலை அச்சுறுத்தல் இருக்கிறது யாழ்ப்பாணத்தை மீட்பதற்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடினார். தாய் நாட்டுக்காக போராடிய அவருக்கு…
-
- 0 replies
- 545 views
-
-
"இலங்கையில் தமிழர்கள் மீதான 60 ஆண்டுகால ஒடுக்குமுறை" என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சி பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (16.07.08) நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 833 views
-
-
கொழும்பில் தமது வாழ்விடங்கள் இடித்து, அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் தொடரூந்துகளையும், வீதிகளையும் வழிமறித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.இன்று மாலை காலியிருந்தும், புறக்கோட்டையில் இருந்தும் சென்ற தொடரூந்துகள் கொம்பனித்தெருவில் வழி மறிக்கப்பட்டதால், மாலை நேர பயணித்தில் ஈடுபட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொம்பனித்தெரு பகுதியிலுள்ள குடியிருப்புக்கள், வியாபார நிலையங்களை அகற்றுவதற்கு எதிரான சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கிய போதிலும், அதனையும் மீறி அரச அதிகாரிகள் குடியிருப்புக்களை தகர்த்துள்ளனர்.இதனால் கோபமடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங…
-
- 0 replies
- 690 views
-
-
வவுனியா, மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் மோதல்கள் மற்றும் தமிழீழ புலிகளின் எறிகணை வீச்சு ஆகியவற்றால் 17 சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காத் தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 751 views
-
-
இந்தியாவிலிருந்து செல்கின்ற - தமிழ் மீனவனை - தமிழக மீனவனைத் திரும்பி வராமல் செய்வதற்கு சிறிலங்காவில் வாழ்கின்ற சிங்களக் கொடியவர்கள் - சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் - நமது மீனவர்களைக் கொன்று குவிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
சென்னை (ஏஜென்சி) சனிக்கிழமை 'கச்சத்தீவை மீட்க, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்' என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் சுட்டுக்கொல்லப்படுவதை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது: இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று, திரும்பி வராமல் போவதற்கு இலங்கை ராணுவம் அவர்களை கொன்று குவிப்பதே காரணம். இதனை தடுத்து நிறுத்த நாம் எடுத்த முயற்சிகள் ஒன்று, இரண்டு அல்ல. மீனவ…
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்காவின் தாக்குதல்களும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 507 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை சிறிலங்காவுக்கு வருகை தர உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 451 views
-
-
சட்டவிரோத குடியிருப்புக்களை அகற்றும் விசேட அதிகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உண்டு என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: சட்டவிரோதமான குடியிருப்புக்களை அமைப்பது தவறான செயலாகும். கொம்பனி வீதி கிளனி பெசேஜில் இவ்வாறான சட்டவிரோதமாக அத்துமீறி கட்டப்பட்ட வீடுகளேயே அப்புறப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தால் வீடுகளை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக எதுவிதமான கருத்தையும் கூற நான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். http://puspaviji.blogspot.com/
-
- 0 replies
- 659 views
-